Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்:

Featured Replies

தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் - தொல். திருமாவளவன்:

தனித் தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்திய 'தமிழீழ அங்கீகார மாநாட்டில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திருமாவளவன் 'தனி தமிழ் ஈழத்தை இந்தியாவும் ஏனைய உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும். தனி தமிழீழம் வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் எடுத்த எடுப்பிலேயே வைக்கவில்லை என கூறியுள்ளார்.

இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரர்களான ஈழத் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு பிரிட்டிஷ் அரசு 1948-ல் சிங்களவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தது. ஈழத் தந்தை செல்வநாயகம் தலைமையில், கூட்டாட்சி வேண்டும் என 28 ஆண்டுகள் அமைதி வழியில் தமிழர்கள் போராடினார்கள். தமிழர்களின் அமைதிப் போராட்டத்துக்கு இலங்கை அரசு செவிசாய்க்கவில்லை.

1956, 1958, 1961-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களில் தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். 28 ஆண்டுகள் அமைதி வழியில் போராடியும் வெற்றி கிடைக்காததால் 1976-ல் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் 'தனித் தமிழ் ஈழமே தீர்வு, அதுவே தமது கோரிக்கை' என தந்தை செல்வநாயகம் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் பின்னரே அமைதிப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது என திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவனைக் கைது செய் என குரல் எழுப்புபவர்கள் இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். விடுதலைச்சிறுத்தைகள் தந்தை செல்வநாயகத்தின் தனித் தமிழ் ஈழ கோரிக்கையைத்தான் ஆதரிக்கிறோம். 28 ஆண்டுகள் அமைதி வழியிலும், 32 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தியும் போராடி எந்தப் பலனும் இல்லை.

இதுவரை ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சம் தமிழர்கள் அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர். 2 லட்சம் வீடுகள், கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு சிலர் ஒருவருக்காக அழுது கொண்டிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுபற்றிப் பேசுகிறோம்.

இலங்கைப் பிரச்சினை தீர செய்து கொள்ளப்பட்ட பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம், டட்லி -செல்வா ஒப்பந்தம், ராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என எந்த ஒப்பந்தத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. எனவே தனித் தமிழ் ஈழம்தான் பிரச்சினைக்குத் தீர்வு' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 'இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை' என்ற அமைப்பையும் திருமாவளவன் ஆரம்பித்து வைத்தார். 'எகிறிப் பாய்', 'கட்டறுந்த புயல்' ஆகிய இரண்டு இறுவட்டுக்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. 'எகிறிப் பாய்' இறுவட்டை பாமக தலைவர் ஜி.கே. மணி வெளியிட முதல் பிரதியை கவிஞர் காசி ஆனந்தன் பெற்றுக் கொண்டார். 'கட்டறுந்த புயல்' இறுவட்டை சுப. வீரபாண்டியன் வெளியிட முதல் பிரதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் து. ரவிக்குமார் பெற்றுக் கொண்டார். இந்த மாநாட்டில் நடிகர் மன்சூர்அலிகான், கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை தமிழர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இப்படியான தமிழீழ அங்கீகார மாநாடுகள் புலம் பெயர் தமிழர்களும் செய்ய தொடங்க வேண்டும்.

அப்பதான் கருத்து வலுப்பெறும். . தேசியத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்..

புலம் பெயர் தேச ஈழமக்களும் ஓர் உத்வேகத்துடன் செய்ற்படுவர்கள்.

சிரிலங்கா பிரச்சனையை தீருங்கோ என்று புலம் பெயர் தேச நாடுகளிடம் கத்துவதில் எந்த பயனும் இல்லை.

தீர்வையும் நங்கள் முன்வைக்க வேண்டும்.

புலிகள் தான் தனிய தமிழீழம் கேட்கிறார்கள் என்ற பொய் பிரசாரமும் அடிபட்டு போகும்..

கிழக்கு திமோர் விடுதலை பெறமுன்பு ஒரு நிழல் அரசு ஜரோப்பிய நாடுகளில் இயங்கியது.

திருமாவளவனின் முதல் படி வரவேற்கத்தக்கது.. தாய்தமிழகத்தில் இருந்து தான் எல்லாமே ஆரம்பமாகின்றது. இதுவும் அதன் முதற்படியாக வரவேற்போம்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தமிழீழ அங்கீகார மாநாடுகள் புலம் பெயர் தமிழர்களும் செய்ய தொடங்க வேண்டும்.

அப்பதான் கருத்து வலுப்பெறும். . தேசியத்திற்கான அங்கீகாரம் கிடைக்கும்..

புலம் பெயர் தேச ஈழமக்களும் ஓர் உத்வேகத்துடன் செய்ற்படுவர்கள்.

சிரிலங்கா பிரச்சனையை தீருங்கோ என்று புலம் பெயர் தேச நாடுகளிடம் கத்துவதில் எந்த பயனும் இல்லை.

தீர்வையும் நங்கள் முன்வைக்க வேண்டும்.

புலிகள் தான் தனிய தமிழீழம் கேட்கிறார்கள் என்ற பொய் பிரசாரமும் அடிபட்டு போகும்..

கிழக்கு திமோர் விடுதலை பெறமுன்பு ஒரு நிழல் அரசு ஜரோப்பிய நாடுகளில் இயங்கியது.

திருமாவளவனின் முதல் படி வரவேற்கத்தக்கது.. தாய்தமிழகத்தில் இருந்து தான் எல்லாமே ஆரம்பமாகின்றது. இதுவும் அதன் முதற்படியாக வரவேற்போம்

உண்மைதான்

உடனடியாக செய்யவேண்டிய வேலைத்திட்டம் இது

சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களாக..............

அதேநேரம் மாவீரர் நாளுக்கு புலம்பெயர் மக்களில் 90 வீதமானவர்கள் கூடுவதாக கணக்கெடுப்பு சொல்கின்றது

அப்படியாயின் எமது மக்களின் முடிவை நாம்இதன்மூலம் உலகுக்கு உணர்த்தமுடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.