Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது....

Featured Replies

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

மக்கள் நாளும் படுகொலை செய்யப்படும் தேசத்தில் இருந்து வந்தவர்களின் தேசம் படுகொலை மயமாகத் தான் இருக்கும்.இனவாதாம் போர் வெறி என்பன நீங்கள் இருக்கும் கொழும்பில் இருந்தே ஊற்றெடுக்கிறது.இங்கு இருப்பவர்கள் எல்லோருமே அன்பு அமைதி என்பனவற்றையே வேண்டீ நிக்கிறோம். நீங்கள் என்ன ஆக்கங்களைப் படைக்கிறீர்களோ அவற்றை வாசித்து விளங்கி கருத்து எழுதத் தான் யாழ்க்களம் இருக்கிறது.ஆகவே எழுதுங்கள், உங்கள் சாத்வீகம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை படிக்கும் போது எமக்கு வேதனை தருகிறது

நாங்கள் வெள்ளை வேட்டி சட்டையைத்தான் விரும்பினோம்...

அதில் இரத்தக்கறை விழுந்தது எதிரிளால்... இந்த

கறை வேட்டியை கழட்டி மீண்டும் புது வேட்டி கட்டிவிட்டு நான் போய்விடலாம்..

என் குழந்தையின் சிறுவேட்டிமேலோ...என் பாப்பாவின் பட்டுச்சட்டை மேலோ.. கறை பட்டுவிடும் பயம் மட்டுமல்ல..

அந்த சிறுகுருத்துகளையே.. இழந்துவிடும் பயம்... ஈழத்தின்பின்தான் அமைதி.

அன்றுதான் சமயமும் சாத்வீகமும்..அன்றுதான் நலவாழ்வுக்கு மீள்வோம்.. அதுவரை பிணவாசமும்.. இரத்தவாடையும்.. இருக்கும்.. மூக்கை மூடிக்கொண்டு நீங்கள் போனால்.. உங்கள் நிலத்தில் வேறு யார்

சிரமதானம் செய்வாரகள்.. நாளாக நாளாக நாற்றம் கூடும்.. நாய்களும் கூடும்.. கழுகுகள் வரும்.. சுற்றி முழுவதும் சுடுகாடாய்விடும்.

குருதிக்கறைகள் குறையல்ல-மனக்

கறையே பெருங் குறை

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

  • தொடங்கியவர்

ஓமோம் , மௌன ஊர்வலம் போவம் , தியானம் உண்ணாவிரதம் எல்லாம் இருப்பம்,

இங்க தான் இனவாதிகளும் , போர் வெறியர்களும் இருக்கிறார்கள்

விட்டா இன்னும் சொல்லுவியள்

:lol: :lol: :(

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

சாத்வீகம்.... அன்பு.... அமைதி போன்றவற்றை பெற்றுக்கொள்ளவே அங்கே போர் நடக்கின்றது. நிகழ்காலத்தில் போர் நடப்பதால் போர்பற்றிய பேச்சு அதிகமாகிறது. எதிர்காலம் வெறும் கானவாக கூட போகலாம் நிகழ்காலத்தில் வாழும் எமக்கு. கிட்டத்தட்ட 22 ஆயிரம் போரளிகளின் வாழ்வில் அதுவே நிஜம். ஆகவே எதிர்காலம் பற்றியும் பேசலாமே எனும் உங்கள் கருத்தை நான் எதிர்க்கவில்லை. ஆனால் போர் பற்றியே பேசுகிறீர்கள் எனும் உங்கள் கருத்தை நிராகரிக்கிறேன். ஆதாவது கனவை பற்றி அலட்டாமல் நிஜத்தை பேசலாமே என்பதே என் நிலை......... காரணம் நிகழ்கால நிகழ்வுகளே எதிர்கால கனவுகளை உருவாக்குகின்றது.

ஆக நாம் போர்பற்றி பேசுவாதக உங்களுக்கு தோன்றுகின்றதே தவிர. நாங்கள் அமைதி பற்றியும் சாத்வீகம் பற்றியும்தான் அதிகமாக பேசுகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில காலங்கங்களாக யாழ் களத்துக்கு வருவதற்கே வெறுப்பாக உள்ளது. காரணம் எங்கும் இனவாதம், போர் வெறி என எவரைப்பார்த்தாலும் சீறியடித்துக்கொண்டு இருக்கிறார்கள். மனிதம், அமைதி, சாத்வீகம் என்பதற்கு களத்தில் எள்ளளுவும் இடம் கொடுக்கப்படுவதாக தெரியவில்லை. அதிகமாக களத்தில் ஈழம் பற்றி பேசுகின்றார்கள் என நினைக்கின்றேன். அது தவறில்லை, ஈழம் என்றால் போர், இரத்தம், கொலை என்பதுதான் என நினைப்பது கள உறுப்பினர்களின் தவறான எண்ணப்பாடு எனபதை புரிந்து கொண்டு பிறக்கும் புத்தாண்டிலாவது களத்தில் சாத்வீகம், அன்பு, அமைதி என்பனவற்றை உண்டுபண்ணவல்ல ஆக்கங்களை என்போன்ற வாசகர்களுக்கு இங்கு உள்ள உறுப்பினர்கள் படைப்பார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :::...

நன்றியுடன் இதயநிலா

உங்கள் வருத்தம் புரிகிறது ஆனால் இப்போது இந்த நிலைமையில் மனிதம் அமைதி சாத்வீகம் என்டெல்லாம் கதைத்தால் எங்கள் தலைமேல் மிளகாய் அரைத்துவிடுவார்கள்.

ஈழத்திலே மக்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் யாரும் சாத்வீகம் பற்றிக்கதைக்க மாட்டார்கள் அப்படிக்கதைத்த காலம் எல்லாம் போய்விட்டது இனி அமைதி பற்றிப்பேசவேண்டுமாயின் அது தமழழீழம் மலர்ந்தபின்தான். எங்கட நாட்டில ஆமிபோய் கிளிநொச்சியில போய் நிக்கேக்க அமைதிபற்றிப்பேசச்சொல்லுறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் விளங்கிட்டுது, களத்துக்கு வர வெறுப்பாக இருந்தால் நெப்போலியனை கட்டிப்பிடித்துக்கொண்டு கவிண்டு படுங்கோ :D

அது யாருங்கோ நெப்போலியன்.

பிரான்சை ஆண்்ட நெப்போலியன் மன்னனையா? :lol:

ஒரு நாவிதன் அவர் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவான். கொத்தனார் தன் தொழில் சம்பந்தமாகவே அதிகம் பேசுவார் இது சாதாரணம்......கிணற்று தவளைகள் மாரி நேரத்தில் தான் அதுவும் கிணறு முட்டும் போது தான் வெளி உலகை பார்க்கும். மற்றும் படி உள்ளே தான் இருக்கும். அது போலவே இங்கும் கொத்தனார், நாவிதன் மாதிரி .... அப்ப அப்ப யாரும் உலக செய்திகளை வெட்டி ஒட்டினால் சரி. அப்போது தான் (மாரி தவளைகளுக்கு)உலகம் தெரியும்.

எமக்காக தமிழகத்து தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும் பொங்கி எழ வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதில் தப்பு இல்லை ஆனால் இன்று அப்படி குரல் கொடுத்தவர்களில் சிலர் திட்ட மிட்டு சிறைகளுக்குள் அடைக்கபட்டிருகின்றனர். ஆனால் இன்று நாம் அவர்களுக்காக குரல் கொடுக்கின்றோமா?

  • தொடங்கியவர்
:wub: பார்த்தீங்களா இதைத்தான் சொன்னான். ஒரு கருத்தை கொஞ்சம் அழுத்திச் சொன்னதும் அதுக்கும் இங்க எத்தனைபேர் கடிந்து விழுகிறார்கள். ஏட்டிக்கு போட்டியாக பேசணும் எண்டே களத்தில சிலபேர் அலையினம். அவை இருக்கு மட்டும் நாங்கள் இங்க எதையும் எதிர்பார்க்கமுடியாதுதான். பதில்களுக்கு நன்றிகள்... :)

இதய நிலா புத்தர்,ஜெசு, காந்தி,இதய நிலா பூமியில் பிறந்தது எதற்காக..........? இதற்க்காக....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

@ இதையநிலா,

நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் மனதில் பட்டவையைத்தானே கருத்துக்களாக பதியமுடியும்? உங்கள் தனியொரு நபரிக்காக மற்றவர்கள் தங்களின் கருத்துக்களை, பதிவுகளை (படைப்புக்களை) மாற்றவா முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

நாமும் தங்களைப்போலத்தான்

நல்லவற்றைத்தான் நினைக்கின்றோம்

ஆனால் நிஐம் என்ற ஒன்றை தரிசிக்கமுற்படும்போது அது எம்மை எங்கே கொண்டுபோய்விடுகிறது பாருங்கள் தங்களின் படத்தில்.......

கழுகு ஒரு மனிதனைத் தன் இரைக்காகக் காவிச்செல்வது போல் படம் போட்டுவிட்டு அமைதி, சமாதானம், மனிதம் பற்றியெல்லாம் பேசுவது அமெரிக்கா உலகநாடுகளில் போர் ஓயவேண்டும் என்று கூறுவதுபோல் உள்ளது...

இருந்தபோதிலும், உறவுகளின் இரத்தம் தோயும் வாழ்விற்கு விடிவுபெறும் என்ற நம்பிக்கையுடன் விடிந்துள்ள இப்புத்தாண்டில் அதே நம்பிக்கையுடன் உங்களிற்கும் புத்தாண்டு வாழ்த்துகள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.