Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம்

வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர்.

வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதம் மூலமும் கோரியிருந்தன. எனினும் இக்கோரிக்கையை ஏற்க இந்திய மத்திய அரசு மறுத்த நிலையிலேயே சிவ்சங்கர் மேனன் கொழும்பு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றுவதற்கு முன்னரே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. எனினும் கிளிநொச்சியைக் கைப்பற்றிய பின்னரே இந்திய மத்திய அரசு தனது வெளிவிவகாரச் செயலாளரை கொழும்புக்கு அனுப்புகிறது.

இலங்கை வரும் சிவ்சங்கர் மேனன் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் தீர்வு குறித்த இந்தியாவின் அக்கறையை தெரிவிக்கும் அதேநேரம் விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரில் இலங்கைப் படையினர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கைது செய்யும் பட்சத்தில், ராஜீவ் கொலை தொடர்பான விசாரணைக்காக அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்துவாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போரை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக வெளிவிகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை அனுப்ப மறுத்த இந்தியா, தற்போது முல்லைத்தீவுக்கான இறுதிப் போர் தொடங்கவுள்ள நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தவே சிவ்சங்கர் மேனனை அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் பிரணாப் முகர்ஜியை அனுப்பக்கூடிய சூழ்நிலை இல்லையென்பதாலேயே அவருக்குப் பதிலாக சிவ்சங்கர் மேனனை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது அவர் யுத்த நிறுத்தம் குறித்து எதுவுமே பேசமாட்டாரெனவும் ஆனால், மீண்டும் பேச்சுக்குச் செல்லுமாறு கேட்பாரெனவும் இராஜதந்திர வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேவேளை இவரது விஜயம் குறித்து கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ கூறுகையில்,

''இந்திய வெளியுறவுத் துறை செயலர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புத் துறை செயலர் விஜய் சிங் உள்ளிட்டோர் அடங்கிய குழு எதிர்வரும் 15 அல்லது 16ஆம் திகதி இலங்கை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சமீபத்தில் இலங்கை வருமாறு இந்திய அரசுக்கு அழைப்பு விடுத்தனர். இதன் அடிப்படையிலேயே இந்திய தூதுக் குழுவினர் இலங்கைக்கு வருகின்றனர். தற்போது இந்தியாவும் இலங்கையும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன'' என்றார்.

அதேநேரம் ஜப்பானிய விசேட தூதர் யசூசி அகாஸியும் அடுத்த சில தினங்களில் கொழும்பு வரவுள்ளார்.

சிவ்சங்கர் மேனனும் அகாஸியும் அரசு தரப்பினருடன் பேச்சுகளை நடத்தும் அதேநேரம், அகாஸி கிழக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

செத்து போன தமிழருக்கு ஈமச்சடங்கு செய்ய இலங்கை அரசுக்கு பணம் கொடுப்பார்கள்....

தமிழினமே எதாவது தமிழர்களுக்கு நலன் சார்பாக செய்யப்போகிறார்கள் என்று வழமைபோல் காத்திருந்து ஏமாறார்தீர்கள்...

இனவெறி நாட்டின் இரண்டாவது நாடக காட்சி... போர் அழிவு மக்கள், வடக்கு கட்டி எழுப்புதல், நிதி பற்றாது முட்டுக்கொடுங்கள், பிச்சை தர்மம் கச்சாமி பின்னர் தமிழ்மக்கள் நிலங்களில் சிங்கள மக்கள் குடியேற்றம் விகாரரைகள் அமைத்தல்,தமிழ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவிப்பு,, சங்கரி விகாரை கிளினொச்சியில் திறந்து வைப்பு இப்படியே நீண்டு கொண்டு போகப்போகிறது...பிக் பாங்க் வெடிப்பு நிகழாவிட்டால்...

எல்லோரும் வழமைபோல் செய்திகளை உருவாக்கமல் வாசித்து அறிந்து எங்கள் அலுவல்களை சோலிகளை கவனிக்கப்போய்விடுவோம்.. எம்மண்ணை முழுதாக விழுங்கிய மலைப்பாம்பு எலும்புகளை எச்சமாக விடும்.. நாமும் எதிர்கால சந்ததிக்கு முன்னொரு காலத்தில் என்று வரலாறு சொல்லி பணம் பண்ணுவோம்.....

வாங்கோ வாங்கோ வந்து வாங்கிட்டு போங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது இந்தியாவும் இலங்கையும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன''

இந்தியாவும் இலங்கையும் ஒரே கட்டிலில் படுக்கின்றன என்று போடுங்கள் அப்போது சமன்பாடு சரிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம்

என்னத்துக்கு கோழி பிடிக்கவோ ............. :lol: எல்லாம் பறந்திட்டுது அங்கயே மூடிக்கொண்டு கிடவுங்கோ

"சிவ்சங்கர் மேனன் வருகையால் இலங்கையில் மாற்றம் ஏற்படாது'

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்டத் தூதுக்குழு எதிர்வரும் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையளவில் கொழும்புக்கு வருகைதரும் சாத்தியம் காணப்படுகிறது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்னிப் பகுதியிலுள்ள 3 இலட்சம் பொதுமக்களின் நிலைமை குறித்து இலங்கைத் தலைமைத்துவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியத் தூதுக்குழு வருகை தரவிருப்பதாக "நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் இந்திய அரசாங்கத்திடம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்தியத் தூதுக்குழு இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது, என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ "ஐலன்ட்' பத்திரிகைக்கு கூறியுள்ளார்.

ஜனவரி 15 அல்லது 16 இல் இந்தியத் தூதுக்குழு கொழும்புக்கு வருகை தருமென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

முல்லைத்தீவு முற்றுகையிடப்பட்டிருக்கும் தருணத்தில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை முக்கியமான விடயமாக கருதப்படுகிறது.

மேற்கு வன்னியை சேர்ந்தவர்களும் உள்ளூர் வாசிகளுமாக சுமார் 4 இலட்சம் பேர் முல்லைத்தீவுப் பகுதியில் உள்ளனர்.

இதேவேளை, யுத்தம் மற்றும் அகப்பட்டிருக்கும் பொதுமக்கள் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாட்டில் இந்தியத் தூதுக்குழுவின் வருகை மாற்றம் எதனையும் ஏற்படுத்துமென எதிர்பார்க்க முடியாது என்று அவதானிகள் கூறுகின்றனர். ஆனால், இந்தியாவிலுள்ள விமர்சனங்களை திசை திருப்புவதற்காக யுத்த அகதிகளுக்கான இந்தியாவின் அதிகளவான உதவிகளை இலங்கை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மாத்திரம் பதிவுசெய்ய வேண்டுமென்பது இன ரீதியான நடவடிக்கையென்ற விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் அதனை இல்லாமல் செய்வதற்காக சகல இலங்கையரும் பதிவுசெய்ய வேண்டுமென அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

http://www.thinakkural.com/

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு வருகிறார்கள்?

எந்த எந்த இடம் தங்களுக்கு வேணும் எண்டு சொல்ல வருகினும் போல. இவங்களையெல்லாம் ஓடவிட்டுட்டு நாயை அவிட்டுவிடவேணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.