Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூல்வெளியீடு: தமிழர் திருநாள்

Featured Replies

அன்புள்ள யாழ்கள நண்பர்களுக்கு,

வணக்கம். என்னுடைய இரண்டாவது கவிதை நூல் “தமிழர் திருநாள்” சார்பாக உங்களை தொடர்பு கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய படைப்புகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கும் அன்புக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வெளியிடுவதற்கு உங்களைப் போன்ற, இணையத்தள நண்பர்கள் அளிக்கும் முழுமையான ஆதரவே உற்சாகமூட்டுகின்றது. தாயகத்தை விட்டுப் புலம்பெயாந்து எங்கு வாழ்ந்தாலும் அதனுடைய வலிகளை வார்த்தைகளில் வடிக்க முடியாது, உற்று உணர்ந்து வலிகள் சுமந்து வாழவே முடிகிறது.

IMG4930-1231785052.jpg

தமிழர்களுக்கு ஒரு நாள் அது தமிழால் அடையாளப் படுத்தக்கூடிய தமிழர் வாழ்வை, என் சார்பாகவும் அதன் வலிகள், துக்கங்கள், சோகங்கள் அவலங்கள், ஏக்கங்கள், சுகங்கள், அழகுகள் குறையாமல் பதிவுசெய்ய முயற்சி செய்திருக்கின்றேன்.

தாய்நாட்டில் எத்தனையோ இன்னல்கள், அவலங்களுக்குள் மத்தியில் வாழ்ந்தாலும் மிக இயல்பாக விடுதலைப் பெருமூச்சை சுமந்து கொண்டிருக்கும், என் தமிழ் மக்களுக்கும் போரளிகளுக்கும் எம் வானில் ஒளிர்கின்ற சூரியனுக்கும் இந்த தமிழர் திருநாள் கவிதைத் தொகுப்பை வழங்குகின்றேன்.

ஆகவே என்னுடைய இந்த நூல் பற்றிய அறிமுகத்தை எமது மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் நீங்கள் பெரும் பங்கு ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை இங்கே பதிவுசெய்கின்றேன்.

IMG4930-1231785105.jpg

இந்த கவிதைத் தொகுப்பை தழிழ்நாட்டில் உள்ள காந்தளகம் பதிப்பகம் வெளியீடு செய்திருக்கின்றது.

என் நட்பிற்குரிய தோழமை பதிப்பகத்தார் இதனை விற்பனை செய்வதற்கும் பல வழிகளிலும் உதவி புரிந்துள்ளார்கள் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதில் மகிழ்வடைகின்றேன். தமிழகத்தில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு பதிவுசெய்கின்றேன்.

நூல்வெளியீடு: தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்)

இடம்: நோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்

திகதி: 14.01.2009 புதன்கிழமை மாலை 20:30-21:00 மணிக்கு (30 நிமிடங்கள்)

இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறுகின்றது.

நோர்வேயில் வாழ்கின்ற யாழ்கள உறவுகளை அன்புடன் அழைக்கின்றேன்.

உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்

வசீகரன்.சி

ஒசுலோ, நோர்வே 12.01.2009

http://www.vnmusicdreams.com/page.html?lan...&artid=1291

ஆலயத்தில் 19:00 மணிக்கு இடம்பெறும் விசேட பூசைகள் நிறைவுபெற்ற பின்பு நிகழவுள்ளது.

http://tamil.cinesouth.com/masala/hotnews/...2012009-4.shtml

Edited by Tamizhvaanam

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

நேற்று இதுபற்றி யாழில அறிவித்தல் ஒன்றை விடப்போவதாய் சொல்லி இருந்தீங்கள வசீகரன். உங்கள் 'தமிழர் திருநாள்' கவிதைத்தொகுப்பு நூல் வெளியீடு மங்களகரமாக நடைபெற, நூலின் மூலம் நீங்கள் கூற வருகின்ற செய்தி எல்லார் காதுகளையும் சென்று அடைய வாழ்த்துகள் வசீகரன்!

நூலிண்ட அட்டைப்படத்தையும் நீங்கள் இஞ்ச போட்டு இருக்கலாம். மறந்துவிட்டீங்கள் போல இருக்கிது. நீங்கள் தந்த இணைப்பில அட்டைப்படம் சிறிய அளவில போடப்பட்டு இருக்கிது. அதை இதில போடுறன். நன்றி!

12012009-THN13image2.jpg

Edited by முரளி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் வசிகரன்.

  • தொடங்கியவர்

தூயவன், முரளி, நுணாவிலான்(வணக்கம்) மிக்க நன்றிகள். சினிசவுத்தில் வந்துள்ள விமர்சனம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. எங்கள் உறவுகளை எண்ணி எண்ணி நித்திரை கொள்ள முடியவில்லை.

எங்கள் கண்ணீர் கடலாகிப் போனது

எங்கள் குருதி ஆறாய் ஓடுகிறது

எங்கள் உடல் தீயில் எரிகிறது

எங்கள் உயிர் காற்றோடு கலக்கிறது

எங்கள் நம்பிக்கை மட்டுமே மிகுதியாய் உள்ளது.

வாழ்த்துக்கள் வசீகரன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வசீகரன்.தங்களின் யாழ் தேவி பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

சோழியான் அண்ணா, ரதி, தலைவன் மூவருக்கும் எனது நன்றிகள். தமிழ்சினிமா, சினிசௌத், கோலிவுட்ருடே அகிய இணையத்தளங்கள் நல்ல விமர்சனங்களை வழங்கியருக்கின்றன. யாழ்கள உறவுள் தருகின்ற ஊக்கத்திற்கு எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கள் கண்ணீர் கடலாகிப் போனது

எங்கள் குருதி ஆறாய் ஓடுகிறது

எங்கள் உடல் தீயில் எரிகிறது

எங்கள் உயிர் காற்றோடு கலக்கிறது

எங்கள் நம்பிக்கை மட்டுமே மிகுதியாய் உள்ளது. ...........

நம்பிக்கை தான் வாழ்கை ............இது உங்களையும் எங்களையும் நெடு தூரம் கொண்டு செல்லும் .

உங்கள் பதிப்புகள் ஆக்கங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.