Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல - விஜய காந்த்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல-விஜய காந்த்:

தமிழக அரசியல் யானை காலில் மிதிபட்ட விளைநிலம் போல ஆகிவிட்டது, அதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் தமிழர்களின் புத்தாண்டு நாள். உழவர்களின் அறுவடைத் திருநாள். உழைப்பாளிகளின் உயர்வுக்குரிய நாள். புதுப் பொங்கலிட்டு புத்தாடை உடுத்தி, புதுப்பொலிவுடன் உற்றவர்களோடும், உறவினர்களோடும் உண்டு களித்து கொண்டாடும் திருநாள்.

இந்த நன்னாளில் நாம் மட்டுமல்ல, நம்மைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு பொங்கலைக் கொண்டாட நாம் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

புதுப்பானை, புத்தரிசி, வெல்லம், புதுக்கரும்பு, புது மஞ்சள், புத்தாடை போன்றவற்றை கடந்த ஆண்டைப் போலவே நம்முடைய கழகத் தோழர்கள் தங்களால் இயன்ற உதவிகளை இல்லாதவர்களுக்குச் செய்ய கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஒரு நல்ல ஆட்சியில் தான் அமைதியிருக்கும். அப்பொழுது தான் மக்கள் விழாக் கொண்டாட முடியும். உதாரணத்திற்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்கள வெறியர்களின் ஆட்சியில் சிக்கித் தவிப்பதால் அவர்கள் எதிர் நோக்கியிருப்பது மகிழ்ச்சிப் பொங்கல் அல்ல. இரத்தப் பொங்கல் தான். இரு வேறு இன மக்கள் ஒரு நிலப்பகுதியில் சேர்ந்து வாழலாம்.

இல்லையென்றால் அந்நிலப் பகுதியை பிரித்துக் கொண்டு அமைதியாக வாழலாம். இதைத்தான் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் உலகம் அறிவுரையாக வழங்குகிறது. ஆனால் இலங்கையிலோ, இந்த அறிவுரையை இந்தியா கூட ஏற்காதது, தமிழ் மக்களின் சாபக்கேடு தான்.

கொழுத்த யானை தான். இருந்தாலும் மதம் பிடித்த விட்டது. வந்த இடமோ செந்நெல்லும், வாழையும், செங்கரும்பும் விளைந்துள்ள பூமி. என்னாகும் அந்த விளை நிலம் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அதைப் பட்டத்து யானையாக்குவேன் என்பதைவிட பைத்தியக்காரத்தனம் வேறு உண்டோ?.

இன்று தமிழ்நாட்டின் அரசியல் நிலை யானைக் காலில் மிதிப்பட்ட விளை நிலம் போல் ஆகிவிட்டது. இதிலிருந்து நாட்டை மீட்க இந்த நன்னாளில் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் சூளுரை மேற்கொள்வோம்.

பசி, பிணி, பகை நீங்கி எல்லோரும் நல்வாழ்வு பெற்றிடவும், அமைதியும், முன்னேற்றமும் தரும் நல்லாட்சி ஏற்படவும், இப்பொங்கல் புதுநாள் தமிழ்நாட்டிற்கு வழிவகுக்கட்டும் என்று தேமுதிக சார்பில் எனது பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து இல்லை..:

ஆனால் ஜெயலலிதா, விஜய்காந்த் இருவரும் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் பொங்கல் நாள் தான் தமிழர் புத்தாண்டு என்ற அறிவிப்பை இருவரும் ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்.

தட்ஸ்ரமிழ்.கொம்.

------------------

இதேவேளை கருணாநிதி மகிழ்ச்சிப் பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...-of-pongal.html

ஜெயலலிதா மகிழ்ச்சிப் பொங்கல் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

http://thatstamil.oneindia.in/news/2009/01...ongal-wish.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் யார் கேட்டார் உங்களிடம்

நீங்கள் செய்ய எவ்வளவோ உள்ளது

ஆகக்குறைந்தது

உங்கள் மத்திய அரசை தலையிடாமல் பார்த்திருந்தாலே போதும்

எல்லாம் செய்துகொண்டு

எல்லாமே தெரிந்துகொண்டு

எதுவும் தெரியாததுபோல்...........

இதெல்லாம் யார் கேட்டார் உங்களிடம்

நீங்கள் செய்ய எவ்வளவோ உள்ளது

ஆகக்குறைந்தது

உங்கள் மத்திய அரசை தலையிடாமல் பார்த்திருந்தாலே போதும்

எல்லாம் செய்துகொண்டு

எல்லாமே தெரிந்துகொண்டு

எதுவும் தெரியாததுபோல்...........

புலத்தில் எம்மவர்களில் எத்தனையோ பேர் நாளைய பொங்கலை மிக சிறப்புற கொண்டாட ஆயத்தம் செய்து வருகின்றனர். பலர் ஒன்று சேர்ந்த்து வில்லு படத்திற்கு போவதா அல்லது, சன் ரி.வி நிகழ்ச்சியை பார்பதா என்றும் மிகவும் குழம்பி போயுள்ளனர். புலத்து கடை களில் புதிய பொங்கள் பானையும், கரும்பும், ருசியை கூட்டும் கஜுவும், பிளம்ஸ் சும் அமோகமாக விற்பனை ஆகின்றது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எம்மவர்களில் எத்தனையோ பேர் நாளைய பொங்கலை மிக சிறப்புற கொண்டாட ஆயத்தம் செய்து வருகின்றனர். பலர் ஒன்று சேர்ந்த்து வில்லு படத்திற்கு போவதா அல்லது, சன் ரி.வி நிகழ்ச்சியை பார்பதா என்றும் மிகவும் குழம்பி போயுள்ளனர். புலத்து கடை களில் புதிய பொங்கள் பானையும், கரும்பும், ருசியை கூட்டும் கஜுவும், பிளம்ஸ் சும் அமோகமாக விற்பனை ஆகின்றது...

நானும் அவதானித்தேன். யாழ் களத்தில் நாம் சிலர்தான் இப்படி எமக்குள் நாமே.. மக்களின் அவலம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வேதனைப்பட்டுக் கொள்கின்றோம். ஆனால்.. வெளியில் உள்ள புலம்பெயர்ந்த பலருக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்ன ஆபத்து என்று கூடத் தெரியாமல் வாழுகின்றனர். பொங்கல் பானைகளுக்காக அலைகின்றனர்..! இந்த வகையில் ஒப்பிடும் போது.. விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் பாதிப்பை நினைத்ததே.. பெரிய காரியம் என்று சொல்ல வேண்டும்..! :lol::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு என்ன பொங்கலும் புளியங்காயும் நம்மட சனம் நிம்மதியாக வாழ்தாலே போதும் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியோர் அவல நிலை எங்கள் சொந்தங்களுக்கு நேர்ந்தும் அங்கு இனி என்னதான் நடக்கப்போகின்றதோ என்ற திகிலோடு இருக்கும் நெஞ்சத்து படபடப்புக்குள்ளும் எப்படி பொங்கல் கொண்டாட முடிகின்றது இவர்களால்?!

வில்லுப்படத்துக்கு போறவையிற்றை எங்கள் மக்களுக்காக பணம் கேட்டுப்பாருங்கள். மிகப்பெரிய நிரலே வாசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த விநாடியில் உயிரோடு இருப்போமா? என்பது ஈழத்தழிழர்களின் எதிர்பார்ப்பு,

நாம் எப்படி, எப்போ, எங்கே புத்தாண்டை கொண்டாடுவோம் என்பதில் இவர்களது ஆராட்சி.

என்ன பாசம்? என்ன அக்கறை?

தமிழ், தமிழர், தமிழ்மண்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவதானித்தேன். யாழ் களத்தில் நாம் சிலர்தான் இப்படி எமக்குள் நாமே.. மக்களின் அவலம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து வேதனைப்பட்டுக் கொள்கின்றோம். ஆனால்.. வெளியில் உள்ள புலம்பெயர்ந்த பலருக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்ன ஆபத்து என்று கூடத் தெரியாமல் வாழுகின்றனர். பொங்கல் பானைகளுக்காக அலைகின்றனர்..! இந்த வகையில் ஒப்பிடும் போது.. விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் பாதிப்பை நினைத்ததே.. பெரிய காரியம் என்று சொல்ல வேண்டும்..! :lol: :lol:

இதுசரியாக எனக்குப்படவில்லை

எல்லோர் முகத்திலும் மிகுந்தசோகம்தான் உள்ளது

மற்றவர்களை நோக்கி கைகாட்டுவதைவிட்டுவிட்டு அவர்களையும் எம்முடன் இணைப்பது எப்படி என சிந்திப்போம்

கடவுள்மீது நம்பிக்கையுள்ளோர் தமது வீடுகளில் பொங்காமல் விடுவதை அபசகுனமாகக்கருதக்கூடும்

எனவே பொங்குவதை தடுப்பது சரியாகப்படவில்லை

ஆனால் பொங்கலை ஒரு ஆடம்பரநிகழ்வாகக்கொண்டாடுவத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.