Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் வாசலில் நிற்கிறோம் - குமுதம் ரிப்போட்டர்

சோகங்களையும். அவலங்களையும் அள்ளித் தந்த 2008-ம் ஆண்டு கடந்து போய் 2009-ல் புது வாழ்வு பூக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக மாறி விட்டது. உலகெங்கும் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சிகரமான செய்தி என்றால், போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்த அளவுக்குப் பாதித்திருக்கும்?

கிளிநொச்சியின் ஆக்கிரமிப்பை சிங்களவர்கள் பெரும் வெற்றியாகக் கருதி பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரிக்கின்றனர். இனிப்புகள் ஊட்டப்படுகின்றன. கடந்த சில நாட்களாக வன்னிப் பகுதியில் சிங்களப் பேரினவாத ராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரிலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்து செல்லும் பொதுமக்களைக் குறி வைத்து இலங்கையின் முப்படையினரும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஞாயிறன்று நடந்த தாக்குதலில் அப்பாவிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அறுபது பேர் காயமடைந்தனர். .

இடம்பெயரும் தமிழ் மக்களை குறிவைத்துக் கொல்லும் சிங்கள ராணுவத்தின் மனிதநேயமற்ற இந்தச் செயலை உறுதி செய்யும் உருக்கமான கடிதம் ஒன்றை, `கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம்' தமிழக முதல்வர் கலைஞருக்கு அனுப்பியிருக்கிறது. முதல்வரின் பார்வைக்குச் செல்லும் முன்பே நமக்குக் கிடைத்துவிட்ட அந்தக் கடித விவரங்களை நமது வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.

`மரணத்தின் வாசலில் நின்று ஈழத் தமிழர்களின் மனு' என்ற தலைப்பில் தொடங்கும் அந்தக் கடிதத்தில், `கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஆட்சியாளர்கள் ஈழத்தமிழர்களை அடிமை கொள்ள மேற்கொண்டு வரும் கட்டற்ற பயங்கரவாதம் குறித்து தாங்கள் நன்கு அறிவீர்கள். ஆகவே, இது குறித்த விரிவான பதிவுகள் எவையும் அவசியமற்றவை என்பதாலும், ஈழத்தமிழர்களின் மூச்சோடு கலந்த உறவினர் தாங்கள் என்பதாலும் நேரடியாகவே எமது வேண்டுகோளை சமர்ப்பிக்கின்றோம்.

உலகில் இன ஒதுக்கலுக்கு உள்ளாகி அவலப்பட்ட இனங் களின் துயரங்களுக்கு மேலான மனிதப் பேரவலத்தை சிங்களதேசம் எமது மக்களுக்கு வழங்கியுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதாகப் பறைசாற்றிக் கொண்டு ஈழத்தமிழினத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்த்துவிட அது கங்கணம் கட்டிச் செயல்படுகின்றது. இன்று இனஅழிப்பிற்கான சிங்கள ஆட்சியாளர்களின் போர், விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஈழத்தமிழரை கொத்துக்கொத்தாகக் கொல்லவும், தமிழர்தாய் நிலத்தைக் கொழுந்துவிட்டு எரியவும் அது செய்கின்றது. மிகமிகக் குறுகிய நிலப்பரப்புக்குள் நான்கு லட்சம் மக்களை அது குடிபெயர்த்து அகதிகளாக்கியுள்ளது. போர் விமானங்களின் குண்டுவீச்சுகளும், பீரங்கிகளின் எறிகணை வீச்சுகளும் உலகின்பெரும் போர்களையே நினைவூட்டுகின்றன..

உணவின்றி, உடையின்றி, மருந்துவகை எதுவுமின்றி, மக்களின் சாவு ஓலமே இங்கு எஞ்சி நிற்கின்றது. அரச பயங்கரவாதத்தின் உச்சவெறித்தனம் வன்னி மண்ணின் வைத்தியசாலைகளைத் தாக்கி அழிப்பதில் வெளிப்படுத்தப்படுகின்றது. குஞ்சென்றும், மூப்பென்றும் பாராது மனித உயிர்கள் நொடிப்பொழுதில் சாகடிக்கப்படுகின்றன. மகிந்தவின் வக்கிரமும், வெஞ்சினமும் கொண்ட சிங்களக் காடையர்கள் தாய்மண்ணை கபளீகரம் செய்கின்றனர். ரத்தவாடையும் பிணவாடையும் கலந்தே இங்கு காற்று வீசுகின்றது.

அன்புக்குரிய முதல்வர் அவர்களே! உலகத் தமிழினத்தின் பெருந்தலைவர் ஆகிய தாங்கள் ஒருசில மணிநேரங்களில் ஈழத்தமிழர் தொடர்பில் எடுக்கும் தீர்மானமே ஈழத்தமிழரின் உயிர்காக்கும் அரசியல் தர்மமாக விளங்கமுடியும். சிங்களத்தின் கர்ண கொடூரம் நடைபெறும் இம்மண்ணில் இருந்து, உயிர்ப் பாதுகாப்புக் கருதி, மரணத்தின் வாசலில் நின்று தங்களுக்கு மனு செய்கிறோம். ஈழத்தமிழரின் அரசியல் இறைமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வுக்கு தாங்கள் தங்களின் அரசியல், தார்மீக பலங்கள் அனைத்தையும் விரைந்து பயன்படுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி' இப்படி உருக்கமாக எழுதிய கடிதத்தில், கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் அ.வேழமாலிகிதன் கையெழுத்திட்டுள்ளார்.

குண்டு மழைகளுக்கு நடுவில் இருந்து ஈழத்தமிழர்கள் எழுதிய கடிதம் இப்படியென்றால், புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுதியிருக்கும் மற்றொரு கடிதமோ வேதனையின் உச்சம்.

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் 43,000 ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் `சுவிஸ் தமிழர் பேரவை' என்ற அமைப்பு முதல்வருக்கு எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், `ஐயா, ஈழத்தமிழர் நலன் கருதி தாங்கள் மேற்கொண்டு வரும் தன்னலமற்ற பணிகளை எங்கள் அமைப்பு பாராட்டுகிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திய மண்ணில் இருந்து கொண்டு குரல் கொடுப்பது ஆபத்தானது எனத் தெரிந்து கொண்டும், விளைவைப் பற்றிக் கவலைப்படாது தொப்புள் கொடி உறவுகளுக்காக தாங்கள் ஓங்கிக் குரல் கொடுப்பது மெய் சிலிர்க்கச் செய்கிறது. தமிழன் எங்கு வாழ்ந்தாலும் அவன் என் சகோதரனே என்ற உணர்வுடன் நீங்கள் ஆற்றுகின்ற பணி ஈழத் தமிழர்களால் மறக்கப்பட முடியாதது.

அந்த வரிசையில், தமிழர் தாயகத்தில் நடைபெறுகின்ற யுத்தத்தை நிறுத்தி, தமிழ் மக்களை இனஅழிப்பிலிருந்து காப்பதற்காகத் தமிழக சட்டசபையில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானமும், அதனைத் தொடர்ந்து புதுடெல்லி சென்று பாரதப் பிரதமரை நீங்கள் சந்தித்துக் கோரிக்கை வைத்ததும் ஈழத் தமிழ்மக்கள் மனங்களில் பாலை வார்த்தது.

இவற்றைத் தொடர்ந்து, காரியங்கள் வேகமாக நடக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்பு செல்வார், யுத்தம் தாற்காலிகமாக நிறுத்தப்படும் என்றெல்லாம் எதிர்பார்த்தோம். ஆனால், நாம் எதிர்பார்த்த எதுவுமே நடக்கவில்லை. மாறாக, தமிழ்மக்களின் துன்ப துயரங்கள் முன்னைவிட அதிகரித்துள்ளன. இந்திய நடுவண் அரசின் கொள்கையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. சமாதான வழிமுறையில் இனப்பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தும் இந்தியா, மறுபுறத்தில் சிங்கள தேசத்திற்கு படைத்துறை உதவிகளை வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்மக்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ள இன்றைய தருணத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெறும் இனஅழிப்பு யுத்தத்தை உடன் நிறுத்தவும், இது தொடர்பிலான இந்திய நடுவண் அரசின் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும் மேலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!' என்று முடியும் இக் கடிதத்தில் சுவிஸ் தமிழர் பேரவை உப தலைவர் சண்தவராஜாவும், செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயமும் கையெழுத்திட்டிருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் வாசலில் நிற்பதெபது ஒட்டு மொத்த தமிழினமும் தான் தனிய ஈழ்த்தமிழன் மட்டுமல்ல, ஏனெனில் 1960 களில் இலங்கையில் தென்னிந்த்திய திரைப்படங்களை உடனடியாகத்திரையிட முடியாத நிலையிருந்தது எவ்வாறு இப்போது கர்னாடகத்தில் தமிழ் படங்களை 15 நாட்களீன் பின் தான் திரை யிட முடியும் என்ற நிலை உள்ளதோ அதே போல்,கர்னாடகத்திற்கும் சிங்களத்திற்குமிடையே நிறைய ஒற்றுமை உண்டு எழுத்து வடிவம்,அது மட்டுமல்ல தமிழனை அடிப்பதில் கூட ஒற்றுமைதான்.

இத்தனைக்கும் அத்தியாவசிய தேவையான நீரைக்கூட கொடுக்க மாடார்கள் ஆனால் மழை பெய்து வெள்ளம் வந்தவுடன் முதல் வேலையாக அணைக்கட்டைத்திற்ந்து எல்லையிலிருக்கும் தமிழ்க்கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பார்கள். ஆனாலும் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் தமது நலன்களில் அவர்கள் எங்கு சென்று பிழைப்பு நடத்தினாலும் இன உணர்வு சாகாது சிங்களவன் மாதிரி

ஆனால் எம்மவர்கள்தான் இனத்தை விற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள்.இனத்தைபற்றி

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் வாசலில் நிற்பதெபது ஒட்டு மொத்த தமிழினமும் தான் தனிய ஈழ்த்தமிழன் மட்டுமல்ல, ஏனெனில் 1960 களில் இலங்கையில் தென்னிந்த்திய திரைப்படங்களை உடனடியாகத்திரையிட முடியாத நிலையிருந்தது எவ்வாறு இப்போது கர்னாடகத்தில் தமிழ் படங்களை 15 நாட்களீன் பின் தான் திரை யிட முடியும் என்ற நிலை உள்ளதோ அதே போல்,கர்னாடகத்திற்கும் சிங்களத்திற்குமிடையே நிறைய ஒற்றுமை உண்டு எழுத்து வடிவம்,அது மட்டுமல்ல தமிழனை அடிப்பதில் கூட ஒற்றுமைதான்.

இத்தனைக்கும் அத்தியாவசிய தேவையான நீரைக்கூட கொடுக்க மாடார்கள் ஆனால் மழை பெய்து வெள்ளம் வந்தவுடன் முதல் வேலையாக அணைக்கட்டைத்திற்ந்து எல்லையிலிருக்கும் தமிழ்க்கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடிப்பார்கள். ஆனாலும் அவர்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் தமது நலன்களில் அவர்கள் எங்கு சென்று பிழைப்பு நடத்தினாலும் இன உணர்வு சாகாது சிங்களவன் மாதிரி

ஆனால் எம்மவர்கள்தான் இனத்தை விற்றுப்பிழைப்பு நடத்துகிறார்கள்.இனத்தைபற்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.