Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சை ஆரம்பிக்குமாறு யாழ். ஆயர் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடையை நீக்கி பேச்சை ஆரம்பிக்குமாறு யாழ். ஆயர் கோரிக்கை

திகதி: 14.01.2009 // தமிழீழம் // [சங்கிலியன்]

விடுதலைப் புலிகள் மீதான தடையை அரசாங்கம் உடனடியாக நீக்கி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டுமென யாழ் ஆயர் தேமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை சிறிலங்கா சனாதிபதி மகிந்தராஐபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேச்சின் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முடியும் யுத்தத்தின் மூலம் மக்களின் உயிர்களே வீணாக பறிக்கப்படும் எனவும் ஆயர் தெரிவித்துள்ளார்.

சங்கதி

மக்கள் வாழும் பகுதிகள் மீதான குண்டு வீச்சு ஷெல் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்ஜனாதிபதியிடம் யாழ், ஆயர் தோமஸ் சௌந்தர்நாயகம் கோரிக்கை

வன்னியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது நடத்தப்பட்டுவரும் விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலினால் நாள்தோறும் மக்கள் பலியாவதுடன் பெருமளவானோர் காயமடைந்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

வன்னியில் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சில் பொதுமக்கள் பெரும் இழப்புக்களை சந்தித்துள்ள நிலையிலேயே யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஜனாதிபதிக்கு இந்த அவசர கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரட்ணசிறிவிக்கிரமநாயக்க, பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, வவுனியா மாவட்ட இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரிய, அமெரிக்கத் தூதுவர், பிரித்தானிய தூதுவர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதிக்கான கடிதத்தில் ஆயர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வன்னியில் பரந்தன் முதல் முல்லைத்தீவு வரையான ஏ 35 வீதியை அண்டிய பகுதிகள் மற்றும் தருமபுரம், புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரின் ஷெல் தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சினால் பெரும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றனர். விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலினால் நாள்தோறும் பலர் கொல்லப்பட்டும் பெருமளவானோர் காயமடைந்தும் வருகின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்கள்பாதுகாப்புத் தேடி எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் தவிக்கின்றனர்.

நாம் மக்களை தேவாலயங்கள், ஆலயங்களுக்கருகில் ஒன்று கூடுமாறு அவர்களை அழைக்கலாம். அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர். தற்போதைய நிலையில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக அமையலாம்.

எனவே, பொதுமக்களின் பகுதி மீதான ஷெல்தாக்குதல் மற்றும் விமானக் குண்டு வீச்சு என்பவற்றை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் பொதுமக்களின் பிரதேசங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி வீரகேசரி இணையம்

Edited by thamizhanpan

  • கருத்துக்கள உறவுகள்

அநாம் மக்களை தேவாலயங்கள், ஆலயங்களுக்கருகில் ஒன்று கூடுமாறு அவர்களை அழைக்கலாம். அங்கு எமது குருவானவர்களும் உள்ளனர். தற்போதைய நிலையில் தேவாலயங்களும் கோவில்களும் அகதிகளுக்கான புகலிடமாக மையலாம்.

ஆயர் என்ன சொல்ல வாரார்.மக்கள் தேவாலயத்திற்க்கு வந்த பிறகு குண்டு வீசமாட்டார்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதமாம்.நாவாலியில் நடந்தை ஆயர் மறந்திட்டாரோ

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் என்ன சொல்ல வாரார்.மக்கள் தேவாலயத்திற்க்கு வந்த பிறகு குண்டு வீசமாட்டார்கள் என்பதற்க்கு என்ன உத்தரவாதமாம்.நாவாலியில் நடந்தை ஆயர் மறந்திட்டாரோ

ஏன் நவாலிக்குப் போறீங்கள்.. சந்திரிக்கா அம்மையார் தனது இறுதிக்காலத்தில் மடு மீது தாக்குதல் நடத்தி அங்கு கூடியிருந்த இடம்பெயர்ந்த மக்களை படுகொலை செய்ததை மறந்திட்டமா..??!

ஏன் அண்மையில் (2006/7) அல்லைப்பிட்டியில்.. மதப்போதகர் உட்பட மக்கள் படுகொலை செய்யப்பட்டதை மறந்திட்டமா..??!

அதென்னவோ தெரியல்ல... சிங்களவன்.. தமிழனைக் கொல்லுறதுக்கு தமிழனே.. வழிசமைச்சுக் கொடுத்திடுறான். ஆனால்.. கொழும்பில ஒரு கிளைமோர் வெடிச்ச உடன.. ஆனந்தசங்கரி.. கொழும்பு ஆயர்.. மட்டக்களப்பு ஆயர்.. உட்பட எல்லோருக்கும் இரத்தம் கொதிக்குது..??!

ஆனால்.. வன்னி என்ற உடன..??! :):lol:

Edited by nedukkalapoovan

ஆரம்பிச்சுட்டாங்க....

ஆயாரும் கோயரும்...தினம் தின்ம் இரத்த வெள்ளத்தில் செத்து மிதக்கும் தமிழினத்துக்கு இப்போது தேவை சிங்களவனின் இரத்தம்... எம்மை இந்நிலைக்கு தள்ளயவனை குந்த இடம்மின்றி எம் இடங்களில் இருந்து சிதறச் சிதற அடித்து விரட்டவேண்டும்....

தடை போர்றதும் எடுக்குறதும் சமாதனம் பேசுறதும்.... இவை எல்லாத்தையும் திரும்பி திரும்பி பார்த்து அலுத்துவிட்டது....

எமது மக்களின் கோலங்களை பார்க மண்டை வெடிக்கிறது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆயர் அவர்கள் வன்னியில் அரசினால் நடத்தப்படும் தாக்குதல்கள் பொதுமக்களை இலக்கு வைத்துத்தான் என்று கருத்துப்பட கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆலயங்களில் தஞ்சமடையும் மக்களை ராணுவம் குண்டு வீசிக் கொல்லாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் அது ஒரே தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றொழித்துவிடுவதற்கான சந்தர்ப்பத்தை ராணுவத்துக்கு வழங்கி விடும். ஏனென்றால் நவாலி, மடு, வற்றாப்பளை, யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயம் என்று வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களை அரசாங்கம் மிக இலகுவாக கொன்று தனது இச்சையைத் தீர்த்துக்கொண்டது நாம் அறியாதது அல்லவே!

ஆயர் செய்யவேண்டியதெல்லாம், வத்திக்கானுக்கு இப்போது நடக்கும் இனக்கொலையை விலாவாரியாக எடுத்துரைப்பதுதான். அது உடனேயே போரை முடிவிற்குக் கொண்டுவராவிட்டாலும் கூட சர்வதேசத்துக்கு இங்கு நடக்கும் இன அழிப்பை ஓரளவுக்கவது எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்திடமோ, அல்லது வேறு எந்த உள்ளூர் அமைப்பிடமோ முறையிடுவதும், கோரிக்கை விடுப்பதும் ஒன்றையுமே செய்யப்போவதில்லை.

யுத்த நிறுத்தம் செய்யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்னும் கோரிக்கைகளையெல்லாம் அரசாங்கம் நத்தார் புதுவருட தின போர் நிறுத்தத்தை புறங்கைய்யால் தட்டிவிட்டுச் சிரித்தது போல சிரிக்கச் செய்யும்.

ஆயர் அவர்கள் வன்னியில் அரசினால் நடத்தப்படும் தாக்குதல்கள் பொதுமக்களை இலக்கு வைத்துத்தான் என்று கருத்துப்பட கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆலயங்களில் தஞ்சமடையும் மக்களை ராணுவம் குண்டு வீசிக் கொல்லாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் அது ஒரே தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்றொழித்துவிடுவதற்கான சந்தர்ப்பத்தை ராணுவத்துக்கு வழங்கி விடும். ஏனென்றால் நவாலி, மடு, வற்றாப்பளை, யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயம் என்று வழிபாட்டுத் தளங்களில் தஞ்சமடைந்திருந்த மக்களை அரசாங்கம் மிக இலகுவாக கொன்று தனது இச்சையைத் தீர்த்துக்கொண்டது நாம் அறியாதது அல்லவே!

ஆயர் செய்யவேண்டியதெல்லாம், வத்திக்கானுக்கு இப்போது நடக்கும் இனக்கொலையை விலாவாரியாக எடுத்துரைப்பதுதான். அது உடனேயே போரை முடிவிற்குக் கொண்டுவராவிட்டாலும் கூட சர்வதேசத்துக்கு இங்கு நடக்கும் இன அழிப்பை ஓரளவுக்கவது எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும். அரசாங்கத்திடமோ, அல்லது வேறு எந்த உள்ளூர் அமைப்பிடமோ முறையிடுவதும், கோரிக்கை விடுப்பதும் ஒன்றையுமே செய்யப்போவதில்லை.

யுத்த நிறுத்தம் செய்யுங்கள், புலிகள் மீதான தடையை நீக்குங்கள் என்னும் கோரிக்கைகளையெல்லாம் அரசாங்கம் நத்தார் புதுவருட தின போர் நிறுத்தத்தை புறங்கைய்யால் தட்டிவிட்டுச் சிரித்தது போல சிரிக்கச் செய்யும்.

:)

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு சசி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயர் சொல்லுறார்........ ராஜபக்ஸ ஆடர் போடுறார்.................. கோத்த பாய அறிவிக்கிறார்............ சரத்பொன்சேகா நடைமுறைப்படுத்துகிறார்.............

வன்னிமக்கள் சுதந்திரமாக வாழலாம்.......

திரைபடம் முடிவுற்றது.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.