Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கொரு மகன் பிறப்பான்

Featured Replies

எனக்கொரு மகன் பிறப்பான்.....

-------------------------

எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்

என்னைப்போல இருக்கான்..

ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான்

அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்...

பூனைக்கும் நாய்க்கும் சகுனம் வைத்து

தொடங்கும் முயற்சியை விடமாட்டான்

காதல் அறியாவிட்டாலும்

காமம் எண்ணி அலையான்

வீணுக்குப்போகும் பயல்களுக்காக

வேலியை உயர்த்தி அடையான்

சோத்துக்கு அலையும் பயல்கள் போல்

சோம்பேறி மடத்தில் தங்கான்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்

படத்தைப் பார்த்துப் படிப்பான்

பவுடர்ப் பொடிக்கு மயங்கான்

உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும்

உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான்

வெள்ளை வான்கள் அறியா

வெள்ளை மனது கொள்வான்

எனக்கொரு மகன் பிறப்பான் -அவன்

என்னைப்போல இருக்கான்..

-எல்லாள மஹாராஜா :) :)

வணக்கம் உண்மையில் கவிதை நல்லாய் இருக்கு

  • தொடங்கியவர்

வணக்கம் உண்மையில் கவிதை நல்லாய் இருக்கு

உண்மையில் கவிதை நல்லாயிருந்தால் போதாது உண்மையும் சுட வேண்டும்.... உங்கள் இளைய மனதை எண்ணி நான் சுடாமல் இருக்கின்றேன் .. வாழ்க்கையின் யதார்த்தங்களை மறுதலிக்க்கும் வயது... இளமையின் வலிமை இமய மலையை விட உயர்வு... எக்கு போல் மனம் ஏறு போல் நடை.... :) :)

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மவா ராசனிற்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப்போலவேயிருப்பான்

மாமிக்கும் மச்சாளிற்கும் பயந்து ஓடமாட்டான்

தன்வீட்டு காணிக்கே வேலியடைக்கமாட்டான்

பூனை நாய் மட்டும்ல

ஆடு மாட்டிற்கும் வால்பிடியான்

காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

வீணாகவேனும் ஒண்ணுக்கு போகான்

வேலி கறையானை கொல்லான் :) :) :):D

  • தொடங்கியவர்

எல்லாள மவா ராசனிற்கொரு மகன் பிறப்பான்

அவன் என்னைப்போலவேயிருப்பான்

மாமிக்கும் மச்சாளிற்கும் பயந்து ஓடமாட்டான்

தன்வீட்டு காணிக்கே வேலியடைக்கமாட்டான்

பூனை நாய் மட்டும்ல

ஆடு மாட்டிற்கும் வால்பிடியான்

காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

சாத்து உண்மையைச் சொல்ல வேணும் எந்த ராணியோட உமக்குத் தொடசல்... 1008 ராணியை வைச்சிருக்கிறதில இதுவொரு கரைச்சல் என்ரை பூனப்படையும் புனுகுப்படையும் துப்பறியிறதில இந்த விசயத்தில மட்டும் தோத்துத் தான் போட்டுது....

இல்லையெண்டால்... 1987..இல என்ரை முதல் அமைச்சர் அடிச்ச(சாத்திரி மாதிரி) கொட்டத்துக்கு 2007 இல எல்லாத்தையும் வெட்டி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி களுவேத்தினதை என்னவெண்டு கொல்ல....

"காதலையும் காமத்தையும் கழிப்றையிலேயே கழிப்பான்

ஏனெனில் காயடிக்கப்பட்வனல்ல

வேலி கறையானை கொல்லான் :) :) :):D

"

சாத்து உப்பிடி ஒரு விசயம் இருக்கிறது உண்ணாணை எனக்குத் தெரியாது.... இது தான் அனுபவத் திரட்டல்.... அல்லது கழித்தல்....வாழ்க சாத்துவின் அனுபவப்பகிர்வுகள்....

"ஒண்ணுக்கு இருக்கக் கத்துக்கணும்... காக்கா கூட்டத்தைப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்த யாருங்க...."

டாங்ச்ஸு.... சாத்து :D :D

கற்றுக் கொள்ளும் ஆவலுடன் எல்லாள மஹாராஜா...

"

சாத்து உப்பிடி ஒரு விசயம் இருக்கிறது உண்ணாணை எனக்குத் தெரியாது.... இது தான் அனுபவத் திரட்டல்.... அல்லது கழித்தல்....வாழ்க சாத்துவின் அனுபவப்பகிர்வுகள்....

"ஒண்ணுக்கு இருக்கக் கத்துக்கணும்... காக்கா கூட்டத்தைப் பாருங்க... அதுக்கு கத்துக் கொடுத்த யாருங்க...."

டாங்ச்ஸு.... சாத்து :D :D

கற்றுக் கொள்ளும் ஆவலுடன் எல்லாள மஹாராஜா...

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்


படத்தைப் பார்த்துப் படிப்பான்

பவுடர்ப் பொடிக்கு மயங்கான்


உலகம் போற்றும் சயன்ஸு தெரியாவிட்டாலும்

உயிர்கள் கொல்லும் சைலன்ஸு அறியான்

கவிதை நல்லாயிருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிக்கும் சாமிக்கும் பயந்து ஊரை விட்டுப்போகான்

அடுத்தவர் காணியில் கதியால் தள்ளி நடவான்...

வீணுக்குப்போகும் பயல்களுக்காக

வேலியை உயர்த்தி அடையான்

சோத்துக்கு அலையும் பயல்கள் போல்

சோம்பேறி மடத்தில் தங்கான்

நாட்டுக்குப் பாரமாக நடு வீட்டில் அலையான்

மதிப்பற்ற பயலாக மதில் மேல் குந்தான்

-எல்லாள மஹாராஜா :) :)

அடுத்தவர் காணியில் கதியால் வைத்தவர்களெல்லாம் இப்ப காணியுமில்லாமல் வேலியுமில்லாமல் உலகமெல்லாம் அலைகிறார்கள். உங்கள் மகன் பற்றிய உங்கள் கவிதையின் கனவுபோல் ஆக வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் எல்லாளமகாராஜா.

சாத்துவின் அனுபவ வரிகளும் அசத்தலாக இருக்கு. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.