Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் சரணடைந்ததாக - சிறிலங்காவின் பொய் பிரச்சாரம் அம்பலம்

Featured Replies

Puli%20sla%20(1).jpg

விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக கூறி சிறிலங்கா அண்மையில் வெளியிட்ட பொய்ப் பிரச்சாரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மூன்று போராளிகள் தங்களிடம் சரணடைந்ததாகக் கூறி நிழற்படங்களையும் வெளியிட்டிருந்தது.

ஆனால், அவர்கள் போராளிகள் இல்லையென்றும் தங்கள் பிள்ளைகள் வட்டக்கச்சியில் உள்ள வீடுகளைப் பார்த்து வரச்சென்றபோது படையினரிடம் அகப்பட்டக்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இவர்களை மீட்டுத்தருமாறு அவர்கள் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களிடமும் கோரியுள்ளனர்.

இதேவேளை படையினரிடம் போராளிகள் பிடிபட்டால் முதலில் அவர்களிடம் இருந்து சயனைட் குப்பிகளை படையினர் பறித்தெடுத்து விடுவார்கள், அத்துடன் அவர்களின் ஆயுதக் கூட்டுக்களை கழற்றாமல் (கோள்சர்) வைத்திருக்க மாட்டார்கள், அதேவேளை, ஆண் போராளிகள் பெண் போராளிகள் போன்று சீருடையை வெளியே விட்டு, பட்டியை மேலே கட்டுவதில்லை.

இத்தனை விடயங்களை கவனிக்காமல் நிழற்படங்களை வெளியிட்டு, தங்கள் பொய் பிரச்சாரத்தை படையினர் தாங்களே அம்பலப்படுத்தியும் விட்டனர்.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் ரஷ்யாவில் ஜேர்மனியப் படையினர் சிக்குப்பட்டிருந்த நிலையில், ஜேர்மனி இவ்வாறாக பிரமாண்டமான பொய்பிரச்சாரங்களை மக்களைக் குழப்புவதற்காக கட்டவிழ்த்து விட்டிருந்தது. மக்களைக் குழப்பமடையவைத்து, அதன் ஊடாக வெற்றிகளைப் பெறுவதற்காக இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது வழமாயன யுக்தி. களமுனையில் உள்ள யதார்த்த நிலைக்குப் புறம்பாக சிறிலங்கா மாபெரும் பிரச்சாரப்போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து வவுனியா இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்து சென்ற 6 இளைஞர்களை படையினர் கைதுசெய்து அவர்கள் மூலம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது:- 6 இளைஞர்களை அண்மையில் கைதுசெய்து இராணுவ முகாமுக்கு அழைத்துசென்ற படையினர் அவர்களை கட்டாயப்படுத்தி இராணுவ சீருடையை அணிவித்து, அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகியவர்கள் எனக்கூற வைத்து வீடியோ படம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வவுனியா நீதவான் முன்னிலையில் அவர்கள் 6 பேரும் அளித்த வாக்குமூலத்தில் தாம் பொதுமக்கள் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் படையினரே தம்மை தமிழீழ விடுதலைப்புலிகள் என கூறச்செய்து வாக்குமூலம் பெற்றதாக நீதவானிடம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த 6 பேரையும் அவர்களின் பெற்றோரிடம் இணைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில் இளைஞர்கள் 6 பேரும் நெளுக்குளம் தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மகாலிங்கம் நிசாந்தன்,

சார்ல்ஸ் கிங்ஸ்லி ,

அலெக்ஸ்ஜென்ட்டி,

மகாலிங்கம் சோதீஸ்வரன்,

செல்வராசா செந்தூரன்,

அன்னராசா ஜெயராஜன்

வசந்தக்குமார் நாதன்

ஆகியோரே இந்த 6 இளைஞர்களுமாவர்.

  • தொடங்கியவர்

அப்புமார் போய் தலையை குடுத்துப் போட்டு நிக்கினம்!! கவனம் தப்பி எங்கேயேனும் ஓடுங்கோ!! இல்லையேல் "தண்ணிக்குட்டி மாவீரன்" சித்தார்த்தரின் ஒட்டுப்புளொட் போட்டு விடும்!! இரத்தவெறியில் வவுனியாவில் இந்த நாய்கள் திரியுதுகளாம்!!

எனக்கு இதை வாசித்தபோது இங்கு யாரோ ஒருவர் இணைத்த துணுக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. அமெரிக்காவுக்கு புலி பிடிக்கப்போன இராணுவம் பன்றியை பிடித்து கட்டிப்போட்டு அடித்து புலி என்று ஒத்துக்கொள் என்று வற்புறுத்தியதாக சிலவேளை அது உண்மை ச் சம்பவமோ என்னவோ? :D:(:D:wub::wub::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.