Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களப்பொறுப்பாளர்களின் கவனத்திற்கு!

Featured Replies

வணக்கம் சின்னக்குட்டி,

நீங்கள் குறிப்பிட்டது போல் சாதாரணமாக அது போன்ற சில விமர்சனங்கள் நீக்கப்பட வேண்டியதில்லை என்பது உண்மை தான். இந்த இரு தலைப்பையும் பொறுத்தவரை நான் இதுவரை தணிக்கை ஏதும் செய்யவில்லை என்பதுடன் ஓரிரு கடுமையான வார்த்தை பிரயோகங்களையும் தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களையே நீக்குமாறு கேட்டு வந்தேன். இன்று தனிநபர் விமர்சங்கள் எல்லை மீறிய நிலையில் இரண்டு தலைப்புக்களும் முழுமையாக தணிக்கை செய்யப்படும் போது கடுமையாக தணிக்கை செய்ய நேரிட்டது. அதனால் ஏற்பட்ட அசெளகரியங்களிற்கு வருந்துகின்றேன்.

நட்புடன்

மதன்

  • Replies 104
  • Views 12.4k
  • Created
  • Last Reply

மதன் மிகச் சிரமத்துடன் உங்கள் பணியைச் செய்திருக்கின்றீர்கள். கருத்துக்களை நுட்பமாக பரந்தளவில் நோக்கி.. கருத்துக்களால் வெல்வதே அவசியம். அந்த வகையில் உங்கள் பணிக்கு எங்கள் நன்றிகள் உரித்தாகட்டும் அத்தோடு உங்கள் சிரமங்களைத் தவிர்க்க எங்களாலான ஒத்துழைப்புகளை நல்குவோம்..! :idea:

வணக்கம் குறுக்காலபோவான்,

பிறமொழி ஆக்கங்கள் பிரிவில் உள்ள ஆரியர் தொடர்பான இரண்டு தலைப்புக்களில் பல கருத்துக்களை தனிமடல் மூலம் தொடர்பு கொண்டு அவர்களாகவே நீக்குமாறு கேட்டு வந்தேன். எனினும இம்முறை தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறியதாலும் பல உறுப்பினர்களின் பல கருத்துக்கள் நீக்கப்பட்டதாலும் அவற்றை ஒவ்வொரு உறுப்பினராக தொடர்பு கொண்டு நீக்குவது சாத்தியமற்றது என்பதால் அவை ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ளன.

கள உறுப்பினர்களின் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும் போது அவை தனிமடல் மூலமாக தொடர்பு கொண்டோ அல்லது நேரடியாகவோ நீக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க தயவு செய்து அனைத்து கள உறுப்பினர்களும் சுயதணிக்கையுடன் கருத்துக்களை முன்வையுங்கள் நன்றி.

மதன் ஏன் தணிக்கை செய்தீர் என்று விளக்கம் கேக்கவில்லை,

எனது பதிவுகளிலிருந்து நீர் தணிக்கை செய்த (நீக்கிய) பகுதிகளை தனிமடலில் அனுப்புமாறு மட்டுமே கேக்கிறன்.

India history spat hits US

No Aryan Invasion---New and recent genetic proof.

ஆகிய 2 தலைப்புகளில் நீர் தணிக்கை செய்த எனது பதிவுகளின் பகுதிகளை தனிமடலில் எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

தனிமடலில் வந்த மதனின் பதில்

**********

மதன், வழமையாக பதிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் சிலபகுதிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு நீக்கப்படும் போது அவை வேற்று நிறத்தால் * போட்டுக் காட்டப்படும். அத்தோடு தணிக்கை செய்தவர் தனது பெயரையும் அந்தப்பதிவில் குறிப்பிடுவார்.

ஆனால் நீர் அதை இந்த தணிக்கைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. காரணமாக நீர் கூறலாம் வேலைப் பழுமத்தியில் அவசரமாகச் செய்த தணிக்கையால் அவ்வாறு கவனம் எடுக்க முடியவில்லை என்று.

நேரம் கிடைக்காத நிலையில் அவ்வாறு அவசரமாக செய்யாது தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தி பின்னர் பொறுமையாக தணிக்கை செய்து விவாதத்திற்கு விடும் பழக்கத்தையும் இங்கு கவனித்திருக்கிறன்.

அத்தோடு அந்த இரண்டு தலைப்புகளிலும் நீர் அவசர அவசரமாக தணிக்கை செய்யும் அளவிற்கு தனிநபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அங்கு நீர் நடந்ததாக எண்ணும் தனிநபர் தாக்குதல்களை விட அதிக அளவில் வேறு பல இடங்களில் தனிநபர் தாக்குதல்கள் தணிக்கை ஏதுவும் இன்றி தொடர்கிறது.

இந்த நிலையில் உமது வழமைக்கு மாறான தணிக்கை முறையையும் அதற்கு நீர் கூறிய காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவற்றிற்கு உமது முழுவிளக்கத்தையும் எதிர்பார்க்கிறன்.

நான் உம்மிடம் தனிமடலில் எதிர்பார்த்தது (இனியும் முடிந்தால் எதிர்பார்ப்பது) நீர் தணிக்கை செய்த பகுதிகளை மாத்திரமே.

அவற்றை உம்மால் தரமுடியாது வெறும் வியாக்கியானங்கள் தான் தரமுடியும் என்றால் அதை சக கள உறுப்பினர்களின் பார்வைக்குமாக இங்கு வைக்கவும்.

நன்றி

********

யாழ்பாடி,

இந்த விடையத்தில் மதன் அனுப்பிய தனிமடல் இரு கள உறுப்பினர்களுக் கிடையிலான தனிப்பட்ட விவகாரம் அல்ல.

அவர் மடத்துறுத்தினராக எடுத்த நடவடிக்கை பற்றியது மட்டுமே. அந்தவகையில் இந்தக் கருத்துப் பரிமாறல் சக உறுப்பினர்களின் பார்வைக்கும் இருப்பது தான் பொருத்தம். இங்கு தனிமடல் தொடர்பாடல் அவசியமற்றது. அதானால் தான் அவரது மடல் இங்கு வைக்கப்பட்டு எனது பதிலும் வைக்கப்பட்டது. குளப்பத்தை தவிர்க்க அந்த மடலை மீண்டும் இங்கு இணைத்துவிடவும்.

நன்றி.

மேலும் இங்கே உங்களின் நேரமின்மையால் ஏற்படும் தனி நபர் தாகுதல்களை, கருதியல் திசை திருப்பலை கட்டுப்படுத்த ஒரு யோசனையும் முன் வைக்க விரும்புகிறேன்,

தற்போது கள நடைமுறைகளின் படி கருத்தியல் ரீதியாக பதிற் கருத்து வைக்க முடியாதவர், ஒரு தனி நபர் தாக்குதலைத் துவக்கி கருதாடலைத் திசை திருப்பி இறுதியில் தலைப்பை மூட வைக்கிறார்.இவர் இதைத் தெரிந்தே செய்ய விளைகின்றார்.ஏன் இதனைச் செய்கிறார்?அவருக்குத் தெரியும் தனி நபர் தாக்குதலை அவர் தொடக்கினால் பதிற் கருதாடுபவரும் அதற்கு பதிலாகத் தாக்குவார் ஈற்றில் கருதாடல் திசை திரும்பி மூடப்பும் என்று,மட்டுறுதினரால் கடைசியில் இருவரது கருத்துக்களும் எடுக்கப் படும் என்று.இவ்வாறான தனி நபர் தாக்குதல் தொடங்கும் போது மட்டுறுதினர்களுக்கு சுட்டிக்காட்டப் பட்ட போதும் அவர்கள் அப்போது கண்காணிபில் ஈடுபடாமையினால் கருதாடல் தனி நபர் தாக்குதலாக உருவெடுத்து விடுகிறது.இவாறு குற்றம் புரிந்தவரும் ,தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டவரும் ஒரே விதமாக கணிக்கப் பட்டு நடை பெறும் தணிக்கயின் மூலம், அவர் தனது கருதியல் வரட்ச்சியை நிவர்த்தி செய்து கொள்கிறார்.இங்கே களதில் மட்டுறுதினருக்கு இருக்கும் நேரம் இனமய்யை அவர் தனகுச் சாதகமாகப் பாவித்துக் கொள்கிறார்.இதை தெரிந்தே இவ்வர்கள் இவாறன தனி நபர் தாக்குதல்களைத் தொடங்குகின்றனர்.

இவர்கள் இந்த யுக்தியை தொடர்ந்து செய்யாமல் இருக்க இருக்கும் ஒரு வழி முறை பாகுபாடான ரீதியில் தணிக்கயை மேற் கொள்வதே.அதாவது யார் தனி நபர் தாக்குதலை ஒரு தலைப்பில் ஆரம்பிகிறாரோ அவரது கருதுக்கள் மட்டுமே தணிக்கைக்கு அத் தலைப்பில் மடுறுதினரால் நடை முறைப் படுத்தப் பட வேண்டும்.இப்படி ஒரு நடை முறை கொண்டு வந்தால் தனி நபர் தாகுதல்களை தலைப்பை குழப்பும் நோக்குடன் ஆரம்பிக்க முயற்ச்சிக்கும் ஒருவர் யோசித்து செயற்பட முயல்வார்.இதன் மூலம் மட்டுறுதினர்களின் வேலையும் இலகுவாக்கப் படுகிறது.யார் தனி நபர் தாக்குதலை ஆரம்பிதார் என்பதை மட்டுறுதினரே தீர்மானிக்கிறார்.

குற்றம் இழைப்பவரையும் ,கருதியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுபவரையும் ஒரே விதமாகக் கணித்து வழங்கப் படும் தணிக்கை ஆனது தனி நபர் தாக்குதலை ஆரம்பிப் போருக்கு அவ்வாறு நடப்பதற்கான ஊக்கு சக்தியாக விளங்குகின்றது என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இதைத் தடுக்கவே இவ்வாறான பாகுபடுத்தப்பட்ட தணிக்கை நடைமுறையை அமுல் படுதும் படி கேட்டுக் கொள்கிறேன்.இந்த வழி முறை களத்தில் உறுபினர்கள் தாங்களாகவே இவ்வாறான தனி நபர் தாக்குதல்களை ஆரம்பிக்காமல் இருக்க உதவலாம்.

மேலும் மட்டுறுதினர்கள் தணிக்கை செய்யப் பட்ட காரணத்தையும் யார் எங்கே தனி நபர் தாக்குதலைத் தொடங்கினாற் என்று காட்டுமிடத்தும் தேவயற்ற சந்தேகங்கள் ஏற்படாது விடுகிறது.இதுவே களம் தனி நபர் தாகுதல்கள் அற்று உருப்படியான கருத்தாடல்கள் நடை பெறும் இடமாக இருக்க உதவும் என்று நம்புகிறேன்.

வணக்கம் குறுக்காலபோவான்,

நீங்கள் தனிமடல் மூலம் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை கேட்டிருந்தீர்கள். அவற்றை ஏன் தரமுடியவில்லை என்பதை விளக்கவே

"அந்த இரண்டு தலைப்புக்களிலும் உள்ள சில கருத்துக்கள் பிரிக்கப்பட்டு நிர்வாகத்தில் உள்ளது, உங்களுடைய கருத்துக்களை பொருத்தமட்டில் அவை பெரும்பாலும் முழுமையாக நீக்கப்படாது சிலபகுதிகள் மற்றும் திருத்தம் செய்யப்பட்டமையால் அவற்றின் பகுதிகளில் என்னிடம் இல்லை, அதனால் தணிக்கை செய்யப்பட்ட பகுதிகளை உங்களிடம் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன்.

எதிர்காலத்தில் உங்கள் கருத்துக்கள் ஏதும் தணிக்கை செய்ய நேர்ந்தால் அவற்றின் பிரதியை உங்களுக்கு தருகின்றேன்"

என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த தலைப்பில் தணிக்கைகுள்ளான கருத்துக்கள் குறித்து விளக்கம் கேட்ட கள நண்பர்களுக்கு அது குறித்த விளக்கத்தினை என்னால் முடிந்தவரையில் வழங்கியுள்ளேன். இது தொடர்பாக மேன்மேலும் தொடர்ந்து விவாதிக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.

புரிந்துணர்விற்கு நன்றி.

நட்புடன்

மதன்

மதன், நீர் இண்டைக்கு நீலத்திலை போட்டிருக்கிறது தான் 2 நாட்களுக்கு முதல் நீர் தனிமடலில் அனுப்பின பதில். அதைத்தான் நான் மேலே போட்டு சில விளக்கம் கேட்டபோது யாழ்பாடியார் தனிமடல் பிரதி என்று தணிக்கை செய்திருக்கிறார்.

அதையே நீர் இண்டைக்கு நீலநிறத்தில் போட்டு ஒண்டும் புதுசா விளக்கம் தரவில்லை.

யாழ்பாடியாரால் தணிக்கை செய்யப்பட்ட எனது பதிவில் கேட்க்கப்பட்ட விடையங்களிற்கு உமது விளக்கங்களை முடிந்தால் வையும்.

பார்வைக் கோளாறு எண்டால் கிளே மேற்கோள் காட்டியிருக்கு

மதன், வழமையாக பதிவுகள் முழுமையாக நீக்கப்படாமல் சிலபகுதிகள் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு நீக்கப்படும் போது அவை வேற்று நிறத்தால் * போட்டுக் காட்டப்படும். அத்தோடு தணிக்கை செய்தவர் தனது பெயரையும் அந்தப்பதிவில் குறிப்பிடுவார்.

ஆனால் நீர் அதை இந்த தணிக்கைகளில் நடைமுறைப்படுத்தவில்லை. காரணமாக நீர் கூறலாம் வேலைப் பழுமத்தியில் அவசரமாகச் செய்த தணிக்கையால் அவ்வாறு கவனம் எடுக்க முடியவில்லை என்று.

நேரம் கிடைக்காத நிலையில் அவ்வாறு அவசரமாக செய்யாது தற்காலிகமாக நிர்வாகத்திற்கு நகர்த்தி பின்னர் பொறுமையாக தணிக்கை செய்து விவாதத்திற்கு விடும் பழக்கத்தையும் இங்கு கவனித்திருக்கிறன்.

அத்தோடு அந்த இரண்டு தலைப்புகளிலும் நீர் அவசர அவசரமாக தணிக்கை செய்யும் அளவிற்கு தனிநபர் தாக்குதல் நடக்கவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. அங்கு நீர் நடந்ததாக எண்ணும் தனிநபர் தாக்குதல்களை விட அதிக அளவில் வேறு பல இடங்களில் தனிநபர் தாக்குதல்கள் தணிக்கை ஏதுவும் இன்றி தொடர்கிறது.

இந்த நிலையில் உமது வழமைக்கு மாறான தணிக்கை முறையையும் அதற்கு நீர் கூறிய காரணங்களையும் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறது. இவற்றிற்கு உமது முழுவிளக்கத்தையும் எதிர்பார்க்கிறன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்கால போற அண்ணா...........குழம்பிட்டீங்களா நீங்களும்........சிலபேற்ற வியாதி உங்களுக்கும் பிடிச்சிட்டுதோ......................???????????????????? இப்ப மதனண்ணா அத திருப்பி தந்தா நீங்க என்ன செய்வீங்க?????????????? எங்கயாவது வாழைத்தோப்பில இல்லாட்டி மாந்தோப்பில கொண்டுபோய் தூவப்போறியளோ?????????????? அப்பிடியெண்டா சொல்லுங்கோ நான் வந்த புதுசில என்ர கருத்தகள் சிலதுகள கொத்திக்கொண்டு போனவை அதையும் திருப்பித் தரசொல்லிக் கேப்பம்.......................

பூனைக்குட்டி,

மதனிட்டை முதல் முறை தணிக்கை செய்த பகுதிகளை தனிமடலில் அனுப்பும் படி கேட்ட பொழுது தணிக்கை செய்தது ஏன் என்று விளக்கவுரை எழுதினார். 3 ஆம் தரம் கேட்டப்பிறகு தான் உண்மையை ஒத்துக கொண்டார் தூக்கின பகுதிகளை தான் பிரதியாக சேமித்து வைக்கவில்லை அதனால் தரமுடியாது என்று. அதை முதல் முறையே சொல்லியிருந்தால் விடையம் இழுபட்டிருக்காது.

இப்ப நான் கேக்கிறது அவர் தணிக்கை செய்த முறை பற்றி. வழமைபோல வேற்று நிறத்தில் * போடாது மற்றும் இன்னாரால் தணிக்கை செய்யப்பட்டது என்ற பின்குறிப்பும் இல்லாமல் இரு விடையத் தலைப்புகளிலும் மிகவும் அதிசையமான முறையில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

அவர் அவசரத்திலை புகுந்து விளையாட வேண்டி நிர்பந்தத்தில் அந்த விடையங்களில் தனிநபர் தாக்குதல் இருக்கவில்லை என்பதை கவனத்தில் எடுங்கள்.

இன்று அந்தப்பகுதிகளை ஒருவர் வாசித்தால் அங்கு வேணும் என்று நடத்தப்படும் விசமப்பிரச்சாரத்தை சாதாரணமானவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நேரம் செலவளித்து சிந்தித்து எழுதிய பதிவுகள் தணிக்கைக்குரிய தடையங்கள் எதுவும் இன்றி ஆனால் தணிக்கையின் பெயரால் சிதைக்கப்பட்டிருக்கு.

இதற்கு மதன் மடத்துறுத்தினராக தணிக்கையின் பெயரால் துணைபோயிருக்கிறார். ஆனால் யாருடைய தூண்டுதலில் அதை செய்திருக்கிறார்?

செய்யும் போது சுயமாக சிந்தித்துத் தான் செய்தாரா? :roll:

ஏன் செய்தார்? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழிஞ்சுது போங்கோ.............நான் சும்மா சாதாரணமா பிரண்ட்லியா கதைச்சுக்கொண்டிருந்ததையே வெட்டிட்டாங்களண்ணா திடீரெண்டு????????????? இதுக்கு மேல உங்களுக்கு நான் என்னத்த சொல்லுறது????????????

  • கருத்துக்கள உறவுகள்

விடிய ஆரில் முழிச்சனியள்? :P

நல்லவேளை நான் வரக்கு முதலே நீங்கள் நிற்கின்றீர்கள்!! :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புக்கும் பெரு மதிப்புக்கும் மாண்புக்கும் மனிதநேயத்துக்கும் உரிய நடுநிலமை தவறாத காழ் கள பொறுப்பாளர் மோகன் அண்ணாவுக்கு உங்கள் கடின உழைப்பின் பயனாக யாழ்களம் இன்று வளர்ந்து பெரு விருட்சமாகி நிற்கிறது. நீங்களும் யாழ் அண்ணாவும் களத்தை நிர்வாகம் செய்த பொழுது களத்தில் குழப்பங்கள் நடந்ததில்லை....... மிகச் சிறப்பாக கள்த்தை நிர்வாகம் செய்து வந்தீர்கள். ஆனால் எப்ப மட்டறுத்துனர்கள் வந்தார்களோ அவர்கள் பக்கசார்பாக நடக்கிறார்கள். தனிப்பட்ட கோபதாபங்களை வச்சுக்கொண்டு களஉறுப்பினர்கள் மேல் தங்கள் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்கிறார்கள். எதற்காக நான் தூயவன் அண்ணா ராஜ் அண்ணா எழுதிய கருத்துக்கள் நீக்கப்பட்டன எண்டுறதுக்கு உரியவர்கள் உடனடியாக விளக்கம் தரவேணும். ஒரு காரணமும் இல்லாமல் சாதாரணமாக எந்தவித தனிமனித தாக்குதலும் இல்லாம நடந்த கருத்துக்கள எதற்காக நீக்கினார்கள்.....???? எனக்கு உண்மை தெரிஞ்சாக வேணும்.... இல்லாட்டி நான் களத்துக்கு வரமாட்டன்...... நான் போவன்..... யாழ் களத்தில உருண்டு பிரண்டு அழுவன்........ ( இப்பிடி சொல்லுவன் ஆனா பிறகு ரோசம் கெட்டுப்போய் இதுக்குள்ள தான் கிடப்பன் - because i am a yarl adict) ......

யாழினி அக்கா எனக்கு விளக்கம் தாங்கோ எதுக்கு என்ர கருத்த நீக்கினீங்கள்? தூயவன் அண்ணா உங்களோட நான் சாதாரணமாத்தானே கதைச்சனான்?=???? உங்கள தனிப்பட்ட முறைல தாக்கினமாதிரி எழுதினானா?????? எனக்கு சத்தியமா விளங்கல எதுக்கு நீக்கினதெண்டு?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப வந்ந எனக்கே விளங்குது இங்க நடக்குற திருகு தாளங்கள்..

மனிசர் சுதந்திரமாக கதைக்க கூட வழியில்லை...

பூனைக்குட்டி எதையும் சுயமா சிந்திச்சு எழுதினா தணிக்கைக்கு உட்படாது..! மற்றவையை பாதிக்கிற படி எழுதினா..அப்படித்தான் ஆகும்..! நீங்கள் யாழுக்கு மட்டுமா அடிக்ற்..பாலுக்கு கருவாட்டுக்கும் அடிக்ற் தானே..! :wink: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் அண்ணா உங்களோட நான் சாதாரணமாத்தானே கதைச்சனான்?=???? உங்கள தனிப்பட்ட முறைல தாக்கினமாதிரி எழுதினானா?????? எனக்கு சத்தியமா விளங்கல எதுக்கு நீக்கினதெண்டு?????

இங்கே விசேட உறுப்பினரைப் பற்றி சொல்லப்பட்ட கேலித்தனமான பேச்சுத் தான் வெட்டப்பட்டதற்கு காரணமாக இருக்ககூடும். உண்மையில் அது யாழ்களத்தை அவமதிக்கும் செயலாக அவர்கள் கொண்டிருக்கலாம்.

எது எப்படியோ, இதை நான் பிரச்சனையாக கொள்ளப் போவதில்லை :idea:

நாரதர் சொன்னது:

"தற்போது கள நடைமுறைகளின் படி கருத்தியல் ரீதியாக பதிற் கருத்து வைக்க முடியாதவர், ஒரு தனி நபர் தாக்குதலைத் துவக்கி கருதாடலைத் திசை திருப்பி இறுதியில் தலைப்பை மூட வைக்கிறார்.இவர் இதைத் தெரிந்தே செய்ய விளைகின்றார்.ஏன் இதனைச் செய்கிறார்?அவருக்குத் தெரியும் தனி நபர் தாக்குதலை அவர் தொடக்கினால் பதிற் கருதாடுபவரும் அதற்கு பதிலாகத் தாக்குவார் ஈற்றில் கருதாடல் திசை திரும்பி மூடப்பும் என்று,மட்டுறுதினரால் கடைசியில் இருவரது கருத்துக்களும் எடுக்கப் படும் என்று.இவ்வாறான தனி நபர் தாக்குதல் தொடங்கும் போது மட்டுறுதினர்களுக்கு சுட்டிக்காட்டப் பட்ட போதும் அவர்கள் அப்போது கண்காணிபில் ஈடுபடாமையினால் கருதாடல் தனி நபர் தாக்குதலாக உருவெடுத்து விடுகிறது.இவாறு குற்றம் புரிந்தவரும் ,தனி நபர் தாக்குதலுக்கு உட்பட்டவரும் ஒரே விதமாக கணிக்கப் பட்டு நடை பெறும் தணிக்கயின் மூலம், அவர் தனது கருதியல் வரட்ச்சியை நிவர்த்தி செய்து கொள்கிறார்.இங்கே களதில் மட்டுறுதினருக்கு இருக்கும் நேரம் இனமய்யை அவர் தனகுச் சாதகமாகப் பாவித்துக் கொள்கிறார்.இதை தெரிந்தே இவ்வர்கள் இவாறன தனி நபர் தாக்குதல்களைத் தொடங்குகின்றனர்.

நாரதர் சொன்ன கருத்தில் உண்மை இருக்கிறது - இதுக்கு -மட்டுறுத்தினர்களின் தீர்வு என்ன?? முடிந்தால் சொல்லவும்! 8)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சனை பலகாலமாக இருந்து வருகின்றது. சிலரை தற்காலிகத் தடைக்கு உற்படுத்தியதும் உண்டு. அது பிறகு அரசியலாகி அவர் மீதான அனுதாபமாக( நாங்களும் அப்போ அனுதாபிகளாகப் போன காலமும் உண்டு) போனபடியால் அதை இப்போது களப்பொறுப்பாளர்கள் நிறுத்தி விட்டனர் போலும்.

மோகன் அண்ணாவின் தலையைப் பிய்த்துக் கொள்ளும் Avatar பார்கும்போது தெரியும் தானே. இங்கே எப்படிப்பட்ட வெட்டுக் குத்து நடக்கின்றது என்று :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வந்ந எனக்கே விளங்குது இங்க நடக்குற திருகு தாளங்கள்..

மனிசர் சுதந்திரமாக கதைக்க கூட வழியில்லை...

சுதந்திரமாக கதைத்தல் என்று எதைக் கருதுகின்றீர்கள். உங்கள் வகுப்பாசிரியரைப் பற்றி கேலி பண்ணுவதையா?

சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! எனும் தலைப்பிலிருந்து கள உறுப்பினரிடையேயான தனிப்பட்ட வாக்குவாதங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரசியல் செய்தி தலைப்புக்களில் கள உறுப்பினர்கள் ஒருவர் மாறி ஒருவர் தூற்றி கொள்வதும் தரக்குறைவான வார்த்தைகளை பிரயோகிப்பதையும் தயவு செய்து தவிர்த்து கொள்ளுங்கள். அவ்வாறானா வார்த்தை பிரயோகங்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால் அதில் தொடர்புடைய கள உறுப்பினர்களை அந்த தலைப்பை விட்டு வெளியேற்றுவதை தவிர வேறு வழி ஏதும் இல்லை.

இதனை தவிர்த்து இடப்பட்ட செய்தியினைத் திசை திருப்பும் விதமாக கருத்து எழுத முற்படுபவர்களை (மறைமுகமாகவெனினும்) இனம்கண்டு அவர்களை முதலில் வெளியேற்றினால் தொடரும் கருத்துப்பதிவுகள் அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டிராது என்று கருதுகிறேன்.

நட்புடன் சுடர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hello Mr.Mathan

I am Samuel,3.02.06 i posted one letter.that is in english.because I studying Himachal Pradesh,in India.Here I am Using department computer.So I cannot use the tamil font.So normaly I will write only in english.So if possible please U translate to tamil.

urs

samuel(malu)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Hello Mr.Mathan

I am Samuel,3.02.06 i posted one letter.that is in english.because I studying Himachal Pradesh,in India.Here I am Using department computer.So I cannot use the tamil font.So normaly I will write only in english.So if possible please U translate to tamil.

urs

samuel(malu)

வணக்கம்,

தங்கள் ஆக்கம் பிறமொழி ஆக்கங்கள் பிரிவுக்கு நகர்த்தப்பட்டுள்ளது. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

இங்கு ஆங்கிலத்தில் கருத்துக்கள் வரவேற்கப்படுவதில்லை.

எவ்வாறு தமிழில் எழுதுவது என்பதற்குரிய விளக்கத்தை

கீழே உள்ள இணைப்பில் காணமுடியும்.

படத்தில் காட்டியது போல் உங்கள் சுயகுறிப்புக்களில் மாற்றம் செய்தால் உங்கள் கணனியில் தமிழ் மென்பொருள் இல்லாமலே உங்களால் தமிழில் எழுதமுடியும்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=6054

இதிலே

english2unicode ஐ தெரிவு செய்தால் ஆங்கிலத்தில் Ammaa என எழுதினால் தமிழில் அம்மா என தோன்றும்.

ஆகவே முயற்சி செய்யுங்கள்.

நன்றி

நட்புடன்

யாழ்பாடி

  • கருத்துக்கள உறவுகள்

Hello Mr.Mathan

I am Samuel,3.02.06 i posted one letter.that is in english.because I studying Himachal Pradesh,in India.Here I am Using department computer.So I cannot use the tamil font.So normaly I will write only in english.So if possible please U translate to tamil.

urs

samuel(malu)

மதனுக்கு என்ன வேலை வெட்டி இல்லையா

தமிழில் எழுதி பழகி விட்டால் போச்சு

நான் அறிமுகம் பகுதியில் சமையல் பற்றி கூறியுளேன்

நான் தவறு செய்து இருந்தால் என்னை மன்னிக்கவும்.

:oops: :roll: இப்படிக்கு அஷ்வனா :?:

இதொண்டும் பெரிய தவறில்லை அசுவனா,இதுக்கெல்லாம் என்ன மன்னிப்பு.இப்ப தானே வந்தனியள் ,டேக் இட் ஈசி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.