Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரையுங்கள் விரையுங்கள் ஐ.நா. முன்பாக................இடைநிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 இளைஞர்கள் இணைந்து முன் எடுத்து நடத்தியிருக்கும் உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தர முன் வாருங்கள்.

இணைந்திருக்கும் உறவுகள் குறைவாகவே காணப்படுகிறது.

கரம் இணைந்த ஆதரவு எதிர்நோக்கியபடி..............

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் வழி நடத்திச் செல்லும் உண்ணாநிலை போராட்டத்துக்கு ஆதவினை வழங்குங்கள்.

வசம்பு போன்ற நடுநிலையாளர்கள் நேரில் சென்று ஆதரவை தெரிவிக்க வேண்டும்

வாழ்த்துக்கள் உறவுகளே..........

Edited by வினித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3 ந்திகதி வரை நடை பெற இருக்கும் இந்த போராட்டத்துக்கு ஆதரவினை வழங்குங்கள்.

வருகை தருபவர்களின் தொகை குறைவாகவே இருக்கின்றது.

ஸ்விஸ் ல் வசிப்பர்கள் அவர்களை பலப்படுத்துங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் சுவிஸ் தமிழ் இளையோரின் உண்ணாநிலை போராட்டம்

[ மாறன் ]

வியாழன், 29 சனவரி 2009 20:13

சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் சுவிஸ் தமிழ் இளையோர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று 28.01.2009 புதன்கிழமை ஒன்பது இளையோர் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் மிகவும் உணர்வு பூர்வமாக இன்று பலருடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும், வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும், ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் பாங்கி மூன் அவர்கள் நேரடியாக உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் தங்களைச் சந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இளையோருக்கு ஆதரவு அழிக்க ஐநா வளவை நோக்கி அணி திரளும் சுவிஸ் தமிழ்மக்கள் துண்டுப்பிரசுரங்களை சுவிஸ் மக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இன்று மாலை தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை ஐநா மன்றத்திற்குக் கையளிக்க உள்ளதாக இளையோர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தாயகத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடன் நிறுத்தி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்ணாமல் இருந்து உறவைக் காப்போம் என்கின்ற குறியீட்டுப் பெயருடன் 27.01.2009 செவ்வாய்க்கிழமை முதல் 04.02.2009 புதன்கிழமை வரை சூரிச் துர்க்கையம்மன் ஆலயத்தில் இபபோராட்டம் நடைபெறுகின்றது.

http://www.swissmurasam.net/swiss-news/117...9-19-13-20.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தாயக மக்களுக்காக தீக்குளிக்கும்போது நாம் இப்போராட்டங்களில் கூட கலந்துகொள்ள பின்நிற்போமாயின் நாம் தமிழரே அல்ல.

கரம் இணைந்த உறவுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.

உலகத்தமிழ் உறவுகள் உங்கள் பலமாகட்டும்!

தாயக, தமிழ் கொலை களமே உங்கள் உணர்வாகட்டும்!

கோரிக்கை நிறைவேறும் வரை தொடருங்கள்!

உணர்வுகளால் உங்களுடன் இணைகிறேன், வெற்றிக்கு வாழ்த்துகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த எழு இளைஞர்களும் தீக்குளிப்பு செய்ய இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் இந்த உண்ணவிரத போராட்டத்துக்கு கரம் இணையுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

30/01/2009, 13:10 [ சுவிஸ் நிருபர் எழில்]

சுவிசில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி - சுவிஸ் வாழ் மக்களை விரையுமாறு வேண்டுகோள்!

சுவிஸ் நாட்டில் இளைஞர் ஒருவர் தீக்குளிக்கும் முயற்சி அங்கிருந்த இளையோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுவிசில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலத்தின் முன்பாக சுவிஸ் இளையோர் அமைப்பினரால் சாகும் வரை உண்ணா விரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இளையோர் அமைப்பின் உண்ணா விரதப் போராட்டத்திற்கு சுவிஸ் வாழ் மக்களின் ஒத்துழைப்பு இன்மையே குறித்த இளைஞர் தீக்குளிக்கும் முயற்சிக்கு காரணமாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மூன்றாவது நாளாகத் தொடரும் உண்ணா விரதம் போராட்த்தின் போது ஐக்கிய நாடுகள் சபையினரிடம் 24 மணி நேரத்தினுள் சிறீலங்காப் இனப் பிரச்சினை குறித்து பதில் அளிக்கப்பட வேண்டும் என மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஐ.நா அதிகாரிகள் பெருவாரியான மக்கள் குறித்த சில மணி நேரத்தினுள் வரவழைத்தால் உடன் நடவடிக்கை தொடர்பில் பதில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த உடனடியாக அவ்விடத்திற்கு சுவிஸ் வாழ் மக்களை விரையுமாறு இளைய சமூதாயத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அதிகாரிகளின் கருத்து

நீங்கள் முன் வைத்துள்ள கோரிக்கைகளை இன்றே கலந்தாலோசிக்க முன் வருகின்றோம், ஆனால் வெறும் 7 நபர்களின் கருத்தாக எடுத்துக்கொண்டு, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும், இவ் விடையத்திக்கு முக்கியத்துவமளித்து உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமெனில் பல ஆயிரம் மக்கள் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

அவசர அழைப்பு

அனைத்து தமிழ் மக்களும் உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி உங்கள் அனைத்து அன்றாட தேவைகளையும் நிறுத்திவிட்டு அணிதிரளுங்கள். இன்று ஐக்கிய நாடுகள் சபை மாலை 8 மணிவரையும் திறந்திருப்பதால் அதற்கு முன் எப்பொழுதும் ஐக்கிய நாடுகளின் சபையின் அதிகாரிகள் சமூகமளிக்க தயாராகவுள்ளார்கள்.

ஆனால் இன்னுமே தயாராகமல் இருப்பது தமிழர்களாகிய நாம். தயவு செய்து இந்த அழைப்பை மிகவும் அதிமுக்கியம்வாய்ந்த நிகழ்வாக கருதி எம் இனத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்கு இந்நிமிடமே ஒன்றுதிரளுவோம்.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக உண்ணாவிரதம் மேற்கொள்ளும் உறவுகள் தங்கள் கோரிக்கை மனுக்களை இன்று மாலை 4.00 மணிக்கு உள்ளே கொண்டுசென்று கையளிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக வந்திருப்போர் எண்ணிக்கை போதாமலுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அங்கு செல்லக்கூடிய யாழ் கள உறவுகள் தயவுசெய்து உங்களுடைய பங்களிப்பையும் செய்யுங்கள். குறுகிய காலமே உள்ளதால், விரைவாக, முடிந்தவரை உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் இந்தத் தகவலைத் தெரியப்படுத்துங்கள்... குறைந்தது 4000 பேராவது அங்கு வரவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கிருப்போர் அனைவருக்கும் வேறு எப்படியெல்லாம் அழைப்பு விடுக்க முடியுமோ அப்படிச்செய்யுங்கள் அக்கா.

எல்லோரும் யாழ்களத்தையே பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்களே.

அங்கிருக்கும் உறவுகளை அழைத்துச்சொல்லுங்கள்.

வானொலி/தொ.கா எல்லாவற்றிலும் சொல்லச்சொல்லுங்கள். ஆலயங்களிலும் சொல்லச்சொல்லுங்கள்.

ஒவ்வொருவரும் தம்க்கு தெரிந்தவர்களை தனிப்பட்டமுறையில் அணுகி பங்கெடுக்கச்செய்யவேண்டும்.

இதில வேறெதையும் பாக்கவேண்டியதில்லை, எங்களுக்கு இன்று எல்லோரையும் ஒன்ருதிரட்டுவதே வேலையாக இருக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் மக்கள் தொகை தேவைப்படுகிறது. பக்கத்து வீட்டு உறவுகளையும் அழைத்து செல்லுங்கள்.

வேலை என்று தட்டிக்கழிக்காதீர்கள். வேலையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால்.............எம் உறவுகள்?

மற்றவர்களையும் தொடர்பு கொண்டு அழைத்துச்செல்லுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் ஐ.நா. அலுவலகம் முன்பு தமிழர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 18:54 [iST]

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பு தமிழ் இளைஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 9 தமிழ் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று மேலும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும், வன்னியில் உள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணா விரதம் இருந்து வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து பெரும் திரளான மக்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.

மேலும் தங்களது போராட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அவர்கள் சுவிஸ் மக்களிடையே விநியோகித்து வருகின்றனர்.

இன்று மாலையில் தங்களது கோரிக்கை மனுவை ஐ.நா. அலுவலகத்தில் ஒப்படைக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தையும் மேற்கொள்ளவுள்ளனர்.

"உண்ணாமல் இருந்து உறவைக் காப்போம்" என்கின்ற தலைப்பில், பிப்ரவரி 4ம் தேதி ஜூரிச்சில் உள்ள துர்க்கையம்மன் ஆலயத்தில் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் சகோதரங்களே எதையும் தடையின்றிச் செய்யக் கூடிய ஒரு நாட்டில் இருக்கிறீர்கள். தயை கூர்ந்து மனமிளகுங்கள். ஒரு அரிய வாய்ப்பு ஐ.நா வின் கவனத்தை ஈர்க்க. ஒன்று கூடுங்கோ அந்த ஏழு இளையோரோடு.

Edited by Justin

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெனீவாவில் தமிழ் இளையோரின் உண்ணாவிரதப் போராட்டம் ஐநா அலுவலகம் அளித்த சாதகமான அறிவிப்பால் இடைநிறுத்தம

[ மாறன் ]

சனி, 31 சனவரி 2009 10:55

சுவிஸ் ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் சுவிஸ் தமிழ் இளையோர் 28.01.2009 புதன்கிழமை ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் ஐநா அலுவலகத்தினரின் சாதகமான அறிவிப்பைத் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட சுவிஸ் தமிழ் மக்கள் ஐநா முன்பு அணி திரண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.

உடனடியாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றும், வன்னியிலுள்ள தமிழ் மக்களுக்கு மருந்து, உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும், ஐக்கிய நாடுகள் சபைப் பொதுச்செயலாளர் பாங்கி மூன் அவர்கள் நேரடியாக உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் தங்களைச் சந்திக்க வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைத்து நடத்தப்;பட்டது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாவிரதம் மேற்கொள்ளும் இளையோருக்கு ஆதரவு அளிக்க ஐநா வளவை நோக்கி அணி திரண்ட சுவிஸ் தமிழ்மக்கள் துண்டுப்பிரசுரங்களை சுவிஸ் மக்களுக்கு விநியோகித்தனர்.

http://www.swissmurasam.net/swiss-news/117...1-09-55-42.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் சகோதரங்களே எதையும் தடையின்றிச் செய்யக் கூடிய ஒரு நாட்டில் இருக்கிறீர்கள். தயை கூர்ந்து மனமிளகுங்கள். ஒரு அரிய வாய்ப்பு ஐ.நா வின் கவனத்தை ஈர்க்க. ஒன்று கூடுங்கோ அந்த ஏழு இளையோரோடு.

பெயரிக்குத்தான் அப்படி அண்ணை, ஆனால் உண்மையிலோ...

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனீவாவில் தமிழ் இளையோரின் உண்ணாவிரதப் போராட்டம் ஐநா அலுவலகம் அளித்த சாதகமான அறிவிப்பால் இடைநிறுத்தம்

அத்துடன் 02.02.2009 திங்கள், 03.02.2009 செவ்வாய் ஆகிய இருநாட்கள் ஜெனீவா ஐநா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை சிறீலங்கா அரசின் தேசிய தினமான பெப்ரவரி 4ம் நாள் ஐ.நா முன்றலில் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாகவும், இவ் ஒன்றுகூடலில் அனைத்துத் தமிழ் மக்களையும் இந்நாள் தமிழர்களின் கரிநாள் என்று உலகுக்குப் பறைசாற்ற அணி திரளுமாறும் சுவிஸ் தமிழ் இளையோர் கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் 05.02.2009 வியாழக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் அதேவேளை ஐநா மன்றத்தினால்; சாதகமான பதில்வராத பட்சத்தில் 06.02.2009 வெள்ளிக்கிழமை நீரும் அருந்தாது போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக இளையோர் தெரிவித்துள்ளனர்.

முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மூலம் அனைத்துலக சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்ட அனைவரையும் அணிதிரளுமாறு இளையோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதேவேளை தாயகத்தில் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் மேற்கொண்டு வரும் இன அழிப்புப் போரை உடன் நிறுத்தி மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைத்து சுவிஸ் தமிழ் இளையோர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். உண்ணாமல் இருந்து உறவைக் காப்போம் என்கின்ற குறியீட்டுப் பெயருடன் 27.01.2009 செவ்வாய்க்கிழமை முதல் 04.02.2009 புதன்கிழமை வரை சூரிச் துர்க்கையம்மன் ஆலயத்தில் இபபோராட்டம் நடைபெறுகின்றது.

________________________

மூலம்: சுவிஸ்முரசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.