Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக அரசு தவறான பிரச்சாரம் செய்கிறது: பழ.நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பிறகுதான் மேற்கு வங்காளத்திலும், கேரளத்திலும் சுயவேலை மறுப்பு போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும் நடந்திருக்கின்றன என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு சுட்டி காட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், மாணவர்கள், திரைப்பட துறையினர் உள்ளிட்ட அனைத்து தமிழர்களும் 4-ந்தேதி அன்று தங்களுக்கு தாங்களே சுயவேலை மறுப்பு செய்து, தங்கள் இல்லங்களிலேயே இருக்குமாறு பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்து தமிழர்களும் பொது வேலைநிறுத்தம் வெற்றிபெற துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

போராட்டங்களின் போது எந்த இடத்திலும் சிறு அளவு வன்முறை ஏற்படாமலும், பொதுச்சொத்துகளுக்கு சேதம் இல்லாமலும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.’’என்று கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2820

நன்றி நக்கீரன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கையில் உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு, அப்பாவி தமிழர்களின் உயிர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 4-ந் தேதி பொதுவேலை நிறுத்தம் மேற்கொள்ளும்படி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது சட்டவிரோதமானது என தமிழக அரசு தவறான பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் `பந்த்' செய்வதற்கு எதிராக கூறியுள்ள கருத்தினை திரித்து கூறி மக்களை மிரட்டுவதற்கு தமிழக அரசு முயல்கிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=2820

நன்றி நக்கீரன்

இன்றைய சூழலில் தமிழக மக்களது சட்பூர்வமான சனநாயக உரிமைகளை நசுக்க முனையும் தி.மு. க அரசின் முகத்திரையை கிழித்து அதனது தமிழின விரோதப்போக்கை அம்பலப்படுத்த, தமிழால் உயிர் வாழும் ஊடகங்கள் நேர்மையோடு பங்காற்றுவதும், அரசியல் நியமங்களுக்குட்பட்ட போராட்டங்களுக்கான சட்டவரையறைகளை வெளியிடுவதூடாகத் தமிழக மக்களை, அரசியல் செயற்பாட்டுக்கான சட்டரீதியான உரிமையைத் தெளிவுபடுத்தவதூடாகத் தமிழக அரசினது மிரட்டலின் உண்மைத் தன்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் கலைஞர் ஜயாவுடன் எழுத்து வடிவில் ஒரு ஒப்பந்தம் (எது எப்படியிருப்பினும் உலகத்தமிழர்களின் தலைவர் நீங்கள் தான் என்று) செய்துகொண்டால் நடவடிக்கையில் இறங்குவார் என்று.

தலையை நல்லா இறுக்கிவிட்டார்கள். அதனால்தால் இப்படி திக்குமுக்காடுகிறார். அல்லாவிட்டால் இது கருணாநிதிக்குத் தேவையான அரசியல்களம்.இதை மழுங்கடிப்பதற்கு முயற்சிக்கமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தலையை நல்லா இறுக்கிவிட்டார்கள். அதனால்தால் இப்படி திக்குமுக்காடுகிறார். அல்லாவிட்டால் இது கருணாநிதிக்குத் தேவையான அரசியல்களம்.இதை மழுங்கடிப்பதற்கு முயற்சிக்கமாட்டார்.

ஐயா அரசியல் ரீதியாக பாதகமான சூழ்நிலைக்குள் சென்றுவிட்டர் போல்தான் தோன்றுகிறது. காலமும் க்கடந்துவிட்டது. இளைய தலைமுறையினர் காங்கிரசையும் திமுகவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். திமுக சட்டமன்ற ஊறுப்பினருக்கு நேர்ந்த கல்வீச்சு யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது. ஜெயலலிதா அம்மையாரின் மௌனமும் எல்லாம் அவர் விருப்பப்படி செல்வதையே, அதாவது திமுகவின் செல்வாக்குச் சரிவு நிகழ்வதையே கோடி காட்டுகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோது நிலை வேறு; இப்போதுள்ள நிலை வேறு. இதுவே திமுகவின் கணிப்புமாக இருந்தால் காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்பில்லை..!

தி.மு.க வை மு.க.க வே நடுக்காட்டில் விடப்போறார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா அரசியல் ரீதியாக பாதகமான சூழ்நிலைக்குள் சென்றுவிட்டர் போல்தான் தோன்றுகிறது. காலமும் க்கடந்துவிட்டது. இளைய தலைமுறையினர் காங்கிரசையும் திமுகவையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். திமுக சட்டமன்ற ஊறுப்பினருக்கு நேர்ந்த கல்வீச்சு யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது. ஜெயலலிதா அம்மையாரின் மௌனமும் எல்லாம் அவர் விருப்பப்படி செல்வதையே, அதாவது திமுகவின் செல்வாக்குச் சரிவு நிகழ்வதையே கோடி காட்டுகிறது.

திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தபோது நிலை வேறு; இப்போதுள்ள நிலை வேறு. இதுவே திமுகவின் கணிப்புமாக இருந்தால் காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்பில்லை..!

என்னுடைய கேள்வியும் அதுதான் தமிழகத்தில் காங்கிரஸ் இற்கு வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகின்றது இருப்பினும் அதிமுகவோடு தான் அடுத்த கூட்டணி அமையும் என்றும் நினைக்கின்றேன். மீண்டும் இந்த காங்கிரசுதான் ஆட்சிக்கு வருமா?!

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வியும் அதுதான் தமிழகத்தில் காங்கிரஸ் இற்கு வாய்ப்பு இல்லையென்றே தோன்றுகின்றது இருப்பினும் அதிமுகவோடு தான் அடுத்த கூட்டணி அமையும் என்றும் நினைக்கின்றேன். மீண்டும் இந்த காங்கிரசுதான் ஆட்சிக்கு வருமா?!

அதிமுக + காங்கிரஸ் கூட்டணி ஆமைந்தாலும் எதிர்க்கூட்டணியின் பலத்தை வைத்தே இக்கூட்டணி வெல்லுமா என்று ஊகுக்க முடியும். அவ்வகையில் திமுக + பாமக + மதிமுக + இந்திய கம்யூனிஸ்ட் என்று பலமான கூட்டண்ணி அமையும் பட்சத்தில் காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை. ஆனால் இவர்கள் எல்லோரும் மூன்று அணிகளாகப் போஒடியிட்டால் காங்கிரசுக்குத்தான் லாபம்.

ஆனால் இவையெல்லாம் தமிழ்நாட்டில் மட்டும். பிறமாநிலங்களையும் சிந்திக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.