Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோனியாவின் கபட முகத்திரை கிழிகிறது!

Featured Replies

ஈழத் தமிழர்கள் மீது இந்திய ராணுவம் - சிங்கள ராணுவத்தோடு நடத்தி வரும் இனப் படுகொலைக்கு உத்தரவிட்டு வழி நடத்தி வருபவர், காங்கிர° கட்சியின் தலைவர் சோனியா தான் என்பது நாட்டுக்கு வெளிச்சமாகிவிட்டது. ராஜீவ் கொலையில் குற்றம் சுமத்தப்பட்டவர் மீது நளினிக்கு கருணைப் பார்வை இருந்ததுபோல் நடந்தவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் என்பதும் அம்பலமாகிவிட்டது.

சோனியாவின் கடந்த கால அரசியலை உன்னிப்பாகக் கவனித்தால், எப்போதுமே அவர் குரூரமான பழிவாங்கும் உணர்வுடன் செயல்படக் கூடியவர் என்பதைப் புரிந்துக் கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஜெயின் ஆணைய விசாரணை அறிக்கையைக் கூறலாம். ராஜீவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆராய அவர் மரணத்துக்குப் பிறகு நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் தான் ஜெயின் ஆணையம். அந்த ஆணையம் இடைக்கால அறிக்கைஒன்றை தாக்கல் செய்தபோது அதை அரசியலாக்குவதில் தீவிரம் காட்டி, மத்தியில் நடந்து கொண்டிருந்த அய்க்கிய முன்னணி ஆட்சியையே கவிழ்த்தவர்தான் சோனியா. அந்த முன்னணியில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வை - அமைச்சர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் வெளியிலிருந்து காங்கிர° தரும் ஆதரவை திரும்பப் பெறும் என்று மிரட்டினார்; என்ன நடந்தது?

ஜெயின் கமிஷன் அறிக்கையை முன் கூட்டியே 'இந்தியா டுடே' என்ற பா.ஜ.க. ஆதரவு ஏடு வெளியிட்டவுடன் நவம்பர் 11 ஆம் தேதி - கல்கத்தா நேதாஜி இன்டோர் °டேடியத்தில் நடந்த ஒரு பேரணியில், காங்கிர° கட்சித் தலைவர் சீதாராம் கேசரி இது பற்றிப் பேசினார். "இந்த அறிக்கைக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை. இதனால் அய்க்கிய முன்னணிக்கு காங்கிர° தந்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலையும் வராது".

அதே நாளில் காங்கிர° தலைவர்களான ஜிதேந்திர பிரசாத், கருணாகரன் ஆகியோர் டெல்லியில் பேசுகையில் இதற்கு நேர்மாறாக இந்த அறிக்கையை அலட்சியப்படுத்த முடியாது என்று பேசினார். இவர்கள் சோனியாவின் தீவிர ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேசரியின் - எதிர்ப்பாளரான அர்ஜுன் சிங் முதலில் இதில் அடக்கி வாசித்தவர், சோனியாவை சந்தித்தப் பிறகு, தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இதை வைத்து கேசரியின் முக்கியத்துவத்தை குறைக்கலாம் என்பது இவரின் திட்டம்.

நவம்பர் 13-ம் நாள் பிரதமர் குஜ்ரால், கேசரியை அழைத்து விருந்தளித்து, பத்திரிகையில் வந்துள்ள ஜெயின் கமிஷன் அறிக்கையைப் பற்றி விவாதித்தார். குஜ்ரால் எடுத்து வைத்த வாதங்களில் கேசரி முழு திருப்தி அடைந்தார்.

அடுத்த நாள் அர்ஜுன் சிங்கிடமும் மூத்த தலைவர்களுடனும், முதல் நாள் பிரதமர் அளித்த விருந்தில் நடந்த விவாதத்தை கேசரி விளக்கும் போது, அவர்கள் கேசரிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக் கிறார்கள். ஜெயின் அறிக்கையை பெரிதுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிலையை கேசரி ஊகித்துக் கொண்டார். அதற்குப் பிறகு தான் வேறு வழியின்றி சோனியாவை சந்தித்திருக்கிறார். சோனியா கேசரியை எச்சரிக்கிறார். அய்க்கிய முன்னணி ஆட்சியைக் கலைக்க இதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடுகிறார்.

அடுத்த நாள் கேசரி கூட்டிய காங்கிர° காரிய கமிட்டியை, முக்கிய உறுப்பினர்கள் புறக்கணித்து விட்டார்கள். கட்சிக்குள் தான் தனிமைப் படுத்தப்படுவதை உணர்ந்த கேசரி, தனது பதவியைத்தக்க வைத்துக் கொள்ள ஜெயின் அறிக்கையை கையில் எடுக்க முடிவு செய்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஜெயின் அறிக்கையை விவாதிக்கவே அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரசார் முடிவுசெய்து, அவையில் அமளியில் ஈடுபட்டு, நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள்.

ஜெயின் ஆணையம் - ராஜீவ் கொலையில் தி.மு.க.வை மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழர் களையுமே குற்றம் சாட்டியிருந்தது. தி.மு.க.வைப் பழிவாங்கத் துடித்த சோனியா, அய்க்கிய முன்னணி ஆட்சியிலிருந்து தி.மு.க.வை விலக்க வேண்டும் என்று காங்கிரசார் மூலம் நாடாளுமன்றத்தில் ரகளை செய்ய வைத்தார். இல்லையேல் ஆட்சிக்கு வெளியிலிருந்து தரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று மிரட்டினார்.

தி.மு.க.வை வெளியேற்ற - பிரதமர் குஜ்ரால் தலைமையிலான அய்க்கிய முன்னணி ஆட்சி மறுத்தது. ஜெயின் ஆணைய அறிக்கையை ஊதிப் பெரிதாக்கிய சோனியா காங்கிர° ஆதரவைத் திரும்பப் பெற்று, மத்திய ஆட்சியை பதவி விலக வைத்தார்.

இவர் தான் சோனியா!

http://www.tamilseythi.com/tamilnaadu/soni...2009-02-04.html

தகவலுக்கு நன்றி அய்யா

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் கவனமாக எழுதுங்கள். ரோவைப் பொறுத்தவரைக்கும் அது குடும்ப அரசியலைப் பெரும்பாலும் விரும்பியதில்லை. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நின்றால், நாட்டை விட, அவர்களின் செல்வாக்கினுள் எல்லாம் சென்றுவிடும் என அது கருதும்.

ஏற்கனவே பார்த்தால், நேரு குடும்பத்தில் இந்திரா, சஞ்சாய், ராஜிவ் இறப்புக்கள் என்பன மர்மமானவை. வழமையான பிறர் பழி போடல் மூலம், அவர்களின் கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த முறை சோனியாக் காந்தி தான் பிரதமராக வருவார் எனப் பலர் நம்பிக் கொண்டிருக்க, கடைசி நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமாக்கப்பட்டார்.

சோனியாவை வராமல் தடுத்ததின் பின்ணனி யாராக இருக்கும் என ஊகிக்கலாம்.

ஆனாலும் கூட, இன்று மன்மோகன் சிங் கைப்பாவை என்ற நிலைக்கு சோனியாவின் செல்வாக்கில் தான் இந்தியா செல்கின்றது. சிலவேளைத் தமிழர்களை அழிப்பதன் பின்ணனி இவராகவும் இருக்கலாம். அடுத்த பிரதமர் போட்டிக்கு ராகுல் தயார்ப்படுத்தப்படுகின்றார்.

எனவே, யாரைப் பழி போடலாம் என இப்போது ரோவிற்கு நமைச்சல் எடுக்கத் தொடங்கியிருக்கும்...திட்டித் தீர்க்கும் எம் பாதையை வைத்து கதை வசனம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

எதற்கும் கவனமாக எழுதுங்கள். ரோவைப் பொறுத்தவரைக்கும் அது குடும்ப அரசியலைப் பெரும்பாலும் விரும்பியதில்லை. ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி நின்றால், நாட்டை விட, அவர்களின் செல்வாக்கினுள் எல்லாம் சென்றுவிடும் என அது கருதும்.

ஏற்கனவே பார்த்தால், நேரு குடும்பத்தில் இந்திரா, சஞ்சாய், ராஜிவ் இறப்புக்கள் என்பன மர்மமானவை. வழமையான பிறர் பழி போடல் மூலம், அவர்களின் கொலைகள் நடந்திருக்கின்றன. இந்த முறை சோனியாக் காந்தி தான் பிரதமராக வருவார் எனப் பலர் நம்பிக் கொண்டிருக்க, கடைசி நேரத்தில் மன்மோகன் சிங் பிரதமாக்கப்பட்டார்.

சோனியாவை வராமல் தடுத்ததின் பின்ணனி யாராக இருக்கும் என ஊகிக்கலாம்.

ஆனாலும் கூட, இன்று மன்மோகன் சிங் கைப்பாவை என்ற நிலைக்கு சோனியாவின் செல்வாக்கில் தான் இந்தியா செல்கின்றது. சிலவேளைத் தமிழர்களை அழிப்பதன் பின்ணனி இவராகவும் இருக்கலாம். அடுத்த பிரதமர் போட்டிக்கு ராகுல் தயார்ப்படுத்தப்படுகின்றார்.

எனவே, யாரைப் பழி போடலாம் என இப்போது ரோவிற்கு நமைச்சல் எடுக்கத் தொடங்கியிருக்கும்...திட்டித் தீர்க்கும் எம் பாதையை வைத்து கதை வசனம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

:lol:

எனவே, யாரைப் பழி போடலாம் என இப்போது ரோவிற்கு நமைச்சல் எடுக்கத் தொடங்கியிருக்கும்...திட்டித் தீர்க்கும் எம் பாதையை வைத்து கதை வசனம் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்...

நீங்கள் சொல்வதை அலச்சியம் செய்யேலாமல் கிடக்கு... லச்சியம் செய்தால் வயித்தால அடிக்குது....

யோசிக்கவேண்டிய விடயமதான்.... இதுக்கு றோ தான் அவிக்க வேண்டுமில்லை அவிச்சுக்கொட்ட கனக்க கூட்டம் திரியுது.....

இப்பிடி கனக்க் முன்னமும் நடந்திருக்கு கடைசில எல்லாரும் சேர்ந்து ஆருக்கு பழிபோட்டவங்கள் தெரியும்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவுக்கு பின்னும் கொஞ்ச பெரிய ஆட்கள் வெளியில் இருந்து ஆட்டி வைக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்க கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.