Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BBC சேவைகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்துடன் நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுவரை காலமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த பி.பி.சி. சிங்கள சேவையின் சந்தேசய மற்றும் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் பி.பி.சி. நிர்வாகத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த ஒலிபரப்புத் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இனிவரும் காலங்களில் குறுகிய அலைவரிசையில் பி.பி.சியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது.

http://www.paristamil.com/tamilnews/?p=27304

காலம் கடந்தாவது ஏற்பட்ட ஞானம்.. புலம் பெயர்ந்த மக்களுக்கு இன்னொரு பணி வந்திருக்கிறது..BBC தமிழ் சேவையை நமது பக்க நியாயங்களை இணைக்க வைக்க வேண்டும்...விரைந்து செயற்படுவோம்...தாமதிக்க வேண்டாம்.. அவர்கள் எடுத்த முடிவு சரியானதே என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்...

இலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பண்பலை ஊடாக இதுவரை மறு ஒலிபரப்பு செய்யப்பட்டுவந்த பிபிசி தமிழோசையின் ஒலிபரப்பு இன்றோடு இடை நிறுத்தப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இந்த மறு ஒலிபரப்பு கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து நடந்து வந்தது.

கடந்த சில மாதங்களாக, பிபிசி தமிழ், சிங்கள மற்றும் பிபிசி ஆங்கில மொழி நிகழ்ச்சிகளின் மறு ஒலிபரப்பு பல முறை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வேண்டுமென்றே வெட்டப்பட்டுவந்தது என்பது இலங்கை நேயர்களுக்குத் தெரிந்திருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியிலிருந்து இந்த ஆண்டு ஜனவரி வரை 17 முறை தமிழோசை நிகழ்ச்சிகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் வெட்டப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பிபிசியின் உயர் நிர்வாகம் மூலமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்த

  • கருத்துக்கள உறவுகள்

வெறி கொண்ட அரசு உலகத்தின் கண்களுக்கு மண்ணை தூவி விட்டு தன் கோரத்தாண்டவத்தை நடத்தி வருகிறது . அதற்கு அயல் நாடும் ஒத்து ஊதுகிறது , சாயம் எப்போது வெளிக்கும் . அநீதி நீண்ட நாள் நிலைத்ததாக சரித்திரம் இல்லை.எமது மக்கள் வெளி உலகுக்கு செய்யும் பரபுரையிலே தான் எல்லாம் தங்கி இருக்கிறது தொடரவேண்டும் எம் மக்கள் பணி ..........

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

எமது நேயர்களுக்கு செய்திகளை நடுநிலையாக வழங்குவது என்ற நோக்கத்தில் பிபிசி தனது ஒலிபரப்புக்கு முக்கியமானதாகக் கருதும், செய்திச் சுதந்திரம் பக்கசார்பின்மை மற்றும் பல தரப்புக் கருத்துக்களுக்கு இடமளித்தல் போன்ற விழுமியங்களைப் பேணிவருகிறது என்று கூறும் நைஜல் சாப்மன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பிபிசியின் நிகழ்ச்சிகளை இடையில் வெட்டாமல் ஒலிபரப்பும் என்ற உத்திரவாதம் தரும்வரை, பிபிசி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலம் ஒலிபரப்புவதை இடை நிறுத்துவது என்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அட பி. பி. ஸி , யே...... இ. ஓ. கூ. விட்டை தங்கியிருக்க வேண்டிய நிலைமை . :huh:

பி.பி.சி யின் இந்த செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்,இது ஒரு ஜனநாயக விரோதச் செயல்.பி.பி.சி சில சமயங்களில் பக்கசார்பாக நடந்து இருக்கலாம்,ஆனால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனம் அப்படியல்ல,செய்திகளை சுதந்திரமாகவும் நடுநிலயாகவும் தருவது இ.ஒ.கூ மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.