Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்னியில் நேற்றும் இன்றும்(சனி,ஞாயிறு) 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு

சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலை

புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை

இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலவன்பொக்கணை

அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு

புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.

பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன

நன்றி புதினம்

mullai_20090215004.jpg

mullai_20090215008.jpg

mullai_20090215005.jpg

mullai_20090215007.jpg

mullai_20090215006.jpg

mullai_20090215002.jpg

Edited by தேசம்

படங்களை பார்க்கும் போது எரிச்சலும் ஆத்திரமும் கையாலாகாத் தனமும் வருகின்றது. இந்த மக்களின் அழிவினை இனி எவராலுமே நிறுத்த முடியாதா?

இராணுவத்தின் கொலைக் களம் என்று தெரிந்தும் வேறு வழியின்றி பாதுகாப்பு வலயத்திற்குள் போய் சேர்கின்ற இந்த மக்களின் நிலையினை காணும் போது கள யதார்த்தமும் நிலவரமும் அப்பட்டமாக தெரிகின்றது.

சிங்கள அரசின் இனவழிப்பிற்கு இலகுவான களம் ஏற்படுத்தப் பட்டது போன்றுதான் இன்று வன்னி களமுனை மாறியுள்ளது. இராணுவத்தின் பாதுகாப்பு வலயப் பகுதியிலும் படுகொலை நடக்கின்றது, புலிகளின் இறுதி தளப் பிரதேசமான புதுக்குடியிருப்பிலும் இராணுவத்தால் படுகொலை நடக்கின்றது. ஆகக் குறைந்தது ஆட்லறிகளின் வீச்செல்லைக்குள் இல்லாத ஒரு சின்ன பிரதேசம் கூட எம்மிடம் இன்றில்லாத சூழ்நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம். தினம் தினம் வருகின்ற படுகொலைச் செய்திகளும் படங்களும் கூட நாளடைவில் மனதில் ஒரு வித static நிலையின ஏற்படுத்தி கவனம் பெறாமல் போகும் நிலையின அடையப் போகின்றது.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இலங்கை அரசில் வந்த கோபத்தை பார்க்க இந்தியா அரசோடு தான் கோபம் அதிகம்

:mellow:

Edited by siththar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.