Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை.......ஐ.நா கவனம், யுத்த நிலவரம் குறித்து .....ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் மற்றும் தமது ஊழியர்களை விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து மீட்பது குறித்து ஐ.நா கவனம்

[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:25.15 AM GMT +05:30 ]

வன்னியில் யுத்த வலயத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது நிறுவன ஊழியர்களை பாதுகாப்பாக விடுவிப்பது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த வலயத்திலிருந்து வெளியேற முடியாது தமது நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதியுறுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 12 கிலோ மீற்றர் பரப்புடைய பாதுகாப்பு வலயத்திலும் யுத்தம் தொடர்வதாகவும், இதனால் பொதுமக்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுத்த சூன்ய பிரதேசத்தில் இடம்பெற்று வரும் மோதல்களின் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் காயமடைந்தும், கொல்லப்பட்டும் வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் புள்ளி விபரங்களை வெளியிடவில்லை.

பொதுமக்களை பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து யுத்த முன்நகர்வுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவப் படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வன்னியிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் பொதுமக்களை விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மேலும், விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை தமது அமைப்பின் யுத்த நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் பலவந்தமாக புலிகளினால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் கடமையாற்றும் 15 ஊழியர்களும், அவர்களது குடும்ப உறுப்பினாகள் 75 பேரும் பலவந்தமாக புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

யுத்த நிலவரம் குறித்து நேரில் பார்வையிட இலங்கை விஜயம் செய்யுமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 05:22.09 AM GMT +05:30 ]

யுத்த நிலவரம் குறித்து நேரில் பார்வையிட இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகை தரும் சிவிலியன்கள் துன்புறுத்தப்படுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் இலங்கையில் எவ்வித மனிதாபிமான சேவையையும் ஆற்றவில்லை எனவும், மாறாக சுற்றுலாக்களை மேற்கொண்டு மீண்டும் சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில், இலங்கைச் சிவிலியன்கள் எவருக்கும் காட்சிப் பொருளாக அமைய இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிதி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வரும் சிவிலியன்கள் துன்புறுத்தப்படுவதாக சில சக்தகிள் சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வரும் சிவிலியன்களுக்கு தேவiயான சகல உதவிகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Edited by nochchi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை பாண் கீ மூனும் போய் கொழும்பில் உல்லாசக் களிப்பில் திளைத்த பின் கண்ணாடி அறையில் இருந்து ஒரு அறிக்கையைவிட்டு விட்டு வருவார். அறிக்கை விடுவதற்கான பணம் கூட எமது பணம்தான். இதுதான் மிகப்பெரும் துயரமாகும்.

எனவே தமிழினம் தனக்கான விடுதலைக்கு தன்னாலான அனைத்தையும் செய்து தனது தாயக பூமியை விடுவிப்பதூடாக மட்டுமே தனது இருப்பை இந்த உலகிலே உறுதிப்படுத்த முடியும் என்பதைத் தெளிவுபடுத்தகிறது. எனவே பணபலம் , அறிவியற்பலம மற்றும் அனைவரும் ஒன்றிணைந்து அதிகபட்ச வளங்களை ஒருக்கிணைத்து எமது போராட்டத்தை வெல்வதூடாக மட்டுமே இந்த உலகை வழிக்கு கொண்டுவர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பான் கீ மூனை கட்டுப்படுத்துவது பாதுகாப்புசபை. பாதுகாப்புசபையில் எமக்கு எதிராக இந்தியாவின் வேண்டுதலில் ரஷ்யா செயற்படுகிறது. நாம் எமக்கு ஆதரவாக ஒரு சில நாடுகளையாவது திரட்டிக்கொள்ள வேண்டும். ஆசிய பிரந்தியத்தில் இருந்து பாதுகாப்பு சபையில் வீட்டோ பலத்துடன் உள்ள நாடு சீனா. ஐக்கிய இராச்சியம் எமக்கு ஆதரவாக செயற்பட தயாராக இருக்கிறது. அமெரிக்காவும் எமக்கு ஆதரவளிக்க கூடும். இந்தநாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழர் அமைப்புகள் தொடர்பு கொள்ள வேண்டும்.

இப்படியான பிரச்ச்னைகளை கையாளத்தான் வெளி நாடுகளில் நிரந்தரமான தமிழர்தகவல்மையங்கள், குழுக்கள் உத்தியோகபூர்வமாக இயங்க வேண்டும்.. இவைகள் மூலம் உடனுக்குடன் உலகின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு இலங்கையின் பொய்முகம் உலகு அறியவைக்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்ச்னைகளை கையாளத்தான் வெளி நாடுகளில் நிரந்தரமான தமிழர்தகவல்மையங்கள், குழுக்கள் உத்தியோகபூர்வமாக இயங்க வேண்டும்.. இவைகள் மூலம் உடனுக்குடன் உலகின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு இலங்கையின் பொய்முகம் உலகு அறியவைக்கலாம்..

திரு குக்கூ அவர்களே ! ஏன் புலம்பெயர்நாடுகளில் உள்ள கல்விமான்கள், சட்டத்துறை விற்பனர்கள் கூட இதைச் செய்யலாம் அல்லவா? ஏன் அவர்கள் சுய செயற்பாட்டுக் குழுக்களாகச் செயற்படக் கூடாது. எல்லாவற்றையும் தமிழர் தலைமை மீது சுமத்தமாது நாமே தமிழினத்தின் முகமாவோம். தடைகளை உடைப்போம்.

பான் கீ மூனை கட்டுப்படுத்துவது பாதுகாப்புசபை. பாதுகாப்புசபையில் எமக்கு எதிராக இந்தியாவின் வேண்டுதலில் ரஷ்யா செயற்படுகிறது.

நாம் எமக்கு ஆதரவாக ஒரு சில நாடுகளையாவது திரட்டிக்கொள்ள வேண்டும். ஆசிய பிரந்தியத்தில் இருந்து

பாதுகாப்பு சபையில் வீட்டோ பலத்துடன் உள்ள நாடு சீனா. ஐக்கிய இராச்சியம் எமக்கு ஆதரவாக செயற்பட தயாராக இருக்கிறது.

அமெரிக்காவும் எமக்கு ஆதரவளிக்க கூடும். இந்தநாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழர் அமைப்புகள் தொடர்பு கொள்ள வேண்டும்.

பொதுவாக ரஸ்யா தனிநாட்டுக்கு எதிர்ப்பு தானே செச்சினியாவை வைத்த்து ஆனால் இந்திய நாய்களைவிட பறவாய் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.