Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சொற்களின் தனித்தன்மை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் .

உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ).

ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்

உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்

உயிர்மெய் எழுத்துகள் : 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்றும் சேர்ந்து 247 எழுத்துகள் தமிழில் உள்ளன .

ஆனால் தமிழில் மட்டும் தான் அம்மா என்ற சொல்லில் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் மூன்றும் வருவது போல் அமைக்கபட்ட்ளது.

அதேபோல் ஒவ்வொரு மொழியிலும் குறில் மற்றும் நெடில் எழுத்தகள் வகை படுத்தப்படுகிறது . அம்மா என்ற சொல்லில் குறில் மற்றும் நெடில் வருவது மாதிரி அமைத்து இன்னும் தனித்தன்மையை காட்டுகிறது இந்த சொல் .

எந்த இடைச்சொல் சேர்ந்தாலும் அம்மா என்ற மூல சொல் சிதைவதில்லை .

எடுத்துகாட்டாக சில இடைசொற்களை சேர்த்து பார்போம்

வேற்றுமையுருபுகள் : அம்மாவை,அம்மாவுக்கு,அம்மாவின

்,அம்மாவுடைய , அம்மாதான் மற்றும்

"வினா இடைசொல் : அம்மாவோ? " இவை யாவிலும் அம்மா என்ற மூல சொல் சிதையவே இல்லை . அதுமட்டும்மல்ல பன்மையாக மாற்றினாலும் சிதையாது . "அம்மாக்கள்" .

இப்படி பட்ட தனித்தன்மை சொல்லை மேலும் பெருமை படுத்த தமிழர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் . ஈன்றவளை மற்றும் அழைக்க பயன்படுத்தாமல் ,தன் சகோதரிகளை அழைக்கவும் பயன்படுத்த ஆரம்பித்தான். தன் மகளை ,சகோதரியை ..

"என்னம்மா எப்போ வந்தே?" ,"கொஞ்சம் சாப்பிடும்மா" என்று விளிப்பதை அறிவோம் .

தன் அம்மாவின் வயதொத்த பெண்களையும் அறிமுகம் இல்லாவிட்டால் கூட அம்மா என்று அழைக்க ஆரம்பித்தான் .

வேறு எந்த மொழிலும் மகளை,சகோதரியை,தோழியை அல்லது இவர்கள் வயதொத்த பெண்களை "அம்மா" அன்ற சொல்லை வைத்து அழைப்பதில்லை

பெண்களை மட்டும் இல்லாமல் , ஆண்களையும் , ஏன் எதிரிகளை கூட புண்படுத்தாமல் தாழ்மையுடன் நடத்தப்படவேண்டும் என்பதற்காக அம்மா என்ற சொல்லை பயன்பாடு கொள்வாரும் உண்டு . எடுத்துகாட்டாக

"என்னம்மா கண்ணு ,எப்படியிருக்கு உடம்பு ?" என்று விளிப்பர் எதிரியை பார்த்து .

உலகில் எந்த மொழியிலும் எதிரியை அழைக்க "அம்மா" என்ற அந்த மொழியின் நிகரான சொல் பயன்படுத்து வதுஇல்லை .

இந்த பெருமையெல்லாம் வேறு எந்த மொழியுளும் அம்மாவை அழைக்கும் சொல்லுக்கு இல்லை . ஒரே சொல்லில் மொழியின் பல தனித்தன்மைகளை அடக்கி அதை "அம்மா" என்று அழைத்து சொல்லையும், மொழியை மட்டும் அல்லாமல் ஈன்றவளையும் பெருமை படுத்துகிறது தமிழ் .

கட்டுரை ஆக்கம் -ஆழை ரவி

Edited by azhairavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆய்வு.

ஆனால் தமிழில் எல்லாமாக 247 எழுத்துக்கள் உள்ளன என்று மாற்றிவிடவும்.

தட்டச்சுச் செய்யும்போது தவறு ஏற்பட்டிருக்கலாம்.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தங்கள் கருத்துக்கு . தமிழில் என் முதல் கட்டுரை இது . சிறுசிறு எழுத்து பிழை தட்டச்சில் நிகழ்ந்துவிட்டது .

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்லஆய்வு.தொடருங்கள் உங்கள் பணியை.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் பெரும்பாலும் உயிர், மெய் எழுத்துகளைச் சேர்த்து முப்பது என்றே சொல்வது வழக்கம். 247 எனச் சொல்லும்போது வாயைப் பிளந்து அதிசயமாகப் பார்க்கிறார்கள்!!!

இங்கு நான் பெரும்பாலும் உயிர், மெய் எழுத்துகளைச் சேர்த்து முப்பது என்றே சொல்வது வழக்கம். 247 எனச் சொல்லும்போது வாயைப் பிளந்து அதிசயமாகப் பார்க்கிறார்கள்!!!

மற்றவர்கள் அதிசயித்துப் போவதிலிருந்தே அம் மொழியின் சிறப்பினை அவர்கள் உணருகிறார்கள் என்பது தெரிகிறது. ஏன் அச்சிறப்பினை நீங்கள் அழிக்கிறீர்கள். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சிறப்புத் தன்மை கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அருவி நீங்கள் சொல்வது சரியே! ஆனால் இடைவேளையில் கோப்பி குடிக்கும் பத்து நிமிடத்துக்குள் இவற்றை விலாவாரியாக இந்நாட்டவருக்கு விளக்கிக் கொண்டிருக்க அவகாசம் கிடையாது. மேலும் இப்பிரச்சனை பிள்ளைகள் மட்டத்திலும் பாடசாலைகளில் ஏற்படுவதுண்டு. தமிழை இலகுவாக அறிமுகப்படுத்த இதுவும் நல்லதுதான். யாரும் தமிழை விரும்பி அறியவரும் பட்சத்தில் அவற்றை விளக்குவதில் சிரமமில்லை. சும்மா போகிற போக்கில் கதைக்க இதுதான் சரி!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.