Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசினால், இலங்கை‌த் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும்'' என்று த‌‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேசன் தெ‌ரி‌‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Featured Replies

இலங்கை‌த் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும்: இல.கணேசன்

சென்னை, புதன், 25 மார்ச் 2009( 10:51 IST )

"இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசினால், இலங்கை‌த் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும்'' என்று த‌‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேசன் தெ‌ரி‌‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை‌த் தமிழர் இன்னல் தீர்க்க வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் உணர்வுபூர்வமாக அக்கறை கொண்டுள்ளார்கள். இலங்கை‌த் தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் இயக்கம் பாடுபடுகிறது என்கின்ற எண்ணத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளது முகாம் செயல்பட்ட காலங்களில் பரவலாக மக்கள் ஆதரித்தார்கள்.

ஆனால், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. சாதாரண மக்கள் மட்டுமல்ல, விடுதலைப்புலிகளை பகிரங்கமாக ஆதரித்த அமைப்புகளும் பின்வாங்கின. என்ன பொருள்? இலங்கை‌த் தமிழர் நலன் காக்க இந்திய தமிழர்கள் அக்கறை கொண்டிருந்தாலும், எந்த வகையிலும் அது இந்திய நாட்டை பாதிக்கக்கூடாது என்பதில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.

தற்போது இலங்கை‌த் தமிழர்கள் போர் முனையில் அன்றாடம் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட்டு, அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு நிரந்தரமாக இலங்கை‌த் தமிழர்கள் சம உரிமை பெற வேண்டும் என்பதில் இந்திய தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.

இந்த நேரத்தில் இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்து, இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிராக பேசி வீரம் காட்டுவதாக நினைத்தால் இவர்களது நடவடிக்கையால், ஆதரவு தெரிவிக்கும் தேசிய எண்ணம் கொண்ட பெருவாரியானவர்கள் பின்வாங்குவார்கள்.

அதனால், இலங்கை‌த் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும். இவர்களது பேச்சு இலங்கை‌த் தமிழர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். எந்த காரணத்தை முன்னிட்டும் இலங்கை‌த் தமிழர்கள் நலன் விரும்பும் தேசியவாதிகள் இந்திய இறையாண்மைக்கும் எதிரான எந்த செயலையும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுகள் விவேகம் இல்லாத வீரம் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்

http://tamil.webdunia.com/newsworld/news/t...090325008_1.htm

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சொல்வதிலும் ஏதாவது நியாயம் இருக்குமோ? யாராவது வந்து சொல்லுங்கோப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் சொல்வதிலும் ஏதாவது நியாயம் இருக்குமோ? யாராவது வந்து சொல்லுங்கோப்பா.

அதனால்இ இலங்கை‌த் தமிழர்களுக்காக போராடும் இயக்கத்துக்கு பின்னடைவு ஏற்படும். இவர்களது பேச்சு இலங்கை‌த் தமிழர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். எந்த காரணத்தை முன்னிட்டும் இலங்கை‌த் தமிழர்கள் நலன் விரும்பும் தேசியவாதிகள் இந்திய இறையாண்மைக்கும் எதிரான எந்த செயலையும் ஏற்க மாட்டார்கள். இத்தகைய பேச்சுகள் விவேகம் இல்லாத வீரம் எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்

ஆம் இருக்கிறது

பலமுறை பலருடைய பேச்சுக்களில் தேவையற்ற விதத்தில் இந்தியாவை வம்புக்கிளுப்பதை கண்டிருக்கிறோம்

இதனுடைய பின் விளைவுகள் நிச்சயமாக ஈழத்தமிழினத்திற்கு பாதகமானவையாகவே அமையும் என நான் பயப்படுமளவுக்கு பேசுபவர் சிந்திப்பதில்லை என்ற வருத்தம் எனக்கு பலகாலமாக உண்டு

உணர்ச்சிவசப் பட்டு பேசி தேவையற்ற விதத்தில் தாமாகவே வலையில் மாட்டிக் கொள்வதை விட அவர்களால் எத்தனையோ விடயங்களைச் செய்ய முடியும்.

தமிழீழ ஆதரவிற்காக தமிழக மக்கள் இந்திய ஒருமைப் பாட்டை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இந்திய ஒருமைப் பாடு என்பதே பார்பனிய தேசிய வாதம் என்பதையும் ஆரிய வாதம் என்பதையும், இவை எப்போதுமே தமிழ் தேசியத்திற்கு எதிரானது என்பதையும் உணர்த்த திராவிடக் கட்சிகள் தவறிவிட்டன என்பதுதான் கசப்பான உண்மை

ம்ம் பூ என்றும் சொல்லலாம் தம்பி சொல்லுவது போலவும் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.