Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காங்கிரஸுக்கு மருத்துவர் ராமதாஸ் தந்த மரண அடி: சகோதரத்தமிழன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட குணங்கள் என்பது மாற்ற முடியாதவை. பிற்பட்ட மக்களுள் பிற்பட்டவர்களாக இருந்து முன்னேற்றம் மறுக்கப்பட்ட வன்னியர்களுக்காக

அவர்களை தட்டி வீரம் செறிந்த போராட்டம் நடத்திய மற்றும் திரைஉலகின் தாக்கமின்றி செம்மாந்த தமிழில்...

ஒரு இறுமாந்த தொலைக்காட்சி நடத்திவரும் மருத்துவர் ராமதாஸை அண்ணாந்து பாராதவர் யாரும் இலர்.

இதோ வஞ்சகமாக ஈழ சொந்தஙளை கொன்று கொழித்து கொக்கரித்து நிற்கும் வக்கரித்த காங்கிரஸுக்கு தென்னரஙத்திலிருந்து ஒரு கண்ணிவெடியை

தூக்கிபோட்டுவிட்டு அந்த நாசகார கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் ராமதாஸ் அவர்களின் நகர்வு The south Indian jolt என்று வட இந்திய ஊடகஙகளால் வர்ணிக்கப்படும் அதே வேளையில் புண்பட்ட தமிழ் நெஞ்சங்களுக்கும் சற்றே ஆறுதலாகவேனும் இருக்கும்.

கடந்த இரு ஆண்டுகளாக இனவெறி சிஙள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக்கொடுத்தும் நிதியங்களை கொட்டிகொடுத்தும் தொழினுட்பங்களையும்

ஆளணிகளையும் கோழைத்தனமாக மறைத்துக் கொடுத்தும் வாக்களித்த தமிழர்களின் கழுத்தை அறுத்து ஈழத்து சொந்தங்களை இனப்படுகொலை செய்யச்சொல்லி

ஆனந்தப்படுவதும் ஆற்றாது அழுது புரண்டு போரை நிறுத்தச்சொல்லி மன்றாட்டம் செய்தால்.. ஓடோடிச்சென்று சிங்கவளனை பாராட்டுவதையும் .we are not

concerned about LTTE... I am not fond of LTTE.. என்று ஏகடியம் பேசுவதையும் பார்த்து நாம் நெஞ்சு கொதித்து நின்ற நேரம் ஏதோ துளி ஆறுதல்.

உத்தரபிரதேசம் மற்றும் பீஹாரில் முலாயம் மற்றும் லாலு முறையே தந்த சம்மட்டியடிக்குப் பிறகு மருத்துவர் ராமதாஸ் காங்கிரஸுக்கு ஒரு மரண அடியே

தந்திருக்கிறார் என்றால் அது மிகையில்லை.

இத்தாலிக்காரி சோனியாவின் தான்தோன்றித்தனத்துக்கு மக்களும் தம் பங்குக்கு நெற்றியடி தர தயாராகி வருகிறார்கள். இதுவே இன்றைய நாட்டு நடப்பு. இவ்வேளையில் இன எதிரி ஜெயலலிதாவோடு கூட்டா? என கேட்கும் சகோதரர்களுக்கு எனது தாழ்மையான பதில் இதுதான். இது காலத்துக்கு தேவையான ராஜரீக நகர்வு அவ்வளவே.

இனப்பகைவன் பிரேமதாஸாவோடு கைகோர்த்து சதிகார இந்திய துரோகப்படையை புலிகள் ஈழத்திலிருந்து வெளியேற்றியதைப்போல முதலில் கொலை வெறி காங்கிரஸையும் அதன் கைக்கூலிகளையும் தமிழ் மண்ணைவிட்டு வெளியேற்றுவோம். பிறகு மற்றதை பார்க்கலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் அரசியல் வானில் சுழற்கோளாய் வலம் வரும் திருமாவோ கருணாநிதியின் திருதராஷ்டிர ஆலிஙகனத்தில் சிக்கித் தவிக்கிறார். அந்த

சக்கர வியூகத்திலிருந்து வெளியேற தா.பாண்டியன் மற்றும் வை.கோபாலசாமி போன்ற தலைவர்கள் தான் உதவ வேண்டும்

திருமா அவர்களே ஒரு பாரத ரத்னா விருதுக்காக தமிழினப் படுகொலைக்கு துணை போகும் கருணாநிதி தான் வடிக்கும் முதலைக் கண்ணீரை தமிழ் மக்கள் நம்ப

வேண்டும் என்பதற்காக உங்களை அருகில் வைத்துக்கொள்ள துடிக்கிறார். தயவு செய்து அந்த துரோகத்துக்கு துணை போய் வரலாற்றுத் தவறிழைக்க வேண்டாம்

என்று சகோதரத் தமிழன் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

செயலலிதா காங்கிரசுடன் கூட்டு சேரமாட்டார் என்று என்ன நிச்சயம்?

  • கருத்துக்கள உறவுகள்

செயலலிதா காங்கிரசுடன் கூட்டு சேரமாட்டார் என்று என்ன நிச்சயம்?

உண்மைதான். ஒரு உதாரணத்துக்கு மதிமுக,பாட்டாளி மக்கள் கட்சி, கம்னியூட்ஸ்கள், அதிமுக அடங்கிய கூட்டணி எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றால் அதிமுக பெரும்பாலும் 22 தொகுதியில் போட்டியிடுகிறது. ஆகவே 22 தொகுதியில் வெற்றிபெறும். நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு 20 தொகுதிகள் தேவைப்பட்டால், மானிலத்தில் திமுக ஆட்சியை நாங்கள் காங்கிரஸ் கலைப்போம், நீங்கள் அதிமுக எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றால் காங்கிரசுக்கு அதிமுக ஆதரவு தரும். அதே போல இராமதாசும் தற்பொழுது திமுகவுக்கு எதிராகவே குரல் கொடுக்கிறார். காங்கிரசுக்கு எதிராகப் பெரிதாகக் குரல் கொடுப்பதில்லை. தேர்தல் முடிய அன்புமணிக்கு மத்தியமந்திரிப் பதவி தருவேன் . எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்றால் பாட்டளிமக்கள் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணா நிதியை எதிர்கட்சியில் உட்கார வைப்பதுதான் எல்லோருக்கும் நல்லது. அப்போது தான் அவரது ஊடகமும் ஒழுங்காக வேலை செய்யும் ..

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவுமே நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவுமே நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன.

காங்கிரஸ், பிஜேபி, கம்னியூஸ்ட் என்ற 3 அணிகளும் ஆட்சி அமைக்க இடங்கள் கிடைக்காதவிடத்தில், கம்னியூஸ்ட் அணியான 3வது அணியில் இருக்கும் கட்சிகள் மதவாதக்கட்சியான பாரதிய ஜனதாவை விட காங்கிரசு பரவாயில்லை என்று ஆதரவு வழங்கலாம். சிலவேளை 91ல் சந்திரசேகர் பிரதமராக வந்ததுபோல வேறு கட்சிகளின் தலைவர்கள் பிரதமராக பெரிய கட்சியின் ஆதரவுடன் வரலாம். சரத்பவர், மாயாவதி போன்றவர்களும் பிரதமராக வரலாம்.

மருத்துவர் அய்யாவின் மகன் அன்புமணி இன்னமும் காங்கிரஸ் அமைச்சரவையில்தானே இருக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் அய்யாவின் மகன் அன்புமணி இன்னமும் காங்கிரஸ் அமைச்சரவையில்தானே இருக்கின்றார்?

அன்புமணியும் , வேலுவும் தங்கள் ராஜினாமா கடிதங்களை மன்மோகன்சிங்கிடம் கொடுத்துவிட்டு , சோனியாயை சந்த்திக்க விருப்பிய போது ....... சோனியா சந்திக்க மறுத்து விட்டதாக நேற்று ஒரு இணையத்தளத்தில் படித்தேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.