Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முகத்தார் பகிடி


Recommended Posts

அப்படி எல்லாம் உயர்பதவிக்கு முகத்தார் ஒன்றும் ஆசைப்படுபவர் அல்ல என்று தெரிவித்துக் கொள்கின்றேன். :wink: :roll:

நீங்க என் முகம்ஸ் அங்கிளின் வாய்ஸா :P

அதுசரி அது என்ன உயர் பதவி :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 634
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என் முகம்ஸ் அங்கிளின் வாய்ஸா :P

அதுசரி அது என்ன உயர் பதவி :roll: :roll: :roll:

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது :wink:

புலநாயிற்கு பிஏ என்று சொன்னீர்கள். அது தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது :wink:

புலநாயிற்கு பிஏ என்று சொன்னீர்கள். அது தான் சொன்னேன்.

புல நாயின் பீ ஏ எண்டா உயர் பதவியா அய்யோ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கிறீங்கப்பா :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புல நாயின் பீ ஏ எண்டா உயர் பதவியா அய்யோ இன்னும் சின்ன பிள்ளையாவே இருக்கிறீங்கப்பா :lol:

எனக்கில்லை. முகத்தாருக்கு அது உயர்பதவியாம். :wink:

Link to comment
Share on other sites

அப்படி எல்லாம் உயர்பதவிக்கு முகத்தார் ஒன்றும் ஆசைப்படுபவர் அல்ல என்று தெரிவித்துக் கொள்கின்றேன்

அப்பிடி போடு தம்பி ...........பின்னை என்ன பொண்ணம்மாக்கு புருஷன் எண்டதை விட ஒரு உயர்பதவி தேவையோ........

சிலவேளைகளில் அவருக்கு டப்பிங் நான் தான். அவரின் குரல் சகிக்கேலாது

தம்பி நல்லாத்தான் பேசிறீர் அப்பு ஆனா சிலவேளைலை திரும்பி நிண்டு என்ரை பக்கமே கோல் அடிக்கிறமாதிரிக் கிடக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடி போடு தம்பி ...........பின்னை என்ன பொண்ணம்மாக்கு புருஷன் எண்டதை விட ஒரு உயர்பதவி தேவையோ........

ஓமோம் முகத்தார்.

தினமும், உறுட்டுக்கட்டையாலும் சட்டிபானைகாலேயும் வாங்கின்ற அடியைப் போல வேறு சுகம் உண்டோ? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நல்லாத்தான் பேசிறீர் அப்பு ஆனா சிலவேளைலை திரும்பி நிண்டு என்ரை பக்கமே கோல் அடிக்கிறமாதிரிக் கிடக்குது

அரசியல் என்றால் இப்படிதானே. என்னுடைய பக்கம் ஏதும் பிரச்சனை வந்தால் அப்படியே மற்றவர்கள் பக்கம் திருப்பி விடுவது சகஜம் தானே.

இது எல்லாம் கண்டுக்கப்படாது.

Link to comment
Share on other sites

ஓமோம் முகத்தார்.

தினமும், உறுட்டுக்கட்டையாலும் சட்டிபானைகாலேயும் வாங்கின்ற அடியைப் போல வேறு சுகம் உண்டோ? :wink:

வெளியிலை இருந்து பாக்கிற உங்களுக்கு அது அடி போலத்தான் தெரியும் ஆனா எனக்கு நோவுக்கு ஒத்தனம் குடுக்கிறமாதிரி கிடக்கு (சா.............இப்படி எத்தனை நாளுக்குத்தான் இவங்களுக்கெல்லாம் சொல்லி சமாளிக்கிறதோ கடவுளே.....)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியிலை இருந்து பாக்கிற உங்களுக்கு அது அடி போலத்தான் தெரியும் ஆனா எனக்கு நோவுக்கு ஒத்தனம் குடுக்கிறமாதிரி கிடக்கு (சா.............இப்படி எத்தனை நாளுக்குத்தான் இவங்களுக்கெல்லாம் சொல்லி சமாளிக்கிறதோ கடவுளே.....)

நல்ல ஜடியா தான் முகத்தார்.

ஒத்தனம் கொடுக்கும் அளவிற்கு எப்படி நோ வந்தது? முதல் நாள் அடித்த அடியா அப்படி நொந்தது? :wink:

Link to comment
Share on other sites

ஒரு நாள் முகத்தாரின் மகன் பள்ளிக்கூட கொஸ்ரலில் இருந்து தொலைபேசியில் அழைக்க முகத்தார் தொலைபேசியை எடுக்கிறார்...

அப்பா நண்பர்கள் எல்லாம் சுற்றுலா போகிறார்கள் நானும் போகட்டுமா...???

அதுக்கு முகத்தார் தாராளமாய் போங்கோ அப்பு..

மகன் கேட்கிறார் அப்பா என்னட்டை காசு காணாது கொஞ்சம் அனுப்பிவிடுங்கோவன்..

உடனேயே முகத்தார் அதுக்கென்ன அனுபினால் போச்சு... அதோடு முகத்தா சொன்னார். நீயப்பு போனமுறை வந்துட்டுப் போகேக்க கணக்கியல்ப் புத்தகத்தையும் விட்டுட்டுப் போட்டாய் அதையும் அனுப்பிவிடுறன்...

மகன்: ஓ மறந்திட்டன் அனுப்பிவிடுங்கோ..!

முகத்தாரும் தொலைபேசியை வைச்சிட்டு.. உடனேயே கணக்கியல் புத்தகத்தை பாசல் பண்ணிக்கொண்டு தபால்கந்தோருக்குப் போய் தபாலில் காசும் புத்தகமும் அனுபீட்டு வந்தார்

வீட்டுக்குவந்தால் பொன்னமாக்கா முகத்தாரை எதிர்கொண்டு கேக்கிறா காசு அனுப்பப்போனியள் அப்பா எவ்வளவு அனுப்பினியள்... ???

முகத்தார் சொன்னார் 1000 ரூபாவும் 20 ரூபாவும்...

பொன்னம்மாக்காவுக்கு கோவம் வந்து கத்துறார் என்னப்பா 1020 ரூபா சின்னப்பெடிக்கு குடுத்து கெடுக்கப் போறியளே...???

அதுக்கு முகத்தார் கூலாக 20 ரூபாக்கு மணியோடர் அனுப்பினான்,......... 1000 ரூபாக் காசோலையை கணக்கியல் புத்தகத்துக்குள்ள 15 வது பக்கத்தில வைச்சிருக்கிறன்... உன்ர பெடி எப்ப புத்தகத்தை திறந்திருக்கிறான் இப்ப மட்டும் காசை எடுக்க... :P :P :P

:lol::lol: அப்பாவை போலத்தான் பிள்ளையாக்கும். அது தான் தன்னுடைய அனுபவத்தை வைத்து அப்படி வைத்து இருக்கின்றார்.

வாழ்த்துக்கள் தலா. நகைச்சுவையாக எழுதியிருக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

ஒத்தனம் கொடுக்கும் அளவிற்கு எப்படி நோ வந்தது? முதல் நாள் அடித்த அடியா அப்படி நொந்தது? :wink:

ரிவியைப் போட்டுட்டு இப்பிடி bunny2[1].gifbunny2[1].gif நிண்டு ஆடினனான் அது தான் ஒத்தனம் குடுக்கவேண்டி வந்தது.......... தெரியுதுதானே முகத்தான்ரை நிலமை பிறகும் கேள்வி கேட்டுக் கொண்டு

Link to comment
Share on other sites

சுண்ணாகத்தில முகத்தார் ஒரு குருட்டு எருமை மாடு வளத்தார்... எல்லாரும் மாட்டுக்கு குறி சுடுவினம்... முகத்தார் பெயர் வைத்து அதைச் சுட்டு வைத்திருந்தார்...... என்ன கோதாரிப் பெயரோ தெரியேல்லை... "சின்னா" எண்டு வச்சிருந்தார் எண்டு வைப்பம்....

ஒரு குச்சொளுங்கையால போகவேண்டிய முகத்தார் வீட்டுக்கு ஒருவர் காரில் வந்திருந்தார் வந்த போது நல்லமழை... சேறும் சகதியுமாய் இருந்த ஒழுங்கையில கார்ச்சக்கரங்கள் சிக்க வந்தவர் காறை வெளிய எடுக்க அவதிப்பட முகத்தார் உதவ முன் வந்தார்...

தன் எருமை மாடு சின்னாவைக் காறின் முன்னால் கட்டி இழுக்க திட்டம் போட்டுக் சின்னாவை கொண்டு வந்து கட்டினார்... கட்டிய பின்... பவ்லாவாக சின்னாவிடம்...

"ஏய் எருமை இழு" சின்னா அசையவில்லை......

கவலையே இல்லாமல் முகத்தார்... "சனியனே இழு எண்ற" அதுக்கும் சின்னா அசையவில்லை...

பிறகும் முகத்தார் "சின்னா இழு எண்று சொல்ல.." சின்னா மெதுவாக ஆனால் இலகுவாக காறை வெளியே இழுத்து விட்டது...

காரில் வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் முகத்தாரிடம் ஏன் அந்த மாட்டின் பெயரைச் சொல்லாமல் வேற மாதிரி எல்லாம் முதலிலே சொல்லினீங்கள்.

சின்னச் சிரிபோடை முகத்தார் சொன்னார்...." சின்னாவுக்கு கண்தெரியாது, தான் தனியத்தான் இழுகிறன் எண்டு தெரிஞ்சா அது இழுக்க முயற்சி கூடச் செய்யாது அதான் வேற எருமைகளும் இழுக்கிறமாதிரி ஒரு பில்டப் குடுத்தனான்...

வந்தவர் கிறுகிறுத்துப் போனார்..... :wink:

Link to comment
Share on other sites

தம்பி என்னைப் பற்றி நானே புகழுறது அவ்வளவு நல்லதில்லைதான் இருந்தாலும் இந்த இடத்திலை ஞாபகப்படுத்தி சொன்னீர் அங்கைதான் நிக்கிறீர் எதுக்கும் சின்னப்பு வரேக்கை ஓளிச்சிருக்கிறது உமக்கு நல்லம் அல்லது..........இப்படித்தான் TG2.gif

Link to comment
Share on other sites

சுண்ணாகத்தில முகத்தார் ஒரு குருட்டு எருமை மாடு வளத்தார்... எல்லாரும் மாட்டுக்கு குறி சுடுவினம்... முகத்தார் பெயர் வைத்து அதைச் சுட்டு வைத்திருந்தார்...... என்ன கோதாரிப் பெயரோ தெரியேல்லை... "சின்னா" எண்டு வச்சிருந்தார் எண்டு வைப்பம்....

ஒரு குச்சொளுங்கையால போகவேண்டிய முகத்தார் வீட்டுக்கு ஒருவர் காரில் வந்திருந்தார் வந்த போது நல்லமழை... சேறும் சகதியுமாய் இருந்த ஒழுங்கையில கார்ச்சக்கரங்கள் சிக்க வந்தவர் காறை வெளிய எடுக்க அவதிப்பட முகத்தார் உதவ முன் வந்தார்...

தன் எருமை மாடு சின்னாவைக் காறின் முன்னால் கட்டி இழுக்க திட்டம் போட்டுக் சின்னாவை கொண்டு வந்து கட்டினார்... கட்டிய பின்... பவ்லாவாக சின்னாவிடம்...

"ஏய் எருமை இழு" சின்னா அசையவில்லை......

கவலையே இல்லாமல் முகத்தார்... "சனியனே இழு எண்ற" அதுக்கும் சின்னா அசையவில்லை...

பிறகும் முகத்தார் "சின்னா இழு எண்று சொல்ல.." சின்னா மெதுவாக ஆனால் இலகுவாக காறை வெளியே இழுத்து விட்டது...

காரில் வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். அவர் முகத்தாரிடம் ஏன் அந்த மாட்டின் பெயரைச் சொல்லாமல் வேற மாதிரி எல்லாம் முதலிலே சொல்லினீங்கள்.

சின்னச் சிரிபோடை முகத்தார் சொன்னார்...." சின்னாவுக்கு கண்தெரியாது, தான் தனியத்தான் இழுகிறன் எண்டு தெரிஞ்சா அது இழுக்க முயற்சி கூடச் செய்யாது அதான் வேற எருமைகளும் இழுக்கிறமாதிரி ஒரு பில்டப் குடுத்தனான்...

வந்தவர் கிறுகிறுத்துப் போனார்..... :wink:[/quote

என்னதான் இருந்தாலும் எங்கட அப்புவில முகத்தார் அங்கிளுக்கு இவ்வளவு கோபமா எருமைக்கு சின்னா எண்டு பெயர் வைக்கிற அளவு :roll:

தல அண்ணா நல்லாயிருக்கு :lol::lol::lol:

Link to comment
Share on other sites

பொண்ஸ் பிரண்ட்ஸ்:

எதுக்குடி உன் கணவன் நின்னுகிட்டே சாப்பிடறார். உன் மேல அவ்ளோ மரியாதையா?

பொண்ஸ்:

பொண்டாட்டி சம்பாத்யத்துல உட்கார்ந்து சாப்பிடார்னு யாரும் பேசிடக் கூடாதாம்

*******************************************

பொண்ஸ்:என்னங்க பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் போடறீங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?

முகம்ஸ்:சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.

*****************************************************

முகத்தாரின் மகன்

முகத்தார்

முகத்தாரின் மகன்

முகத்தார்

**************************

சின்னப்பு

முகத்தார்

Link to comment
Share on other sites

பொண்ஸ் பிரண்ட்ஸ்:

எதுக்குடி உன் கணவன் நின்னுகிட்டே சாப்பிடறார். உன் மேல அவ்ளோ மரியாதையா?

பொண்ஸ்:

பொண்டாட்டி சம்பாத்யத்துல உட்கார்ந்து சாப்பிடார்னு யாரும் பேசிடக் கூடாதாம்

*******************************************

பொண்ஸ்:என்னங்க பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் போடறீங்க பணக் கொழுப்பு அதிகமாயிருச்சா?

முகம்ஸ்:சத்தம் போடாதடி, அன்னிக்கு பார்ல இவன்கிட்ட கைமாத்தா வாங்கினதை திருப்பி கொடுக்கறேன்.

*****************************************************

முகத்தாரின் மகன்

முகத்தார்

முகத்தாரின் மகன்

முகத்தார்

**************************

சின்னப்பு

முகத்தார்

ஆகா .....வாசிக்க ... வாசிக்க.. சிரிப்பு சிரிப்பாத்தான் இருக்கு ... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதி போடுங்க வினித் அண்ணா... :(:lol::lol::lol:

Link to comment
Share on other sites

ஆகா .....வாசிக்க ... வாசிக்க.. சிரிப்பு சிரிப்பாத்தான் இருக்கு ... நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதி போடுங்க வினித் அண்ணா...

நான் எழுத இல்லை :P ஒரு ஜோக் வெப்சய்ட் ல எடுத்து மாத்தி போட்டு இருக்கேன் :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுத இல்லை :P ஒரு ஜோக் வெப்சய்ட் ல எடுத்து மாத்தி போட்டு இருக்கேன் :P :P

நான் பயந்தே போய்விட்டேன். வினித்தா அப்படி என்று? :wink:

இருந்தாலும் வாழ்த்துக்கள் வினித்!! நல்லா எழுதியிருக்கின்றீர்கள்!! :P :)

Link to comment
Share on other sites

வினித் அண்ணா நல்லாயிருக்கு

மாத்தி எழுதினாலும் பொருத்தமா மாத்தியிருக்கிறீங்க

Link to comment
Share on other sites

வினித் அண்ணா நல்லாயிருக்கு

மாத்தி எழுதினாலும் பொருத்தமா மாத்தியிருக்கிறீங்க

முகத்தார் தான் என்ன சொல்லுவர் எண்டு தெரியவில்லை :wink:

வந்து எதும் கதைக்கட்டும் இராவணன் அண்ணாட சொல்லி ஒரே போடுதான் :P :P

Link to comment
Share on other sites

முகத்தார் தான் என்ன சொல்லுவர் எண்டு தெரியவில்லை :wink:

வந்து எதும் கதைக்கட்டும் இராவணன் அண்ணாட சொல்லி ஒரே போடுதான் :P :P

இராவணன் அண்ணா என்ன உங்கட அடியாளோ...??? :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

முகத்தார் படிக்கிற காலத்தில் ஒருநாள் வகுப்பறைக்கு வந்த முகத்தாருக்கு சொந்தக்காறரான ஆசிரியர்( அவருக்கு என்ன பேர் எண்டு முகத்தார்தான் சொல்லவேணும்) வந்தார். அந்த வகுப்பில்தான் முகத்தாரும் படித்தார்.

மாணவர்கள் வணக்கம் ஐயா எண்றபோது அதையேற்று உள்வந்த ஆசிரியர் மாணவர்களைப்பார்த்து கேட்டார்..

"யார் உண்மை சொல்பவர்கள் எண்டு சோதிக்கப்போறன். அதுக்காக நான் இப்ப கேள்வி கேக்கப்போறன்."

"இந்தவகுப்பிலேயே சரியான அடிமுட்டாள் எல்லாம் எழும்பி நில்லுங்கோ...! "

வாத்தியார் சொல்லி நிறைய நேரமாகியும் ஒருத்தரும் எழும்ப இல்லை. அங்க இருந்த முகத்தார் சுத்தி சுத்திப்பாத்தார்... ஒருத்தருக்கும் எழும்புற ஐடியாவே இல்லை. உடனேயே முகத்தார் எழும்பி நிண்று கொண்டார்...

வாத்தியார் முகத்தாரைப்பாத்துக் கேட்டார் நீமட்டும் தானா இந்த வகுப்பிலை அடிமுட்டாள்...???

முகத்தார் சொன்னார்: அப்பிடி இல்லை ஐயா அடி முட்டாள்களை நிக்கச்சொல்லீட்டு நீங்க மட்டும் தனியாக நிறைய நேரமாய் நிக்கிறீங்கள்.... அது தான் உங்களோட சேந்து நானும் நிப்பம் எண்டு..... அதான்...!

Link to comment
Share on other sites

சண்டிலிப்பாயில் ஒருநாள் ஒரு பையன் வண்டிலுக்கு மேல் வேகமாக வைக்கோல ஏற்றிக் கொண்டு இருந்தான்.. வளியில் வந்த ஒருவர் அவனிடம் தம்பி சின்னப் பெடியனாய் இருக்கிறியே நல்லா வேலை செய்யுறாய் ...! யார் நீ எண்று கேட்க்க

நான் சுண்ணாகத்தில இருந்து வக்கோல் வாங்க வந்த முகத்தாரின் மகன் எண்றார். வேலை வேகத்தை நிறுத்தாமல்...

சுறு சுறுப்பாய் இருக்கிறீயே இரு நானும் வாறன் இரண்டு பேருமாய் ஏத்துவம், நீ நல்லா களைச்சு போனாய் கொஞ்சம் ஓய்வெடுத்தாப் போல உதவி செய்யிறன் எண்றார் வந்தவர்... சின்ன முறைப்போடு பையன் வேலையைத் தொடர்ந்தான்...

அவர் அப்பவும் விடாமல் அப்பு கொஞ்சம் தண்ணியாவது குடி எண்றார்,, அப்பவும் பையன் வேலையை நிறுத்தவில்லை. அவருக்கு கோவம் வந்துவிட்டுது.

இஞ்சபாரப்பு எல்லா வேலையாளுக்கும் ஓய்வு எடுக்க சட்டம் இருக்கிறது. உன்னை அடிமை மாதிரி உன் அப்பர் வளத்திருக்கிறார், எங்க உன்ர அப்பர்... இப்ப கேக்கிறன் நியாயம் எண்றார்..

அதுக்குப் பையன் சொன்னான்.... அவர் வைகோலுக்கு கீழ இருக்கிறார்....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுக்குர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
    • புலிகளின் உருவாக்கத்திற்காக நாம் எவ்வளவு காலத்திற்குப் பிரபாகரனைக் குறை கூறிக்கொண்டு இருக்கப்போகிறோம்? ஏன், பிரபாகரனுக்கு நிகரான பொறுப்பினை அன்றிருந்த அரசாங்களும் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்? 1983 இல் தமிழர்களுக்கு அடித்தது அரசாங்கம் மட்டுமில்லையே? சிங்கள மக்களுமாகத்தானே சேர்ந்து அடித்தோம்? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.