Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலம்பில் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படை - கடற்புலிகள் கடும் சமர்

Featured Replies

அலம்பில் கடற்பரப்பில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிமுதல் சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளிற்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்றுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

ஏழு தாக்குதல் படகுகளும் மூன்று கரும்புலிப்படகுகளும் இந்த மோதலில் பங்கெடுத்தாகவும் அவற்றில் இரு படகுகள் அலம்பில் பகுதியில் தரையிறக்க முயற்சியையும் மேற்கொண்டதாகவும் படைத்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மூன்று கடற்கலங்கள் சிறு சேதமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் கடற்பரப்பில் நேற்று இரவு கடும் சமர் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

04/04/2009, 08:08 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன்]

அளம்பில் கடற்பரப்பில் மோதலாம் - சிறீலங்கா தெரிவிப்பு

முல்லைத்தீவு அளம்பில் கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படையினர் அறிவித்துள்ளனர்.

நேற்றிரவு (சனிக்கிழமை) 11:30 மணியளவில் இம்மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் தாம் விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறீலங்கா படையினர், விடுதலைப்புலிகள் மூன்று கரும்புலிப் படகுகள் உட்பட 10 படகுகளில் அளம்பில் பகுதியில் தாக்குதல் நடாத்த முனைந்தபோது இம்மோதல் மூண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி முன்னர் தெரிவிக்காத சிறீலங்கா படையினர், பின்னர் இரண்டு கடற் படையினர் காயமடைந்திருப்பதாகவும், மூன்று தாக்குதல் கலங்கள் சிறிய சேதங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

கடந்த பல மாதங்களுக்கு முன்னர் கைப்பற்றபட்ட அளம்பில் பகுதியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடாத்த வந்ததாக சிறீலங்கா கடற் படையினர் கூறியிருக்கின்றனர்.

கடந்த வாரமும் இவ்வாறு சாளை பகுதியில் மோதல் ஒன்று இடம்பெற்றதாக சிறீலங்கா படையினர் அறிவித்த போதும் பின்னர் அது பொய்யான தகவல்கள் எனத் தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது.

களமுனையில் சிறீலங்கா படையின் பாரிய இழப்புக்களை சந்திக்கும்போது இவ்வாறான தகவல்களை பொய்யாக வெளியிட்டு, உலக ஊடகங்கள் மற்றும் மக்களை திசை திருப்ப சிறீலங்கா அரசு முயல்வதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

சரி உண்மை செய்தி தான் என்ன?

சிறீ லங்கா ஊடக செய்தியை தமிழாக்கம் செய்வதும் அதை இங்கு கொண்டு வந்து போடுவதும் நாம் சிறீ லங்கா அரசிற்கு செய்யும் பெரிய உபகாரம்! இந்த செய்திகள் நமக்கு தேவையற்ற செய்திகள். புலத்திலிருந்து வெளிக்கொணர பல செய்திகள் இருக்கும் போது இது தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்கா ஊடக செய்தியை தமிழாக்கம் செய்வதும் அதை இங்கு கொண்டு வந்து போடுவதும் நாம் சிறீ லங்கா அரசிற்கு செய்யும் பெரிய உபகாரம்! இந்த செய்திகள் நமக்கு தேவையற்ற செய்திகள். புலத்திலிருந்து வெளிக்கொணர பல செய்திகள் இருக்கும் போது இது தேவையா?

உண்மை தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.