Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொலைகார காங்கிரசடி - குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

Featured Replies

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே

சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா

சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!

பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே

புறப்பட்டு வந்தடி குதம்பாய்….

அந்தச் செருப்புக்கு நன்றியடி!

சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட

சிதம்பரம் மூஞ்சிக்கு

சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு

தேர்தல் ஒரு கேடாடி!

செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா

தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி

தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!

இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு

பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து

செருப்பையும் சேத்துக்கடி!

ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்

வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த

வரலாறை கூறுங்கடி!

பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே

இந்திராகாந்திதாண்டி குதம்பாய்….

இந்திராகாந்திதாண்டி - பின்னே பிந்த்தரன்வாலாவை

பயங்கரவாதின்னு பேயாட்டம் போட்டாளடி

குதம்பாய்…

பொற்கோயிலையே குருதியில் நனச்சாளடி!

சொந்த இனத்தும் பிணங்களைப் பார்த்து

இரத்தம் கொதிச்சானடி குதம்பாய் - அந்தச் சீக்கியன்

இந்திரா கதையை முடிச்சானடி!

இந்திரா கொலைக்கு பழிக்கு பழிவாங்க

பகையை வளர்த்தானடி குதம்பாய் - காங்கிரசு

பச்சைப் படுகொலை செய்தானடி!

ஆயிரக்கணக்குல சீக்கிய மக்களை

வெட்டிப் போட்டானடி குதம்பாய்… கொளுத்தி

வெறியாட்டம் போட்டானடி…

ஒத்தப் பொணத்துக்கு மொத்த இனமுன்னு

கத்தித் தீர்த்தானடி குதம்பாய்…. காங்கிரசு

கொலைகார கும்பலடி!

சீக்கியப் பெண்கள் ஆயிரக்கணக்கில்

விதவையர் ஆனாரடி குதம்பாய்….அவர்

வேதனை கொஞ்சமோடி!

பிஞ்சுக் குழந்தையும் தப்பவில்லை சொல்லவே

நெஞ்சு வேகுதடி குதம்பாய் - பலரை

டயரோடு சேர்த்து எரித்தானடி!

பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ராஜீவிடம்

நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!

”ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யுமென்னு”

ஆணவம் பேசினாண்டி குதம்பாய் - அந்தக் குரூரத்தை

யாரும் மறப்பாரோடி !

சஜ்ஜான் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் - இதை

முன்னின்று நடத்திய பாவியடி! குதம்பாய் - பயங்கரவாதிகளை பாதுகாப்பது காங்கிரசடி!

ப.சிதம்பரம் வாங்கிய செருப்படி - குதம்பாய்

உண்மையை ஊருக்கு சொல்லுதடி!

சொந்த நாட்டு மக்களையே கண்டம் துண்டமாக

வெட்டுனானே! குதம்பாய் - காங்கிரசு கையாலே

காசுமீரு, வடகிழக்கு மாநிலத்தில்

தினம் காணாப் பிணங்கள் எத்தனையோடி!

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது

காரணம் இந்திய அரசுதாண்டி - குதம்பாய் இந்தக்

காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்

கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்

தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

வினவு தளத்திலிருந்து :http://vinavu.wordpress.com/2009/04/10/elec096/

இதன் மறுமொழிகள் : http://vinavu.wordpress.com/2009/04/10/elec096/#respond

தொடர்புடைய பதிவுகள்:

ஈழமும் ராஜீவ் காந்தியின் ஆவியும் !

காஷ்மீர், ஈழம் : பிணங்கள் பேசுகின்றன !

கருத்துப்படம் : சிதம்பரத்துக்கு செருப்படி மற்றவர்களுக்கு ???

ஈழம்: ப.சிதம்பரம் என்றோரு ஓநாயின் ஊளை ! கருத்துப்படம் !

ஈழம்: இந்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் ! படங்கள் மற்றும் வீடியோ !!

மன்மோகன் - ராஜபட்சே கொடும்பாவி எரிப்பு ! ம.க.இ.க தோழர்கள் கைது !! படங்கள் !!!

சீமான் கைது : கதர் வேட்டி நரிகளின் திமிரை வீழ்த்துவோம்!

சோனியா காங்கிரசுன்னா சும்மாவா ! கருத்துப்படம், கவிதை பஜனை !

ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

பிற ஈழம் தொடர்பான கட்டுரைகள்/கருத்துப்படங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது

காரணம் இந்திய அரசுதாண்டி - குதம்பாய் இந்தக்

காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்

கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்

தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

:):mellow:

அருமை அருமை! இந்த கவிதையே காங்கிரசுக்கு செருப்படி போலத்தான்!

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு

முதலமைச்சர் ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக்

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்

பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே

சூப்பர் வசி அங்கிள். :):mellow::lol:

எனக்கு இதில் என்ன சிரிப்பாகவேயுள்ளதென்றால், இந்திராகாந்தி இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும், ராஜீவ்காந்தி கொல்லப்படாதிருந்தால் தமிழருக்கு இந்தப் பிரச்சினைகள் இவ்வளவு தூரம் வந்திருக்காது என்று கருத்தை இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே என்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
project1.png

நளினி வழக்கு குறித்து பதில் அளிக்க சிபிஐக்கு ஐகோர்ட் உத்தரவு

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து பதில் அளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக திருச்சியை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:

மத்திய அரசு ஜெயின் கமிஷனை அமைத்து ராஜீவ் கொலையில் சதியின் பின்னணி பற்றி விசாரணை நடத்தப்பட்டது. ஜெயின் கமிஷன் அளித்த இறுதி அறிக்கையில், ஆயுத வியாபாரி சந்திராசாமி உள்ளிட் டோரை விசாரிக்க சிபிஐக்கு உத்தர விடப்பட்டது. இதன் அடிப்படையில் சிபிஐ கடந்த 10 ஆண்டுகள் விசாரணை நடத்தி வருகிறது.

பொதுவாக ஒரு கமிஷன் அறிக்கை அளிக்கப்பட்ட பிறகுதான் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி 26 பேருக்கு தடா சட்டத்தின் கீழ் தூக்கு தண்டனை வாங்கி கொடுத்தது.

உச்சசநீதிமன்றத்தில் நளினி உள்ளிட்ட 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனை உறுதி செய்யப் பட்டது. மற்றவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதில் நளினி தாக்கல் செய்த கருணை மனுவை அடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஜெயின் கமிஷன் அறிக்கை மீது மேல் விசாரணை நடைபெற்ற போது கடந்த 18 ஆண்டுகளாக நளினி உள்ளிட்ட 7 பேர் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் அளித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தர்மாராவ், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் கருப்பன் ஆஜராகி வாதாடினார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா என்பது குறித்து சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

http://www.nakkheeran.in/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.