Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மக்களை வருடப் பிறப்புக்கு கட்டாயம் வெடி கொழுத்துமாறு படையினர் மிரட்டல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11/04/2009, 08:59 [ யாழ் செய்தியாளர் சிறீதரன்]

யாழ் மக்களை வருடப் பிறப்புக்கு கட்டாயம் வெடி கொழுத்துமாறு படையினர் மிரட்டல்

தமிழ் மக்கள் வரலாற்றில் அனுபவிக்காத துன்பங்களையும் உயிர் உடைமை உறவுகள் இழப்புக்களையும் சந்தித்து உள்ள இவ்வேளையில் வரும் நாட்களில் மலரவுள்ள சிங்கள புது வருடத்தை வெகு விமர்சையாக கொண்டாட சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது.

இதன் மூலம் பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளும் பொருட்டே சிறீலங்கா இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது.

மக்களை தாம் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாக வெளியுலகிற்கு காண்பித்து, நிதி பெறவும், தனது கொலைகளை மறைத்துக் கொள்ளவுமே இந்த முயற்சி மேற்கொள்ளப்பகின்றது.

அதன் ஒரு கட்டமாக இதுவரை காலமும் யாழ் குடாநாட்டு மக்களை வெடி கொழுத்தவிடாது தடுத்தும், பலரை தாக்கியும் கைது செய்து மிரட்டி வைத்திருந்த சிறீலங்கா படைகள் இம் முறை இலவசமாக வெடிகளை வழங்கி அவற்றை புது வடருடத்தன்று கொழுத்தி ஆராவாரமாக புது வருடத்தை கொண்டாட வேண்டும் என மிரட்டி வருகின்றனர்.

தென்மராட்சியில் பல வீதிகளில் நிற்கும் படையினர் பயணிப்பவர்களிடம் வெடிகளை கொடுத்து இவ் அறிவுறுத்தலை வழங்கியதுடன், மறுப்பவர்கள் கடும் தொனியிலான எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

முன்னய காலங்களில் மகிழ்ச்சியுடன் நாம் இருந்தபோது வெடிகொழுத்த எமது தடை விதித்திருந்த சிறீலங்கா படையினர் இம்முறை வன்னியி்ல் சிறீலங்கா படயினரின் கொலை வெறிக்குள் சிக்கியுள்ள உறவுகள் பற்றி வெளியில் தெரியாமல் தினமும் அழுது் கொண்டிருக்கும் இவ் வேளையில் எம்மை இவ்வாறு நிர்ப்பந்திப்பது விரக்கிதியில் உள்ள எங்களை மேலும் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்லதாகவும், எம்மைக் காப்பாற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு பேராளிகள் தான் தகுந்த பதில் தரக்கூடியவர்கள் எனவும் கவலயுடன் தெரிவித்துள்ளனர்.

pathivu

வெடிதானே கொழுத்தினால் போச்சு. அப்புறம் கொழுத்தாதேயுங்கோ என்று சொல்லக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தேசம் இலவசமா வெடி கொடுத்தாலும் கொடுக்கும்......கருனாநிதியும் தொப்புள் கொடிகள் உறவுகள் பாவம் என்று நினைத்து விமானத்தில் அனுப்பினாலும் அனுப்புவார்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெடிக்குள்ளும் வெடிகுண்டு வைத்திருக்கும் பயங்கரவாத அரசாங்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கிரமிப்பாளன் ஒரு போதும்.. உங்களுக்கு நீங்கள் விரும்பும் சுதந்திரத்தை பரிசளிக்கமாட்டான். சிறீலங்கா சிங்கள பெளத்த தேசம். தமிழர்கள் எல்லா நாடுகளிலும் வாழ்வது போல அங்கும் ஒட்டி வாழலாம். அந்தளவு உரிமைதான் தமிழர்களுக்கு. சிங்களவன் அன்றும் இன்று இதையே சொல்கிறான் செய்கிறான். அவன் தெளிவாகவே இருக்கிறான் சொல்லிலும் செயலிலும்.

தமிழர்களை அடிமைகளாக சிங்களவனுக்கு விற்று வயிறு வளர்த்த சேர்.. பொன்.. பட்டங்கள் சூடிய "பெரும்" மனிதர்கள் தான் இன்றைய தமிழ் ஒட்டுண்ணிகளின் மூதாதையோர் என்பதையும்.. இந்த நாதாரிகளால் தான் எமக்கிந்த நிலை என்பதையும்.. இன்றும் சிங்களவனோடு கூடி வாழலாம் என்று நினைக்கும்.. ஒரு கூட்டம் எம்மிடையே இருக்கிறது என்பதும்.. மறுக்க முடியாத உண்மைகளே.

எமது விடுதலைப் போராட்டம் சில முனைகளில் முனைப்புப் பெற்றுள்ள போதும்.. ஆயுத வழி முனைப்பு மழுங்கின் போனதற்கு.. எதிரியை விட சர்வதேச வல்லாதிக்க சக்திகளே அதிகம் காரணம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எமது போராட்டத்தை நாம் தனி ஒரு எதிரியை மையமாக நகர்த்துவதை விட்டு.. சர்வதேச வல்லாதிக சக்திகளை எதிர்கொள்ளத்தக்க வகையில் நகர்த்தாதது எமது இராஜதந்திர தோல்வியாகும். இது மறுபரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்று..! எமது போராட்ட வடிவங்கள் தந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு தகாத சூழலை வெற்றி கொண்டு எமக்குத் தகுந்ததாக்கி எமது மாவீரர்களினதும் மக்களினதும் இறுதி வேட்கையை வெற்றி கொள்ளச் செய்வோம் என்ற உறுதிமொழியை ஒவ்வொரு இனப்பற்றுள்ள தமிழனும் எடுக்க வேண்டும்.

எதிரிக்கு அவனின் வழியில் சென்றே அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல்கள் எங்கனும் எதிரியையும் அவனது அருவருடிகளையும் தோற்கடிக்க வேண்டும். எமது அரசியல் ஒற்றுமையை உலகுக்குக் காட்டாமல்.. நான் ஆயுதப் போராட்டத்திற்கான அங்கீகாரத்தை உலகிடம் பெற முடியாது என்பதை ஜனநாயம் பேசும் வல்லாதிக்க சக்திகள் உணர்த்தவே செய்கின்றனர். அவர்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கி இருக்கும் இவ்வுலகில்.. நாம் அவர்களின் இராஜதந்திரத்தை முறியடிக்காமல்.. எமது விடுதலையை உறுதி செய்ய முடியாது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை நெடுக்ஸ் , ஆக்கிரமிப்பாளன் எம்மை வெடி கொழுத்து என்ற போது கொழுத்தவும் , வெடி கொழுத்தாதே என்னும் போது கொழுத்தாமல் இருக்கவும் கூடியதான சுதந்திரம் தான் கிடைத்துள்ளது .

போகின்ற போக்கில் இதனை விட மோசமான அடக்குமுறைகளையும் எதிர்பார்க்கலாம் .

எதிரிக்கு அவனின் வழியில் சென்றே அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும். தேர்தல்கள் எங்கனும் எதிரியையும் அவனது அருவருடிகளையும் தோற்கடிக்க வேண்டும். எமது அரசியல் ஒற்றுமையை உலகுக்குக் காட்டாமல்.. நான் ஆயுதப் போராட்டத்திற்கான அங்கீகாரத்தை உலகிடம் பெற முடியாது என்பதை ஜனநாயம் பேசும் வல்லாதிக்க சக்திகள் உணர்த்தவே செய்கின்றனர். அவர்களின் ஆதிக்கத்துக்குள் சிக்கி இருக்கும் இவ்வுலகில்.. நாம் அவர்களின் இராஜதந்திரத்தை முறியடிக்காமல்.. எமது விடுதலையை உறுதி செய்ய முடியாது

கிழக்கின் தேர்தல் போல வடக்கிலயும் ஆயுதமுனையில் தேர்தல் வைப்பார்கள்.சர்வதேச கன்காணிமார் தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது என்பார்கள்.மக்களும் நாமுண்டு நம் வேலையுண்டு என்று இருந்து விடுவார்கள்..

மட்டக்களப்பிலும் களியாட்ட நிகழ்ச்சிக்கு சிங்களவனால் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.இதை புறக்கணிக்கச்சொல்லி துண்டறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

குசு விடுவதை வெடி கொளுத்துறது எண்டு சொல்லுறீனம் போல :D

வெடிதானே கொழுத்தினால் போச்சு. அப்புறம் கொழுத்தாதேயுங்கோ என்று சொல்லக் கூடாது.

ஆமா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.