Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ]

48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் திட்டங்களும்?

மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களை அழைத்து மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

13-ஆம் நாளோ அல்லது 14-ஆம் நாளோ இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் போர் நிறுத்தம் வரும் இடைவெளியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்குமாறும் அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கும் படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறணையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே அனைத்துலக ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது சிறீலங்கா அரசின் இந்த கபடத்தனமான இச்செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கையை தொடர் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்த அனைத்துலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்கள் சரியான வெங்காய ஊடகங்கள்.

இது யுத்த நிறுத்தம் (Ceasefire) அல்ல. அறிவிக்கப்பட்டிருப்பது.. தாக்குதலைக் கட்டுப்படுத்தல். அதாவது இராணுவம் முன்னேறித் தாக்காது. நின்று கொண்டு தாக்கும். இது யுத்த நிறுத்தம் அல்ல. இதற்கு தமிழ் ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் தவறான விளக்கம் அளிக்கின்றன.

சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபடவும்.. சிங்களப் படையினர் புதுவருடம் கொண்டாடவும் இந்த நின்று கொண்டு தாக்குதல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மற்றும்படி தமிழ் மக்களை காக்கவோ.. பாதுகாப்பாக வெளியேறவோ அதை பன்னாட்டு அவதானிகள் கண்காணிக்கவோ.. மனிதாபிமான உதவிகள் போய் சேரவோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை..! :icon_idea::rolleyes:

Military Ops to be restricted for Avurudu

The president has directed troops to restrict military operations in the North on April 13th, 14th and remain in defensive positions.

President Mahinda Rajapaksa has ordered the armed forces to restrict their operations to those of a defensive nature during the Sinhala & Tamil New Year. The President, deeply conscious of the need to give the civilian population, trapped in the No Fire Zone(NFZ), the opportunity to celebrate these festivities in a suitable atmosphere, has taken this decision, which would also enable their uninhibited freedom of movement from the NFZ to the cleared areas.

The Government, in a Statement has noted that the Sinhala & Tamil New Year is symbolic of the amity prevailing among all communities in Sri Lanka. It further stated that in the true spirit of the season, it was timely for the LTTE to acknowledge its military defeat and lay down its weapons and surrender.It also called upon the LTTE to renounce terrorism and violence permanently.

Foreign Minister, Rohitha Bogollagama commenting on the Government decision today said that he believes that it is the overwhelming desire of all peace-loving Sri Lankans, both in the country and abroad to see that their brothers and sisters, who are undergoing untold hardship and suffering, will be freed soon from the brutal terror of the LTTE.

He also observed that Sri Lanka’s valiant security forces are poised to embark upon this noble endeavour as the remaining part of the humanitarian mission launched by them to eliminate terrorism from the country and restore freedom and democracy to a section of the people, who have been long enslaved by the LTTE. The Minister emphasized that the Sri Lankan armed forces bear an exemplary record of according the highest respect for human rights and upholding International Humanitarian Law in the conduct of their operations to combat terrorism. He highlighted the utmost restraint and high degree of discipline of the armed forces, which have contributed in no small measure to the resounding success of the entire campaign to eliminate terrorism, with great effort to avoid civilian casualties. This is highly commendable when compared to other armed forces in the world, which, in their operations, have clearly failed to even come close to these standards.

Minister Bogollagama recalled that when the President declared a 48-hour temporary pause in military operations in late January this year, to enable civilians to move into the government declared No-Fire Zone, the LTTE cynically exploited this opportunity to shift its artillery mortar launchers and heavy weapons into this area, and began attacking the security forces. He said that Government troops have paid a heavy price in exercising maximum restraint by not retaliating, in order to avoid causing civilian casualties. Moreover,he stated that the Government is aware that the LTTE has fortified the entire No-Fire Zone with its remaining armaments and heavy weaponry, jeopardizing the lives of innocent civilians entrapped in that area.

With the President’s directive to the armed forces to restrict their operations to those of a defensive nature during the Sinhala & Tamil New Year, the Government expects the LTTE to allow the people to leave the No-Fire Zone. At the same time, it is incumbent on the international community and Sri Lankan Tamils abroad to prevail upon the LTTE to release the civilians who are being held hostage.

It is the fervent desire of the Government of President Rajapaksa that the New Year will herald an era of lasting peace and prosperity for all the people of Sri Lanka, free of terror that has long plagued the motherland.

டெயிலிமிரர்.

Edited by nedukkalapoovan

ஆம் நெடுக்ஸ் புதினம் கூட இந்த செய்தியை அப்படியே வெளியிட்டது பொல் உள்ளது.தழிழன் முட்டாள் தனமாக சிங்களவனின் பிரச்சாரத்தில் விழுந்து விட்டான்

எங்கடை ஊடகங்களில் ஊடகவியலாலாளர்கள் வேலைசெய்வது இல்லை. கலைஞர்கள் தான் வேலை செய்கின்றார்கள். அடுத்து தனது சொந்த கருத்தை திணிப்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.

நடப்பது இன அழிப்பு ஜ பி சி வானொலியில் செய்தி எழுதும் அறிவாளி இன அழிப்பு, என்ற சொற்பதத்தை பாவிப்பதை தவிர்த்து வருகின்றார். நரபலி, கொலை வெறித்தாண்டவம், துடைத்தளிப்பு இது என்ன நடக்குது. இவர்கள் திருந்தமாட்டார்களா? ஊடகம் மக்கள் மனதில் இன அழிப்பு நடக்கின்றது என்ற கருத்தை விதைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா அரசால் சிங்கள பயங்கரவாத இராணுவத்தினர் சிங்கள பெளத்த புத்தாண்டைக் கொண்டாட என்று வரும் 13ம் 14ம் நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் முன்னேறித் தாக்குவதில்லை (Military Ops to be restricted )என்ற அறிவிப்பு யுத்த நிறுத்தம் (Ceasefire) அல்ல.

இதனை இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் யுத்த நிறுத்தம் என்று விளக்கமளிப்பது அல்லது செய்தி விடுவது தவறாகும்.

இது தற்காலிக கட்டுப்பாட்டுத் தாக்குதல் நடைமுறை ஆகும். இதன் போது சிங்கள இராணுவம் முன்னேறித் தாக்காது. ஆனால் நின்று கொண்டு தாக்கிக் கொண்டிருக்கும்.

புவியியல் ரீதியில் இராணுவம் பாதுகாப்பு வலத்தைச் சுற்றி நிற்கிறது. மக்களை நகர்ந்து சென்று தாக்கவோ கொல்லவோ வேண்டியதில்லை. நின்ற இடத்தில் இருந்து கொண்டு புலி வருகுது புலி பதுங்குது புலி ஓடுது புலி பாயுது என்ற போலிக் காரணங்களை காட்டிக் கொண்டு துப்பாக்கிகளால் எறிகணைகளால் தாக்கிக் கொல்ல முடியும்.

இந்த அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் வன்னி மக்களை சர்வதேச கவனத்தை திசை திருப்பி தாக்கி அழித்தொழிக்கவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை ஆகும்.

இந்த அறிவிப்பின் போது வன்னி மக்கள் எவ்வாறு எவ்வழியில் பாதுகாப்பாக வெளியேறுவது.. அதை எந்த பன்னாட்டு அமைப்பு கண்காணிப்பது.. வெளியேறும் மக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் யார் தருவது.. வெளியேற விரும்பாத மக்களுக்கு செய்யப்படும் மாற்று ஏற்பாடுகள்.. உணவின்றியும் காயப்பட்டும் இயங்க முடியாதுள்ள மக்களுக்கும் வாகன வசதியற்று இருக்கும் மக்களும் வெளியேற வழி செய்து கொடுக்கப்படாமை.. மாதக்கணக்காக உணவின்றி பசியால், காயத்தால் வாடும் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த எந்தத் தகவல்களும் இன்றி.. வெறும் கண்துடைப்பாக இந்த நின்று கொண்டு தாக்குதல் ஆனால் முன்னேறித் தாக்குவதில்லை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படையில் சிங்கள இராணுவத்தினருக்கு ஓய்வையும்.. சர்வதேச சமூகத்தை திசை திருப்பவும்.. பகுதியாக திருப்திப்படுத்தவும் அதில் குளிர்காயவும் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் அறிவிப்பாகும். இது போலியான தமிழ் மக்களுக்கு உபயோகமற்ற அறிவிப்பாகும்.

இதனை நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்புக்களை மனிதாபிமான உதவிகளோடு வன்னிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஆரம்பமாக மாற்ற சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இதனை நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்புக்களை மனிதாபிமான உதவிகளோடு வன்னிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஆரம்பமாக மாற்ற சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மூலம்: http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

சிறீலங்கா அரசால் சிங்கள பயங்கரவாத இராணுவத்தினர் சிங்கள பெளத்த புத்தாண்டைக் கொண்டாட என்று வரும் 13ம் 14ம் நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் முன்னேறித் தாக்குவதில்லை (Military Ops to be restricted )என்ற அறிவிப்பு யுத்த நிறுத்தம் (Ceasefire) அல்ல.

இதனை இந்திய மற்றும் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் யுத்த நிறுத்தம் என்று விளக்கமளிப்பது அல்லது செய்தி விடுவது தவறாகும்.

இது தற்காலிக கட்டுப்பாட்டுத் தாக்குதல் நடைமுறை ஆகும். இதன் போது சிங்கள இராணுவம் முன்னேறித் தாக்காது. ஆனால் நின்று கொண்டு தாக்கிக் கொண்டிருக்கும்.

புவியியல் ரீதியில் இராணுவம் பாதுகாப்பு வலத்தைச் சுற்றி நிற்கிறது. மக்களை நகர்ந்து சென்று தாக்கவோ கொல்லவோ வேண்டியதில்லை. நின்ற இடத்தில் இருந்து கொண்டு புலி வருகுது புலி பதுங்குது புலி ஓடுது புலி பாயுது என்ற போலிக் காரணங்களை காட்டிக் கொண்டு துப்பாக்கிகளால் எறிகணைகளால் தாக்கிக் கொல்ல முடியும்.

இந்த அறிவிப்பு சர்வதேச சமூகத்தை ஏமாற்றவும் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் போராட்டங்களை ஒடுக்கவும் வன்னி மக்களை சர்வதேச கவனத்தை திசை திருப்பி தாக்கி அழித்தொழிக்கவும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை ஆகும்.

இந்த அறிவிப்பின் போது வன்னி மக்கள் எவ்வாறு எவ்வழியில் பாதுகாப்பாக வெளியேறுவது.. அதை எந்த பன்னாட்டு அமைப்பு கண்காணிப்பது.. வெளியேறும் மக்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் யார் தருவது.. வெளியேற விரும்பாத மக்களுக்கு செய்யப்படும் மாற்று ஏற்பாடுகள்.. உணவின்றியும் காயப்பட்டும் இயங்க முடியாதுள்ள மக்களுக்கும் வாகன வசதியற்று இருக்கும் மக்களும் வெளியேற வழி செய்து கொடுக்கப்படாமை.. மாதக்கணக்காக உணவின்றி பசியால், காயத்தால் வாடும் மக்களுக்கு மனிதாபிமான உதவி அளிக்க செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த எந்தத் தகவல்களும் இன்றி.. வெறும் கண்துடைப்பாக இந்த நின்று கொண்டு தாக்குதல் ஆனால் முன்னேறித் தாக்குவதில்லை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அடிப்படையில் சிங்கள இராணுவத்தினருக்கு ஓய்வையும்.. சர்வதேச சமூகத்தை திசை திருப்பவும்.. பகுதியாக திருப்திப்படுத்தவும் அதில் குளிர்காயவும் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நின்று கொண்டு தாக்குதல் அறிவிப்பாகும். இது போலியான தமிழ் மக்களுக்கு உபயோகமற்ற அறிவிப்பாகும்.

இதனை நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்புக்களை மனிதாபிமான உதவிகளோடு வன்னிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஆரம்பமாக மாற்ற சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

இதனை நிரந்தர யுத்த நிறுத்தம் மற்றும் பன்னாட்டு மனிதாபிமான அமைப்புக்களை மனிதாபிமான உதவிகளோடு வன்னிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஆரம்பமாக மாற்ற சர்வதேசம் எங்கும் வாழும் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

மூலம்: http://kundumani.blogspot.com/

தெளிவாக எழுதப்பட்ட செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சிச் செய்திக்கு தகவல் வழங்கிய த . தே . கூ சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர் இது யுத்த நிறுத்தம் அல்ல. உலகை தமிழ் மக்களை ஏமாற்ற செய்யப்பட்ட யுத்த நடவடிக்கை தவிர்ப்பு என்றும் அதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது இனங்காணப்பட்டால் தாக்குதல் நடத்தும் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிவித்தார்.

அடிப்படையில்.. முன்னேறித் தாக்கமாட்டம்... நின்று கொண்டு என்னவும் பண்ணுவம். சிங்களப் புதுவருட வெள்ளை அரசிப் புக்கை செமிக்கும் வரை..சிங்கள இராணுவம்.. குந்தி இருக்கும்..! அதுக்குள்ள உலகத்தை போகல்லாகம ஒரு வகை பண்ணிடுவார். புலிகளை ஆயுதத்தைக் கீழ வைச்சு சரணடையப் பண்ணிடுவார் என்று இருக்கினம் போல.

அல்லல் படும் மக்களைப் பற்றி எவருக்கும் கவலையில்லை..! :)

இதோ.. அவன் தாக்குதல் மட்டுப்படுத்தல் என்றான்.. பிபிசி.. போர் ஓய்வு என்றுது... சர்வதேசம்.. உடனடியாக சிங்களவனுக்கு ஒத்தூத ஆரம்பிச்சிட்டுது..

Sri Lanka military declares truce

Sri Lanka's government has declared a temporary halt to its offensive against Tamil Tiger rebels in the north-east.

The move, which aims to let civilians leave the conflict zone safely, comes in view of New Year celebrations that start on Monday, the government said.

There has been no immediate response from the Tamil Tigers.

The authorities have been under growing international pressure to allow time for tens of thousands of trapped civilians to leave the war zone safely.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7995719.stm

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

safty zone என்றாங்க தாக்குதல் நடத்தும் வரை... தாக்குதல் குறைஞ்ச உடன மக்களை வெளியேற்ற என்ற உடன அது war zone ஆகிடுது. அதெப்படி என்றதை பிபிசியிடம் யாரும் கேட்கவே மாட்டினமோ..???! :(:):(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தமிழன்ரை தலையில நல்லாய் மிளகாய் அரைக்கிறாங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தமிழன்ரை தலையில நல்லாய் மிளகாய் அரைக்கிறாங்கள் .

இன்று நேற்றல்ல.. காலனித்துவ காலத்தில் இருந்து அரைக்கிறாங்கள்.

இல்ல... தமிழனை இந்தியாவில இருந்து கொண்டு வந்து சிங்களவனுக்கு தேயிலை தோட்டத்தில அடிமையாக்கி கூலியாக்கி வைத்திருப்பானா பிரிட்டிஷ்காரன். ஏன் சிங்களவனட்ட பருப்பு வேகல்ல.. தமிழன் அங்கலாய்ந்த பேர்வழி.. ஆசை காட்டி.. அடிமையாக்கி.. பழகிட்டாங்கள் எல்லாரும். இன்றும் அதுதானே நிலை...! இதுக்குள்ள நாங்கள் சிங்களவனை முட்டாள் என்றது. :(:)

தெளிவாக எழுதப்பட்ட செய்தி.

Meanwhile, Sri Lankan President Mahinda Rajapaksa said the SLA would continue "defensive" fighting.

Stating that he had instructed his armed forces to "restrict their operations during the New Year to those of a defensive nature," Mr. Rajapaksa said "it is timely for the LTTE to acknowledge its military defeat and lay down its weapons and surrender." There was no announcement of ceasefire as some news services interpreted Rajapaksa's message.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29022

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் தாக்குதல் திட்டங்களும்?

அண்மையில் றம்புக்கல வன்னியில் உள்ள 30 -- 40 ஆயிரம் மக்களை மீட்க அரசு கடுமையாக கஸ்டப்படுகிறது என்பதன் அர்த்தம் பெரிய மக்கள் அழிவை சத்தம் இல்லாமல் நிறைவேற்றப்போகிறார்கள். உண்மையான மக்கள் தொகையை குறைப்பதன் மூலம் இறக்கும் மக்களின் தொகை வெளியுலகுக்கு தெரியவராது.

யாருடைய வலையில் யார்?

முழு விபரங்களிற்கு பரபரப்பு ஜேர்னல் 128: http://www.tamilnaatham.com/advert/2009/mar/20090326/PJ127/

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கர், இப்ப என்ன? தமிழ்நாதத்துக்கெதிரான பிரச்சாரத்தைச் செய்ய வேணும்..அவ்வளவுதானே?! அதையும் செய்துட்டாப் போச்சு !!!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

12/04/2009, 11:05 [ பதிவுச் செய்தியாளர் ]

48 மணிநேர போலி யுத்த நிறுத்தமும்: பெரும் தாக்குதல் சதித் திட்டங்களும்? (இணைப்பு 2)

மகிந்த அரசாங்கம் அனைத்துலக ரீதியாக தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்கும் வகையில் போலியான 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள முன்வந்துள்ளது.

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினதும் 48 மணி நேர யுத்த நிறுத்தம் ஒன்றை அமுல் படுத்த சீறிலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவினால் இந்த முடியு எடுக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவைத் தீர்மானமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் சிறீலங்காவின் உள்ளூர் ஊடகங்களுக்கு மனித அவலத்திற்கான யுத்தம் என்பதை வலியுறுத்தி மிகப்பெரிய அளவில் பரப்புரைகளை மேற்கொள்ளுமாறும் இதனால் அனைத்துலக ரீதியில் தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்களின் தாக்கங்கள் முறியடிக்கப்பட வேண்டும் என சிறீலங்கா அரசாங்கதினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 13-ஆம் நாள், 14-ஆம் நாள் இந்த போர் நிறுத்தத்தை அரசாங்கம் அறிவிக்கும். அத்துடன் போர் நிறுத்தம் வரும் காலப்பகுதியில் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காணொளிகள் மற்றும் புகைப்படங்களைச் சேகரிக்கரித்து செய்திகளை வெளியிடுமாறு அரசாங்கதினால் சிங்கள ஊடகங்களுக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் போர் நிறுத்தத்தை அறிவித்துக்கொண்டு மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பெரும் தாக்குதல்களைத் தொடுத்துக்கொண்டிருக்கும் படையினர் இக்கால இடைவெளியில் தனது முழுமையான சுடுதிறணையும், படையினரின் மனித வலுவைப் பயன்படுத்தியும் எஞ்சியுள்ள பிரதேசங்களையும் ஆக்கிரமிக்கத் திட்டமிட்டுள்ளது என படைத்துறை உள்ளகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே அனைத்துலக ரீதியாக தமிழர்கள் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்களைக் கைவிடாது சிறீலங்கா அரசின் இந்த கபடத்தனமான செயலின் ஊடாக மேற்கொள்ளப்படவிருக்கும் பெரும் இன அழிப்பு நடவடிக்கையை தொடர் போராட்டங்கள் மூலம் அனைத்துலகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பது நினைவூட்டத்தக்கது.

pathivu

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.