Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா?

Featured Replies

புதுக்குடியிருப்பு பெரும் சமர் திருப்பங்களுக்கு வழி செய்யுமா?

சுபத்ரா

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் "பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை' கைப்பற்றுவதற்கான இறுதிக் கட்ட முயற்சிகளில் அரசபடைகள் இறங்கியிருக்கின்றன. புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதி முற்றாகப் படையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது புலிகள் வசம் 18 சதுர கி.மீ பிரதேசமே எஞ்சியிருப்பதாகவும், அதைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் படையினர் இறங்கியிருப்பதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு வலயத்தைச் சுற்றிலும் 53ஆவது டிவிசன், 55ஆவது டிவிசன், 58ஆவது டிவிசன், 59 ஆவது டிவிசன், 68ஆவது டிவிசன் என இராணுவத்தின் ஐந்து டிவிசன்கள் எல்லையிட்டு நிற்கின்றன.

இதற்கடுத்த நிலையில் 57ஆவது டிவிசன், 62ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகிய நான்கு டிவிசன்கள் இரண்டாவது கட்ட பாதுகாப்பு நிலைகளை அமைத்து நிலைகொண்டிருக்கின்றன.

59ஆவது டிவிசன் வட்டுவாகல் பாலத்துக்குத் தெற்கே நிலைகொண்டிருப்பினும் அது வலிந்த தாக்குதல்களை நடத்தும் நோக்கில் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை நந்திக் கடலோரமாக முன்னகர்ந்த 53ஆவது டிவிசனின் எயர் மொபைல் பிரிகேட் மற்றும் 681 பிரிகேட் என்பன இப்போது முள்ளிவாய்க்கால் பகுதியை நெருங்கி நிலைகொண்டிருக்கின்றன.

இதற்கடுத்து அம்பலவன்பொக்கணைப் பகுதியை நெருங்கி 58ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்கிறது. புதுமாத்தளனுக்குத் தெற்கே பாதுகாப்பு வலயத்துக்கு அருகே முன்னேறியிருக்கிறது 55ஆவது டிவிசன்.

இந்த நான்கு டிவிசன்களும் எப்போதும் பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதலைத் தொடங்கலாம் என்ற நிலையே இந்தப் பத்தியை எழுதும் வரை இருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களை மீட்கும் தாக்குதல்களை ஆரம்பித்து விட்டதாகப் படைத்தரப்பு கூறியிருந்தாலும் அது முழுவேகத்தில் நடக்கின்ற முயற்சியாகத் தெரியவில்லை.

ஆனால், பொதுமக்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து கண்ணுக்கு எட்டிய தொலைவில் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அவர்கள் பெருந்தொகையில் ஒலிபெருக்கிகளை முன்னரங்கில் பொருத்தி சினிமாப் பாடல்களை ஒலிபரப்புவதுடன் தமது பிரதேசத்துக்குள் வருமாறும் அடிக்கடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். "வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' என்ற பாடல் அடிக்கடி திரும்பத் திரும்ப ஒலிக்க விடப்படுகிறது. அதேவேளை அடுத்த சில தினங்களில் பெருந்தொகையான மக்களை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவர முடியும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இது இந்த நிலையில் இருக்க, கடந்தவாரம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற பெரும் சமர் புலிகளைப் பலவீனப்படுத்தி விட்டதாகப் பாதுகாப்பு வட்டாரங்களில் கருதப்படுகிறது. இனிமேல் புலிகளால் தலையெடுக்க முடியாதென்ற அளவுக்கு அவர்களின் முதுகெலும்பை முறித்து விட்டதாகக் கூட அவர்களிடத்தில் அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. இது எந்தளவுக்கு சரியானது என்பதைக் காலப்போக்கில் தான் அறிந்து கொள்ள முடியும். புதுக்குடியிருப்பு கிழக்கில் ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமர், ஈழப்போர் 4 இல் நடந்த மிகப்பெரிய சமராகக் கருதப்படுகிறது. இந்தச் சமருக்குள் புலிகள் சிக்கிக் கொண்டது எதிர்பாராத ஒரு நிகழ்வு என்றே சொல்லப்படுகிறது.. புலிகள் ஒரு பாரிய வலிந்த தாக்குதலுக்குத் தயாராகியிருந்த நிலையில் படைத்தரப்பு மேற்கொண்ட இந்தத் தாக்குதல் அவர்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

புலிகள் தமது பெரும் படைவளங்களை குறிப்பிட்ட சிறிய பிரதேசத்துக்குள் ஒன்று குவித்திருந்ததை அறியாமலேயே படைத்தரப்பு இந்தத் தாக்குதல் நகர்வை மேற்கொண்டது.

ஆனால், படைத்தரப்பின் கணிப்பு 200 புலிகள் வரையே முற்றுகை இடப்பட்டிருக்கலாம் என்பதாகவே இருந்தது. ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எண்ணிக்கை 700 இற்கும் மேல் என்று இப்போது பாதுகாப்புத் தரப்பு கூறுகிறது.

கடந்த 4ஆம் ,5ஆம் திகதிகளில் ஆனந்தபுரம் பகுதியில் சிலநூறு சதுர மீற்றர் பிரதேசத்துக்குள் சிக்கியிருந்த, புலிகளை அழிக்கப் படையினர் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை இலங்கையின் வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்டிராத ஒன்றாகும்.

ஒரு சிறிய களமுனையில் பெருந்தொகைப் படையினர் களமிறக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை இதுவேயாகும்.

இதற்கு முன்னர் இலங்கை இராணுவம் பாரியளவிலான வலிந்த தாக்குதல்கள் பலவற்றை நடத்தியிருப்பினும் அது பல கி.மீற்றர் பரந்த பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது. ஆனால் ஒரு சதுர கி.மீற்றருக்கும் குறைந்த பிரதேசத்துக்குள் அதிகளவு படையினர் களமிறக்கப்பட்ட தாக்குதல் ஆனந்தபுரம் பெரும்சமர் தான்.

இந்தத் தாக்குதலின் ஆரம்பத்தில் சுமார் 10 வரையான பற்றாலியன்களைச் சேர்ந்த படையினரே ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் உள்ளேயிருந்த புலிகளின் எதிர்ப்பு அதிகமாக அதிகமாக படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக நடவடிக்கை முற்றுப் பெற்றபோது குறைந்தது 15 ஆயிரம் படையினரேனும் அந்தப் பகுதியில் இருந்திருக்கின்றனர். முதற்கட்டமாக லெப்.கேணல் அத்துல கொடிப்பிலி தலைமையிலான 1ஆவது விசேட படைப்பிரிவு, லெப்.கேணல் ஜெயந்த பாலசூரியவின்

தலைமையிலான 2ஆவது கொமாண்டோ றெஜிமென்ட் ஆகியவற்றுடன் லெப்.கேணல் வஜிர வெலகெதரவின் தலைமையிலான 8ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் லால் சந்திரசிறியின் தலைமையிலான 9ஆவது கெமுனுவோச், மேஜர் சம்பத் எக்கநாயக்கவின் தலைமையிலான 12ஆவது கெமுனு வோச், லெப்.கேணல் மணிந்திரவின் தலைமையிலான 6ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் சந்திர விக்கிரமசிங்கவின் தலைமையிலான 8ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் குமார பீரிஸின் தலைமையிலான 20ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன தேடியழிப்பு நடவடிக்கையில் இறக்கப்பட்டன.

அதேவேளை 11ஆவது இலகு காலாற்படைப் பிரிவும், 5ஆவது விஜயபா காலாற்படைப்பிரிவும் முற்றுகையை உடைத்துக் கொண்டு புலிகளை வெளியேறிச் செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

புலிகளின் வலு முற்றுகை வலயத்துக்குள் அதிகமாக இருந்ததால் மேலதிக படையினரைக் களமிறக்கப் படைத்தலைமை தீர்மானித்தது.

53ஆவது டிவிசன் எயர் மொபைல் பிரிகேட்டைச் சேர்ந்த லெப்.கேணல் அஜந்த விஜேசூரியவின் தலைமையிலான 1ஆவது கெமுனுவோச், மற்றும் 2ஆவது விசேட படைப்பிரிவு, 1ஆவது கஜபா, லெப்.கேணல் சமிந்த லாமஹேவவின் தலைமையிலான 7வது கெமுனுவோச் ஆகியவற்றைப் புதிதாகக் களமிறக்கியது.

அதேவேளை 58ஆவது டிவிசன் மேலதிகமாக லெப்.கேணல் சாலிய அமுனுகமவின் தலைமையிலான 12ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் பலேகும்புரவின் தலைமையிலான 14ஆவது கஜபா றெஜிமென்ட், லெப்.கேணல் கமால் பின்னவெலவின் தலைமையிலான 6ஆவது கெமுனுவோச், லெப்.கேணல் உபுல் சேனாரத் தலைமையிலான 4ஆவது கெமுனுவோச், 20ஆவது இலகு காலாற்படை ஆகியவற்றைக் களமிறக்கியது.

55ஆவது டிவிசன், 57ஆவது டிவிசன், 63ஆவது டிவிசன், 64ஆவது டிவிசன் ஆகியவற்றில் இருந்து அவசர அவசரமாகப் படையினர் கொண்டு வரப்பட்டு சண்டையில் இறக்கப்பட்டனர்.

இவற்றை விட லெப்.கேணல் நிகால் சமரக்கோனின் 5ஆவது கவசப்படைப்பிரிவு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் பிரிகேடியர் நாபாகொடவின் தலைமையிலான ஆட்டிலறிப் படைப்பிரிவு இரவு பகலாக குண்டுமழை பொழிந்து உதவியது.

இந்தத் தாக்குதலில் பங்கெடுத்த துணைச் சேவைப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை தனி. புலிகளை முற்றுகையிட்டுத் தாக்கியழிக் கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவ பற்றாலியன்களின் மொத்த எண்ணிக்கை 20 இற்கும் அதிகம் என்பது ஆச்சரியமளிக்கும் விடயம்.

சிறிய பகுதிக்குள் குறைந்தது 12ஆயிரம் காலாற்படையினரைக் கொண்டே இந்த அழித்தொழிப்புச் சமரைப் படைத்தரப்பு நடத்தியது.

இந்த அழித்தொழிப்பு நடவடிக்கையில் பங்கேற்ற பற்றாலியன்கள் அத்தனையும் சிறப்புப் பயிற்சி பெற்றது. அனுபவம் மிக்கது.

இராணுவத்தின் அனுபவம் மிக்க படைப்பிரிவுகள் அனைத்தும் களமிறக்கப்பட வேண்டியளவுக்கு அது கடினமான களமுனையாக இருந்தது.

அத்துடன் இந்தச் சமரில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட சேதங்களும் மிகமிக அதிகமென்றே தகவல்கள் கூறுகின்றன. படைத்தரப்போ புலிகளோ தமக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி எதுவும் கூறவில்லை.

புலிகள் தரப்பில் 525 பேரின் சடலங்களை கைப்பற்றியதாகக் கூறியிருந்தது படைத்தலைமை. புலிகள் தரப்பில் கொல்லப்பட் டதாக, பாதுகாப்பு வட்டாரங் கள் அறிவித்த கேணல் தீபன், மாலதி படையணி சிறப்புத் தளபதி கேணல் விதுசா, சோதியா படையணி சிறப்புத் தளபதி கேணல் துர்க்கா, படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் கடாபி ஆகியோர் மூத்த தளபதிகளாகச் செயற்பட்டவர்கள்.

இவர்களில் துர்க்கா தவிர்ந்த ஏனைய மூவரும் ஜெயசிக்குறு காலத்திலேயே கேணல் நிலைத் தளபதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். தீச்சுவாலை முறியடிப்புச் சமரை அடுத்து 2001இல் துர்க்காவும் கேணலாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இவர்களைவிட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தளபதி நாகேஸ், ஜெயந்தன் படையணி சிறப்புத் தளபதி கீர்த்தி, கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி மணிவண்ணன், குட்டிசிறி மோட்டார் படையணியின் சிறப்புத் தளபதி கோபால், மணலாறு பகுதி தளபதிகளான சித்திராங்கன், ஆதித்யன், ராதா படையணித் தளபதி சிலம்பரசன், சோதியா படையணியின் தளபதி மோகனா, மற்றும் தளபதி ரூபன் என கொல்லப்பட்ட புலிகளின் தளபதிகள் என்று பட்டியலைக் காட்டியது படைத்தரப்பு.

தாக்குதல் நடந்து பல நாட்கள் கழிந்த நிலையில் குட்டிறிசிறி மோட்டார் படையணியைச் சேர்ந்த அமுதா, ராதா படையணியின் சிரேஷ்ட தளபதி இனியவன், திருமலை புலனாய்வு பிரிவு தலைவர் அன்ரன், புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த மாங்குயில், நேரு என்று கொல்லப்பட்டதாகக் கூறப்படுவோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ராதா படையணித் துணைத் தளபதி அன்பு, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு தளபதியான அஸ்வினி போன்றோர் கொல்லப்பட்டதாக இராணுவ இணையத்தளம் கூறியிருந்த போதும் இவர்கள் காயமடைந்தாக தகவல் வெளியிட்டிருந்தது பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்.

படைதரப்பு வெளியிட்ட இந்தத் தகவலைப் புலிகள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. புலிகளின் இத்தனை தளபதிகளும் இறந்தது உண்மையானால் அது புலிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும்.

http://www.virakesari.lk/

என்ன திருப்பத்தை இந்த *** எதிர்பார்க்கிறது?

Edited by வலைஞன்
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடங்களுக்கு முன் சிங்களம் போரை ஆரம்பித்தபோது புலிகளின் மரபு வழி சமரிடும் ஆற்றலை முடிவுக்கு கொண்டு வருவதே அவர்களது இராணுவ இலக்காக இருந்தது.அதற்கு ஆதாரமாக இருந்த நிலங்களை கைப்பற்றுவதே மூலோபாயம் என சிங்களம் காட்டிக்கொண்டது,இருப்பினும் ஒரு கட்டத்தின் பின் மன்னார் முன்னேற்றங்களை தற்காலிகமாக இடை நிறுத்தி மணலாறு வழியான முன்னேற்றத்துக்கு முனைப்பு காட்டியதோடு விரைவாக காடுகளை கைப்பற்றி நிலை கொண்ட பின் மீண்டும் மன்னார் வழி முன்னேற்றத்திலீடுபட்டது,இதன

  • கருத்துக்கள உறவுகள்

சுபத்திரா என்பவர் சிங்களவராவார் என்றே நான் அறிந்திருக்கின்றேன். அச்சுப் பிரிவில் வேலை செய்யும் ஒருவர் முன்பு சொன்ன விடயம்.

சுபத்திரா என்பவர் சிங்களவராவார் என்றே நான் அறிந்திருக்கின்றேன். அச்சுப் பிரிவில் வேலை செய்யும் ஒருவர் முன்பு சொன்ன விடயம்.

இல்லை....!! பலருக்கு நன்கு தெரிந்த ஒரு பத்திரிகையாளர்

  • கருத்துக்கள உறவுகள்

சுபத்திரா என்பவர் இப்படி எழுதும்போது அரூஸ் பின்வருமாறு ஈழமுரசு பத்திரிக்கையின் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். ரெண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஏறக்குறைய அரூஸ் சொல்வதைத்தான் எனது சில ஊடக நண்பர்களும் தெரிவித்திருந்தனர். ஆனால் எதற்கு வம்பு என்று அவற்றை இணைக்காமல் இருந்துவிட்டேன்.இது உண்மையாகவெ புலிகளுக்குக் கிடைத்த பெரு வெற்றி. ராணுவம் தட்டை மாற்றிப் போட்டிருக்கிறது. பேட்டியைத் தொடர்ந்து வாசியுங்கள்.

போரைத் தூண்டிய அனைத்துலக சமூகம் தான் அதனை நிறுத்தவும் முன்வர வேண்டும்

11/04/2009

--------------------------------------------------------------------------------

போர் நிறுத்த காலத்தில் சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டிய அவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் ஈழமுரசு வாரஏட்டிற்கு வழங்கிய பிரத்தியோக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அந்த நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: கடந்த 5 ஆம் நாளன்று ஆனந்தபுரம் பகுதியில் நடைபெற்ற சமர் தொடர்பாக பல முரணான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன அது தொடர்பாக உங்களின் பார்வை என்ன?

பதில்: ஆனந்தபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதல்களை நோக்கும் போது இரு தரப்பும் தமது பலத்தை பரீட்சித்து பார்த்த களம் அது என கூறினாலும் தவறில்லை. இராணுவம் விடுதலைப்புலிகளை ஒரு பெட்டிவடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டதாக எண்ணியிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அவர்களை ஒரு பெட்டி வடிவ முற்றுகைக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இந்த முற்றுகையை பயன்படுத்தி இராணுவத்தின் போரிடும் வலு கொண்ட எஞ்சிய படையினரையும் அழிப்பதே விடுதலைப்புலிகளின் உத்தி. அவர்கள் அதனை சாதித்துள்ளதாகவே களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன.

அங்கு கடந்த 2 ஆம் நாளில் இருந்து மோதல்கள் நடைபெற்ற போதும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (5) அதிகாலை படைத்தரப்பு பரியதொரு தாக்குதலை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகளின் அணிகள் சனிக்கிழமை நள்ளிரவு தாக்குதலை ஆரம்பித்து விட்டன. தாக்குதல் ஏறத்தாள 6 மணிநேரம் உக்கிரமாக நிகழ்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவத்தின் முற்றுகையை உடைத்துக்கொண்ட விடுதலைப்புலிகளின் பெருமளவான அணிகள் தளம் திரும்பிவிட்டன. இராணுவத்தரப்பில் இந்த மோதலில் 1450 மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், 2000 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சமரின் பின்னர் இராணுவம் எடுத்துவரும் ஓய்வும் அதனையே காட்டுகின்றது.

இராணுவத்தின் இலத்திரனியல் தகவல்களை விடுதலைப்புலிகள் இடைமறித்து கேட்பதன் மூலம் இந்த தகவல்களை பெற்று வருகின்றனர். மோதல் என்னும் போது இரு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படுவதுண்டு. அதிலும் தற்போதைய மோதல்கள் உக்கிரமானவை. இந்த மோதலில் இராணுவம் ஆறு மணிநேரத்தில் 100,000 இற்கு மேற்பட்ட எறிகணைகளை ஏவியதாக விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதில் இருந்து களமுனயின் உக்கிரத்தை நீங்கள் கணிப்பிட்டுக்கொள்ளலாம். எனினும் இந்த தாக்குதல் பூரண வெற்றி அளித்துள்ளதாகவே விடுதலைப்புலிகளுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கேள்வி: இந்த சமரில் பெருமளவான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக அரசு தெரிவிக்கும் கருத்துக்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை?

பதில்: சிறீலங்கா அரசுகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் விடுதலைப்பேராட்டம் ஆயுதப்போராட்டமாக மாறிய காலப்பகுதியில் இருந்து தற்போது வரை பரப்புரை போரை அதிகப்படியாக முன்னெடுத்து வருவது நாம் அறிந்தைவையே.

ஆனால் தற்போதைய அரசு இதனை மிகவும் பாரிய அளவில் மிகுந்த பொருட் செலவில் நடாத்தி வருகின்றது. எத்தனையே தென்னிலங்கை ஊடகங்களை தனக்கு சார்பாக விலைகொடுத்து அரசு வாங்கியுள்ளது. ஏனைய ஊடகங்களை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு அடக்கியுள்ளது.

எனவே தற்போதைய நிலையில் அரசு கூறும் தகவல்கள் தான் தென்னிலங்கையை மட்டுமல்லாது அனைத்துலக ஊடகங்களையும் அதிகளவில் கவர்ந்து வருகின்றன. ஆனால் களமுனையின் யதார்த்தம் அத்தகையது அல்ல. சிறீலங்கா அரசு கூறுவது போல இராணுவத்தினாரின் முற்றுகைக்குள் விடுதலைப்புலிகளின் அணிகள் முற்றாக சிக்குண்டு அழிவை சந்தித்திருந்தால் களமுனைகளில் சடலங்கள் சிதறிக்கிடப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.

தப்பியோடும் ஒரு சில போராளிகளால் சடலங்களை புதைக்கவே அல்லது எடுத்துச் செல்லவோ முடியாது. அவ்வாறான ஒரு துன்பமான நிகழ்வுகளை நாம் இடிமுழக்கம் படை நடவடிக்கைக்கு எதிரான சமர், கொக்குத்தொடுவாய் படை தளங்கள் மீதான தாக்குதல்களின் போது 1995 களில் சந்தித்திருந்தோம்.

ஆனால் கடந்த வார சமரில் களமுனைகளில் கொல்லப்பட்டு கிடந்த 15 இற்கும் குறைவான சடலங்களை தான் ஆரம்பத்தில் அரசு காண்பித்திருந்தது. பின்னர் உருக்குலைந்த சடலங்கள் பலவற்றை காண்பித்திருந்தது. படையினர் காண்பித்த மொத்த சடலங்களும் 100 இற்கும் குறைவானவை. மேலும் தற்போதைய சமர்களில் மரணத்தை தழுவும் தமது உறுப்பினர்களை களமுனைகளில் புதைத்துவிட்டே விடுதலைப்புலிகள் தளம் திரும்புகின்றனர். சிறீலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்களால் கொல்லப்பட்ட பல பொதுமக்களின் சடலங்களும் ஆனந்தபுரம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்தன.

சிறீலங்கா படையினர் காண்பித்த சடலங்களில் பெரும்பாலனவை புதைக்கப்பட்ட பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட அடையாளங்களை கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. எனவே போலியான பிரச்சாரங்களின் மூலம் சிறீலங்கா அரசு ஒரு உளவியல் போரை மேற்கொண்டு வருகின்றது என்பது தான் உண்மை.

கேள்வி: இராணுவத்தின் முற்றுகைக்குள் சிக்கியிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளை மீட்பதற்கு கடற்புலிகள் முயன்றதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன?

பதில்: மோதல் நடைபெற்ற பகுதியின் பூகோள அமைப்பை கருதினால் இந்த தகவலின் உண்மை தன்மை புரியும். ஆனந்தபுரம் எல்லாபக்கமும் நிலத்தினால் சூழப்பட்ட பிரதேசம் அங்கு கடற்புலிகள் தரையிறங்க முடியாது. இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் கடற்புலிகளுக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

ஆனால் அது அலம்பில் கடற்பரப்புக்கு அண்மையாக நிகழந்துள்ளது. அலப்பில் முல்லைத்தீவில் இருந்து 10 கி.மீ தென் திசையில் உள்ளது. மேலும் விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தின் முற்றுகையை உடைத்துகொண்டு தப்பியோட வேண்டிய தேவை இருக்கவில்லை. ஏனெனில் இராணுவத்திற்கு ஒரு முற்றுகையை ஏற்படுத்தும் முகமாக இந்த முற்றுகையை ஏற்படுத்தியவர்களே அவர்கள் தான். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர்.

கேள்வி: அனைத்துலக நாடுகளிலும் தற்போது நிகழந்துவரும் போராட்டம் தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் முன்னர் கூறியது போல தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள மனித பேரழிவுகள் தொடர்பான அனைத்துலகத்தினது நகர்வுகள் மிகவும் மெதுவாகவே உள்ளன. இந்த கால அவகாசத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ள சிறீலங்கா அரசு தனது அனைத்து வளங்களையும் ஒன்று குவித்து மிகப்பெரும் தாக்குதலை தொடுக்க திட்டமிட்டுள்ளது.

தற்போதைய களமுனைகயை பொறுத்தவரையில் இராணுவம் தனது கவசப்படையையும், செறிவான பீரங்கி தாக்குதல்களையும் பயன்படுத்துவதுடன், தரைப்படையினர் 23 மி.மீ, 30 மி.மீ போன்ற இலகுரக பீரங்கிகளையும், 12.7 மி.மீ ரக கனரக துப்பாக்கிகளையும் தரை நடவடிக்கைகளில் அதிகளவில் பயன்படுத்தியும் வருகின்றனர். எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலையில் பாதுகாப்பான பிரதேசத்திற்குள் இராணுவம் புகுந்தால் பாரிய மனித பேரழிவு ஒன்று ஏற்படும் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

தற்போது புதுக்குடியிருப்பு முழுவதையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ள அரசு பாதுகாப்பான பிரதேசத்தை நோக்கி ஐந்து முனைகளில் நகர முற்பட்டு வருகின்றது. இந்த பிரதேசத்தில் மோதல்கள் ஆரம்பிக்குமாக இருந்தால் அங்கு குறுகிய நேரத்தில் பாரிய அழிவு ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது. எனவே அதனை தடுக்க வேண்டிய கடமை உலெகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு.

சிறீலங்கா அரசின் போரின் வேகத்தை விட தமிழ் மக்களின் வேகம் அதிகமாக இருத்தல் வேண்டும் என்பது தான் இன்றைய தேவை.

கேள்வி: அனைத்துலக சமூகத்திற்கு இந்த போரை நிறுத்த வேண்டிய கடப்பாடு உள்ளதா?

பதில்: இந்த போரை நிறுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அனைத்துலக சமூகத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கும், மேற்குலகத்திற்கும் உண்டு. ஏனெனில் நான் ஏற்கனவே பல தடவைகள் கூறியது போல பொஸ்னியாவில் மேற்கொள்ளப்பட்ட அமைதி நடவடிக்கையின் போது இரு தரப்பும் சம வலுவுள்ள நிலையில் இருந்தால் தான் நியாயமான தீர்வை எட்ட முடியும் என்ற சமன்பாடுகளை வகுத்திருந்த மேற்குலகம் தமிழ் மக்களுக்கு மறுதலையான கொள்கைகளை பின்பற்றி துரோகம் இழைத்துள்ளது.

2001 ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்தின் போரிடும் வலு உடைக்கப்பட்ட நிலையில் தான் 2002 ஆம் ஆண்டு ஒரு போர் நிறுத்த உடன்பாடு நோர்வேயின் அனுசாணையுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த காலப்பகுதியில் மேற்குலகமும் இந்தியாவும் சிறீலங்கா இராணுவத்தினை பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடபட்டிருந்தது துர்ப்பாக்கியமானது.

இந்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளை பல நாடுகள் தடை செய்ததும் அமைதி உடன்படிக்கை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை சிதைத்ததுடன், போரின் மீதான சிங்கள மக்களின் ஆர்வத்தை அதிகரித்திருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கை தான் போர் நிறுத்தத்தை சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக புறம் தள்ளும் நிலையை எற்படுத்தியிருந்தது.

மேலும் ஒரு சிறிய உதாரணத்தை கூறுகின்றேன். “வருங்கால போரில் விடுதலைப்புலிகள் வலிமை மிக்க சிறீலங்கா இராணுவத்தினரை எதிர்கொள்ள நேரிடும்” என 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறீலங்காவுக்கான அமெரிக்காவின் தூதுவராக கடமையாற்றிய ஜெஃப்ரி லுன்ஸ்ரெட் (துநககசநல டுரளெவநயன) எச்சரிக்கை விடுத்திருந்ததையும் நாம் மறந்துவிட முடியாது.

அதாவது சிறீலங்காவின் படை கட்டமைப்புக்களை பலப்படுத்தி அமைதி உடன்பாட்டை சீர்குலைத்ததில் மேற்குலகத்தினதும், இந்தியாவினதும் பங்களிப்புக்கள் ஏராளம். எனவே போரை தூண்டியவர்களுக்கு தான் அதனை நிறுத்தும் கடமையும் உள்ளது.

கேள்வி: சிறீலங்காவில் நடைபெறும் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என சீனா தெரிவித்துள்ளது தொடர்பாக எதனை கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: இது சீனாவின் கருத்து மட்டுமல்ல அனைத்துலகத்தின் பல நாடுகளும் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்து தான் எமது பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள வழிதேடுகின்றன. ஆனால் நான் ஒன்றை மட்டும் இங்கு கேட்கின்றேன் சிறீலங்காவில் நடைபெறும் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றால் விடுதலைப்புலிகளை ஏன் உலக நாடுகள் தடை செய்துள்ளன. அதுவும் அவர்களின் உள்நாட்டு பிரச்சனை என்று ஒதுங்கியிருந்திருக்கலாம் தானே.

மேலும் விடுதலைப்புலிகள் எந்த நாட்டு மக்களுக்கும் தீங்கிழைக்கவி;ல்லை. பலஸ்தீன கெரில்லாக்கள் செய்தது போல வெளிநாட்டவர்களை அவர்கள் சிறைப்பிடிக்கவில்லை, அவர்களை படுகொலை செய்யவில்லை, வெளிநாட்டவர்களின் விமானங்களை கடத்தவில்லை. எப்போதும் அனைத்துலகததின் சட்டவிதிகளை மதித்தே நடந்து வந்துள்ளனர்.

எனவே அனைத்துலக சமூகம் தமது பூகோள அரசியலுக்காக தமிழ் மக்களுக்கு காலம் காலமாக துரேகம் இழைந்து வந்துள்ளதுடன் தற்போது தமது துரோகத்தனங்களை நியாயப்படுத்தவும் முற்பட்டு வருகின்றன.

கேள்வி: நடைபெறப்போகும் இந்திய தேர்தலில் தமிழக மக்களின் கடமை என்ன?

பதில்: தமிழ் மக்களுக்கு சொந்தமாக ஒரு நாடு உலகில் இல்லை. எமது இனம் உலகின் வல்லாதிக்க சக்திகளின் கோரப்பிடியிலும், சிங்கள அரசின் இன அழிப்பிலும் சிக்கி பேரழிவை எதிர்கொண்டு நிற்கும் இந்த தருணத்தில் தான் எமது இனத்திற்கு என்று ஒரு நாடு இல்லாதது எவ்வளவு தவறானது என்பதை நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.

தேசம் அற்ற இந்த இனமும் விரைவில் அழிந்துவிடும் அது இயற்கையே. எனெனில் தனக்கு என ஒரு நாடு அற்ற எந்த இனமும் நிலைத்து நின்ற வரலாறுகள் குறைவு.

உலகில் அருகிவரும் உயிரினங்களை காப்பாற்றுவதற்கு பல நாடுகளும், அமைப்புக்களும் முன்நின்று உழைக்கின்றன. ஆனால் தமது இனத்தை காப்பாற்ற உலகில் ஏறத்தாள 70 மில்லியன் தமிழ் மக்களை கொண்ட தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் பின்நிற்பது கொடிய வேதனை. குடும்ப அரசியல், கட்சி பேதங்கள் என்பவற்றிற்கு அப்பாற்பட்டது இன உணர்வு.

இன உணர்வுள்ள தலைவர்களை வருங்காலத்தில் தெரிவு செய்ய வேண்டியது தமிழக மக்களின் தலையாய கடமை, காலத்தின் தேவையும் அது தான். அதன் மூலம் தான் தமது இனத்தின் வாழ்வுக்காக தீயில் கருகும் எமது உறவுகளை அவர்களால் காப்பாற்ற முடியும் என்பது மட்டுமல்லாது தமிழ் என்றெரு இனம் நீண்டகாலம் வாழவும் வழி பிறக்கும்.

கேள்வி: தற்போது நடைபெற்றுவரும் போரில் இந்தியாவின் பங்களிப்பு எவ்வளவு?

பதில்: இதற்கு பதில் கூறுவதாக இருந்தால் பல மணி நேரம் எடுக்கும். எனவே சுருக்கமாக கூறுவதாக இருந்தால் தற்போதைய போரை சிறீலங்கா சார்பாக இந்திரா காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே வழிநடத்தி வருகின்றது. போரில் இந்திய படையினரை நேரடியாக களமிறக்கினால் அது உலகில் பல வாதப்பிரதி வாதங்களை தோற்றுவிக்கும் என்பதற்காக சிறீலங்கா படை சிப்பாய்களை முன்னிறுத்தி இந்த போரை இந்தியா வழிநடத்தி வருகின்றது.

தொழில்நுட்ப உதவிகள், படைக்கல உதவிகள், போர் மூலேபாய ஆலோசனைகள், வரைபட விளக்கங்கள், சமர்களில் நேரடியாக ஈடுபடும் பற்றலியன் படை அதிகாரிகளுக்கான தொடர் பயிற்சிகள், போரினால் சீரழியும் சிறீலங்கா அரசுக்கு தேவையான பொருளாதார உதவிகள் அனைத்தையும் இந்திய மத்திய அரசே வழங்கி வருகின்றது.

சிறீலங்கா அரசு 2008 ஆம் ஆண்டு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகிக் கொண்டதற்கு அன்பளிப்பாக வாரகா என்படும் 1750 மில்லியன் இந்திய ரூபாய்கள் பெறுமதியான 74 மீ நீளமான ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இந்திய அரசு வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது புதுக்குடியிருப்பில் நடைபெற்றுவரும் மோதல்களில் படையினர் விடுதலைப்புலிகளின் நிலையிடங்களை துல்லியமாக கண்டறிந்து தாக்குவதற்கு தேவையான தொலைதொடர்பு சாதனங்களின் நிலையிடங்களை கண்டறியும் சாதனங்களை இந்திய அரசு பெருமளவில் வழங்கியுள்ளது. இவை தவிர இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களும் ஏராளம்.

உதாரணமாக வான்பாதுகாப்புக்கு என இந்திய அரசு வழங்கிய எல்-70 ரக 40 மி.மீ பீரங்கிகளை தற்போது படையினர் புதுக்குடியிருப்பு களமுனைகளில் மக்கள் மீதான நெடுந்தூர தாக்குதலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை சுருக்கமாக கூறினால் தற்போதைய போரில் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழ் மக்களின் குருதிக்கறைகள் இந்திய மத்திய அரசின் கைகளில் தான் அதிகம் படிந்துள்ளது.

கேள்வி: வன்னியில் தற்போது ஏற்பட்டுள்ள பேரனர்த்தமான நிலையில் படைத்துறை ரீதியான ஆய்வுகள் தேவையற்றவை என்ற கருத்துக்களை சில தமிழ் ஊடகங்கள் முன்வைத்து வருவதன் அர்த்தம் என்ன?

பதில்: சிறீலங்கா அரசுகளிடம் இருந்து எமது உரிமைகளை அகிம்சை வழியில் பெற்றுக்கொள்ள முடியாது என்ற ஒரு நிலை தோன்றிய பின்னர் தான் தமிழ் இனம் ஆயுதம் தரித்துக் கொண்டது.

இந்த உண்மை தற்போது அனைத்துலக சமூகத்திற்கும் புரிந்திருக்கும். ஆயுதப்போராட்டங்களின் மூலம் சிறீலங்கா அரசின் போரிடும் வலுவை முறியடித்த பின்னர் தான் அரசியல் தீர்வு தொடர்பாக நாம் அவர்களுடன் பேச முடியும் என்பதை தமிழ் மக்கள் தற்போதும் வலுவாக நம்புகின்றனர்.

தாயகத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தி தமது விடுதலைக்காக போராடவேண்டும் என்ற ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் தற்போது நிற்கின்றோம். இந்த தருணத்தில் படைத்துறை அறிவு எமக்கு தேவையற்றது என்று கூறினால் அதன் உள்ளாந்த அர்த்தம் என்ன என்பதை நீங்கள் தான் ஊகித்துக் கொள்வேண்டும்.

மேலும் ஒரு சமூகம் என்பது பல துறைகளை சார்ந்தவர்களை கொண்டது. அங்கு அரசியல் ஆய்வாளரும் இருப்பர், சமூகவியல் ஆய்வாளரும் இருப்பர், உளவியல் ஆய்வாளரும் இருப்பார், படைத்துறை ஆய்வாளரும் இருப்பார், ஏன் சமயல்துறையில் ஆய்வு செய்பவர்களும் இருப்பார்கள் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது பயனுள்ளது.

ஈழமுரசிற்காக அருஷ்

நன்றி : ஈழமுரசு (11.04.2009)

  • கருத்துக்கள உறவுகள்

ரெண்டுக்குமிடையிலான வித்தியாசத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஏறக்குறைய அரூஸ் சொல்வதைத்தான் எனது சில ஊடக நண்பர்களும் தெரிவித்திருந்தனர்.

புலிக்கு ஆதரவான பத்திரிகையாளும் இருப்பார்கள்....புலிக்கு எதிரான பத்திரிகையாளர்களும் இருப்பார்கள் நாங்கள் தான் பகுத்தறியனும் என்று சொல்லுறியள்

மேலும் ஒரு சமூகம் என்பது பல துறைகளை சார்ந்தவர்களை கொண்டது. அங்கு அரசியல் ஆய்வாளரும் இருப்பர், சமூகவியல் ஆய்வாளரும் இருப்பர், உளவியல் ஆய்வாளரும் இருப்பார், படைத்துறை ஆய்வாளரும் இருப்பார், ஏன் சமயல்துறையில் ஆய்வு செய்பவர்களும் இருப்பார்கள் ஒவ்வொரு துறையிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு அது பயனுள்ளது.

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.