Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள், சர்வதேசம் தலையிட்டு நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச செய்தி ஊடகத்திற்கு புலித்தேவன் பேட்டி

Featured Replies

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள், சர்வதேசம் தலையிட்டு நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச செய்தி ஊடகத்திற்கு புலித்தேவன் பேட்டி

திகதி: 21.04.2009 // தமிழீழம் // [வன்னியன்]

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ரொய்டசுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.

மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.

நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

sankathi

தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ரொய்டசுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.

மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.

நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

[செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 09:54 பி.ப ஈழம்] [கு.பாலசுப்பிரமணியம்]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார்.

"நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது" எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய புலித்தேவன், "நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் தலையிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

அரசாங்கப் படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துமிருப்பதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.