Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிட்டன்-பிரான்ஸ் அமைச்சர்கள் பேச்சு 'வீண்': இறங்கி வராத இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன்-பிரான்ஸ் அமைச்சர்கள் பேச்சு 'வீண்': இறங்கி வராத இலங்கை

புதன்கிழமை, ஏப்ரல் 29, 2009, 11:30 [iST]

கொழும்பு: தமிழர்கள் மீதான தாக்குதலை முழுமையாக கைவிடவும், ஐ.நா. மனிதாபிமான குழுவை போர் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பவும், இலங்கை அரசு சம்மதிக்கவில்லை. இதனால் அரசுடன் பேசுவதற்காக கொழும்பு வந்த இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இன்று காலை இங்கிலாந்தின் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸின் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் கொழும்பு வந்தனர். முதலில் வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகாமாவை இருவரும் சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது. இதுகுரித்து கொச்னார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் மிகக் கடுமையாக போராடினோம். இலங்கை அமைச்சரிடம் போரை முழுமையாக நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான குழுவை அனுப்ப வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தினோம். எத்தனை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை. இதற்கு மேல் என்ன செய்வது என்பதை இலங்கையிடமே விட்டு விடுகிறோம் என்றார்.

மிலிபான்ட் கூறுகையில், பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. அப்பாவி மக்களை காப்பாற்றத்தான் தற்போது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவெடுத்துள்ளோம். விடுதலைப் புலிகளுக்காக இதை செய்யவில்லை என்று பொகல்லகாமா தெரிவித்தார் என்றார்.

அதிபர் ராஜபக்சேவையும் இரு அமைச்சர்களும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும், வவுனியாவில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களையும் அவர்கள் பார்வையிடவுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனது பயணத்தின்போது, மனிதாபிமான நெருக்கடியைத் தீர்க்க இலங்கை அரசு முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும். புலிகள் பகுதியில் சிக்கியுள்ளவர்களை மீட்க வேண்டும். அவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ராஜபக்சேவை கோரவுள்ளதாக ஏற்கனவே மிலிபான்ட் தெரிவித்துள்ளார்.

மேலும், முகாம்களில் தங்கியுள்ளழர்களுக்கு உரிய மருத்துவ வசதிகள், உணவு, உடை உள்ளிட்டவற்றை வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில்தான் ஜான் ஹோம்ஸ் வந்து சென்றார். தற்போது இங்கிலாந்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் வந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வருவதாக இருந்த ஸ்வீடன் அமைச்சரின் வருகைக்கு இலங்கை அரசு தடை போட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் நெருக்கடி அதிகரித்து விட்டது. ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து இலங்கையை நிர்ப்பந்தித்து வருகின்றன. ஆனால் யார் சொல்லியும் தமிழர்கள் மீதான தாக்குதலை இலங்கை நிறுத்தவில்லை.

இப்போதும் கூட கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என இலங்கை கூறியுள்ள போதிலும் கூட அப்பாவித் தமிழர்கள் மீதான தாக்குதல் முழுமையாக நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்:

அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று திரும்பத் திரும்பக் கோரியும், அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை பீரங்கிக் குண்டுத் தாக்குதலை நடத்தி வருவதாக ஐ.நா. குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று பாதுகாப்பு வளையப் பகுதியில் பல மணி நேரம் நடந்த பீரங்கித் தாக்குதலையும் அது கண்டித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனிதாபிமான பிரிவு உதவிச் செயலாளர் ஜான் ஹோம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர்ந்து அப்பாவி மக்கள் வசி்க்கும் பகுதிகளில் பீரங்கித் தாக்குதல் நடைபெறுவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

இதற்கு முன்பு தான் கூறியதை இலங்கை அரசும், படைகளும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் அதிபரே கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம என்று கூறியுள்ளதால் இம்முறை இலங்கை தனது சொல்லைக் காக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா இதை மறுத்துள்ளார். நாங்கள் பெரிய ஆயுதங்கள் எதையும் பயன்படுத்தவில்லை. சிறிய ரக ஆயுதங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம்.

விடுதலைப் புலிகள் வசம் இருந்த ஒரு அரண் பகுதியை நாங்கள் உடைத்து அந்த வழியாக அப்பாவிகள் வெளியேறுவற்கு வகை செய்தோம் என்றார்.

தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காவில் உடனடி யுத்த நிறுத்ததினை மேற்கொண்டு, பாதுகாப்பு வலயத்திற்குள் அவசர மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட அனுமதிக்குமாறு், பிரான்ஸ், பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. இதனால் தமது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்கள். இன்று புதன்கிழமை அதிகாலை 5.30 நிமிடமளவில் அதிகார பூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானிய, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பு வந்தடைந்தனர். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரை சந்திக்க திட்டமிட்டிருந்ததுடன், வவுனியாவுக்கு சென்று இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள முகாம்களையும் பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லமாவிடம், கலந்துரையாடி விட்டு பத்திரிகையாளர்களிடம் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கௌச்னர் கருத்து தெரிவிக்கையில் உடனடி போர் நிறுத்தம் ஒன்றினை ஏற்படுத்துமாறும், பாதுகாப்பு வலயத்தினுள் மனிதாபிமான பணியாளர்கள் உட்செல்ல அனுமதிக்குமாறும் அழுத்தங்களை பிரயோகித்தோம், வற்புறுத்தினோம் எனினும் எமது முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபாண்டும் தமது முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன எனவும், உடனடி யுத்த நிறுத்தம் பாதிகப்பட்டுள்ள பொதுமக்களுக்கானதே தவிர வேறெந்த உள் நோக்கமும் கொண்டதல்ல என்பதை மீண்டும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெளிவிவகார அமைச்சர்கள் இருவரும், 'சர்வதேச மனித உரிமை சட்டதிட்டங்களுக்கும், பொது மக்களின் பாதுகாப்பிற்கும் மதிப்பளிக்க வேண்டிய அவசியம் தற்போது காணப்படுவதாக கோரிக்கை விடுத்துள்ளனர்.'

http://www.4tamilmedia.com/www2/index.php/...9-10-31-45.html

Edited by forlov

இவங்கள் எல்லாம் எங்களைபோல பிளேன்ல போய் சொந்தக்காரங்களைப்பார்த்து மகிழ்ந்து கதைத்து குசலம் விசாரிப்பதைபோல எண்டு நினை முடியவில்லை.

பிளேன்ல ஏறமுன்னமிருந்தே தொடர்புகள் வசதிகள் அவரவற்ற நிலைப்பாடுகள் ஏன் வரப்போகும் புடிவுகள் கூட அறிந்திருப்பார்கள்.

ஏதோ கஸ்டப்பட்டு வந்தம் பேசிப்பார்த்தம் ஆனால் சிறிலங்கா அரசு அடம்பிடிக்குது எண்டு கதை விடுவது எங்கள் மக்களின் போராட்டத்தை சமாளிக்கவா? அல்லது கொச்சைப்படுத்தவா? ஒரு சரியான முடிவு எடுக்கும் வரை போராட்டத்தை தொடரவேண்டும்.

தமித்தரப்பு மீது தடை போட்டு சிங்களத்துக்கு உதவி செய்தவர்கள் இவர்கள்தான். உதவி செய் அல்லது தடையை எடு. இதுவரை போராட்டம் தொடரும்.

தங்களுக்கும் இதுக்கும் சம்பந்த இல்லை என்று சொல்லி தட்டிக்களிக்க முடியாது.

இனியும் ஏன் வெளிகள் பொறுத்து இருக்கவேண்டும்...

இலங்கையை த்டைசெய்து புலிகளின் தடையை எடுக்க வேண்டியது தானே...

இவர்களுக்கு முடிவு தமிழர்களை இவ்வளவு காலமும் பாதுகாத்த புலிகளுக்கு மட்டும் தானா?

தமிழ் மக்களே அடுத்த அடி எடுத்து கொடுங்கள்....

கடிதங்கள், ஈ மெயில்கள், தொலைபேசிகள் மூலம் சூட்டோடு சூடாக நடவடிக்கைகள் செய்து பிரான்ஸ், பிரித்தானியா நாடுகளை யோசிக்க வையுங்கள்..

இந்தியாவின் இரட்டைவேசத்தையும் கலைத்து உசார் நிலையை ஏற்படுத்தங்கள்...

புலம் பெயர்மக்களின் ஒன்று பட்ட இணைந்த அமைப்பு செயற்பாடுகளே சரியான முடிவுகளை வெளி நாடுகள் மேற்கொள்ள உதவும்...

  • கருத்துக்கள உறவுகள்

சுவீடனை விலக்கும் போதே இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது தெளிவாகிறது. ஏதோ ஒரு கண்துடைப்புக்கு சிறிலங்காவுக்கு போய் வந்துள்ளார்கள் இந்த பிரிட்டன், பிரான்ஸ் அமைச்சர்கள்.

சுவீடனை விலக்கும் போதே இந்த முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டது தெளிவாகிறது. ஏதோ ஒரு கண்துடைப்புக்கு சிறிலங்காவுக்கு போய் வந்துள்ளார்கள் இந்த பிரிட்டன், பிரான்ஸ் அமைச்சர்கள்.

நீங்கள் எந்த முடிவு என்று நினைகிறீர்கள்? இவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.