Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

Featured Replies

athath.jpg

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்
athath.jpg

இன்றைய நிலையில் புலம் பெயர்ந்து நாம் வாழும் தேசங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் இளையவர் அழைப்பை ஏற்று பொது மக்கள் தெருவில் இறங்கி போராடுகின்றார்கள்.

இது வரை காலமும் தாயக விடுதலைக்கு வேலை செய்து வந்த அமைப்புகளின் செயற்பாடுகள் போது மானதாக இல்லை என்பது எனது கருத்து.

மனித உரிமை விடயங்களை முன் நிலைப்படுத்தி அறிக்கைப் போராட்டத்தைத் தன்னும் இந்த அமைப்புகள் நடைமுறைக்கு கொண்டுவரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜிக்கா ,

இப்படித்தான் ஹிட்லர் னு ஒருத்தன் ஒரு இனத்தை அழிக்க ஆட்டம் போட்டான் என்று வரலாறு சொல்லுது.

ஹீட்லர் தான் அழீந்து போனான்,அவன் அழிக்க நினைத்த இனம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது.

சரி சரி நாம் இங்கிருந்து என்ன செய்யலாம் என்பதை சிந்திச்சு செயற்படவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜிக்கா ,

இப்படித்தான் ஹிட்லர் னு ஒருத்தன் ஒரு இனத்தை அழிக்க ஆட்டம் போட்டான் என்று வரலாறு சொல்லுது.

ஹீட்லர் தான் அழீந்து போனான்,அவன் அழிக்க நினைத்த இனம் இன்று கொடிக்கட்டி பறக்கிறது.

அது சரி ஆனால் யூதர்கள் ஒற்றுமையாய் இருந்தார்கள் அதனால் நாடமைத்தார்கள் ஆனால் தமிழினம் அப்படி இல்லையே?

தமிழினம் ஒன்று சேரும் வரைக்கும் இதெல்லாம் நடக்காது. எப்ப எங்க தமிழினம் காட்டிக்கொடுப்புகளையும்,அற்

இணைப்பிற்கு நன்றி.

சர்வதேச அமைப்புகளுக்கு இன அழிப்பு முறையீடுகளை அனுப்பும் கடிதங்களில் ஆதாரமாக இப்படத்தை இணைக்கப்பட வேண்டும். இணைப்பதற்குரிய வேலைகளில் இறங்கியிருப்பீர்களென நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.