Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர்களின் தவறான தீர்மானங்களுக்காக மக்களுக்கான உதவியை ஏன் குறைக்க வேண்டும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களின் தவறான தீர்மானங்களுக்காக மக்களுக்கான உதவியை ஏன் குறைக்க வேண்டும்?-செய்தியாளர் மாநாட்டில் யசூசி அகாஷி

வீரகேசரி வாரவெளியீடு 5/3/2009 8:39:59 AM -

சமாதானத்தை அடைய முடியாமைக்கு தலைவர்களின் தவறான மதிப்பீடுகள், தவறான தீர்மானங்கள் என்பன காரணமாக இருக்கலாம். இதற்காக பொதுமக்களின் நல்வாழ்வுக்கான உதவித் தொகைகளை குøறப்பதன் மூலம் பொதுமக்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்? என்பதுதான் ஜப்பானிய அரசின் நிலைப்பாடு'' என இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷி கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் தனது இலங்கை விஜயம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்

இம்முறை எனது விஜயத்தில் இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச் சர், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து பயனுள்ள கலந்துரையாடல்களை நடத்தினேன். ""நேற்று (வெள்ளிக்கிழமை) நான் வவுனியா மணிக்பாம் நலன்புரி முகாமுக்கு சென்று பார்வையிட்டேன். கடந்த ஜனவரி மாதம் நான் பார்வையிட்ட நெளுக்குளம் நலன்புரிய நிலையத்துடன் ஒப்பிடும்போது –வெள்ளிக்கிழமை நான் சென்ற முகாம் நிலைமை குறைந்தளவு விரும்பத்தக்க நிலையிலேயே இருந்தது. கடந்த சிலவாரங்களில் அதிகளவான மக்கள் இடம்பெயர்ந்துவந்தமையே இதற்குக் காரணம். அரசாங்கம் முகாம்களின் தரத்தை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. மீள்குடியேற்ற அமைச்சர் கொழும்பில் இருப்பதைவிட வவுனியாவில் கூடுதலான நேரத்தை செலவிட்டுவருகிறார்.

அங்கு தங்கியுள்ள அகதிகள் சிலருடனும் நான் –கலந்துரையாடினேன். அவர்கள் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தவர்களாகத் தென்படவில்லை. இவ்வருட இறுதிக்குள் இடம்பெயர்ந்தவர்களில் 80 சதவீதமானோரை மீண்டும் பொருத்தமான இடங்களில் மீளக்குடியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது என்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். இம்முகாம்களின் நிலைமைய முன்னேற்றுவது மிக முக்கியமானது. இதற்காக ஜப்பானிய அரசின் அமைச்சரவை 40 லட்சம் டொலர்களை வழங்கத் தீர்மானித்துள்ளது. எமது முக்கிய கரிசøனக்குரிய இரண்டாவது விடயம் மோதல் தவிர்ப்பு வலயம் எனும் பகுதிக்குள் இன்னும் சிக்குண்டுள்ள மக்கள் நிலைமை பற்றியதாகும். புலிகள் தமது நடத்தையை மாற்றிக்கொண்டு அங்குள்ள மக்கள் öவளியேறுவதற்கு அனுமதிப்பார்கள் என நம்புகிறேன். அதேவேளை அரசாங்கம் வலிந்த தாக்குதல்களை நிறுத்துதல் மற்றும் அப்பகுதிமீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதில்லை என்பன போன்ற தீர்மானங்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்நாட்டின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதன் அவசியம் குறித்த ஜனாதிபதியின் மீள்உத்தரவாதத்தைப் öபற்றுக்கொண்டதில் மகிழ்ச்சிடைகிறேன். இராணுவ வழிமுøறயில் அல்ல அரசியல் தீர்வினாலேயே நிரந்தர ஜனநõயகத்தை ஏற்படுத்த முடியும் என்பதில் ஜனாதிபதி நம்பிக்கை கொண்டுள்ளார். வித்தியாசமான கலாசாரங்கள், வித்தியாசமான மதங்கள் முதலானவற்றை பாதுகாத்துக்கொண்டு அனைவரும் ஐக்கியத்துடனும் நட்புடனும் வாழக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்பு தாம் உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கூறியமை மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் கேள்விகளுக்கு அகாஷி பதிலளிக்கையில், ""குறைந்தளவு சமாதானம் நிலவினால் குறைந்தளவு நிதியும் கூடியளவு சமாதானமிருந்தால் கூடியளவு நிதியும் வழங்கப்பட வேண்டும் என்பது சிலரின் கருத்தாகவுள்ளது. ஜப்பானிய அரசின் நிலைப்பாடு அதுவல்ல. சமாதானத்தை அடைய முடியாமைக்கு தலைவர்களின் தவறான மதிப்பீடுகள் தவறான தீர்மானங்கள் என்பன காரணமாக இருக்கலாம். எனவே பொதுமக்களின் நல்வாழ்வுக்கான உதவித் தொகைகளை குøறப்பதன் மூலம் பொதுமக்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்? இதுதான் ஜப்பானிய அரசின் அணுகுமுறை.

யுத்த நிறுத்தம் மோதல் தவிர்ப்பு என்பனவற்றைவிட சமாதான உடன்படிக்கை மேலானதாகும். இந்நாட்டின் சமாதான முயற்சிகளின் விசனகரமான ஒரு விடயம் டோக்கியோ மாநாட்டை தமிழீழ விடுதப் புலிகள் பகிஷ்கரித்தமையாகும். இம்மாநாட்டில் பங்குபற்றி அவர்களின் கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் முன்வைக்குமாறு நாம் மனப்பூர்வமான கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் பகிஷ்கரிக்கத் தீர்மானித்தனர். மூன்றுநாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றைக் கொண்ட இணைத் தலைமையிடம் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம். இந்நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பொதுவான கருத்தின் அடிப்படையில் நாம் செயற்படுகிறோம் என்றார்.

நன்றி - வீரகேசரி

பொதுவான கருத்தென்பது தமிழினத்தையும் அதனது விடுதலைக்கான வேட்கையையும் என்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார்.

Edited by nochchi

இவர்கள் சமாதானம் கதைத்து கதைத்து மாதங்கள் வருடங்களை நீட்டி சென்று எமது விடுதலை அமைப்பை அழிப்பதற்கு திட்டமிட்டார்கள். முயற்சி செய்தார்கள் என்பதுதான் உண்மை.

இப்போது இனப்படுகொலைக்கு நிதி அழித்து ஊக்கப்படுத்த வந்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சீ போ நீயும் உனது பிரசங்கமும்

தமிழர் புதை குழிகளிலும் உனது பிழைப்பை நடாத்தவே அடிக்கடி நீ நோட்டம் விடுகிறாய் என்பதை நாமறிவோம்

மிக விரைவில் உன் நாட்டில் பூமியதிர்ச்சி வந்து நாசமாய் போகும் உன் நாடு

பாம்பையும் பல்லியையும் தின்னும் பாதகனே தமிழர் மாமிசம் வேண்டுமானால் சிறீலங்காவிடம் கேட்டுப்பார்

த.தே .கூ சந்திப்பில் இவன் குரவளையை நசித்து கொன்றிருக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.