Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிதம்பரத்தின் கூட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை புகழ்ந்து பேசிய இளைஞன் - காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தின் கூட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவரை புகழ்ந்து பேசிய இளைஞன் - காவல்துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டார்

திகதி: 04.05.2009 // தமிழீழம்

தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்ட வாலிபர் ஒருவர், மரக்கட்டையை தூக்கி எறிந்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக மத்திய காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சிவகங்கை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ப.சிதம்பரம் பிரசாரத்தைத் தொடங்கி விட்டார். காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

காரைக்குடி அருகே சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெரியார் நகரைச் சேர்ந்த சாயல்ராம் என்கிற ராமு (35) திடீரென எழுந்து இலங்கை பிரச்சனைக்கு முடிவு என்ன, இலங்கை தமிழர்களுக்கு பதில் சொல் என கோசம் போட்டார்.

chidambaramkaraikudi130.jpg

chidambaramkaraikudi130u.jpg

மேலும் உலக தமிழர்களின் தலைவன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க என கோசம் போட்டார். அத்தோடு நில்லாமல், சிதம்பரத்தை நோக்கி மரக் கட்டை ஒன்றையும் வீசினார். ஆனால் அது சிதம்பரம் மீது படவில்லை.

இதை எதிர்பாராத காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சாயல்ராமை வளைத்துப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் சாயல்ராம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அவரை மன்னித்து விட்டு விடும்படி ப.சிதம்பரம் போலீஸாரை கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் பிடிபட்ட நபரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

chidambaramkaraikudi130o.jpg

chidambaramkaraikudi130p.jpg

chidambaramkaraikudi130g.jpg

அண்மையில் சிதம்பரம் மீது இவ்வாறு பாதணி வீசிய ஒருவர் சிதம்பரத்தினால் விடுவிக்கப்படுமாறு கோரியபோது, காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றபோது அங்கு சென்ற சிதம்பரத்தின் மகன் கார்த்தி முன்னிலையில் அவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி பின்னர் விடுவிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், தற்போது இவரை விடுவிக்குமாறு சிதம்பரம் கூறியுள்ளபோதும், காவல் நிலையத்தில் அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கலாம் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

படங்கள் - நன்றி தமிழர் செய்தி மையம்

சங்கதி

செருப்படி வேண்டியும் திருந்தாத சிதமபரம் இது அவருக்கு சாதாரணம் இது மட்டுமில்ல இன்னும் எதிர்பார்க்கலாம் அவ்வளவு பாசமா இருக்கிறார்கள் மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

chidambaramkaraikudi130.jpg

சிதம்பரத்தின்ரை மேடையில் , தனிய சோனியாக்களுக்கு தானா இடம் . ஆண்கள் எல்லாம் கீழேயா ......

இவன் சரியான பொம்பிளை பொறுக்கி , என்று நான் கேள்விப்பட்டது சரி தான் போல கிடக்குது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்கெல்லாம் மரக்கட்டை கானாது மற்றக்கட்டைதான் சரி

இவனை தேர்தலில் வெல்ல விடாமல் பார்த்துக்கொள்வது தமிழக மக்களின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வள‌வு அடிச்சாலும் தாங்கிறாரே..! இந்த சிதம்பரம் ரொம்ப நல்லவரப்பா..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வள‌வு அடிச்சாலும் தாங்கிறாரே..! இந்த சிதம்பரம் ரொம்ப நல்லவரப்பா..! :rolleyes:

உள் நோ அடிவாங்கின , அவனுக்குத்தான் தெரியும் .

இந்த ஈனப்பிறவிக்கு மேடை ஒரு குறை? இதை பார்க்க சுவாமி பிரேமானந்தாவும் அவருடைய பக்தைகளும் தான் ஞாபகத்துக்கு வருகின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுக்கெல்லாம் அசர்ர ஆளா அவர்.... இன்னும் சிங்கன் ஆடுவார். சாராயத்திற்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடுற மக்கள் இருக்கும் வரைக்கும் இந்தியாவை மாற்ற யாராலும் முடியாதுங்கோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிதம்பரத்துக்கு நல்ல கருங்காலி உலக்கையால வாயில போடணும் அப்பத்தான் அவனின்ட வாய்கொழுப்பு அடங்கும் ,பரதேசிகள் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.