Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களால் மக்களுக்காக மலர்ந்த கிழக்கின் உதயத்தில் மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். மாதம் மும்மாரி பொழிகிறது. தேனும் பாலும் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களே! நீங்கள் தப்பி வந்துவிடுங்கள் என்று வான்வழியே வன்னி மக்களுக்கும், வருகின்ற வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும், வசனமொழியாகவும், வாய்மொழியாகவும் எடுத்துவீசப்படுகின்றது. அரச ஊடகங்களும், அதற்கொப்பாக மாற்றப்பட்ட ஊடகங்களும், மலர்ந்துவிட்டது ' மஹிந்த சிந்தனையில் ' புது வாழ்வு என எக்காளமிடுகின்றன.

இலங்கைத்தீவில் பயங்கரவாதம் அழிக்கபடும் இறுதிக்கட்டத்தில், இனி அது சொர்க்க பூமிதான் என சொல்லிக்கொடுத்ததை ஒப்பித்து நிற்கும் சர்வதேசம். கனரக ஆயுதம் பாவிக்காததென்பது போர் நிறுத்தம்தான் எனப் போக்குக் காட்டும் அயல் தேசம். தூவாணப்போரெனனும் உவமைக்கே தொகையின் வகை தெரியா மரணங்கள் எனில், மழையாகக் கொட்டும்போது மரணங்களின் எண்ணிக்கை எவ்வாறாயிருக்கும் என எண்ணாத இனமானத் தலைவர்கள். இராணுவத்தின் வெற்றிகளில் இறுமாந்திருக்கும் மக்களும், மக்களின் மா மன்னரும், மந்திரிகளும்.

வன்னிக்குள் இருந்து வரும் மக்கள் இராணுவத்தின் ஒளிப்பதிவுகளில் வாய்விட்டுக் கதறுகின்றார்கள். வந்து சேர்ந்த பின் முகாம்களுக்குள் முடங்கிப்போன மக்களோ துன்பத்திலிருந்து துன்பத்துக்கு மாற்றப்பட்டதாகவே மனதளவில் ஏற்றுக் கொள்கின்றார்கள். புலிகளின் பிரதிநிதிகளுக்கு பதவி கொடுப்போமா ? பாராளுமன்ற உறுப்பினராக்குவோமா.. ? என அதிபர் தலைமையில் மந்திராலோசனை. ஐந்து நட்சத்திர விடுதிகளின் ஆடம்பர விருந்துகளோடு, ஐ.நா சபையும், அனைத்துலகமும், அகதிகள்மறுவாழ்வு பற்றிப் பேசுகின்றது.

இவ்விதமாய் எல்லோரும் இன்புற்றிருக்கையில், இலங்கையின் கிழக்கே இன்னுமொரு பள்ளிச் சிறுமி படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் இதே கிழக்கில் இப்படியும் செய்வார்களா? எனக் கேட்கும் வண்ணமாய் வர்ஷா எனும் மற்றொரு சிறுமியும் கொலை செய்யப்பட்டிருந்தாள்.

கிழக்கின் முதல்வர் கூறுகின்றார், மலரும் உதயத்தில் இப்படியான சிறு சிறு கடத்தல் சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடந்துவிடுகின்றன. ஆனால் அதை வைத்து அமைதியைக் குளப்பி விடக் கூடாதென்று. சிறுமியின் கடத்தலின் பின்னால் சில இலட்சங்கள் அல்ல பல இலட்சங்கள் பேரம். அது அவருக்குச் சின்னப்பிரச்சனை. அடடா! என்ன அதியற்புதமான வார்த்தை வசீகரங்கள்.

ஏன்? எதற்காக? யாரால்? எட்டு வயது நிரம்பிய பள்ளிச் சிறுமி கடத்தப்பட்டாள். எதற்காகக் கொலை செய்யப்பட்டாள்..? யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. அரச பொறுப்பிலுள்ள அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் மறுக்கின்றார்கள், மறைக்கின்றார்கள். அதுதான் உண்மை.விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதலக்கு முன்னால் பத்திரிகையாளர் வித்தியாதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்கள் என கைது செய்யவும், அதைக் காட்டமாய் கேட்ட வெளிநாட்டு ஊடகவியலாளனுக்கு ஆணித்தரமாக, அவர் குற்றவாளியென அச்சுறுத்திப் பேசும் அளவுக்கு நியாயம் பேசுகின்றார் பாதுகாப்பு அமைச்சர்.

அரசாங்கத்திடம் அளவுக்கதிகமான தொழில் நுட்ப வளமிருக்கிறது, இதற்கு மேல் புலிகளால் எதுவும் செய்யமுடியாது என்கிறார் இன்னுமொரு பாதுகாப்பாகிய தமிழ் அமைச்சர். கிழக்கின் மக்களுக்குசுபீட்சம் கொடுக்கவே அரசுடன் இணைந்தோம், அதற்கு மேலும் இணைவோம் என்றார் இன்னுமொரு அமைச்சர். இவ்வளவு வசதிகள் இருந்தம், எட்டு வயதுச் சிறுமியைக் கடத்திவைத்துக்கொண்டு, கப்பம் கேட்டு மிரட்டும் தொலைபேசியை மட்டும் பொலிசாரினால் ஒட்டுக் கேட்க முடியாது போவது எப்படி?

கைது செய்யப்பட்டு ஆண்டுகள் பலவானாலும், சிறையிலிருந்து தப்பிக்க முடியாதவாறு தமிழ் இளைஞர்களை மெத்தக் கவனமாகக் கண்காணிக்கும், காவற்துறையால், சிறுமி வர்ஷாவின் கொலைக் குற்றவாளிகளை மட்டும் கச்சிதமாக் காவல்காக்க முடியாமற் போன முரண்பாடென்னவோ..? அது ஒன்றும் அவ்வளவு புரிந்து கொள்ள முடியாத இரகசியமல்ல..? கோட்டையை ஆள்பவனுக்கும், கொள்ளையடிப்பவனுக்கும், கூட்டு என்றால்நாட்டு மக்கள் எங்கு முறையிடுவது..?

வெற்றிச் சங்கொலிகளின் வீர முழக்கத்தில், அபலைத் தாய்மாரின் அழுகுரல்கள் அடங்கிப் போகின்றன. அமைச்சர்களும், அதிகாரிகளும், அயல்நாட்டுத் தந்திரிகளும், அயராது யோசிக்கின்றார்கள் மக்களை மீட்டெடுக்க. எங்கிருந்து..என்பதும, எவரிடமிருந்து என்பதும், எப்போதும் போலவே தெளிவில்லாத வினாக்களாகவே.

'மகிந்த சிந்தனை' எனும் உரத்த சிந்தனை கொண்டவரே! உங்கள் ஆட்சிக்காலத்தில் நடந்த பல கொலைகளில், ஒரு சில கொலைகளுக்காவது சாட்சி நிரூபனம் கிடைத்தது. திருமலை நடந்த மாணவர்கள் கொலை, மூதூர் தொண்டுப் பணியாளர் கொலை, திருமலை வர்ஷா கொலை, இதில் ஏதாவது ஒன்றிற்காயினும் உங்களால் தீர்ப்பு வழங்க முடிந்ததா? ... அடச் சே! உங்கள் நண்பன், ஊடகவியலாளன், லசந்த இறப்பதற்கு முன் எழுதிவிடுகின்றான். தன்னைக் கொல்லப் போவது யாரெனத் தெரிந்தும் நீங்கள் தடுக்காதிருப்பீர்களென்று. உம்மிடம் கேட்கலாமா உண்மை சொல்கவென.

- நாகன்

http://ww1.4tamilmedia.com/index.php/2009-...-05-04-22-05-25

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வுக்கட்டுரை ..........எழுதியவருக்கும் பதிந்த நட்புக்கும் நன்றி .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல ஆய்வுக்கட்டுரை ..........எழுதியவருக்கும் பதிந்த நட்புக்கும் நன்றி .......

இது ஆய்வு இலலை. எம் உறவுகளின் சோகம். சூழ்நிலையின் உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த சிந்தனையின் நிந்தனையை தான் நாம் அனுபவிக்கிறோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரு மாதங்களுக்கு முன்னர் திருமலையில் வர்ஷாவின் கொலையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களெனப்பட்டோர் சுடப்பட்டது போலவே, தற்போது இவ்வழக்கிலும் மூன்று சந்தேக நபர்கள் சுடப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுடப்படுவதற்குச் சொல்லப்பட்ட காரணமும் முன்னைய கொலையுடன் தொடர்புபட்டே இருக்கிறது. இதனால் சுடப்பட்டவர்கள் உண்மையான கொலைக்குற்றச் சந்தேக நபர்களா? அல்லது சந்தேக நபர்களாகச் சித்தரிக்கப்பட்ட அப்பாவிகளா..? இவை எதற்கும் அரசாங்கமோ, அரசாங்கத்தின் காவலர்களோ பதில் சொல்லப் போவதில்லை. ஏனெனில்...?

இரு மாதங்களுக்கு முன்னர் திருமலையில் வர்ஷாவின் கொலையுடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களெனப்பட்டோர் சுடப்பட்டது போலவே, தற்போது இவ்வழக்கிலும் மூன்று சந்தேக நபர்கள் சுடப்பட்டுள்ளார்கள். இவர்கள் சுடப்படுவதற்குச் சொல்லப்பட்ட காரணமும் முன்னைய கொலையுடன் தொடர்புபட்டே இருக்கிறது. இதனால் சுடப்பட்டவர்கள் உண்மையான கொலைக்குற்றச் சந்தேக நபர்களா? அல்லது சந்தேக நபர்களாகச் சித்தரிக்கப்பட்ட அப்பாவிகளா..? இவை எதற்கும் அரசாங்கமோ, அரசாங்கத்தின் காவலர்களோ பதில் சொல்லப் போவதில்லை. ஏனெனில்...?

இக் கொலையின் உண்மையான சூத்திரதாரியும் கொலையாளியுமான ரத்தீஸ்குமாரினை காப்பாற்றுவதற்காக கொல்லப் பட்ட சில அடிவருடிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.