Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் பேரழிவு ஒன்றைத் தவிர்க்க முடியாது": இலங்கை விவகாரத்தில் ஒபாமா முதற் தடவையாக கடும் எச்சரிக்கை

Featured Replies

Edited by தேசம்

வெள்ளை மாளிகையும் அறிக்கையேதோ விட்டிருக்கு

@ http://www.whitehouse.gov/the_press_office...ee-Photographs/

Garbage

மனிதாபிமானப் பிரச்சினை ஒன்று உருவாகுவதைத் தவிர்க்குமாறும் போர்ப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தேவையான உதவிகள் சென்றடைவதற்கு வழிவகுக்குமாறும் அவசர கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமா, இந்த மனிதாபிமானப் பிரச்சினை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இது ஒரு பேரழிவாக மாற்றமடையும் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும் வெள்ளை மாளிகையில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரச தலைவர் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்களுக்கான பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்கா படையினர் தமது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, மருத்துவமனைகள், மக்கள் குடியிருப்புப் பகுதிகள் என்பன தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் ஒரு நிலையிலேயே அமெரிக்க அரச தலைவர் இந்த அவசர கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் ஒரு மனிதாபிமானப் பிரச்சினை உருவாகியிருக்கின்றது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். போர்ப் பகுதியில் இருந்து அண்மைக்காலத்தில் கிடைத்த செய்திகள் மிகவும் கவலையளிப்பதாக இருக்கின்றது.

இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்தவிதமான வசதிகளும் இல்லாமல், உணவு, குடிநீர், மருந்து மற்றும் வதிவிட வசதிகள் எதுவும் இல்லாமல் அகப்பட்டுள்ளார்கள். இது பாரிய அவல நிலையைத் தோற்றுவித்திருப்பதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் உயிரழிக்கும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் உடனடியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த மனிதாபிமானப் பிரச்சினை ஒரு பேரழிவாக மாற்றமடைந்துவிடும். இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அரசியல் விவகாரங்களை ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு, போரில் அகப்பட்டுள்ள அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிர்களையிட்டுத்தான் நாம் முதலில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டிய தருணம் இப்போது வந்திருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இந்நிலையில் விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே வருவதற்கு அனுமதிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். பொதுமக்களை அவர்கள் பலவந்தமாககப் படைக்குத் திரட்டிக்கொள்வதும், பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இவ்வாறான செயல்கள், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் ஒதுக்கப்படுவதற்கே வழிசெய்யும்.

இந்த மனிதாபிமானப் பிரச்சினையை தவிர்ப்பதற்காக சிறிலங்கா அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

முதலாவதாக - ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களுக்கு காரணமாகவுள்ள எழுந்தமானமான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இதில் பல மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. அதேவேளையில் சிக்கலுக்கு உரிய பிரதேசத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தமது உறுதிமொழியை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக - போர் இடம்பெறும் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானக் குழு ஒன்று செல்வதற்கும் அங்குள்ள மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதியை வழங்க வேண்டும்.

மூன்றாவதாக - இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் மக்களையும் பார்வையிடுவதற்கும் அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்குவதற்கும் ஐ.நா.வையும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.

இந்த வேளையில் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு அங்குள்ள மக்களுக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகவிருக்கின்றது. இதில் தாமதம் கூடாது என நான் நினைக்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம்.

இதற்கு மேலாக சிறிலங்கா அரசாங்கமானது அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் கெளரவத்தைப் பாதுகாக்கக்கூடியவகையிலான இறுதித் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் மரணங்கள் இடம்பெறுவது அந்த நாட்டு மக்கள் விரும்பும் சமாதானத்தை அடைவதற்குத் தடையாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றார் அவர்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைப் பெரிய லொள்ளு எச்சரிக்கை இது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இடம்பெற்று வரும் பாரிய மனிதப் பேரவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் ‐ பரக் ஒபாமா :

இலங்கையின் வடபகுதியில் இடம்பெற்று வரும் பாரிய மனிதப் பேரவலம் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்த காலமாக நீடித்து வரும் யுத்தம் காரணமாக அப்பாவி பொதுமக்கள் பெரும் இழப்புக்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கப் படையினர் பொதுமக்கள் இலக்குகள் மீது நடத்தி வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கப் படையினர் வைத்தியசாலைகள் உள்ளிட்ட மக்கள் செறிவாக வாழும் நிலைகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், அப்பாவி பொதுமக்களை இடம் நகர விடாது அவர்களை விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல் வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் சுதந்திரமாக இடம் நகர விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு இழப்புக்கள் ஏற்படக் கூடிய சகலவிதமான யுத்த முனைப்புக்களையும் இரு தரப்பினரும் கைவிட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல் நடைபெற்று வரும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி பொதுமக்கள் உணவு, குடிநீர், மருந்துப் பொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனிதாபிமான நிலவரம் குறித்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது பரக் ஒபாமா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வார இறுதியில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தயார் நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் காரணிகளை புறந்தள்ளி இலங்கையில் இடம்பெற்று வரும் மனிதப் பேரவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்தின் முதல் கட்ட நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகள் மனித கேடயமாக பயன்படுத்தி வரும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டுமென ஒபாமா கோரியுள்ளார்.

மேலும், கனரக ஆயுதங்களைக் கொண்டு பொதுமக்கள் நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அரசாங்கம் இடைநிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிக எண்ணிக்கையிலான சிவிலியன் இழப்புக்கள் மற்றும் வசதியற்ற அகதி முகாம்கள் இனப்பிரச்சினையை மேலும் மோசமடையச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

http://www.globaltamilnews.net/tamil_news....=9538&cat=1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்தைப் பெரிய லொள்ளு எச்சரிக்கை இது..! :lol:

பிறகு வியட்நாமில நடந்ததுதான் நடக்கும். இதை நான் சொல்லலை... :(

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஆனாலும் டங்குவாருக்கு ரொம்பத்தான் லொள்ளு!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.