Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arikkai.jpg

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் சிங்களவனின் செய்திகளை தான் படிப்பம்.. அதைத்தான் நம்புவம். அதை இங்கு வந்து வாந்தியும் எடுப்பம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் தொடர்பான செய்திகளை நம்ப வேண்டாம்: வைகோ

பிரபாகரன் தொடர்பாக வெளிவரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட வைகோ தோல்வியடைந்தார். இவரது தோல்வியால் மனமுடைந்த அக்கட்சியின் தொண்டர் அய்யனார் தீக்குளித்தார். சிகிச்சைக்காக அவர் மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அய்யனாரை அப்போலோ மருத்துவனையில் பார்த்து அவரிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ

ஓட்டுபதிவு அன்று ஓட்டுசாவடிகளில் நான் சென்று பார்த்த போது மக்கள் என்னை பார்க்க தயங்கினர். அப்போதே அவர்கள் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டனர் என்று யூகித்தேன். தேர்தல் தோல்வியால் என் மனம் வருத்தம் அடையவில்லை, முன்பைவிட இனி கட்சி வேலையில் அதிகம் ஈடுபடுவேன்.

விருதுநகர் தொகுதியில் பதிவான ஓட்டுக்களை விட கூடுதலாக 24,000 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது பிரபாகரன் குறித்து வெளிவரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்திய அரசும், இலங்கை அரசும் சேர்ந்து இலங்கையில் போரை நிறுத்த முயற்சிக்கவில்லை, இதனால் ஏராளமான பேர் கொல்லப்பட்டனர், மீதமுள்ள 60,000 பேரயும் கொல்ல முயற்சிக்கின்றனர். அவர்களை காப்பாற்ற அமெரிக்கா போன்ற நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8595

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது தலைவரையும் நமது போராளிகள பற்றயும் அறிந்த யாரும் இந்த வதந்திகளை நம்பமட்டரகள்.

நம்பி அதையும் ரெண்டு மடங்காக கைகள் கால்கள் வைத்து கதை பரபுவோரை நாம் எதுவும் செய்ய முடியாது. எம் இனத்தின் சாபகேடு அதுதான்.

இது நான் கண்ட கனவு

முரளிதரன் மஹிந்த ராஜபக்சவே சுட்டு கொல்வது போல, கனவு நனவாகுமா?

ஒரு கதை

யானை ஒன்று ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்கும்போது அதன் ஒரு கால் சற்று சறுக்கிவிட்டது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு தவளை நினைத்தது "யானை விழுந்துவிடப்போகின்றது, இப்பொழுது நானும் ஒரு உதை கொடுத்தால் நான் உதைத்ததால்தான் யானை விழுந்தது என்று உலகம் நம்பும்" என்று.

இதுபோலத்தான் இந்த கிணற்றுத் தவளைகளும்.......... சும்மா சும்மா வதந்திகளைப் பரப்பியபடி தங்களது ஆசைகளைத் தணிக்கின்றார்கள்.

இது மிகவும் முக்கியமான காலம். இந்தக் கொடூரமான சம்பவங்கள் நிகழும் காலத்தில் வாழ்வதையிட்டு நாங்கள் அனைவரும் துயர் அடைகின்றோம். ஆனால் நாங்கள் எமது கடமைகளை மிகச் சரியாகச் செய்தால் இந்தக் காலத்தில் வாழ்ந்ததையிட்டு நாம் பெருமைப்படமுடியும்.

இவ்வாறான ஒரு அவல நிலமை ஏற்படும் என்பது நாங்கள் எதிர்பாரமல் இருந்திருக்கலாம். ஆனால் எமது தலைவர் இதனை எல்லாம் பல காலம் முன்பாகவே எதிர்பார்த்து அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கக்கூடிய வல்லமை பெற்றவர் என்பது எம் எல்லோருக்கும் தெரிந்ததே.

நம்பிக்கையுடன் எமது கடமைகளைச் செய்வோம்! வெல்வோம்!!

தாங்கள் நம்புவது மட்டுமல்லாது மற்றவர்களையும் கலவரப்படுத்தி பார்ப்பதில் இன்பம் பலருக்கு.

அங்க அப்படி செய்தி வந்திருக்கு, இங்க இப்படி செய்தி போட்டிருக்கு.. பயமா இருக்கு, அழுகை வருது,

நாளைக்கு பயங்கரமான வேதனை தரும் செய்திகள் வரப்போகுது, என்று மற்றவர்களை குழப்பத்தில்

ஆழ்த்தும் சிலர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மருள வைக்கின்றன.

உண்மையில் பதட்டம் பயத்தினால் இவ்வாறு கூறித்திரிகிறார்களா அல்லது மனதுக்குள் விசமத்துடன்

வேண்டுமென்றே இப்படி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது...

Edited by வசி_சுதா

எவ்வளவு சொன்னாலும் உறைக்காது சில உணர்வற்ற பிறவிகளுக்கு..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நான் கண்ட கனவு

முரளிதரன் மஹிந்த ராஜபக்சவே சுட்டு கொல்வது போல, கனவு நனவாகுமா?

சிலநேரம் எதிர்மாறாய் நடக்கும்...

சிலநேரம் எதிர்மாறாய் நடக்கும்...

கிழக்கின் விடிவெள்ளி அப்படி எல்லாம் செய்யாது. :rolleyes:

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15

http://periyaryouth.blogspot.com/2009/05/15.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறிக்கை அறிக்கை அறிக்கை, அல்லது போராட்டத்துக்கு அழைப்பு.

எத்தனை முறைதான் நாங்கள் தமிழகத்தில் காண்போம். இதனால் என்ன பயன் எங்களுக்கு ?

இதனால் தமிழகத்தில் என்ன நடந்தது. முத்துக்குமரனின் தியாகத்தையே தமிழக மக்கள் மறந்துவிட்டார்களே.

தமிழ்நாட்டிலுள்ள இனத்துரோகிகளிடம் இருந்து முதலில் தமிழர்களை காப்பாற்ற போராடுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.