Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா.நடேசன் மரணம்:கதறி அழுத வைகோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌‌க்க‌ம் சா‌ர்‌பி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று மாலை 4 ம‌ணி‌‌க்கு ம‌க்க‌ள் எழு‌ச்‌சி‌ப் பேர‌ணி நடைபெற்றது.

சென்னையில் நடந்த பேரணிக்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். வைகோ, ராமதாஸ், தா.பாண்டியன், ஜி.கே.மணி, இயக்குநர் சீமான்,இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் முதலானோர் கலந்துகொண்டனர்.

அழுது அழுது வீங்கிப்போன முகத்துடனேயே காணப்பட்டார் வைகோ. சோகமாகவே இருந்த வைகோ எழுச்சிப்பேரணியின் முடிவில் பேசும்போது, ‘’பா.நடேசனையும், அவரது மனைவியையும் கொன்றுவிட்டார்களே’’ என்று கதறி அழுதார்.

ராஜபக்சேவை ஆத்தரத்துடன் திட்டித்தீர்த்தார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8786

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

வை. கோ. அண்ணா

மேடைகளில் ஆவேசமாக

பேசுவதும்...

அழுவதும்...

திட்டுவதும்....

கையை பிசைவதும்....

எமக்கு எதையும் செய்துவிடவில்லை

ஒன்றில் ஏதாவது செய்யுங்கள்

அல்லது

இவற்றையும் நிறுத்திவிடுங்கள்

நம்பி நம்பித்தான் ஈழத்தமிழன் இன்று நட்டாற்றில்............????????

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோ , ஈழத்தமிழருக்காக எத்தனையோ தியாகங்களை செய்துள்ளார் .

அதனை இங்கு விமர்சிக்க முடியாது . தயவு செய்து எமக்காக குரல் கொடுப்பவர்களை கொச்சைப் படுத்த வேண்டாம் உறவுகளே .

இருக்கும் நண்பர்களையும் எதிரியாக்க வேண்டாம் . எதிரிகளை நண்பராக்க முயற்சி செய்வோம் .

  • கருத்துக்கள உறவுகள்

வை. கோ அவர்களது தியாகங்களை நான் கொச்சைப்படுத்தவில்லை

அதேநேரம்

எம்மோடு சேர்ந்து அழுவதற்கு ஆட்கள் தேடவில்லை நாம்

ஏன் நாங்களே அழவில்லை

பிடித்து ஏற ஒரு கை தான் கேட்கிறோம்

அதை இவர்களால் செய்யமுடியும்

ஏன் செய்யவில்லை...........???

வைகோ இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீகள்? அவரது சக்திக்கு உட்பட்டு அனைத்தையும் அவர் செய்கிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2410_1.jpg

2407_1.jpg

2402_1.jpg

2393_1.jpg

2404_1.jpg

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

வை. கோ அவர்களது தியாகங்களை நான் கொச்சைப்படுத்தவில்லை

அதேநேரம்

எம்மோடு சேர்ந்து அழுவதற்கு ஆட்கள் தேடவில்லை நாம்

ஏன் நாங்களே அழவில்லை

பிடித்து ஏற ஒரு கை தான் கேட்கிறோம்

அதை இவர்களால் செய்யமுடியும்

ஏன் செய்யவில்லை...........???

தமிழ் நாட்டு அரசியலை பிடித்து தான் ......,

நாங்கள் முன்னேற நினைத்தோமானால் ........

கனவில் தான் அது நடக்கும்.

வருந்தியும் ....... ஈழத்தவரே , ஈழத்தின் பிள்ளையை பெற வேண்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதை இவர்களால் செய்யமுடியும்

ஏன் செய்யவில்லை...........???

அவரால் தான் நின்ற தொகுதியில் கூட ஜெயிக்கமுடியவில்லை. பிறகு எதை வைத்து முடியும் என்கிறீர்கள். அவரும் எம்மைப் போலவே கையாலாகாதவர் தான்.

தமிழகத்தில் ஒருவரிடம் அந்த ஆற்றல் இருக்கிறது. ஆனால் அவரோ... ஒரு மந்திரிப் பதவிக்கு கொடுக்கும் மரியாதயை லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களுக்கு கொடுக்கமாட்டேன் என்கிறாரே..

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஐயா இங்க நடக்குது??

மற்றவர் எமக்கு என்ன செய்தார்கள் என்று ஆராச்சி செய்வதில் மட்டுமில்ல அவர்களை விமர்சனம் செய்வதிலும் எம்மை விஞ்ச ஆட்கள் கிடையாது !!!

வெளியில கனக்க விசயம் எமக்காக நடக்குது அவற்றில் போய் பங்குபற்றி விடுதலை போரை வீச்சாக்குங்கள்இ தயவு செய்து !!!!

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ எங்களை விட அதிகளவு உதவி செய்து இருக்கிறார்.

இந்த துயரமான நேரத்தில் உங்களுக்கு மறுமொழி சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. உங்களைப் போன்றோர் தமிழீழ போராட்டத்தில் எவ்வளவு பங்காற்றியுள்ளீர்கள்? ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கூறிய செய்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்தீர்கள்? அதற்கு முன் எவ்வளவு தூசானமாக பேசினீர்கள்? இனிமேல் எப்படி பேசுவீர்கள்? ஏதாவது எழுதி விஷத்தை விதைக்காதீர்கள் - நன்றி கெட்டவர்களாகிவிடுவீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்சி உண்டு மறந்து விடாதீர்கள். நடேசன் அண்ணா மே 13 அன்று அவரிடம் பேசியுள்ளார் வைகோ வை விமரிசிக்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இருக்கும் என்று நம்பும் நீங்கள் ஏன் களத்தை விட்டு புலத்தில் உள்ளீர்கள்?

Edited by Sniper

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த துயரமான நேரத்தில் உங்களுக்கு மறுமொழி சொல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. உங்களைப் போன்றோர் தமிழீழ போராட்டத்தில் எவ்வளவு பங்காற்றியுள்ளீர்கள்? ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் கூறிய செய்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுத்தீர்கள்? அதற்கு முன் எவ்வளவு தூசானமாக பேசினீர்கள்? இனிமேல் எப்படி பேசுவீர்கள்? ஏதாவது எழுதி விஷத்தை விதைக்காதீர்கள் - நன்றி கெட்டவர்களாகிவிடுவீர்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்சி உண்டு மறந்து விடாதீர்கள். நடேசன் அண்ணா மே 13 அன்று அவரிடம் பேசியுள்ளார் வைகோ வை விமரிசிக்கும் அளவுக்கு உங்களுக்கு தகுதி இருக்கும் என்று நம்பும் நீங்கள் ஏன் களத்தை விட்டு புலத்தில் உள்ளீர்கள்?

சரிதான்.நமக்கு தேவை நண்பர்கள்,இருக்கும் நண்பர்களை இழக்க செய்துவிடும் விமர்சனங்களை தவிர்ப்போம்.வை கோ வின் பங்களிப்பு பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டாம்.தன் சக்திக்கு மீறி தன் கடமைகளை செய்யும் தமிழ்பற்றாளர் அவர்.

அவரின் தேர்தல் தோல்வி நகைப்பிற்குரியது அல்ல;தமிழகம் வெட்கி தலைகுனிய வேண்டிய வெட்ககேடு அது.

Edited by நம் தம்பி

மாற்றான்தாய் பிள்ளையான வைகோ அவர்கள் செய்த அளவிற்கு எந்தப் புலம்பெயர் தமிழனும் செய்யவில்லை. அவரின் தேர்தல் தோல்வி திட்டமிட்டுச் செய்யப்பட்ட சதி. அதை யாராலுமே வென்றிருக்க முடியாது. மற்றவர்களைப் பற்றிக் கதைப்பதற்கு முன் நாம் என்ன செய்தோம் என்று சிந்தியுங்கள். அதோடு, நடேசன் அண்ணா மட்டுமின்றி, பல தளபதிகள் அவரோடு நட்புப் பாராட்டி வந்திருந்தார்கள். எம்மைப்போல நடசேன் அண்ணாவை தூர இருந்து பார்த்தவரல்ல அவர்.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வை.கோ...ஈழத்தமிழர் மனத்தில் எப்போதும் நிரந்தர இடம் உண்டு அவருக்கு.

உணர்வுகளைக்கொச்சைப்படுத்தா

மக்களினதும் போராளிகளினதும் அண்மைய உயிரிழப்புக்கள் மனதில் பெருந்துயரை ஏற்படுத்தி இருந்தது. அதன் உச்சமாக நடேசன் அண்ணா, புலித்தேவன் அவர்களுடைய சாவுகள் உள்ளத்தை சல்லடைபோட்டுவிட்டது.

தாயகத்தில் எல்லோருமே எமது உறவுகளாக இருந்தாலும் அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதனால் நடேசன் அண்ணா, புலித்தேவன் ஆகியோர் எங்கள் குடும்பத்துடன் மானசீகமாக மிகவும் அன்னியோன்யமாகி இருந்தார்கள். இருவரினதும் இழப்பு சொல்லொணாத் துயரை ஏற்படுத்தி இருக்கின்றது.

வீரவணக்கங்கள்! இதய அஞ்சலிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.