Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில் புலிகள்... மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்!

Featured Replies

நம்பிக்கையில் புலிகள்...

மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்!

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ''அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதி களும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!'' என உறுதி யாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்... இருபதா யிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்... பிரபாகரனின் சம காலத் தளபதிகள்... என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள் -

''முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி

வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப் பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், 'நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பாரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப் பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!' என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப்பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத பாரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார். மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங் களை வகுத்துக்கொடுத்தார். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார். தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், 'நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல் லியிருக்கிறார்கள்.

ஆனால், 'மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்கு தல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள். அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட... அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!'' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள்.

''மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன். அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.

தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்

நல்ல கற்பனை!!!!

அய்யா,

இப்போது நாங்கள் எமது தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராட்சி செய்யும் நேரமல்ல, தலைவர் இருந்தால் வரவேண்டிய நேரத்தில் வருவார் இல்லாவிட்டாலும் ஏதோஒரு உருவில் தமிழர்களின் விடுதலை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும். ஆனால் எல்லோரும் ஆராட்சியிலும் ஆளையாள் திட்டித் தீர்ப்பதிலும் ஆளாளுக்கு துரோகி பட்டம் கொடுப்பதிலும்இருககும் நேரம் எதிரியானவன் அங்கு எஞ்சி தடுப்புமுகாம்களில் இருப்பவர்களையெல்லாம் ஒரு கணக்கு பார்த்துவிடுவான். முதலில் சிறிலங்கா அரசின் கையில் அகப்பட்டு இருக்கும் மக்களை காப்பதற்கும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்தி செய்து சொந்த இடங்களுக்கு குடியமர்துவதற்குமான நடவடிகடகை எடுப்பதற்கு ஏதாவது செய்யுங்கள். அந்த மக்களுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையூட்டுங்கள் அவர்களுக்கு பக்கபலமாக ஏதாவது செய்யுங்கள். அதுதான் தமிழர் போராட்டத்தை அடுத்து கட்டத்துக்கு நகர்த்துவதற்கு உதவியாக இருக்கும்.

இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் புலிகளை ரொம்ப புடிக்கும் போல இருக்கு..

உடமாட்டேன் என்கிறார்களே...

எதிரி திட்டமிட்டு உங்களை குளப்புறன்... நீங்களும் தெரிந்து கொண்டே அழிவை நோக்கி போகின்றீர்கள்.

தலைவர் இருப்பதாக நீங்கள் கருதினால் அதை அப்படியே வைத்திருங்கள்

அவர் தற்போது இல்லை என்றே வைத்துக்கொள்வோம், அவர் இப்போது இருக்கின்றார் என்று

அடம்பிடிப்பதில் என்ன இருக்கிறது? இப்பிடியான ஒரு நேரத்தில் அவர் வந்திருக்க மாட்டாரா?

ஆகவே கண்ணீரைத்துடைத்து விட்டு மக்களின் துயரத்தை போக்கவாவது ஒன்றுபடுவோம்.

அனாதரவாய் இறந்த மக்களுக்கு நீதியையாவது பெற்றுக்கொடுப்போம். இல்லாட்டில் முயற்சியாவது செய்வோம்.

தலைவர் இருக்கிறார் இருக்கிறார் என்று சொல்லி இருக்கிறவரையும் காட்டிக்கொடுக்காமல் இருந்தால் அதுவே நல்லது.

இந்த யாழ்க்களமும் முதன் முதலில் பத்மநாதன் சொன்ன அவலச்செய்தியை தூக்கி இருந்தது.

அப்படி தூக்கியதன் காரணம் என்ன? வதந்தியை பரப்பவேண்டாமென்றா?

அது வதந்தியென்று தெளிவாக தெரிந்திருந்தால் ஆதாரத்துடன் உண்மையை பிரசுரிப்பதுதானே? அப்படி ஆதாரம் இல்லாமல்

செய்தியை நீக்குவது வதந்தியைப்பரப்பாதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் புலிகளை ரொம்ப புடிக்கும் போல இருக்கு..

உடமாட்டேன் என்கிறார்களே...

புலிகளை பிடித்ததால் பிரயோகிக்கும் வார்த்தைகள் அல்ல இவை:

".....கொல்லப்பட்டதாகத்......

.....பின்னடைவு உறுதியாகிவிட்டது......

.....முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்....

.....போராளிகள் இறந்துபோனார்கள்.....

....நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள்.....

....புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை :rolleyes: .........

....மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.....

...இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள்......"

வியாபரத்திற்காக வீரமரணங்களையும், விடுதலை போராட்டங்களையும் கொட்சை படுத்தும் சில்லறை பத்திரிகை தர்மம்! என்ன ஈனப் பிழைப்பு!

ஈழத் தமிழர்கள் என்றாலும் இந்த நாறல் பத்திரிகைகளை காசு குடுத்து வாங்காது விடுவது நல்லது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஒன்று மட்டும் உண்மை தமிழக வார சஞ்சிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கப் போகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனால் ஒன்று மட்டும் உண்மை தமிழக வார சஞ்சிகைகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கப் போகிறது.

:D:D:rolleyes::):)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.