Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

Featured Replies

ஈரடி பின்னால் ஓரடி முன்னால்?

- சண். தவராஜா -

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு திருப்புமுனையைச் சந்தித்துள்ள இன்றைய காலகட்டத்தில் அடுத்தது என்ன எனத் தெரியாத சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள அதேவேளை புலம்பெயர் தமிழர் மத்தியில் இக்குழப்பம் வெகுவாக நிலவுதுடன், மோதல் உருவாகக்கூடிய அபாயமும் தென்படுகின்றது.

போராட்டம் ஒரு துயர முடிவைச் சந்தித்துள்ளது என்பதற்கு அப்பால், தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மரணம் தொடர்பாக வெளிவரும் முரணான சேதிகளே மக்களின் துயரத்துக்கும், குழப்பத்துக்கும் அதிகளவில் காரணங்களாக உள்ளன.

இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ் மக்களின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாதத்திற்கு கிட்டிய எதிர்காலத்தில் முடிவு இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

அதேவேளை, முடிவு காண முடியாத இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களில் நாம் அவசரமாகவும், அவசியமாகவும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இன்னமும் கூட அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதுவும் உண்மை. ஆனால், இதற்காக நாம் எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளை மறந்துவிடலாமா? எதிர்பாராத இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நாம் ஸ்தம்பிதம் அடைந்துவிட முடியாது. இழப்புக்களைத் தாங்கிக்கொண்டு நாம் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.

ஐ.நா. அகதிகள் உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி தற்போது சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் போதுமான உணவின்றி, சுத்தமான குடிநீரின்றி, சுகாதார வசதிகள் இன்றி, நடமாடும் சுதந்திரம் இன்றி வாடுகின்றார்கள். இது தவிர பிள்ளைகள் தமது பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றார்கள்.

இடைத்தங்கல் முகாம்கள் தவிர, போரின் இறுதிக் கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் கிளிநொச்சி பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் அவர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ள தகவல்களின்படி இன்னமும் சுமார் 9,000 வரையான போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத

தாயகத்தில் ஏற்பட்ட கள நிலவரம், புலிகளை அழித்துவிட்டோம் என்ற சிங்கள அரசின் அறிவுப்பு, எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஒரு புதிய நிலவரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எமது போராட்ட வரலாற்றில் போராளிகள் தளபதிகளின் உறுப்டுத்தப்பட்ட வீரமரணங்கள் அறிவிக்கப்படாமல் இருக்கின்றன. இப்போ உறிதிப்படுத்த முடியாத அறிவித்தலை வெளியிட்டு வீரவணக்க நிகழ்வுகளை நிகழ்த்தி , அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு சிலர் முயற்சி செய்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது.

கடந்த காலலத்தில் தலைமையால் நிறுத்திவைக்க்கப்பட்டு இருந்த முன்னைநாள் நிதி நிர்வாக செயற்பாட்டாளர் பலர் அஞ்சலி செலுத்துவதற்கு முயற்சிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

களத்தில் தளபதிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள், இப்போது புலத்தில் அமைப்பின் கட்டுமானம், மக்களின் ஒற்றுமை, எழுச்சி என எல்லாவற்றையும் அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இன்றைய நிமிடத்தில் தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதை ஆராய்வதிலேயே தமிழ் மக்களின் கவனம் வெகுவாகக் குவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவாதத்திற்கு கிட்டிய எதிர்காலத்தில் முடிவு இருக்கப் போவதில்லை என்பதே யதார்த்தம்.

அதேவேளை, முடிவு காண முடியாத இந்த விடயம் தொடர்பில் சர்ச்சைப்படுவதை விட்டுவிட்டு வேறு விடயங்களில் நாம் அவசரமாகவும், அவசியமாகவும் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.

இன்றைய நிலையில் தமிழ் மக்கள் தமது துயரத்தின் உச்சத்தைச் சந்தித்துள்ளார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இன்னமும் கூட அதிலிருந்து அவர்கள் மீளவில்லை என்பதுவும் உண்மை. ஆனால், இதற்காக நாம் எமது அடுத்த கட்டச் செயற்பாடுகளை மறந்துவிடலாமா? எதிர்பாராத இழப்புக்கள் தவிர்க்க முடியாதவை. அதற்காக நாம் ஸ்தம்பிதம் அடைந்துவிட முடியாது. இழப்புக்களைத் தாங்கிக்கொண்டு நாம் முன்னோக்கி நடைபோட வேண்டியது அவசியம்.

தற்போதைய நிலையில் மற்றுமொரு ஆயுதப் போராட்டம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாத நிலையே உள்ளது. இத்தகைய தீர்மானம் தற்கொலைக்கு ஒப்பானதுடன், ஏற்கனவே பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு மேலும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்கே வழி கோலும்.

இன்றைய நிலையில் அந்த மக்களிடம் உயிர்களைத் தவிர இழப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. உரிமைப் போராட்டத்துக்கு தன்னலமற்ற ஆதரவை இதுவரை நல்கிய அந்த மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவதில் தவறியிருந்தாலும், ஆகக்குறைந்தது அவர்களிடம் எஞ்சியிருக்கும் உயிர்களைக் காப்பதற்காவாவது நாம் மானசீகமாக முயல வேண்டும்.

எனவே, எம்முன்னே இருக்கின்ற ஒரே தெரிவு ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக எமது இறுதி இலக்கை நோக்கி நகர்த்திச் செல்வதே.

இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாகத் தோற்றடிக்கப்பட்டாலும் கூட அவர்கள் முன்னெடுத்த போராட்டம் பல சாதனைகளைப் படைத்திருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று உலகத் தமிழினம் ஒன்றுபட்டிருக்கின்றதென்றால

Edited by vettri-vel

களத்தில் தளபதிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள், இப்போது புலத்தில் அமைப்பின் கட்டுமானம், மக்களின் ஒற்றுமை, எழுச்சி என எல்லாவற்றையும் அழிப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இருக்கிற கட்டமைப்புக்கள் போதுமானது, அதுகள் பலமானவை கூட

ஏன் என்ன போனாலும் எங்களுக்கு கூட்டமைப்பு இருக்கு, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுப்பம். அவர்கள் எல்லா த்தையும் பார்த்துக்கொள்வார்கள்.

புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த தமிழத் தேசிய நிறுவனங்கள் ஒரு அரசை இயக்குவதற்கான நிதி நிர்வாக செயற்பாட்டில் பெரும் பகுதி மனித வலுவை செலவு செய்தது.

அந்த நிறுவனங்களின் செயற்பாடு நோக்கம் சர்வதேச அரசியல் சார்ந்து மாற்றப்படும்.

அடுத்து இக்காலப்பகுதியில் இளையவரின் பங்களிப்பு வீச்சுக் கொண்டதாக இருக்கின்றது. பளைய ஆட்கள் கொஞ்சம் பொறுங்கோ ஏன் அறிக்கை விட்டு அசிங்கப்படுத்தாதீர்கள். குளப்பம் உருவாக்கிறியல்.

மேலே நான் குறிப்பிட்டது நீங்கள் முன்னம் சொன்ன கருத்தைத்தான்...

அதாவது புறநிலை அரசுபற்றி நீங்கள் கூரியவைதான்.. யாரும் உங்களை அசிங்கப்படுத்த வெளிக்கிடவில்லை

நீங்கள் ஏன் முன்னுக்கு பின் முரனாக சொல்லி உங்களையே அசிங்கப்படுத்துறீர்கள்?

இப்போது நீங்கள் என்னத்தை சொல்ல வருகிறீகள்?

நீங்கள் இளையோர்கள் என்று சோவதே இளையோரின் பெயருக்குப்பின்னால் ஒழிந்து கொள்ளத்தான். புறநிலை அரசே இளையோர்களின் சிந்தனை வெளிப்பாடுதான். அதை கொச்சைபடுத்துவது போல் ஒரிடத்திலும் இளையோரை இன்னொரிடத்திலும் சொல்வது முரனானது.

டெளிவாக உங்கள் நிலைப்பாட்டையும் கருத்தையும் முன்வையுங்கள்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும் உள்ளே விடமாட்டமாம்.

இன்று இலங்கைத் தீவில் தமிழர்களிற்கான குரலை வெளிப்படுத்துவதற்கு இருக்கும் ஒரே ஒரு குரல் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான். அதனையும் புறக்கணிக்கப் போகிறீர்களா?

மோட்டுச் சிங்களவன் மோட்டுச் சிங்களவன் எண்டு சொல்லி இன்று ஏதுவுமே இல்லாத அநாதைகளாக எமக்காக யாரும் குரல் கொடுக்காத இழிநிலையில் நாம் நிற்கின்றோம்.

யுதர்களிற்கு அடுத்த அறிவாளிகள் எண்டு பீற்றிக்கொண்டிருக்கும் நாம் இனியாவது அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

இதுவரை எமக்கு எதிராக செயற்பட்ட எம்மினத்தைச் சேர்ந்தவர்களைக் கூட அரவணைத்து அவர்களையும் எமது இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்க வைக்க உழைக்க வேண்டும். இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினம் இருந்த சுவடே இல்லாதநிலையை மோட்டுச் சிங்களவன் உருவாக்குவான்.

Edited by மின்னல்

இதுவரை எமக்கு எதிராக செயற்பட்ட எம்மினத்தைச் சேர்ந்தவர்களைக் கூட அரவணைத்து அவர்களையும் எமது இனத்தின் விடுதலைக்காக குரல் கொடுக்க வைக்க உழைக்க வேண்டும். இல்லையேல் இலங்கைத் தீவில் தமிழினம் இருந்த சுவடே இல்லாதநிலையை மோட்டுச் சிங்களவன் உருவாக்குவான்

உண்மை_ எம் இனத்தின் இருப்புத்தான் முக்கியம் தற்பொழுதைய காலகட்டத்தில்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.