Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சென்னை இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி

Featured Replies

சென்னை இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சி: லஷ்கர் பயங்கரவாதி தகவல்

புதுடெல்லி, சனி, 6 ஜூன் 2009( 09:47 IST )

சென்னை இளைஞர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்று ‌பயங்கரவாத பயிற்சி அளிக்க சதித்திட்டம் தீட்டியதாக டெல்லியில் பிடிபட்ட பயங்கரவாதி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளான்.

டெல்லி குதுப் மினார் அருகே, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தளபதியான முகமது உமர் மத்னி என்பவன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டான். அவன் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதும், பல்வேறு சதித்திட்டங்களை தீட்டி இருப்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக டெல்லி காவல்துறை இணை ஆணையர் அகர்வால் கூறியதாவது:

கடந்த ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்-உத்-தவா பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சயீத்துடன், மத்னிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. தங்களது அமைப்புக்கு கணிணி நிபுணர்கள் தேவைப்பட்டதால் அவர்களை அழைத்து செல்வதற்காக மத்னி டெல்லி வந்துள்ளான்.

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த, கணிணி பட்டதாரி இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களை பாகிஸ்தான் அழைத்துச் சென்று அங்குள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டிருந்தான். இந்த இளைஞர்களை பயன்படுத்தி, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தவும் அவன் சதித் திட்டம் தீட்டியுள்ளான்.

நேபாள நாட்டின் லஸ்கர்-இ-தொய்பா தலைவராக செயல்பட்ட இவன் அங்கிருந்து ஆக்கிரமிப்பு பாகிஸ்தானுக்கு 30 பேரை பயிற்சிக்காக அனுப்பியுள்ளான். அப்படி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான கமால் அன்சாரி என்பவன், மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி நீதிமன்றத்தில் நேற்று மத்னி ஆஜர் படுத்தப்பட்டான். அவனை வரும் 19ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.இதைதொடர்ந்து, மத்னியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"...இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "

இதெல்லாம் சகஜமப்பா!!!

இப்படி தான் அடுத்தவன் காணிக்க மூக்கை நுழைச்சு கொண்டு இருக்கேக்கே உங்கட அறைக்க யாரும் புகுந்திருவான்.... பிறகு என்ன ஒரே திடுக்கிடல், அதிர்ச்சி மயம் தானே!

"தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடி உறைந்து அற்று." :D

:lol: நடக்கட்டும் நடக்கட்டும்....

Edited by Ilayapillai

உந்த இந்தியா செய்திக்காரர் எல்லாம் எப்ப பாத்தாலும் உப்பிடித்தான் “பயங்கரமான” ”அதிரடிச் செய்திகளோடயும்”, ”திடுக்கிடும்” ”திகில்” சம்பவங்களோடயும் ”மயிர்கூச்செறிந்து” கொண்டே இருப்பினம். உருப்படியா வேற ஒண்டுமே செய்ய முடியாது அவைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

துளிகூட உண்மையற்ற செய்தி...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நிறைய கதைகள் விட்டு கொண்டே இருப்பார்கள்? தங்களது பிரச்சனையை மறக்க வேறு நாட்டுக்காரர் தான் பிரச்சனைக்கு காரணம் என மக்களை மாக்கள் ஆக்கும் சன நாயகம். :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த பாவி பிடிபட்டுதோ யாருக்கு தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பாவி பிடிபட்டுதோ யாருக்கு தெரியும்..

நாங்களும் வேலை செய்யுறம்

உசாராத்தான் இருக்கிறம் என்று ஸ்ரீலங்காவுக்கு காட்டவேண்டாமே..........

இந்த குட்டி ஸ்ரீலங்கா சொல்லுது

இந்தியா உட்பட சர்வதேசத்திற்கே தாங்கள் வகுப்பெடுப்பினமாம்.....???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.