Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதாளம் சொன்ன கதைகள் - 1

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்து எள்ளி நகைத்த வேதாளம் பேசத்தொடங்கியது:

"மன்னா! எல்லோரும் அமைதியாக உறங்கும் இந்த நள்ளிரவில், தமிழ் ஈழத்தின் இந்த சுடுகாட்டில் நீ எதற்காக இவ்வளவு சிரமப்படுகிறாய் என்று தெரியவில்லை. தளர்வில்லாத முயற்சி சமயங்களில் பின்னடைவை சந்தித்தாலும் அதை செய்பவர்களின் மன உறுதியினால் வேண்டிய பலனை கொடுத்தே தீரும். அதற்கு இந்த தமிழ் ஈழ தேசத்தின் வரலாறே சாட்சி. இந்த தேசத்தின் கதையை கூறுகிறேன் கேள்.

இந்த சுடுகாட்டின் அருகில் அமைந்துள்ள நகரமானது ஒரு காலத்தில் இந்திர லோகத்தைப்போல் பொலிவுற்றிருந்து, சுடுகாடாகி, மறுபடியும் தளராத முயற்சியின் விளைவாக இன்று இழந்த பொலிவை பெற்றிருக்கிறது .

சுமார் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் போலிருந்த இந்த தமிழ் ஈழ தேசம் , அன்புள்ளம் கொண்ட அப்பாவி மக்களின் வசிப்பிடமாக இருந்தது. அப்போது இங்கே வந்து குடியேறிய காட்டுமிராண்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை வஞ்சித்து, தெற்குப்பகுதி முழுவதும் விஷத்தைபோல் பரவி இந்த நாட்டின் பூர்வகுடிகளான தமிழர்களை வடக்குப்பகுதிக்கு விரட்டினார்கள். உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வதை தவிர வேறு வேலை தெரியாத இந்த வந்தேறிகள் பன்றிகளைப்போல பல்கிப்பெருகினார்கள். ஆதிகாலம் தொட்டு இந்த தீவில் வசித்து வந்த தொன்மையான தமிழ் மக்களோ, கல்வி,கேள்வி,இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் கவனம் செலுத்தி பண்போடு வாழ்ந்து வந்தார்கள். தீவிரமான கடவுள் பற்றாளர்களாகவும் விளங்கினார்கள். சமய நெறியும், ஒழுக்கமும் சிறந்து விளங்கின.

காலங்கள் உருண்டோடின. தெற்கில் குடியேறிய வந்தேறிகள் கூட்டமும், மண்ணின் மைந்தர்களாக வடக்குப்பகுதி மக்களும் கால ஓட்டத்தில் தனிதனி அரசை நிறுவி வாழ்ந்து வரும்போது தங்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால், இனப்பகையால் இவ்விரண்டு இனத்திற்கும் அந்நியமான மக்களுக்கு அடிமைப்பட நேர்ந்தது.

பல காலங்கள் அவர்கள் ஆண்டுவிட்டு, பிறகு இந்த தேசத்தை விட்டுவிட்டுப்போனார்கள். ஆனால் போகும்போதே மாபெரும் வரலாற்று தவறை செய்துவிட்டுப்போனார்கள். தனித்தனியான இந்த இரண்டு அரசுகளையும் முன்போலவே தனித்தனியாக பிரிக்காமல், பன்றிக்கூட்டத்தைப்போல் பெருகியிருந்த வந்தேறிகளிடம் அதிகாரம் முழுவதையும் கொடுத்துவிட்டு சென்றார்கள் . அன்புள்ளமும் இரக்க சுபாவமும் கொண்ட தமிழ் மக்கள் இந்த காட்டுமிராண்டிகளைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாமல், இவர்களுடன் சேர்ந்தே வாழலாம் என்ற சகோதர மனப்பான்மையில் தனி நாட்டுக்கான கோரிக்கையையும் வைக்கவில்லை.

இந்த நாடு விடுதலை அடைந்ததும் காட்டுமிராண்டி கூட்டம் தன் சுயரூபத்தை காட்டத்தொடங்கியது. தாங்கள் பேசும் சிங்கள மொழிதான் நாட்டின் ஆட்சி மொழி என்று ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள். பின்னர் பத்து லட்சம் மக்களின் குடியுரிமையை பறித்தார்கள். பின்னர் தமிழ் மக்களின் மீது வரைமுறையில்லாத வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார்கள் .

குழந்தைகளை கொன்றார்கள். பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். ஆண்களை கொன்றார்கள். வீடுகளுக்கு தீவைத்தார்கள். சொந்த நாட்டின் மக்களையே அகதிகளாக்கினார்கள்.

மக்களின் உரிமைகளை காக்க இந்த மக்களின் சில தலைவர்கள் அஹிம்சை வழியில் சுமார் முப்பது வருடம் போராடினார்கள். காட்டுமிராண்டி அரசோ, வன்முறை கொண்டு போராட்டத்தை ஒடுக்கியது.

அஹிம்சை வழியில் போராடிய தலைவர்கள் தனி நாடு ஒன்றுதான் தீர்வு என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டார்கள்.

இதன் பின்னர் ஆயுதப்போராட்டம் தொடங்கியது. தமிழர்கள் தாங்கள் இழந்த தேசத்தில் சரிபாதியை கைப்பற்றி அங்கே தங்களுக்கென ஒரு அரசு அமைத்து சீருடனும் சிறப்புடனும் ஆட்சி செய்து வரும்போது, சமாதானம் பேசலாம் என்று மற்ற உலக நாடுகளும், காட்டுமிராண்டிகளின் அரசாங்கமும் வேண்டியதன்பேரில் தமிழர்களும் அதற்கு சம்மதித்தார்கள். பேச்ச்சு வார்த்தைகள் நீண்டன.

இந்த சமயத்தில் தன்னுடைய ஆயுத பலத்தை பெருக்கிகொண்ட காட்டுமிராண்டி கூட்டம், மீண்டும் சண்டையை தொடக்கி மூன்று ஆண்டுகள் கடுமையான யுத்தம் நடத்தி தமிழர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்து, தமிழ்தேசத்தை அடிமைப்படுத்தினார்கள்.

தமிழ்ப்போராளிகள் கிராமங்களிலும், காடுகளிலும் மறைந்து வாழ்ந்து, பின்னர் ஒன்று கூடி, சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் அதிசயத்தைப்போன்று மெதுவாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டு போராட்டத்தை ம்றுபடியும் ஆரம்பித்து விரைவில் தங்கள் தேசத்தை வென்றெடுத்து இன்றுள்ள உன்னத நிலைக்கு உயர்த்தினார்கள்.

இவ்வாறு கதையை கூறிவந்த வேதாளம்,

"மன்னா! இந்த சுதந்திர தேசத்தின் வரலாற்றில் இவர்கள் பெரும் பின்னடைவை சந்திக்க காரணம் என்ன? எப்படி அவர்கள் மறுபடியும் போராட்டத்தில் வெற்றி பெற்று இந்த உன்னத நாட்டை செதுக்கினார்கள்? இந்த கேள்விக்கு நீ சரியான பதிலை கூறாவிட்டால், உன் தலை சுக்குநூறாக வெடித்துவிடும் " என்று கூறியது.

உடனே விக்ரமாதித்யன் பின் வருமாறு கூறலானான்:

"அறுபது ஆண்டுகள் தமிழர்கள் முதலில் அஹிம்சை வழி, பிறகு ஆயுத வழி என்று போராடினார்கள். ஆயுத போராட்டம் அவர்கள் விரும்பிய பலனை கொடுத்தபோதும் அவர்கள் உலகால் அங்கீகரிக்கப்படவில்லை. அப்போது காட்டுமிராண்டி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கம் என்ற அந்தஸ்து இருந்தது. தமிழர்கள் மட்டும் அப்போதே சில விட்டுக்கொடுப்புகளை செய்திருந்தால் இந்த பின்னடைவு நேர்ந்திருக்காது. எந்த நாடுகளுடனும் செய்து கொள்ளும் சில விட்டுக்கொடுப்புகளை அவர்கள் 'விலைபோதல்' என்ற கண்ணோட்டத்தில் பார்த்தார்கள். அதையே நியாயப்படுத்தியும் பேசிவந்தார்கள். மேலும் தங்களுடன் பேரம் பேச வந்த நாடுகளால், தங்களுக்கு ஆரம்பத்தில் உதவி செய்த நாட்டுக்கு-இன விடுதலைக்காக உதவவில்லை, காட்டுமிராண்டி கூட்டத்தை தங்கள் கட்டுக்குள் வைக்கத்தான் என்றாலும் - பாதகம் வரும் என்று கருதினார்கள். அந்த பெரிய நாடு, இதை விடவும் பெரிய பிரச்சினைகளை கூட சமாளித்துக்கொள்ளும் என்ற சிந்தனை அவர்களுக்கு இல்லாமல் இருந்தது.

தமிழ் போராளிகள் பின்னடைவு காலத்தில் மறைந்து வாழ்ந்தபோது சில சமயம் அங்கிருக்கும் கிராம மக்களுடன் உணவருந்துவதும் உண்டு. கிராமங்களில் மக்கள் சாப்பிடும்போது அவர்கள் முன் அவர்கள் வீட்டு நாய்கள் வந்து நின்றுகொள்ளும் . மக்களும் அந்த நாய்களுக்கு சில கவளங்கள் உணவை வைப்பார்கள். நன்றியுடன் வாலாட்டும் வாலாட்டி விட்டு இரவு முழுவதும் அந்த மக்களின் கால்நடைகளுக்கும் இன்னபிற சொத்துகளுக்கும் காவலாய் நின்றன.

இதை பார்த்த போராளிகளும் சிந்தை தெளிந்து, ஆதாயம் எதிர்பார்த்த சில நாடுகளுக்கு சில விட்டுக்கொடுப்புகளை செய்து, தாங்கள் முன்னர் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு , தங்கள் போராட்டத்தை ஆயுத தளத்தில் வலுப்படுத்தியதை போன்று உலக அரசியல் தளத்திலும் விரிவுபடுத்தி, தக்க நாடுகளின் துணையுடன் தங்கள் இனப்போராட்டத்தை வென்றெடுத்தார்கள்."

விகரமாதித்யனின் சரியான இந்த பதிலால் அவனது மவுனம் களையவே, அவன் தோள் மீதிருந்த உடலுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது .

Edited by srinivasan chennappan

அம்புலிமாமா கதையில் ஈழப்பிரச்சனையை கலந்து சொல்லி இருக்கிறீங்கள். நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகரமாதித்யனின் சரியான இந்த பதிலால் அவனது மவுனம் களையவே, அவன் தோள் மீதிருந்த உடலுடன் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது .

ஐயா,

மிக நன்றாக எழுதி இருக்கிறீங்கள். ஈழத்து வரலாற்று நிகழ்வுகள் அறிந்திருந்த ஒருவராலேயே இப்படி எழுத முடியும்.

மிக அருமையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

வேதாளம் சொன்ன கதைகளில் இருந்து ஆரம்பித்திருக்கிறீர்கள்

மீண்டும் விக்கிரமாதித்தன் கதை

நல்லன காப்பதும் தீயன களைதலும் காலத்தின் தேவை

நல்லது சிறினிவாசன் சென்னப்பன் வேதாளம் சொல்லும் கதைகளாகத் தொடர்க உங்கள் சிந்தனைகள்.

விக்கிரமாதித்தனுக்கும் காடாறு மாதம், நாடாறு மாதம் என்னும் தலைவிதி உண்டுதானே. :)

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.