Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் ஆதரவு எனக்கு தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ரபாஸ்டன் அண்ண எனக்கு நீங்கள் கண்டுபிடிப்பது கொங்கிறீட் கல்லுபோல் இருக்கவேண்டும், ஆனால் வெடிபொருள்கண்டுபிடிக்கும் கருவிகளில் மாட்டுபட கூடாது, சற்றலைட்மூலம் இது வெடிக்கவைக்ககூடியதாக இருக்க வேண்டும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அதிகூடிய உயிர்பலிகளை எடுக்க கூடியதாக இருக்கவேண்டும். :huh:

வணக்கம் ! அன்புடன் வரவேற்கின்றோம்.

தங்களின் திறமைக்கு என் பாராட்டுக்கள்.

தமிழ் மனிதர்களில் பெரும்பாலானோர் இப்போது பலமிழந்துவிட்டார்கள். அவர்களின் நரம்புமண்டலங்களில், ஆசை, கோபம், பொறாமை, எரிச்சல், கோள்மூட்டுதல்,தள்ளிவைத்தல் ஒதுக்குதல், மற்றவனுக்கு குழிபறித்தல் என்று பல ஓட்டைகள் உருவாகியிருக்கின்றன.

அரசியல் வேற ஆத்மீகம் வேற

விஞ்ஞானம் வேற மெய்ஞானம் வேற

அரோகரா அரோகரா அணு ஆயுதம் அரோகரா

ஈழத்தமிழரை தான் சொல்லுறீயளோ? உலகத்தில் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நீங்கள் சொன்ன சகலதும் இருக்கு.,உதாரணம் ஈரான் ,ஈராக்

  • தொடங்கியவர்

அரசியல் வேற ஆத்மீகம் வேற

விஞ்ஞானம் வேற மெய்ஞானம் வேற

அரோகரா அரோகரா அணு ஆயுதம் அரோகரா

ஈழத்தமிழரை தான் சொல்லுறீயளோ? உலகத்தில் மனிதனாக பிறந்த எல்லோருக்கும் நீங்கள் சொன்ன சகலதும் இருக்கு.,உதாரணம் ஈரான் ,ஈராக்

ஆம் உண்டு இல்லையெண்டு சொல்லவில்லை. எவ்வளவு வீதம் என்பதிலேயே எல்லாமும் தீர்மானிக்கப்படுகிறது. ஒரு வரையறைக்குள் வாழ்ப்பவர்களுமுண்டு, அதையும் தாண்டி வாழ்ப்பவர்களுமுண்டு. சொத்துச்சேர்ப்பதில் பிறநாடுகளில் சிலரே உண்டு. எம்மில் பலருமுண்டு. ஆசையில் பாங்கில் கடன்வாங்கி ஆடம்பரமாக வாழ்பவர்கள் அங்கே சிலருண்டு. கடனெடுத்து மற்றவனை விட தான் மிக சிறப்பாக வாழ்வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்களில் பலருண்டு. எதிர்களை வெற்றிகொள்ளவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் அங்கே இன ஒற்றுமையுண்டு, ஆனால் எதிரிகளைமட்டுமல்ல எமக்குள்ளும் எதிரிகளை விதைப்பதில் நாம் முன்னுக்கு நிற்கிறோம். அடுத்தவன் முன்னேறினால் எரிச்சல் படும் பலருண்டு இவ்வுலகில் ஆனால் அவன் காலை இழுத்துவிட்டு அவனை முகம்குப்பற விழுத்திப்பார்த்து ஆனந்தப்படும் அந்த அற்புத ஆற்றல் எமக்கு மட்டுமே உண்டு.

இதனால் தான் ஒரு கதை காலம் காலமாக எம் முன்னோர்கள் சொல்லுவதுண்டு. தமிழர்களை தலையளவு உயரம் கொன்ட கிடங்கினுள் சிறைப்படுத்தி விட்டு, அதை அடைக்காமல் திறந்தே விடலாம். அவர்கள் தப்பிச்செல்ல மாட்டார்கள் என்று. இந்தக்கதைக்குள் என்ன என்ன சமாச்சாரங்கள் உண்டு என்றால்.

1.எப்போதும் ரகசியமாக காரியமாற்றுவான் தன் முன்னேற்றம் கருதி. அதற்கு மற்றவர்களை புத்திசாலித்தனமாக பாவிக்க வெளிக்கிடுவான்.

2. அதற்கேற்றாற்போல அவன் என்ன நினைக்கிறான் என்பதிலேயே மனதை அலையவிட்டபடி அவனை சந்தேகத்தோடு உற்றுப்பார்க் உதவி செய்ய நினைத்தாலும் சந்தேகத்துடன் அதை ஏற்றுக்கொள்வது. இவன் ஏன் நான் கேட்டவுடன் ஓமெண்டான் என்று அங்கலாய்வது. "அவன் என்னை விட்டு விட்டு தப்பிப்போனால்" அவன் கெட்டிக்காரனாகிவிடுவானே என்று அவனுக்கு போட்டியாக தப்ப எத்தனிப்பது ரகசியமாக அதை செய்ய முயல்வது

3. அளை ஆள் கண்காணித்து சிறைக்காவலர்களை தூங்க அனுமதிகொடுப்பது. சிறைக்காவலர்கள் தூங்கும் சமயங்களில் மெதுவாக ஒருவன் புத்திசாலித்தனமாக தப்பிக்க முயல, டபார் என்று அவன் காலப்பிடித்து " எனக்குச்சொல்லாமல் ஓடவா பார்க்கிறாய்" என்று நினைத்து அவன் காலகளை இழுத்துவிடுவது. ஒருமனதாக திட்டம் தீட்டும்போதே அரைமனதுடன் தனக்குள் இன்னுமொரு திட்டம் போடுவது.

ஓடநினைப்பவன் ஏன் ஓட நினைக்கிரான், அவனுக்கு உள்ள குடும்ப பிரச்சனைகள் என்ன? என்று ஆழமாக கதைத்து ஒரு பொது நோக்கத்திற்கு வந்து இருவருமாக தப்பிப்போக நினைப்பது. அப்போதும் மேலே முதலில் ஏறியவன் உதவிசெய்யாமல் தனித்து ஓடிவிட்டால் என்று ஐயம் கொண்டு, நிறைவேறும் காரியத்தினையே குழப்பி எல்லோரையும் காட்டிகொடுப்பது.

ஆகவே சொல்லுகிறேன் அரசியல் வேற என்பது சரி. தமிழ் அரசியியல் அதைவிட வேறாக இருக்கும் தமிழர்கள் பங்குகொண்டால்.

ஆன்மீகம் வேற என்பதும் சரி. தமிழர்கள் கோவில்களில் ஆன்மீக வேலைகளில் ஒருபோதும் சன்டை சச்சரவு இல்லாமல் இருப்பதையும் இவ்வுலம் பூரா பார்க்கின்றோம்.

விஞ்ஞானமும் வேற என்பதுவும் சரி. ஆகவே தான் விஞ்ஞானத்தில், கண்டுபிடிப்புகளில் என்னுமொரு ஜப்பானைப்போல அதியுச்சியில் இருக்கவேன்டிய தமிழர்கள் சிதறிப்போய் வெளிநாட்டு வெள்ளையர்களுக்கு மண்டியிட்டு சிறைப்படுத்தப்பட்டு நிற்கிறான். வெளியேற முடியாத படி கொக்கி போட்டு இழுத்துக்கட்டப்பட்டிருக்கி

  • 1 month later...
  • தொடங்கியவர்

மெய்ஞ்ஞானமென்றால் என்ன? என்பதை புரிய இன்று எம்மவர்க்கு மூளை விருத்தியில்லாமலில்லை ஆனாலும் முளை அதனைநோக்கி ந்கர்த்தப்படவேயில்லை.

ஒரு மனிதனின் மெய்ஞ்ஞானமென்பது தன்னையறிதல், பிறரையறிதல் என்பது அல்ல. ஆனால் தமிழன் என்ன செய்கிறான் இன்று என்று கேட்டால்..இரண்டாவதை மட்டுமே. மற்றவன் என்ன செய்யிறான். எங்க பணத்தினை புடுங்கிறான். எங்கு பதுக்கிறான். இது தேவைதானா?

உன் முயற்சி, உனது உழைப்பு, உன் குடும்பம் என்று இருப்பதில் என்ன தவறு. ஆக மற்றவன் என்ன செய்கிறான் என்பதை விடுத்து நீ என்ன செய்கிறாய் உனக்கு என்று கேட்க்கவேண்டும் ஒவ்வொரு தமிழ்மகனும் அப்போது. தமிழன் ஒரு உண்மை தமிழனாகின்றான்!!.

இன்று சிங்களவன் வெற்றிமேல் வெர்றி பெறுகிறானே இது எதனால் சாத்தியமாகிறது. புத்த சமயமென்று விகாரைகளில் விழுந்தடித்து வணங்கியபடி, தமிழர்களைக்கொல்ல தன் துப்பாக்கியினை நீட்டியும். புத்தன் வெளிவரவில்லை. புத்த தர்மம் வெளிவரவில்லை. ஆக புத்தமத கொள்கைகள் என்பதும் சும்மா, நொந்துபோனவனை வைத்து பார்க்கப்படும் ஒரு வியாபாரம் அவ்வளவே. அதே போல, எம் தமிழர் பூமிகளில் ஒவ்வொரு சந்தியிலும் பிள்ளையார் கோவிகள், இருந்தென்ன? கோவணமேயில்லாது, தண்டில்லாது, தன் கைகளால் தன் மானத்தினை காத்தேயாகவேண்டிய ஒரு நிலையில் நிற்கும் இந்த தமிழன் என்ன அவ்வளவு கேவலமானவனா? ஏன் இந்த நிலமை. சிந்தியுங்கள்!!. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராபஸ்டன்

நானும் உங்களை வரவேற்கிறேன்....

மிகவும் ஆக்கபூர்வமான விடயங்களைச் சிந்திக்கிறீர்கள்...

உதாரணத்துக்கு... வீட்டுத்தேவைக்கென்றால் கேத்தலில் நீர் கொதிக்கும் போது அந்த வெப்பத்தை பயன்படுத்தி ஒரே நேரத்தில் பாலையும் கொதிக்கவைக்க ஒரு கேத்திலை டிசையின் பண்ணுங்களேன்.... நேரம் மிச்சம் எனேர்ஜி லொஸ் குறைவு அதனால் பணச்செலவும் குறைவு... கேத்தலின் நீருடன் தொடர்புடைய பகுதி இலகுவில் வெப்பம் கடத்தும் உலோகமாகவும் அந்த வெப்பத்தை பயன்படுத்தி பால் சூடாக்கும் விதத்தில் மற்றப் பகுதி அமைக்கப் பட வேண்டும்... எங்கள் தமிழ் தாய்மார்களுக்கும் எங்கள் புலம்பெயர்தேசத்திலே வாழும் ஏனைய உறவுகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்....

அடுத்தது எங்கள் போராட்டத்துக்கு உதவும் படி..... இலங்கையின் புலனாய்வுத்துறையினர் எங்கள் போராட்டத்துக்கு முக்கியமாக நாடுகடந்து தலையிடியை தந்துகொண்டிருக்கிறார்கள்.... இதை உடனடியாகத் தடுக்க ஓர் உபாயம் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.... ஒரு சிப் வடிவில் அதாவது சிம் காட் போல ஒன்று செய்து அது சிங்களவனின் உளவாளிகள் என்று சந்தேகப்படுபவர்களிடம் இலகுவில் உடைகளிலோ அல்லது அவர்களின் வாகனங்களிலோ பொருத்தப் படக்கூடியதாகவும் அமைத்து அதை மோபைல் போன்ற கருவிமூலம் அவதானிக்கக்கூடியதாகவும் அதே நேரம் எங்களில் எதிரி இதுபோன்ற ஏதாவது ஒன்றைப் பொருத்துமிடத்து அதை இலகுவில் தெரிவிக்கக் கூடிய ஓர் கருவியையும் 2 இன் 1 ஆக மோபைல் போன்ற அமைப்பில் வடிவமைக்க முடியுமா?

இது போன்ற கை ரெக் விசயங்கள் பல இருக்கிறது என்று கூறலாம் ஆனால் இந்த வடிவமைப்பு குறுகிய தூரம் மட்டும் வேலைசெய்யக் கூடியதாக இருப்பதாகவும் முக்கியமாக குறைந்தவிலையில் செய்யப் படுபவையாகவும் இருந்தால் முக்கியமாக எமது தமிழர் அமைப்புக்களின் பிரதி நிதிகளோ அதன் தலைவர்களோ எதிரியின் கண்கானிப்பிலிருந்தோ அல்லது அவனின் திட்டமிட்ட கடத்தல்கலிளிருந்தோ எம்மை பாதுகாக்க மூடியுமல்லவா?

இதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருக்கலாம் இது எனது யோசனை மட்டுமே....! மற்றது முடியுமானால் மட்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

வரும் போதே வித்தியசமான ஜடியாக்களுடன் வாறீங்கள்... முயற்சி வெற்றி அளிக்க எனது வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

இளங்கவி, உங்கள் ஆக்கபூர்வமான சிறந்த சிந்தனை என்னை சிறகடித்து இயற்கையின் வினோதமான வித்தைகளை நினைத்தபடி பறக்கவைக்தது.

ஆம் என்னால் முடியும். ஒரு அன்னப்பறவையினால், தண்ணீரில் இருக்கும் பாலினை மட்டும் தன் சொண்டினால் உறிஞ்சியிழுக்கும் அந்த இயற்கையின் விஞ்ஞானத்தினை நான் உத்து நோக்கினேன். என் சிந்தனைகள் செல்லும் வேகம் முடிபில் ஒரு புதிய தண்ணீர்-பால் சுடவைக்கும் ஒரு கருவியில் போய் ஏன் நிற்கமுடியாது?

ஆனாலும் அதற்கு உங்களைப்போன்ற இளைய மூளைகளின் உதவி அவசியம். இதை நான் உங்கள் முன்னிலையில் கண்டுபிடித்து உங்கள் முன்னால் வைக்கின்றேன், அதற்குறிய முழு உரிமையும், யாழ் களத்தினூடு தமிழீழத்தில் ஒரு நேர சாப்பாட்டுக்கு சங்கடபடும் மக்களை போய் சேரட்டும். ஒரு சின்ன பிரச்சனை. நாம் இங்கே பதிக்கும் எமது வித்தியாசமான சிந்தனைகளை நான் உட்பட பிறரும் உபயோகிக்க முனையலாம். ஆகவே எமது ஆரம்ப சிந்தனையை, அதாவது நான் என் வலைத்தளத்தில் இரண்டு நாட்களுக்குள் போடப்படும், டிசைன் கன்ஸ்செப்ட்டை நாம் எல்லோரும் சேர்ந்து, யாழ் இணையம் சார்பாக காப்பி ரைட்ஸ் செய்துகொள்ளலாம். அதன் பிறகு நாம் புகுந்து விளையாடலாம். நாம் கண்டு பிடித்து உருவாக்கப்போவது ஈழதமிழர்களின் நல்வாழ்வுக்கு மட்டுமே பயன்படவேண்டும். ஆதரவற்ற உலக தமிழர்களின் வாழ்க்கையில் நேரிடையான பங்களிப்பினை வழங்கவேண்டும். பல தொழிற்சாலைகள் போடப்பட்டு, தமிழர்களால் தமிழர்களுக்காக கட்டப்படும் தொழிற்சாலைகள், இந்த உலககின் மூலை முடுக்குகளில் கொடிகட்டி வெள்ளைக்காரர்கள் முன்னிலையில் மிகவும் டாம்பீகமாக உருவாக்கப்படவேண்டும்.வேலையி

  • தொடங்கியவர்

ராபஸ்ட் என் ஜினியரிங் ஈழதமிழர்களுக்காக இன்னுமொரு கொன்ஸ்செப்ட்டையும் ஈழதமிழர்களுக்காக, அவர்களை மேலும் உயர்த்திவிட தரமுடியும். தயாரிப்புக்கான செலவினை முழு தமிழர்களும் ஒட்டுமொத்த உரிமையுடன் எடுத்தால், இந்தப்பொருளை நாம் முழு உலகத்துக்கும் விற்க்கலாம்.

சிறுவர்கள், பெரியவர்களுக்கான லன்ஞ்ச் பொக்ஸ். இது எப்படி தொழிற்படவேண்டுமென்றால். நாம் ஒரு ரீசார்ஜ் பண்ணக்கூடிய அதிக வெப்பத்தினை வெளியிடும் பற்றரியினை கண்டுபிடிக்கவேண்டும்.

அதை கண்டு பிடித்தால், அந்த வெப்பத்தின் உதவியுடன், ஒரு மைக்குறோவேவ் தொழில்நுற்பத்தில் நாம் இந்த லன்ஞ்ச் பொக்ஸினை தயாரிக்கமுடியும். ஆக செய்யவேண்டியது, மத்தியானம் ஒரு பட்டனை அமுக்கவேன்டியது, சாப்பாடு சூடாக்கப்பட்டு விடும். மீண்டும் பற்றறியினை சார்ஜ்ச்சில் போடவேண்டியதே. இன்னும் அப்படியான ஒரு பொருள் இந்த பூமிப்பந்தில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஈழதமிழர்களுக்கு ஆதரவான செய்தி!!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் விருப்பத்தில் எனக்கும் சந்தோசம் தான். நான் தான் அதை தயார் செய்ய போகும் தலைமுறை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா

கடலை போடுறதுக்கு பொண்ணுங்களை கவிழ்க்கிறதுக்க புதுசா ஏதும் மெசின் கண்டுப்பிடிச்சு தாங்கோண்ணா

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

தண்ணீர் சூடாக்கப்பட தொடங்க, சுடுதண்ணி ஒரு குழாயினூடாக மேலெழும்ப வைக்கப்படவேண்டும். அந்த குழாயினை ஊடறத்து இன்னுமொரு வெப்பத்தினை இலகுவில் கடத்தும் அதே நேரம் பூட் சேவ்டி தராதரத்திற்கு உட்ப்படக்கூடிய வகையில் இன்னுமொரு குழாயினூடு பால்தாங்கியில் இருந்து பால் கீழ்செல்லும்.இப்போது குளிர்ந்தபால், சுடுதண்ணியின் வெப்பநிலை அதிகரிப்புக்கேற்ப மெதுவாக சூடாக்கப்படும். இரண்டு பால் தாங்கிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பம்பு, இந்த சுடுதண்ணியினையும், பாலினையும் ஒரு கீலிக்ஸ் வடிவில் தம்மைத்தானே சுற்றிவர தொழிற்பட்டுக்கொண்டிருக்கும

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

சிறீலங்கா அரச படைகள் நடாத்தும் கொலைவெறித்தனமான காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்து உள்ளம் கொதிக்கும் மக்கள் சார்ப்பாக நான் இங்கே என் கருத்தினை வைக்கிறேன்.

பல அப்பாவிதமிழ் இளைஞர்கள் கோரமாக கொல்லப்படுவதை எம்மால் பார்த்துக்கொண்டு சகிக்கமுடியவில்லை என்று சாட்டுக்கு சொல்லிக்கொண்டு போக என்னால் முடியவில்லை. தமிழர்கள் கூண்டுக்கிளிகளாக வெள்ளைக்காரர்களுக்கு அடிமைகள் போல வாழ்தது போதுமென்று நினைக்கிறேன். தமிழர்களுக்கு என்று ஒரு தனிப்படையமைத்து, பெரும் சாதனைகளைப்புரிந்த தமிழீழ விடுதலை இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்டதின் வெளிப்பாடே இப்படிப்பட்ட படுகொலைகள்.

இன்றைய தேதியில் தமிழர்கள் செய்யக்கூடியது இருக்கும் போது உதவநினைக்கவில்லை ஆகவே இனியாவது வாழும் தேசங்களில் ஒரு பெரும் வெள்ளமாக இந்த பாரிய கொலைகளை, முழு உலகத்துக்கும் எடுத்துச்சென்று, ஈழத்தில் வாழும் தமிழர்கள் இனியாவது இப்படியாக சுட்டுக்கொல்லப்படுவதை நிறுத்த முன்வரவேண்டும். மக்களும் தான் என்ன செய்வார்கள். ஒரு காலகட்டத்தில் முழு ஆதரவினைகொடுத்து தம் விரல்களை சுட்டுக்கொண்டார்கள். எம் தமிழ் இனத்திற்குளேயும் இப்படிப்பட்ட இயக்கப்படுகொலைகள் ஏற்பட்டது என்பதை மறக்கமுடியாமல் திணரும் மக்களுக்கு நான் சொல்லுக்கொள்வது இதுதான். எப்போது இருக்கும் போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் போய்விட்டால் அப்போது அதன் அருமை பெருமைகள் தெரியவரும். இப்போது இது காலம் கடந்த உணர்சிகள், மனித வெளிப்பாடுகள். இன்னும் காலம் முற்றாக எம்மை விட்டு சென்று விடவில்லை. புறப்படுங்கள் வீதிகளை நோக்கி, வெள்ளைக்காரர்களை எங்கள் வசப்படுத்த இந்த காணொளிகளினை முழுமையாக பயன்படுத்தி, இதில் சம்பந்தப்பட்டவர்களை அது அரச தலைவராக இருந்தாலென்ன, இராணவ தலைவர்களாக இருந்தாலென்ன சட்டத்தின் முன்னால் அம்பலப்படுத்தும் காரியத்தினையாவது செய்தோமானால் அது நாம் விட்ட பிழைகளை ஒரு அளவாவது நிவர்ச்த்திசெய்யும். இந்த நிலையில் ஓய்ந்துபோன புலிகள் மீண்டும் எழுந்தால், உலக தமிழ் இனமுமே பின்னால் நிற்க்கும். ஏன் உலகத்தில் தமிழர்கள் ஏன் ஆயுதம் எடுத்து போர்புரிய வெளிக்கிட்டார்கள் என்பதற்கு தகுந்த நியாயத்தினை நாம், உந்த இனவெறிபிடித்த வெள்ளைக்காரர்களுக்கும் எடுத்து புரியவைக்கலாம். புரட்சிகள் சும்மாவெல்லாம் தோன்றுவதில்லை என்பதை நாம் எல்லோரும் புரியவைக்கும் காலத்தில் இன்று நாம் தமிழர்கள் வாழுகின்றோம். எம்மிடையே இருந்த தவறுகளை மறந்துவிட்டு ஒற்றுமைப்படவேண்டிய ஒரு காலத்தில் நிற்கின்றோம், நிற்கவேண்டும் என்ற உணர்வு சுடலைஞானம் என்றாலும் , மிக ஆக்கமான சிந்தனைகளே!. இனியொரு முறை போராட்டம் என்று வெளிக்கிட்டால் மிகப்பெரும்பாண்மையான வரவேற்ப்பை பெற்றுக்கொள்ளும் எந்த எழுச்சிகளும் என்பது மட்டும் என்பது உண்மையிலும் உண்மை.

  • 1 year later...
  • தொடங்கியவர்

என்னை வாழவைத்த என் அன்புத்தாயின் நினைவாக நான் கட்டிய வசந்தமாளிகை இது!

http://www.tamilarpoonga.blogspot.com/

வணக்கம்! வாருங்கள் !!

வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

  • 1 month later...

வணக்கம் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.