Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலக நாணய நிதியம் கைவிட்டால் நாங்கள் உதவுவோம்: சிறிலங்காவுக்கு இந்தியா ஆறுதல்

Featured Replies

சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்கையை முன்வைத்திருந்தது.

வடக்கு போர் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரித்தானிய நாடுகள் முதலில் அதற்கு எதிர்பார்ப்பை வெளிக்காட்டியிருந்த போதிலும் பின்னர் அந்த எதிர்ப்பினை பின்வாங்கிக் கொண்டன.

எனினும், தற்போதைய நிலையில் காணப்படும் ரூபாவின் மதிப்பைக் குறைக்காத பட்சத்தில் நிதியுதவியை வழங்க முடியாதிருப்பதாக அனைத்துலக நாணய நிதியம் கூறி வருகின்றது.

நாணய நிதியத்தின் அறிவிப்பின் பிரகாரம் டொலரின் பெறுமதி 122 ரூபாவை தாண்டும் பட்சத்தில் கடன் உதவியை வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமானால் இறக்குமதிப் பொருட்களின் விலைகள் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அந்த யோசனையை அரசு ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

இதன் மூலம் அனைத்துலக நாணய நிதியத்தின் கடன் உதவி தடைப்படுமானால் இந்தியாவிடம் இருந்து அந்த உதவியை பெற்றுக்கொள்ள வாய்ப்பு உருவாகி இருப்பதாக அந்த அரசின் உயர்மட்டப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: தினக்குரல்

புதினம்

இந்தியா புலிகளை எதிர்க்கிறது

பிரபாகரனை எதிர்க்கிறது

ராயீவ் கொலை பெரும் பிழை

என்று எல்லாம் கதை விட்டார்கள்

இன்னும் புரியவில்லையா

இந்தியா தமிழரை எதிர்க்கிறது

தமிழனாக பிறந்ததுக்கு எம்மை தண்டிக்கிறது

Edited by PeterRatna

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பணத்தில் சேரிப்புரத்தை புனருத்தாரணம் செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலிருந்து இலங்கை சுதந்திரக்கட்சியனாது தன்னிறைவு பொருளாதாரம் சார்ந்த கொள்கையுடன் திறந்த வர்த்தகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பயணம் செய்த்தது அதே நேரம் இந்தியாவிலும் அதே நிலை காணப்பட்டது(சிறீமாவோ-இந்திரா காந்தி) .70 களில் சிறிமாவோ ஆட்சியிலிருந்தபோது அரசுக்கு எதிராக ஜே வி பியினர் செய்த கலகத்தை இந்தியாவின் துணையுடன் இரும்புக்கரம் கொண்டு நசுக்கிய சிறிமா பின்னர் இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானிற்குத்தளமாக இலங்கையை பாவிப்பதற்கு அனுமதி அளித்து தனது நன்றி கடனை இந்தியாவுக்குசெலுத்தியிருந

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு ஐஎம்எப் 'நாமம்'?-இந்தியா உதவும்??

திங்கள்கிழமை, ஜூன்

கொழும்பு: தமிழினப் படுகொலையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு, போரினால் இடம் பெயர்ந்த 3 லட்சம் தமிழர்களை இப்போதைக்கு மறு சீரமைக்க முடியாது என்று கூறி வரும் இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் உதவி அளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன. இதனால் எதிர்பார்த்த ரூ. 1900 கோடி கடன் உதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், சர்வதேச நிதியம் கைவிட்டாலும் கூட இந்தியா தனக்கு நிதியுதவி அளிக்கும் என இலங்கை கூறி வருகிறது.

புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு பல்வேறு நாட்டு உதவியுடன் லட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்து விட்டது இலங்கை. இதற்கு அமெரிக்கா, ஐ.நா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், உலகத் தமிழர்கள் பெரும் கண்டனக் குரல் எழுப்பியும் அதைக் கண்டு கொள்ளாமல் தனது பணியை செம்மையாக முடித்து விட்டு தமிழர்களின் செந்நீரின் மீது அமர்ந்திருக்கிறது இலங்கை.

இந்தக் கையோடு சர்வதேச நிதியத்திடம் ரூ. 1900 கோடி கடனுதவியையும் அது கோரியது. ஆனால் பேரினப் படுகொலையை நடத்தியுள்ள இலங்கைக்கு இப்போது இவ்வளவு பெரிய கடனுதவியை வழங்கக் கூடாது என சர்வதேச நிதியத்திற்கே பெருமளவில் நிதி வழங்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இதனால் கேட்டபடி இலங்கைக்கு கடன் உதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது.

மேலும், கடன் உதவி தேவை என்றால் உங்கள் நாணய மதிப்பை குறைக்க வேண்டும் என இலங்கைக்கு நிபந்தனை போட்டது சர்வதேச நிதியம். இதை இலங்கை அரசு ஏற்கவில்லை.

மாறாக நிதி கேட்டு யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டோம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திமிராக பதிலளித்தார்.

இதன் காரணமாக சர்வதேச நிதியத்தின் கடனுதவி கிடைக்குமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், சர்வதேச நிதியத்திடம் கேட்டதற்கு சமமான கடன் தொகையை தர இந்தியா சம்மதித்துள்ளதாக இலங்கை அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியத் தரப்பில் இதுவரை பதில் ஏதும் இல்லை.

இலங்கையின் புதிய நன்கொடையாளர் அணி:

இதற்கிடையே ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நார்வே உள்ளிட்ட நாடுகள் அடங்கிய தற்போதைய நன்கொடையாளர் நாடுகளின் கூட்டணியை உதறி விட்டு, இந்தியா, சீனா உள்ளடங்கிய புதிய நன்கொடையாளர் கூட்டமைப்பை ஏற்படுத்தப் போகிறதாம் இலங்கை அரசு.

இலங்கைக்கு தற்போது ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நார்வே போன்ற நாடுகள் நிதியுதவி செய்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு நன்கொடையாளர் நாடுகள் (Donor Countries) என்று பெயர்.

இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள், நார்வே போன்றவை, புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது இலங்கைப் படையினரின் இனப்படுகொலையை கடுமையாக கண்டித்து வந்தன.

ஜப்பான் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் போகாமல் நடுநிலை என்ற பெயரில் எதுவும் பேசாமல், அமைதியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது போர் முடிந்து விட்டதால் நான்கொடையாளர் நாடுகள் என்ற ஒன்றே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் இலங்கை. இந்த முடிவுக்கு அது வர முக்கிய காரணம், தனக்கு எதிராக திரண்ட ஐரோப்பிய யூனியனை அணியிலிருந்து நீக்குவதே.

இந்த அணியை நீக்கி விட்டு, தனக்கு சாதகமாக இருக்கும் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், புத்தமத நாடுகள் உள்ளிட்டவற்றுடன் புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாம் இலங்கை.

இந்தியாவும், சீனாவும் தனக்கு போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவி செய்யும், கடன் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை உள்ளதால், விரைவில் தற்போதைய நன்கொடையாளர் நாடுகள் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக இலங்கை கலைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

thatstamil

இதுதொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியத் தரப்பில் இதுவரை பதில் ஏதும் இல்லை.

மகிந்தா மாத்தையாவுக்கு சிங் ஜீ கொஞ்ச நாள் போனபிறகு சொல்லுவார் இந்திய ரூபாவை சிறிலங்காவில் பாவனைக்கு விட்டால் கணக்கு வழக்கு பார்க்க இலகுவாக இருக்கும் என்று

அதாவது பரவாயில்லை, ஒரு வேளை சொல்லுவார் சொறி லங்காவின் நிரவாகத்தையும் நாமஏ பார்த்துக் கொள்ளுவோம் நீர் வீட்டில் இருந்து ஓய்வெடும் என்று, அப்போது விளங்கும் இந்த பண்டாக்களுக்கு வடக்கத்தயானின் புத்தி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.