Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் கப்பல் மீது இந்திய கடற்படை சந்தேகம்-வெளியேற உத்தரவு

திங்கள்கிழமை, ஜூன் 22, 2009, 17:26 [iST]

சென்னை: வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா இன்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் இன்று சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணங்காமண் குறித்து சந்தேகமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தரப்பில், என்ன மாதிரியான சந்தேகம் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்படவில்லை.

தற்ஸ்தமிழ்

இந்திய "பொறை"யாண்மை அங்கே விற்று கொண்டிருந்தார்களாம்......

சந்தேகம் எனக்கு இந்தியா மேலதான்.... இப்போது இந்தியா இலங்கையின் வைப்பாட்டி.......

தமிழரின் சாபம் சும்மா விடாது இந்தியாவையும்.......... :rolleyes:

சந்தேகமெண்டா சந்தேகம்தான்

என்ன சந்தேகம் எப்படி வந்தது சந்தேகம்

யாரும் கேக்கக்கூடாது

மகிந்த சிந்தனை விளையாடுது

வாழ்க இந்திய ஐனனாயகம்.ஒழிக வடக்கு கிழக்கு IOC

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.

மனித குலத்துக்கே அவமான சின்னமானவர்கள்.

இந்தியா மீது தமிழக தமிழர்கள் சந்தேகம்.... இந்தியாவை வெளியேறுமாறு தமிழக அரசு உத்தரவு. .தமிழரல்லாத இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.......-- The Tamils Daily 2013 :rolleyes:

இந்திய "பொறை"யாண்மை அங்கே விற்று கொண்டிருந்தார்களாம்......

சந்தேகம் எனக்கு இந்தியா மேலதான்.... இப்போது இந்தியா இலங்கையின் வைப்பாட்டி.......

தமிழரின் சாபம் சும்மா விடாது இந்தியாவையும்.......... :rolleyes:

இந்தியா மீது தமிழக தமிழர்கள் சந்தேகம்.... இந்தியாவை வெளியேறுமாறு தமிழக அரசு உத்தரவு. .தமிழரல்லாத இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.......-- The Tamils Daily 2013

கருநாநிதி மாதிரி முதுகெலும்பில்லாத புழுக்களை முதலமைச்சராக வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் ஆசை படலாமா??

[ஃஉஒடெ நமெ='அருண் மொழி வ' டடெ='Jஉன் 22 2009, 04:01 PM' பொச்ட்='525415']

இந்தியா மீது தமிழக தமிழர்கள் சந்தேகம்.... இந்தியாவை வெளியேறுமாறு தமிழக அரசு உத்தரவு. .தமிழரல்லாத இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.......-- Tகெ Tஅமில்ச் Dஐல்ய் 2013 :rolleyes:

[/ஃஉஒடெ]

இப்படியொன்று நடக்கவேண்டுமானால், தமிழ் நாட்டுத்தமிழர்களை அணுகுண்டு போட்டு அழித்துவிட்டு, வேறு கிரகத்தில் இருந்து டமிலர்களை அழைத்து வந்து குடியேற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலில் வந்த உணவு மருந்து ..... உதவிகள் மீது கோபம் இல்லியாம் ........

.சிந்தனையாளன் வேண்டாமேன்றதை நாங்க எப்படி ஏற்கிறது என்று

தானாம்பிரச்சினை .....சந்தேகம் ஒரு கொடிய நோய் ..................

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகம் என்னவென்பதுதான் பெரிய சந்தேகம்.

கருநாநிதி மாதிரி முதுகெலும்பில்லாத புழுக்களை முதலமைச்சராக வைத்துக்கொண்டு இப்படி எல்லாம் ஆசை படலாமா??

இந்நேரம் எம்.ஜி.ஆர் இருந்திருந்தால்???

தமிழக தமிழர்களுக்கு ஒரு நல்ல தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின் யாருமில்லை.... இனி மேல்தான் வரணும் :D

நம்பிக்கையுடன்............... :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.