Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'உதயன்' நாளேட்டுக்கு ஊடக சுதந்திரத்தை பாதுகாத்தமைக்கான விருது

Featured Replies

இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்ததற்கான அதிஉயர் கௌரவ விருது 'உதயன்' நாளேட்டுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் விழா கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றபோது 'உதயன்' நிறுவனத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கைப் பத்திரிகை நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்து நடத்திவரும் இதழியல் துறையில் சிறந்த செயற்பாடுகளுக்கான 10 ஆவது விழா கொழும்பு மவுண்ட்லவேனியா ஹோட்டலில் நடைபெற்றது.

2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருண் றோய் கலந்துகொண்டார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வில் முக்கிய அம்சமாக இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தமைக்கான 'சேபால குணசேன' விருது வழங்கும் கௌரவம் இடம்பெற்றது.

ஜனநாயக விரோத சக்திகளின் படுகொலை நடவடிக்கைகள், உடற்காயங்களை ஏற்படுத்தும் தாக்குதல்கள், மிரட்டிப்பணிய வைக்க‌ முயற்சித்தல் போன்ற அச்சுறுத்த‌ல்களை எதிர்கொண்டிருந்தும் கூட யாழ். குடாநாட்டு மக்களுக்கு தகவல்களை வழங்கும் செயற்பாட்டில் திடசங்கற்பத்தோடும் விடாத பற்றுறுதியோடும் செயற்படுகின்றமைக்காக 'இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான உயரிய விருது கெளரவ‌மும்' 'உதயன்' நாளேட்டின் பிரதம ஆசிரியருக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப்படுவதாக நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் 'உதயன்', 'சுடர் ஒளி' நாளேடுகளின் ஆசிரியர் ந.வித்தியாதரன் விருதைப் பெற்றுக்கொண்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டபோதும் 'துணிச்சலான நாளேட்டுக்கான விருது' 'உதயன்' நாளேட்டுக்கு பத்திரிகை ஆசிரியர் சம்மேளனத்தால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் இலங்கையின் ஜந்து ஊடக அமைப்புக்கள் அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்புடன் இணைந்து கடந்த வருடம் நடத்திய ஊடகவியலாளர்கள் கெளரவிப்பு நிகழ்வில் 'துணிச்சல் மற்றும் பொதுச்சேவை விழுமியங்களில் இக்கட்டுக்களை எதிர்கொண்டு ஊடகப்பணி ஆற்றியமைக்கான விருது' உதயனுக்கு சிறப்பாக வழ‌ங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

பத்திரிகைச் சுதந்திரத்தினை உண்மையிலேயே பாதுகாக்க வேண்டியது... அந்தந்த நாட்டு அரசாங்கங்கள்தான். ஆனால் இலங்கையில், அதற்கு நேரெதிர்மாறான இக்கட்டான சூழ்நிலை அதிகார வர்க்கங்களினால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தன்னிலைமாறாது தனித்துவமாக பத்திரிகைத் தர்மத்துடன் நடுநிலையாக உழைத்தது மட்டுமல்லாமல் நியாயமான தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு காலங்காலமாக தியாக உணர்வுடன் செயற்பட்ட பத்திரிகை உதயன் பத்திரிகை .

உதயன் பத்திரிகைக்கும் அதன் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களிற்கும் ஈழத் தமிழர் சார்பில் நன்றிகளும் பாராட்டுக்களும்.

உங்கள் அரும்பணி தொடரட்டும்!

ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தில் பேனா கொண்டு போராடிவரும் உதயனுக்கு கிடைத்த இந்த கவுரவத்துக்கு உதயன் உரித்துடையவந்தான்.

பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் , நாசூக்காக எமது அவலங்களை வெளியிட்டுவரும் உதயன் பத்திரிகை பாராட்டுக்கு உரியதே .

உதயனுக்கு பாராட்டுக்கள்

2008 ஆம் ஆண்டில் சிறந்த இதழியல் பெறுபேறுக்கான இந்த விருது வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியாவின் பிரபல்யமான சமூக செயற்பாட்டாளர் திருமதி அருண் றோய்

இலங்கையில் பத்திரிகை சுதந்திரத்திலயும் இந்தியா ?????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.