Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் முஸ்லிம் ஒருவரே பிரதி மேயர்: த.தே.கூ. உறுதி

Featured Replies

ஒகேய்.. மெயின் பிரச்சினைக்கு வருவம்...

சம்பந்தப்பட்டவர், ஈபிடிபி தான் வெல்லப்போகுது எண்டு தெரிந்தபடியால கிழக்கில் இருக்கும் முஸ்லீம் வாக்குகளுக்கு கண் வைக்கிறாரா? :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

ஒகேய்.. மெயின் பிரச்சினைக்கு வருவம்...

சம்பந்தப்பட்டவர், ஈபிடிபி தான் வெல்லப்போகுது எண்டு தெரிந்தபடியால கிழக்கில் இருக்கும் முஸ்லீம் வாக்குகளுக்கு கண் வைக்கிறாரா? :mellow:

கிழக்கிலை உள்ள முஸ்லீம் வாக்காளர்கள் , வோட்டுப் போட ஆளில்லாமல் .... த .தே . கூ. விற்கு அள்ளிப் போடப் போகிறார்கள் ஆக்கும் .

ரொம்பத்தான் ஆசை ......... ஹ்ம்ம் .

..... நாம் முஸ்லீம் சகோதரர்களுக்கு செய்த .... சிலுவை சுமந்தே தீரவேண்டும்! ..

நீங்கள் செய்ததுக்காக தமிழர் எல்லாம் ஏன் சுமக்க வேண்டும்..??? அதாவது தமிழர் முஸ்லீம்களுக்கு கொடுமை இழைத்தனர் ஆனால் முஸ்லீம்கள் மற்ற தமிழருக்கு இண்டுவரைக்கும் எந்த கொடுமையும் இழைக்க இல்லை எண்டுறீயளோ...???

அது சரி புனை கதைகள் எப்ப இருந்து எழுத தொடங்கினீங்கள்...??? முஸ்லீம்களுக்கு கொடுமை இளைத்தது யார்...??

நாங்கள் எண்டு நீங்கள் சொல்லுற அவை யார்...??? கருணா(SLFP) , மாத்தையா(RAW) குறூப்போ...???

Edited by தயா

நீங்கள் செய்ததுக்காக தமிழர் எல்லாம் ஏன் சுமக்க வேண்டும்..??? அதாவது தமிழர் முஸ்லீம்களுக்கு கொடுமை இழைத்தனர் ஆனால் முஸ்லீம்கள் மற்ற தமிழருக்கு இண்டுவரைக்கும் எந்த கொடுமையும் இழைக்க இல்லை எண்டுறீயளோ...???

இது நேரத்துக்கு ஏற்ப நடிப்பல்ல .... காலத்தில் கற்ற பாடம்!!! விட்ட பல பிழைகளால் அழிந்து விட்டோம்!! இனியாவது விட்ட பிழைகளை சீர்துக்கி பார்த்து ... சரிகள் எவை! பிழைகள் எவை! .... என்று விவாதிக்க தவறுவோமாயின் ....... முற்றான அழிவை தவிர்க்க முடியாது!!!

தமிழர்களின் போராட்டத்தை முதலில் மத ரீதியாக உடைக்க சிங்களம் போட்ட திட்டத்தில் நாம் பூரணமாக வீழ்ந்தோம், உண்மை!! .... இறுதியாக பிரதேச வேறுபாட்டில் ..... !

ஆரம்பத்தில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் மக்களை, தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சிங்களம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது!! .... 80 நடுப்பகுதியில் .... மருதானை, மற்றும் தென்பகுதியில் வேறு சில இடங்களில் இருந்து முஸ்லீம் காடையர்கள், சில முஸ்லீம் அரசியல்வாதிகளின் துணையுடன் ... ஜெயவர்தனாவின் சிந்தனையில் .... கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தமிழ் மக்களின் கிராமங்கள் சூறையாடப்பட்டு, பெண்கள் கற்பளிக்கப்பட்டு. ... அழிக்கப்பட்டன!! இவைகள் உண்மைகள்!!! ஆரம்பத்தில் மூதூர் போன்ற பிரதேசங்களில் தோன்றிய மத முரண்பாட்டை, கிழக்கு மாகாணம் எங்கும் சிங்களம் பூதாகரமாக்கியது!!! .... நாமும் தூரநோக்கற்ற சிந்தனையிலோ? இல்லை மாற்றுவழியில்லாமலோ? ... சிங்களத்தின் வலையில் வீழ்ந்தோம்!!!!!

கிழக்கை முடித்து சிங்களவன் .... வடக்கிலும் . சில வேலைகளை செய்ய ஒரு சில முஸ்லீங்களை பயன்படுத்தப் பார்த்தான், ஒரு சிலர் சிங்களவனின் வலையிலும் வீழ்ந்தார்கள், உண்மை!!!! சிலர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்தான்!! ..... ஒரு சிலர் செய்த தவறுக்கு ஓர் இனத்தையே ஒரு நாளில், கையில் கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றினோம்!!! இத்தண்டனை நியாயமானதா?????? நாம் செய்தது சரியா????? ........ இன்று வன்னி மக்களை சொந்த மண்ணிலிருந்து சிங்களவன் துரத்தி அடிக்கையில் நாம் படும் வேதனைகள், அன்று முஸ்லீம் மக்கள் அனுபவித்தார்கள்!!! காட்டிக் கொடுத்தவர்கல் எல்லாம் வெளியேற்றப்பட வேண்டுமாயின், ஆரம்பம் முதல் இறுதிவரை போராட்டத்துகுள் உள்ளவர்களினாலேயே நடந்தவைகளை நினைத்துப் பாருங்கள்!! ஒரு மாத்தையாவிற்காக வல்வெட்டித்துறையில் உள்ளவர்களை துரத்துவதா??? ஒரு கருணாவிற்காக கிழக்கு மாகானத்தில் உள்ள எல்லோரையும் துரத்துவதா???

அப்போது 85ம் ஆண்டு என்று நினைக்கிறேன் ... யாழ்நகருக்கு ஊரில் இருந்து சென்றவேளை, யாழ் மாக்கட்டினுள் உள்ளட்டால் சில முஸ்லீங்கள் ... யாழ் கோட்டை சென்றியில் மாவீரரான தங்கள் சகோதரர்களின் நினைவிற்கு , சமயக்கடனை செய்யப்போல சில பொருட்களை வாங்கிக் கொண்டிருந்ததை பார்த்த ஞாபகம்!! .... கிட்டண்ணாவின் காலத்தில் யாழ் கோட்டையை காக்கவே எத்தனை முஸ்லீம் மதத்தை சேர்ந்த இளைஞார்கள் மாவீரர்கள் ஆனார்கள் தெரியுமா??? ... இது நாம் அவர்களை துரத்தி ... யுத்தநிறுத்தத்தின் பின்னும் இணைந்தவர்களும் இறுதிக்காலங்களில் மாவீரர்களாக .....

கிழக்கு மாகாணத்தில் மத முரண்பாடுகள் 1985இலேயே தொடங்கி விட்டது!! ............ இந்திய இராணுவ காலம் .... கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் இருப்பை உறுதிப்படித்தியது இஸ்லாமிய மக்களே!!! ... விடுதலைப்புலிகளுக்கு அக்காலங்களில் உணவு, உடை, இருப்பிடங்களை கூட வழங்கி உதவினார்களாம்!!

Edited by Nellaiyan

நெல்லையண்ணை... இண்டைக்கு வரைக்கும் தமிழரிலை இருக்கும் அரை குறையள், எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் தங்கட பாட்டுக்கு கதை எழுதுறதும் விமர்ச்சிக்கிறதுமாகத்தான் இருக்கினமே ஒளிய வேற ஒண்டையும் காணம்...

இதிலை விமர்ச்சிக்கிறவை எல்லாம் என்னைத்தை வருங்காலத்திலை கிளிச்சு போடுவினம் எண்டு கேட்டால் 30 வருடமாக கொஞ்ச பொடியளை போராட விட்டு போட்டு என்னத்தை கிளிச்சு கொண்டு இருந்தினமோ அதைத்தான் இனியும் கிளிக்க போகினம்...

உதிலை நீங்கள் கூட விதி விலக்கு கிடையாது...

அது சரி முஸ்லீம்களை வெளியேற்றினது யார்..??. எதற்காக என்பது உங்களுக்கு என்ன தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்... இதில் எங்கட தமிழருக்கும் ( புலிகளுக்கும்) என்ன சம்பந்தமாம் எண்டு உங்களுக்கு சொன்னவை சொல்லினம்...???

நெல்லையண்ணை... இண்டைக்கு வரைக்கும் தமிழரிலை இருக்கும் அரை குறையள், எதையும் முழுமையாக புரிந்து கொள்ளாமல் தங்கட பாட்டுக்கு கதை எழுதுறதும் விமர்ச்சிக்கிறதுமாகத்தான் இருக்கினமே ஒளிய வேற ஒண்டையும் காணம்...

ஓமண்ணை!! முழுசாக இருந்ததெல்லாம் தூரநோக்கோடு போட்டுது/முடிச்சுது/தற்கொலை செய்து கொண்டது. இப்ப அரகுறைகள் தானிருக்கிறது. இனி உதைத்தான் செய்ய முடியும்!!

  • கருத்துக்கள உறவுகள்

சிலுவை சுமப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நானும் வாறன்...... ஆனால் தமிழர்களில் பெரும்பாண்மை இந்து...... சுமக்க போவது முஸ்லீம்களுக்காக. ஆகவே ஏன் இதில் சிலுவையை இழுக்க வேண்டும் இதனால் மீண்டும் ஒரு மதப்பிரச்சனை வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு. முன்பு புலிகள் இழைத்த பாரிய தவறுகள் போல் நெல்லையாண்ணையின் தலைமையிலும் பிழைகள் வராது நாம் பார்க்க வேண்டும் அதை அவரே பார்ப்பார் என்றாலும் சும்மா ஒரு ஆலோசனைதான்.

ஆகவே சும்மா தேவாலயத்தில் கிடக்கும் சிலுவையை அப்படியே விட்டுவிடுவோம். மாற்றாக தற்போது மட்டகிளப்பில் ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக நீரோட்த்தில் கலந்து நீச்சலிடித்துகொண்டிருக்கும

சிலுவை சுமப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை நானும் வாறன்...... ஆனால் தமிழர்களில் பெரும்பாண்மை இந்து...... சுமக்க போவது முஸ்லீம்களுக்காக. ஆகவே ஏன் இதில் சிலுவையை இழுக்க வேண்டும் இதனால் மீண்டும் ஒரு மதப்பிரச்சனை வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு. முன்பு புலிகள் இழைத்த பாரிய தவறுகள் போல் நெல்லையாண்ணையின் தலைமையிலும் பிழைகள் வராது நாம் பார்க்க வேண்டும் அதை அவரே பார்ப்பார் என்றாலும் சும்மா ஒரு ஆலோசனைதான்.

ஆகவே சும்மா தேவாலயத்தில் கிடக்கும் சிலுவையை அப்படியே விட்டுவிடுவோம். மாற்றாக தற்போது மட்டகிளப்பில் ஆயுதங்களை ஒப்படைத்து ஜனநாயக நீரோட்த்தில் கலந்து நீச்சலிடித்துகொண்டிருக்கும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு மாகாணத்தில் மத முரண்பாடுகள் 1985இலேயே தொடங்கி விட்டது!! ............ இந்திய இராணுவ காலம் .... கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் இருப்பை உறுதிப்படித்தியது இஸ்லாமிய மக்களே!!! ... விடுதலைப்புலிகளுக்கு அக்காலங்களில் உணவு, உடை, இருப்பிடங்களை கூட வழங்கி உதவினார்களாம்!!

ஐயா நெல்லையன், உதவி செய்தவைகள் எல்லாம் மறந்து , மறைத்தும் போட்டோமுங்க. ஆயுதபலத்தினால் ஒரு சமூகம் உச்சணிக்கு சென்றதும் பெய்யும் இல்லை. இனி எவரினதும் உதவி தேவையில்லை என்ற நிலையும் வந்தது. இவர்களின் உதவி ஒத்தாசை, மற்றும் முஸ்லிம் சமூக ஆரம்பகால போராட்டத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பு ஏன் பல ஆயிரம் முஸ்லிம் இளைஞர்கள் தங்கள் உயிரினையும் தியாகம் செய்தது என்ன நோக்கத்துக்காக? முஸ்லிம் சமூகத்திற்கு அவ் உயிர்தியாகங்களினால் ஏதும் ஒரு நன்மை கடைசிவரை அடையப்படவும் இல்லைதானே? (ஏன் முஸ்லிம் மக்களுக்கு விடுதலை வேண்டியா அவர்கள் தங்கள் உயிரினை தியாகம் செய்தார்கள்?)குறிக்கோள் அற்ற முஸ்லிம் இளைஞர்களின் உயிர் இழப்பு எந்தவகையினை சார்ந்தது? இயக்கங்களில் சேர்ந்து தங்கள் உயிரினை தியாகம் செய்த அம் முஸ்லிம் இளைஞர்களின் ஒரு நபரினது பெயராவது மாவீரர் பட்டியலில் இருந்ததா? இல்லை அவர்கள் உயிரிழந்ததன் பின்னர் துரோகிகளாக்ககப்பட்டார்களா? ஆனால் தமிழ் இளைஞர்களின் உயிர் இழப்புக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. ஆனால் தமிழ் இயக்க போராட்ட வரலாற்றில் இம் முஸ்லிம் இளைஞர்களின் இழப்பு ஒரு செல்லா காசிதானே? ஏன் இந்த வித்தியாசம் நம்ம அம்மாவெள்றா அம்மா மற்றவன் அம்மாவென்றா சும்மாவா? இதையும் தான்டி "வடக்கு முஸ்லிம்களை" வெளியேற்றியதும் தமிழ் சமூகத்துக்கு அநீதியாகவும் தெரியவில்லைதானே?

இன்று முஸ்லிம் சமூகத்தவர் மத்தியில் ஊன்றிப்போயுள்ள கருத்தான தமிழ் ஆயுதக்குழுக்களும், தமிழ் அரசியல் வாதிகளும் ஆரம்ப காலத்தில் முஸ்லிம் மக்களை "கறிவேப்பிலை" போன்று மனத்துக்கு மட்டும் பயன்படுத்தியதன் பின்னர், சமையல் தயாறானதால் தூக்கி எறியப்பட்டோம் என்கின்ற மனநிலையில் மாற்றம்தான் செய்ய முடியுமா? என்பதும், மீண்டும் தம்மை அதே கறிவேப்பிலை கொள்கைக்காக பயன்படுத்த எத்தனிக்கவே முயற்சிக்கின்றார்கள் என்று அவர்கள் கருதாமலும் இருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய கணக்கெடுப்பின் படி சனத்தொகை வீதம் : சிங்களவர்கள் பின்னர் முஸ்லீம்கள் பின்னர் தான் தமிழர்கள்! இனி முஸ்லீம்க் நமக்காக போராடவேணும்!

அதைதானே அண்ணே நானும் சொலகின்றேன்............. அவர்கள் போராடட்

டும் நாங்கள் அவர்களுக்கு பல்லக்கு துக்குவோம்.

ஓமண்ணை!! முழுசாக இருந்ததெல்லாம் தூரநோக்கோடு போட்டுது/முடிச்சுது/தற்கொலை செய்து கொண்டது. இப்ப அரகுறைகள் தானிருக்கிறது. இனி உதைத்தான் செய்ய முடியும்!!

அது சரி.. முஸ்லீம்களுக்கு துன்பம் இளைச்சது யார் , நாங்கள் ஏன் அதுக்காக சிலுவை சுமக்க வேன்டும் எண்டு நீங்கள் இன்னும் சொல்ல வே இல்லையே... எப்பண்ணை சொல்ல போறீயள் ...???

உண்மையில்.. நாம் சுதந்திரம் பெற முடியாமல் இருப்பதன் காரணங்களை விட சுதந்திரம் பெற கூடாததன் காரணங்கள்தான் அதிகமாக இருக்குது... சிங்களவர்கள் நூறு சதவீதம் தமிழர்களுக்கு ஒரு உரிமையும் கொடுப்பதில்லை என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.. அப்படியும் கெஞ்சி கூத்தாடி.. சிலவற்றை சாதிக்க முயலும்போது.. வெண்ணை திரழும் போது தாளியை உடைப்பதை போல முஸ்லீம்கள்.. காலை வாருகிறார்கள்.. சில விடையங்களை பாருங்கள்.. மூதூர் இராணுவ முகாம்கள் தாக்கபட்டபோது.. மக்கள் பள்ளிகூடங்களில் தஞ்சம் புகுந்தார்கள்... அதற்க்கு தண்டனையாக கொழும்பில் தமிழர்களும் தமிழ் கடைகள் முஸ்லீம்களினால் சராமாரியாக தாக்கப்பட்ட்து....

எமது பிரச்சினை என்ன வெண்டா...... பயம்.. பீத்தல் பயம். சுய உரிமை, உண்மையை கூட கதைக்க பயம். என்னதான் முக்கினாலும் புலம்பெயர்ந்தோரினால் கடுகைகூட அசைக்க முடியாது என்பது கடந்த முப்பது வருச புரோட்டஸ்ட் போராட்டத்தில் கண்ட பயன்..

பிரபாகரனின் மனிதாபிமானமே எமது வீழ்ச்சிக்கு காரணம்... பிரபாகரன் உண்மையில் சாவடைந்திருந்தால் இந்த ஒரு காரணத்திற்க்காக வரலாற்று பக்கங்களில் சாடப்படுவார்......

ரகசியம் ரகசியம் எண்டு வாழ்ந்து ரகசியமாகவே போய்விட்டது தமிழீழம்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.