Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பந்தை எறிகிறார் முரளிதரன் : மீண்டும் சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிறைஸ்ட்சர்ச் : பந்தை எறிவது தொடர்பான சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் முரளிதரன். இவர், அளவுக்கு அதிகமாக கையை வளைத்து பந்து வீசுவதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அணியின் "சுழல் மன்னன்' முரளிதரன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்(777) வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவரது பந்துவீச்சு தொடர்பாக 1995 முதல் சர்ச்சை நீடிக்கிறது.

ஐ.சி.சி., மீது தவறு: தனக்கு எதிரான சர்ச்சைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காத முரளிதரன் வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார். சமீபத்திய நியூசிலாந் துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட அபாரமாக பந்து வீசினார். இந்தச் சூழலில் இவர் மீது மீண்டும் பந்தை எறிவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இம்முறை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: ஐ.சி.சி., நிர்ணயித்துள்ள 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்து பந்துவீசுகிறார் முரளிதரன். வெறும் கண்ணால் பார்த்தாலே இவர் பந்தை எறிவது தெளிவாக தெரியும். "சூப்பர் ஸ்லோ-மோஷன்' கேமரா மூலம் பார்க்கும் போது இத்தவறை துல்லியமாக உறுதி செய்யலாம். இதற்காக முரளிதரன் மீது குறை சொல்ல முடியாது. இவர் தனது பணியை கச்சிதமாக செய்கிறார். இதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் ஐ.சி.சி., மீது தான் தவறு உள்ளது. ஒரு வீரர் பந்தை எறிகிறார் என்றால் உடனே பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறார். ஆய்வகத்தில் அவரது உடல் அசைவை கண்காணிக்கின்றனர். பின்னர் சரியாக தான் பந்துவீசுகிறார் என விடுவித்து விடுகின்றனர். இது முரளிதரன் விஷயத்திலும் பல முறை நடந்துள்ளது. இவரது உடல் முழுவதும் "பல்புகளை' பொருத்தி பரிசோதனை செய்தனர். இறுதியில் பந்தை எறியவில்லை என தெரிவித்தனர்.

உண்மையிலேயே இவர் பந்தை எறியவில்லை என்று சொல்ல முடியுமா? சோதனையின் போது தன்னால் விதிமுறைகளுக்கு உட்பட்டு பந்துவீச முடியும் என நிரூபிக்கிறார். ஆனால் பரபரப்பான போட்டியின் போது இதனை கடைப்பிடிக்க முடிவதில்லை. கிரிக்கெட் போட்டிகள் ஆய்வகத்தில் விளையாடப்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பவுலிங் தொடர்பான தனது சோதனை முறைகளில் ஐ.சி.சி., மாற்றம் செய்ய வேண்டும். விதிமுறையை மீறும் பவுலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மார்க் ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.

http://sports.dinamalar.com/NewsDetail.asp...42&Value3=I

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். முரளிதரன் பந்தை எறிகிறார் தான். அதனால் தான் விக்கெட் வீழ்கிறது. ஆனால் இவரெல்லாம் தமிழ் என்று ஏன் பிறந்தார்களோ என்பதுதான் எங்களுக்குள்ள ஆச்சரியமே தவிர.. அவர் பந்தை எறிஞ்சால் என்ன பிடிச்சால் என்ன.. யார் கவலைப்படப் போறார்...??! :D :D

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இது ரெம்ப முக்கியம். புண்ணாக்குக் கிரிக்கெட். காலனித்துவ நாடுகளின் அடிமைச் சின்னம். சோம்பேறிகள் கூட்டம் தான் இப்போது இதை விளையாடுகின்றது. இருபத்தியிரண்டு அடி நீளமான ஓடுபாதயில் தனக்கு இலாவகமான பந்து வரும்வரைக்கும் அந்த மட்டையால் கூழ் துளாவுமாப்போல் துளாவி விட்டு, இலகுவான பந்து வந்தால் ஓங்கி அடித்து விட்டு ஓஒ என்ரு கூச்சல் போட்டு கும்மாளமடிப்பதுக்கு விளையாட்டு என்று பெயர் இதற்கு தேனீர் இடைவேளை, மதிய இடைவேளை வேற. என்ன, சிறிது டெக்னிக்கலாக சிந்தித்தால் விளையாட்டை இலகுவாக விளையாடி பிரபல்யமாகலாம். வேறொரு வெங்காயமும் இந்த விளையாட்டில் இல்லை. இதற்கு நல்ல உடல்வாகுகூடத் தேவையில்லை உதாரணம் முன்னாள் பாகிஸ்தானிய வீரர் இன்சமாம் உல்கக்? வேறு விளையாட்டுக்களில் இப்படியான பன்னிக் குட்டிகளை காண்பது அரிது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை தான். முரளிதரன் பந்தை எறிகிறார் தான். அதனால் தான் விக்கெட் வீழ்கிறது. ஆனால் இவரெல்லாம் தமிழ் என்று ஏன் பிறந்தார்களோ என்பதுதான் எங்களுக்குள்ள ஆச்சரியமே தவிர.. அவர் பந்தை எறிஞ்சால் என்ன பிடிச்சால் என்ன.. யார் கவலைப்படப் போறார்...??! :rolleyes::unsure:

சரியா சொன்னீங்க.. இவனுடைய பேட்டி ஒன்று முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதிலே ஒரு கேள்வி:"உங்களை முத்தையா எங்கள் சொத்தையா என்று தமிழ்நாட்டில் அழைக்கிரார்களே?". இதற்கு அவன் சொன்ன பதில்"நாங்க அங்க இறுந்துதானே வந்தோம்". இதனூடாக இவன் சிங்களவனின் போலி பரப்புரைக்கு பலம் சேர்த்து உள்ளான். அதாவது ஒட்டு மொத்த தமிழ் இனமே இலங்கைக்கு அடிமைகளாக வந்தவர்கள் என்ற மாதிரி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியா சொன்னீங்க.. இவனுடைய பேட்டி ஒன்று முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதிலே ஒரு கேள்வி:"உங்களை முத்தையா எங்கள் சொத்தையா என்று தமிழ்நாட்டில் அழைக்கிரார்களே?". இதற்கு அவன் சொன்ன பதில்"நாங்க அங்க இறுந்துதானே வந்தோம்". இதனூடாக இவன் சிங்களவனின் போலி பரப்புரைக்கு பலம் சேர்த்து உள்ளான். அதாவது ஒட்டு மொத்த தமிழ் இனமே இலங்கைக்கு அடிமைகளாக வந்தவர்கள் என்ற மாதிரி.

அட பையா

இந்திய வம்சாவளி தமிழர் இந்தியாவில இருந்து வராம உங்கட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட பையா

இந்திய வம்சாவளி தமிழர் இந்தியாவில இருந்து வராம உங்கட

வினாக்களுக்கு எப்படி விடை கொடுப்பது என்று ஒரு முறை உண்டு. பதிலை சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும்.தமிழருடய பல்லாயிரம் ஆண்டு வரலாறு அவனைப் போன்ற அடிவருடிகளுக்கு தெரியாது.இதில அவனுக்கு வக்காளத்து வேற...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.