Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்

Featured Replies

கே.பி. கைது தொடர்பில் கசியும் புதிய தகவல்கள்

* இவ் விடயம் 05. 09. 2009, (சனி), தமிழீழ நேரம் 6:31க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல், விசேட செய்தி

kpவிடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன. எனினும், தற்போது மலேசிய பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுத்துறையின் ஒருங்கிணைந்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலொன்றில் ஓகஸ்ட் 06ம் திகதி கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்டதாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகள் முற்றிலும் பொய்யானது என தேசிய புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் Lanka News Web என்ற இணையத்தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தகவல் தருகையில், மலேசியா விசேடக் குழு (Malaysian Special Bureau – MSB) அதிகாரிகளே கே.பி.யைக் கைதுசெய்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் கூறினார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் (MSB) கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மலேசியாவில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, அந்நாட்டு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சினால் மலேசியாவில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகரலாயத்திற்கு அனுப்பப்பட்ட மேஜர் ஜெனரல் உதய பெரேரா, தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளார்.

உதய பெரேரா மலேசியாவில் பணியமர்த்தப்பட்ட நாள் முதல், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கண்காணித்து அதுகுறித்து மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் புலனாய்வுப் பிரவினர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கே.பி. போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் மலேசியாவில் வாழ்வது, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என உதய பெரேரா தொடர்ந்தும் மலேசிய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையிலேயே கே.பி. குறித்து அதிகூடிய கவனம் செலுத்த மலேசிய விசேடக் குழு ஆரம்பித்துள்ளது.

அதன்பின்னர், கே.பியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரச தலைவர் மட்டத்தில் மலேசிய தலைவர்களிடம் வேண்டுகோளொன்றை விடுக்குமாறு MSB அதிகாரிகள் பிரதி உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், ஜூலை மாத இறுதியில், சிங்கப்புரில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களின் விசேட கூட்டத்தின் போது, கே.பி.யை கைதுசெய்து இலங்கையிடம் கையளிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மலேசிய வெளிவிவகார அமைச்சரிடம் எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இந்த தொலைபேசி அழைப்பை அடிப்படையாக வைத்து மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் கே.பி.யின் செய்மதி தொலைபேசி இலக்கத்தைத் பெற்றுக்கொண்ட பாதுகாப்புத் தரப்பினர், இதுகுறித்து ஆராயுமாறு அமெரிக்க மற்றும் மலேசிய தொலைத்தொடர்பு நிபுணர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை MSB அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.

இந்தத் தகவல்களுக்கமைய கே.பி. தங்கியிருந்த, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ‘ரியுன்’ விடுதியை முற்றுகையிட்ட MSB அதிகாரிகள், கே.பி.யின் சாரதி அப்புவை கைதுசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கே.பி. வேறிருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதற்கிடையே, MSBஅதிகாரிகள் அவசரமாக ஒருமுறை “வெளியே வாருங்கள்” என அப்பு வைப் பயன்படுத்தி கே.பி.யின் தொலைபேசிக்கு தகவலொன்றை வழங்கிப்பட்டதை அடுத்து விடுதியைவிட்டு வெளியே சென்ற கே.பி. கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த முற்றுகையின் போது எந்தவொரு இலங்கை பாதுகாப்பு அதிகாரியும் பங்கேற்கவில்லை. கே.பி. கைதுசெய்யப்பட்டதை அடுத்து MSB அதிகாரிகள் இதுகுறித்து பிரதி உயர்ஸ்தானிகருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்பு அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடியதன் பின்னர், தாய்லாந்து பாங்கொக் விமான நிலையத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கே.பி.யை ஒப்படைப்பதென இணக்கம் காணப்பட்டது.

இதுதொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்திற்கு தகவலளித்துள்ள மலேசிய பாதுகாப்புத் தரப்பினர், இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் சந்தேக நபரொருவரை பாங்கொக் விமான நிலையத்தில் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். குறித்த சந்தேக நபர் கே.பி. என தாய்லாந்து அரசாங்கத்திடம் இனங்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை மற்றும் மலேசிய பாதுகாப்புத் தரப்பினர் இணக்கம் கண்டுள்ளனர்.

இதனடிப்படையில், ஓகஸ்ட் 6ம் திகதி, இலங்கை விமானப்படையினரால் பயன்படுத்தப்படும் விமானமொன்றின் மூலம் பாங்கொக் விமான நிலையத்திற்குச் சென்ற இலங்கையின் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சிலர் எவ்விதத் தடங்கல்களும் இன்றி கே.பி.யை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் Lanka News Web என்ற இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.nerudal.com/nerudal.10051.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஊடகங்களி;ல் செய்திக்கு பஞ்சம் என்பதை தொடர்ந்து வரும் செய்திகள் கட்டியம் கூறி நிற்ககின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தன்னிச்சையாக சரணடைந்தார் என இதற்கு முன்னர் சில புலனாய்வுத் தகவல்கள் வெளிவந்திருந்தன

இது பற்றி........???

தமிழ் ஊடகங்களி;ல் செய்திக்கு பஞ்சம் என்பதை தொடர்ந்து வரும் செய்திகள் கட்டியம் கூறி நிற்ககின்றன!

சிங்கள அரசு விரும்பும் 100% மான செய்திகள் தான் இப்போது எல்லாம் தமிழ் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிறது... இதை கேட்க்க யாரும் இல்லை என்பதோடு அனுசரனை வழங்க பலர் முன் வந்து கொண்டும் இருக்கிறார்கள்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார்

ஆட்றா ராமா ஆட்டுறா ராமா.

... கே.பி, இந்திய உளவாளீ, இந்தியாவிற்குள்தான் இருந்து இவ்வலவு ஆட்டமும் .... என்றெல்லாம் வதந்திகளை கூசாமல் கிளப்பிய விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகம், இறுதி நாட்களில் திடீர் பல்டி அடித்து ... கே.பிக்கு பின் சென்ற மர்மம் துலங்காதா????

... அவன் துரோகி, இவன் துரோகி, அவன் காட்டிக் கொடுக்கிறான், சிங்களவனுக்கு...... என்று எல்லாப்பட்டமும் கொடுத்து விட்டு ... இறுதியாக அப்பட்டங்களுக்கு உண்மையான உரித்துடையவர்கள் நாமென நிரூபித்து விட்டார்கள் .... வாழ்க அனைத்துலக செயலகம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

... கே.பி, இந்திய உளவாளீ, இந்தியாவிற்குள்தான் இருந்து இவ்வலவு ஆட்டமும் .... என்றெல்லாம் வதந்திகளை கூசாமல் கிளப்பிய விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகம், இறுதி நாட்களில் திடீர் பல்டி அடித்து ... கே.பிக்கு பின் சென்ற மர்மம் துலங்காதா????

... அவன் துரோகி, இவன் துரோகி, அவன் காட்டிக் கொடுக்கிறான், சிங்களவனுக்கு...... என்று எல்லாப்பட்டமும் கொடுத்து விட்டு ... இறுதியாக அப்பட்டங்களுக்கு உண்மையான உரித்துடையவர்கள் நாமென நிரூபித்து விட்டார்கள் .... வாழ்க அனைத்துலக செயலகம்!!!

கே.பி யை கவ்வினமாதிரி இந்த அனைத்துலக செயலத்தையும் கவ்வேக்க தெரியும். அதுவரை வாழட்டும் ஆயுடுளுடன் அனைத்துலக செயலகம்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடமாக மலேசியாவிலும், அதனை சுற்றியுள்ள நாடுகளிலும் வாழ்ந்த கே.பி எந்த ஒரு புலனாய்வு குழுவினாலும் பிடிக்க முடியாமல் இருக்க இப்போ மட்டும் எப்படி கைதானார் என்ற கேள்வியும் உள்ளது? தொலைபேசி தொடர்புகளால் தான் அவரின் இருப்பிடம் பிடிக்கப்பட்டது என்றால் இதற்கு முன் அவர் தொலைபேசியே பாவிக்கவில்லையா?

அவர் இலங்கை அரசிடம் சரணடைவதால் அவருக்கு என்ன பலன்? நிச்சயமாக அவருக்கு நல்ல ஒரு எதிர்காலம் இலங்கை அரசிடம் இல்லை எனும் போது ஏன் சரணடைய வேண்டும்? அதுவும் அரச படைகளால் மிக மிக நீண்ட காலமாக தேடப்படும் நபர் ஏன் சரணடைய வேண்டும்?

இலங்கை அரசின் உளவு பிரிவினர் சில மாதங்களில் கே.பியின் இருப்பிடத்தை கண்டு பிடித்து அவரை கைது செய்தார்கள் என்பது நடைமுறை சாத்தியமற்றது. நம்ப முடியாமல் உள்ளது.

நிச்சயமாக நெல்லையன் சொல்வது போல் யாரோ பரதேசிகள் காட்டி கொடுத்துள்ளார்கள். ஏனெனில் இவ்வளவு விரைவாக அவர் பிடி பட சாத்தியமே இல்லை.

இனி வரும் தலைமை பற்றி மிக அவதானமாக இருக்க வேண்டும்.(பி) பணம் தின்னிகளாக மட்டுமே இவர்கள் இருப்பார்கள். இருக்கும் பணத்தில் சில மில்லியன்களையாவது வதை முகாமில் வாடும் மக்களுக்கு செலவிடுவார்களா?

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கே.பி. தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவின் மேற்பார்வையில் விசாரிக்கப்பட்டு வருகிறார். மலேசிய விசேடக் குழுவினால் (MsB) கைதுசெய்யும் பாரிய திட்டத்திற்கு மலேசியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா பெரும் பங்கெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் கபில ஹேன்தா விதாரணவினால் வி.புலிகளின் எந்த புலனாய்வு உறுப்பினர்களையும் கைது செய்ய முடியாத போது (வரலாற்றில்) மலேசியாவில் போய் புலனாய்வு செய்து கே.பியை கைது செய்தார் என்பது பம்மாத்து தான்.

இவ்வாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கே.பி.யிடம் தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகங்களினால் சித்தரிக்கப்பட்டதைப்போன்று கே.பி. ஒரு பெரிய தலைவர் அல்லவெனவும், அவர் அறிந்திருக்கும் தகவல்கள் வரையறையானவை எனவும் lanka news webஎன்ற இணையத்தளத்திற்கு தகவலளித்த அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்து பல காலமாக வாழ்வதால் கே.பிக்கு ராணுவ ரகசியங்கள் தெரிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. மேலும் பல காலமாக புலிகளுடன் தொடர்பற்று இருந்தால் நிறைய இரகசியங்கள் தெரிய வாய்ப்பில்லை. என்றாலும் இறுதியில் தலைவருடன் நடைபெற்ற உரையாடல் என்ன என்வென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இராஜதந்திர ரீதியாக இரு நாடுகளுக்குமிடையே இவ்வாறான இணக்கப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் கே.பி. மலேசியா சென்றிருந்ததை இலங்கையின் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி ராம் மற்றும் நகுலன் ஆகியோருடன் கே.பி. தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் மூலமே கே.பி மலேசியா சென்றமையை இலங்கைப் புலனாய்வுத் துறையினர் உறுதிசெய்துள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தில் ராம் மற்றும் நகுலன் ஆகியோர் பாதுகாப்புத் தரப்பினரால் கைதுசெய்யப்பட்ட விடயம் வெளியிடப்படாததன் காரணமாக கே.பி.யும் இதுகுறித்து அறியாதிருந்துள்ளார். இதன் காரணமாகவே, கே.பி. இவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

இச்செய்தி சிங்கள மக்களை குஸிப்படுத்தும் அதே சமயம் தமிழ் மக்களை மேலும் மனோவியல் ரீதியாக மேற்கொள்ளும் ஒரு கல்லில் இரு மாங்காய் போன்றதொரு செய்தியாக தான் பார்க்க முடிகிறது.

இதனிடையே, கே.பி. செனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி, மலேசியாவிலிருந்தே வழங்கப்பட்டதை MsB அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
நல்ல காலம் கே.பி அவர்கள் மலேசியாவில் தான் சிலையாக இருந்தார் என்று சொல்லவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.