Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து 300 பேர் இன்று விடுவிப்பு

Featured Replies

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய 300 பேர் வவுனியா, செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து இன்று காலை விடுவிக்கப்படடனர் என்று வவுனியா மாவட்ட செயலாளர் பி.சார்ள்ஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சொந்த இடமாகக் கொண்டவர்களே விடுவிக்கப்பட்டனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், அவர்களில் மிகப் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.

300 பேரில் 275 பேர் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் எனத் தெரிவித்த மாவட்டச் செயலர், ஏனைய 25 பேரும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா அல்லது இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

அதேசமயம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது உறவினர்களுடன் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதுவும் உடனடியாகவா அல்லது இடைத் தங்கல் முகாம்களில் வைக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவரா என்பது தெரியவில்லை.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு முறையும் அவங்கள் எங்கட சனத்தை விட்டுவிட்டோம் என்று ஆனா பாவங்கள் இதுவரைக்கும் அதுகள் வீட்ட போகேல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாமே முரண்பாடா இங்க வருகிது.

இந்த பி சார்ல்ஸ் எண்டுற அம்மாவும் சேந்து வித்தை காட்டுறாவோ தெரியேல்ல.

போன கிழமை யாழ்ப்பாணத்த சேந்த கர்ப்பிணித்தாய்மார விட்டிட்டு

அவங்களுக்க பயண ஒழுங்குகூட செய்யேல்லையெண்டு குற்றச்சாட்டு வந்திச்சு,

வவுனியாவில பஸ்ராண்டில நிர்க்கதியா நிண்டு ஒருகேயில் நிர்வாகம் பொறுப்பெடுத்து

நாள்களிச்சுத்தான் அனுப்பிவச்சதாக செய்தியும் சொன்னாங்க.

அந்தச்செய்தி இங்க வரயில்லையெண்டபடியா உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

கிழக்கிலயும் வன்னியிலயிருந்து மக்கள தாங்கள் பொறுப்பெடுக்கிறதா

கிழக்கின்ர விடிவெள்ளியள் போட்டோவும் போட்டு செய்தி சொல்லிச்சுதுகள்.

அதைப்பற்றி இங்க எழுதாதபடியா அதையும் உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

அதேமாதிரி புங்குடுதீவிலயும் கொண்டுபோய்விட்ட மக்கள் தங்களுக்கு வேலையில்ல வருமானமில்ல,

கொண்டுவந்து நிர்க்கதியா விட்டிட்டுப்போட்டுப் போட்டாங்கள் எண்டு ஆர்ப்பாட்டமும் செய்து,

அதுக்கு கொண்டுபோய் விட்டவங்கள் நடவடிக்கை எடுத்தாதவும் செய்தி வந்திச்சிது.

இப்ப ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை அந்த செய்தியும் இங்க வரயில்ல எண்டபடியா

அதுவும் உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

இப்பிடி எத்தனைபேர் எத்தனை வித்தை காட்டுறாங்க.

நாங்கதான் கண்டும் காணாதமாதிரி இருக்கிறம். :rolleyes:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே முரண்பாடா இங்க வருகிது.

இந்த பி சார்ல்ஸ் எண்டுற அம்மாவும் சேந்து வித்தை காட்டுறாவோ தெரியேல்ல.

போன கிழமை யாழ்ப்பாணத்த சேந்த கர்ப்பிணித்தாய்மார விட்டிட்டு

அவங்களுக்க பயண ஒழுங்குகூட செய்யேல்லையெண்டு குற்றச்சாட்டு வந்திச்சு,

வவுனியாவில பஸ்ராண்டில நிர்க்கதியா நிண்டு ஒருகேயில் நிர்வாகம் பொறுப்பெடுத்து

நாள்களிச்சுத்தான் அனுப்பிவச்சதாக செய்தியும் சொன்னாங்க.

அந்தச்செய்தி இங்க வரயில்லையெண்டபடியா உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

கிழக்கிலயும் வன்னியிலயிருந்து மக்கள தாங்கள் பொறுப்பெடுக்கிறதா

கிழக்கின்ர விடிவெள்ளியள் போட்டோவும் போட்டு செய்தி சொல்லிச்சுதுகள்.

அதைப்பற்றி இங்க எழுதாதபடியா அதையும் உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

அதேமாதிரி புங்குடுதீவிலயும் கொண்டுபோய்விட்ட மக்கள் தங்களுக்கு வேலையில்ல வருமானமில்ல,

கொண்டுவந்து நிர்க்கதியா விட்டிட்டுப்போட்டுப் போட்டாங்கள் எண்டு ஆர்ப்பாட்டமும் செய்து,

அதுக்கு கொண்டுபோய் விட்டவங்கள் நடவடிக்கை எடுத்தாதவும் செய்தி வந்திச்சிது.

இப்ப ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லை அந்த செய்தியும் இங்க வரயில்ல எண்டபடியா

அதுவும் உண்மையெண்டு எடுத்துக்கொள்ளலாம்.

இப்பிடி எத்தனைபேர் எத்தனை வித்தை காட்டுறாங்க.

நாங்கதான் கண்டும் காணாதமாதிரி இருக்கிறம். :lol:

அது தானே யாழிலே ஏதோ ஒன்றும் நடக்காத மாதிரியும் புலிகள் தான் எல்லாத்துக்கும் காரணம் எனவும் ஒருத்தர் யாழிலை வந்து விழாசுறார். இவரை பற்றி யாழ் கழமும் கண்டுக்காத படியால் இவர் இப்படி உருவமாக இருப்பாரோ என்று ஐயப்பட தோன்றுகிறது. இம்சா உல்லா.

pig-born-with-the-face-of-a-monkey_0.jpg

... இப்போதெல்லாம் அங்குள்ள மக்களின் அவலங்களை இங்கு "இருப்பவர் கும்பல்" யாரும் ஏனென்று கேட்பதில்லை!! ... நாம் மக்களின் அவலங்களிலும், அழிவுகளிலும் அரசியல் நடத்தியவர்களால்லாவா???? ....... மாறவா போகிறோம்????????

... இங்கு யாழ் களத்திலாவது யாராவது அம்மக்களுக்கு ஏதாவது ....??????? ........... வெற்றுப்பேச்சுக்கள்தான்!! வேறொன்றுமில்லை!!!

... இப்போதெல்லாம் அங்குள்ள மக்களின் அவலங்களை இங்கு "இருப்பவர் கும்பல்" யாரும் ஏனென்று கேட்பதில்லை!! ... நாம் மக்களின் அவலங்களிலும், அழிவுகளிலும் அரசியல் நடத்தியவர்களால்லாவா???? ....... மாறவா போகிறோம்????????

... இங்கு யாழ் களத்திலாவது யாராவது அம்மக்களுக்கு ஏதாவது ....??????? ........... வெற்றுப்பேச்சுக்கள்தான்!! வேறொன்றுமில்லை!!!

யாரய்யா, அங்கு முள்ளிக்கம்பிக்குள் கிடக்கும் மக்கள்? அவர்களை ஏன் நாம் கண்டுக்க வேண்டும்?

நாங்கள் யாழ்ப்பானத்து மேலாதிக்க வர்க்கத்தினர், அவர்கள்? :lol:

பயமாக இருக்கிறது, அம்மக்களின் உண்மை அவல நிலைமையை வெளிக்கொணர்ந்தால், சிறிலங்கா அரசு மட்டுமல்ல, இங்கும் எங்களுக்கு துரோகி பட்டம் அச்சடித்து தந்து விடுவார்கள்.

... சாகும்வரை உண்ணாவிரதங்கள்(இந்த சொல்லையே கொச்சைப்படுத்துப் போட்டோம்), வீதி மறிப்புப் போராட்டங்கள், ... எல்லாம் செய்தோம்! ஏன் இன்று இவைகள் செய்ய யாரும் முற்படவில்லை??????????? .... அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? உயிராபத்து இல்லையா? .........???????? .......... என்னய்யா போராட்டம்??? ... மக்களை பாதுகாக்கவா போராடினோம்???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பி சார்ல்ஸ் அம்மா, இ சுகுமார் அம்மா, கே கனேஸ் மாமா மூண்டுபேரும் ஒண்டிணைஞ்சு

முகாமில இருக்கிறவைக்கு முடிஞ்சளவுக்கு நல்லது செய்யினமாம்.

வசதியோட இல்லாட்டிலும் உசிரா வச்சிருந்தாவது

கொண்டுபோய் சேத்துப்போடுவம் எண்டுதான் முயற்சி செய்யினமாம்.

வடக்கு கிழக்கின் விடிவெள்ளியள் இடையில கொண்டுவந்துவிட்டவையள

கொஞ்சம் கொஞ்சமா எண்டாலும் கொண்டுபோய் விடுறாங்களாம்.

இதைக்கூட இங்க பயந்து பயந்துதான் எழுதவேண்டியாக்கிடக்கு. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தனின் கும்பல் 4 பேரை தலைக்கு 4 லட்சம் படி வாங்கி வீடு ஒன்றில் வைத்திருந்தார்கள் இந்தியாவுக்கு கொண்டு போக. அன்றிரவு தாடிக்காரரின் குழு இராணுவத்தோடு வந்து 4பேரையும் திருப்பி பிடித்து கொண்டு போயுள்ளார்கள். இச்சம்பவம் 2 கிழமைக்கு முதல் நடைபெற்றது. இவையளின் காசு பறிப்பு போட்டிக்கு அப்பாவி மக்கள் பலியாவதை என்னவென்று சொல்ல. உதை தான் இரை பிராந்தை ஏதோ பிராந்து பிடித்தது என்று சொல்வார்களாக்கும். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தார்த்தனின் கும்பல் 4 பேரை தலைக்கு 4 லட்சம் படி வாங்கி வீடு ஒன்றில் வைத்திருந்தார்கள் இந்தியாவுக்கு கொண்டு போக. அன்றிரவு தாடிக்காரரின் குழு இராணுவத்தோடு வந்து 4பேரையும் திருப்பி பிடித்து கொண்டு போயுள்ளார்கள். இச்சம்பவம் 2 கிழமைக்கு முதல் நடைபெற்றது. இவையளின் காசு பறிப்பு போட்டிக்கு அப்பாவி மக்கள் பலியாவதை என்னவென்று சொல்ல. உதை தான் இரை பிராந்தை ஏதோ பிராந்து பிடித்தது என்று சொல்வார்களாக்கும். :lol::lol:

ம்...... 4 மாதத்துக்கு பிறகு 4 லச்சம் குடுத்து????

என்னத்துக்கு?

அவங்களே விடத்துடங்கீட்டாங்கள்.......

ஒருத்தரும் காசுகுடுத்து வெளியால போகவேண்டாம்,

அவங்களே விடுவாங்களெண்டுதான் நீங்கள் சொன்ன ரெண்டு அமைப்பும் சொன்னது

வேற ஒரு அமைப்பு, அதுதான் வன்னிக்க இருந்த மூத்த அரசியல்வாதியாம்

அவர்ட அமைப்ப சேந்த அரசசார்பற்ற நிறுவன ஆக்கள்தானாம் பிடிபட்டது

எண்டு செய்தி வந்திச்சு.

கறக்கிறதுக்கெண்டே சிலபேர்........

இவங்களால மக்களுக்கு உதவி செய்யிறவங்களுக்கும்

கெட்டபேர். :lol:

Edited by Mathivathanang

  • கருத்துக்கள உறவுகள்

ம்...... 4 மாதத்துக்கு பிறகு 4 லச்சம் குடுத்து????

4 லட்சத்தை வெளிநாட்டில் உள்ள சகோதரனோ சகோதரியோ குளிரில் அடித்து கொடுத்ததை இப்படி இலகுவாக பெற்று வாழும் வாழ்க்கை. அதுவும் எமது இனத்தை சேர்ந்தவர்கள். சா, என்ன கேவலம் கெட்ட இனம்? இதுக்குள்ளே பிரபாகரன் என்ன செய்தவராம். கடைசி வரை போராடி போராளியாக தானும் தனது குடும்பத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.

என்னத்துக்கு?

வயது போனதுகளை விடவே எண்ணற்ற கேள்வி. யாராவது ஒரு புலி உறுப்பினரை தெரியும் அல்லது பார்த்தனான் என்று தப்பி தவறி சொன்னாலே போதும். அவர்கள் வெளியேற வாய்ப்பே இல்லை.

அவங்களே விடத்துடங்கீட்டாங்கள்.......

யாருக்கு?? அது தானே காலம் காலமா நடக்குது. இப்ப மட்டும் என்ன புதிதாக??? :lol:

ஒருத்தரும் காசுகுடுத்து வெளியால போகவேண்டாம்,

அவங்களே விடுவாங்களெண்டுதான் நீங்கள் சொன்ன ரெண்டு அமைப்பும் சொன்னது

சொன்னது மட்டும் தான் செயலில் இல்லை. எனது அக்கா குடும்பத்தாரை முட்கம்பி வேலிக்குள்ளால் தான் என்னால் பார்த்து கதைக்க முடிந்தது. அடையாளமே தெரியவில்லை. பெயரை சொல்லி கூட்டி வந்ததால் (அந்த புறசஸ் பற்றி சொல்ல ஆயிரம் பக்கம் தேவை) அவராக தான் கட்டாயம் இருக்குமென நினைத்து கதைத்தேன். அப்போ இந்த டக்ளஸ் கூட்டம், கருணா கூட்டம், சித்தார்த்தன் கூட்டமென அலைந்து கொண்டிருந்தார்கள். பூந்தோட்டத்தில் உள்ள உறவினருடன் போனதால் ஆட்களை அவரே எனக்கு யார் யார் என சொல்லி கொண்டிருந்தார்.அவரே சொன்னார் எவ்வளவு காசு யாருக்கு கொடுத்தால் வெளியில் கொண்டு வரலாம் என்று. ஆனாலும் நான் மேலே சொன்ன சம்பவம் அவர்களுக்குள்ளான போட்டு என்று மட்டுமே சொன்னேன். இக்கயவர் கூட்டத்தின் அறிக்கைகளை காலம் காலமாக தானே பார்க்கிறோம்.செயலில் சுழியம் தான்.

வேற ஒரு அமைப்பு, அதுதான் வன்னிக்க இருந்த மூத்த அரசியல்வாதியாம்

அவர்ட அமைப்ப சேந்த அரசசார்பற்ற நிறுவன ஆக்கள்தானாம் பிடிபட்டது

எண்டு செய்தி வந்திச்சு.

நான் சொன்ன நபர்கள் இருவர் கிழக்கை சேர்ந்தவர்கள். இருவர் வடக்கை சேர்ந்தவர்கள். அனைவரும் மாணவர்கள்.

கறக்கிறதுக்கெண்டே சிலபேர்........

அந்த வரிசையில் அரச படையினர், கருணா குழு, டக்கிளஸ் குழு, சித்தார்த்தன் குழு, ஈரோஸ் குழு என நாயாக அலைகிறார்கள்.

இவங்களால மக்களுக்கு உதவி செய்யிறவங்களுக்கும்

கெட்டபேர். :lol:

எனது பெற்றோரும் , உறவினர்களும் கொஞ்ச நாள் சமைத்து கொடுத்தார்கள். இராணுவ மிரட்டலால் தொடர்ந்தும் செயற்பட முடியாமல் போய் விட்டது. ஏனெனில் சாப்பாடு சமைத்து விற்கும் நிறுவனங்கள் தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்டவை.அவர்களின் வியாபாரத்திற்கு நாங்கள் உலை வைக்க கூடாது என்பது தான் முக்கிய காரணம்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4 லட்சத்தை வெளிநாட்டில் உள்ள சகோதரனோ சகோதரியோ குளிரில் அடித்து கொடுத்ததை இப்படி இலகுவாக பெற்று வாழும் வாழ்க்கை. அதுவும் எமது இனத்தை சேர்ந்தவர்கள். சா, என்ன கேவலம் கெட்ட இனம்? இதுக்குள்ளே பிரபாகரன் என்ன செய்தவராம். கடைசி வரை போராடி போராளியாக தானும் தனது குடும்பத்தையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
ரெண்டரைலச்சம்பேர் இருக்கேக்க கொஞ்சப்பேர் லச்சக்கணக்கில காசுகுடுத்து தப்பிறதெண்டா பிரச்சனை காசுகுடுத்து தப்ப நினைக்கிறவையிலதானெண்டு தெரியாதோ, இந்த சின்ன லொஜிக் தெரியாதவையெல்லாம் காசுகுடுத்து வெளியால எடுத்து பாஸ்ப்போட் எடுத்து கொண்டுவரப்போயினமாம். சகோதரனோ சகோதரியோ குளிரில் அடிச்சு உழைச்சதாயிருந்தா குடுத்து வெளியில எடுக்க முற்பட்டிருக்காயினம். ஊர்ப்பணத்தை கொள்ளையடிச்ச கூட்டம் அங்கை பதுங்கியிருக்கிற சகாக்கள காப்பாத்த குடுத்ததாத்தானிருக்கும். உடையார்கட்டு வரைக்கும் உள்ளுக்க விட்டு அடிக்கிற தந்திரம்பற்றி பேசி, பிறகு சனத்திண்ட பிணத்தின்மேலநிண்டு போராடினநாங்களல்லோ! அதுதான் கடைசிவரை போராடினவரின்ட தலையிண்ட பின்பக்கத்தில சூடு. சரணடைஞ்சு போட்டதோ, ஓடேக்க போட்டதோ யாருக்குத் தெரியும்? :lol:

வயது போனதுகளை விடவே எண்ணற்ற கேள்வி. யாராவது ஒரு புலி உறுப்பினரை தெரியும் அல்லது பார்த்தனான் என்று தப்பி தவறி சொன்னாலே போதும். அவர்கள் வெளியேற வாய்ப்பே இல்லை.
அவங்களும் அது மோப்பம்பிடிக்கத்தானே இவ்வளவு பேரையும் உள்ள வச்சிருக்கிறாங்கள். :D

யாருக்கு?? அது தானே காலம் காலமா நடக்குது. இப்ப மட்டும் என்ன புதிதாக??? :lol:
நான் சொன்னது காம்பிலயிருந்து வெளீல விடுறதுபற்றி, நீங்கள் வேறை கற்பனை பண்ணியிருப்பியளோ? :lol:

சொன்னது மட்டும் தான் செயலில் இல்லை. எனது அக்கா குடும்பத்தாரை முட்கம்பி வேலிக்குள்ளால் தான் என்னால் பார்த்து கதைக்க முடிந்தது. அடையாளமே தெரியவில்லை. பெயரை சொல்லி கூட்டி வந்ததால் (அந்த புறசஸ் பற்றி சொல்ல ஆயிரம் பக்கம் தேவை) அவராக தான் கட்டாயம் இருக்குமென நினைத்து கதைத்தேன். அப்போ இந்த டக்ளஸ் கூட்டம், கருணா கூட்டம், சித்தார்த்தன் கூட்டமென அலைந்து கொண்டிருந்தார்கள். பூந்தோட்டத்தில் உள்ள உறவினருடன் போனதால் ஆட்களை அவரே எனக்கு யார் யார் என சொல்லி கொண்டிருந்தார்.அவரே சொன்னார் எவ்வளவு காசு யாருக்கு கொடுத்தால் வெளியில் கொண்டு வரலாம் என்று. ஆனாலும் நான் மேலே சொன்ன சம்பவம் அவர்களுக்குள்ளான போட்டு என்று மட்டுமே சொன்னேன். இக்கயவர் கூட்டத்தின் அறிக்கைகளை காலம் காலமாக தானே பார்க்கிறோம்.செயலில் சுழியம் தான்.
ஓமோம் நீங்கள் இஞ்ச சண்டைநேரம் சொன்னதுகள வச்சுப்பாக்கேக்க யார் யார் உண்மை சொல்லுறினம் யார்யார் பொய் சொல்லுவினம் எண்டு விளங்கக்கூடியதாயிருக்கு. உடையார்கட்டுமட்டும் சிங்களவன்ர பிணம்தானே கண்டநாங்கள், நாங்கள் அடிச்சு அடிச்சு விழுத்திப்போட்டு தந்திரோபாய நகர்வுகளைத்தானே மேற்கொண்டநாங்கள். இதிலையிருந்து தெரியிது எந்தக்கூட்டம் எப்பிடியான அறிக்கை விடுமெண்டு.

நான் சொன்ன நபர்கள் இருவர் கிழக்கை சேர்ந்தவர்கள். இருவர் வடக்கை சேர்ந்தவர்கள். அனைவரும் மாணவர்கள்.
குடுத்தவனில பிழையவச்சுக்கொண்டு அவன்செய்தான் இவன்செய்தானெண்டு அறிக்கை விடிறது முட்டாள்வேலை.

அந்த வரிசையில் அரச படையினர், கருணா குழு, டக்கிளஸ் குழு, சித்தார்த்தன் குழு, ஈரோஸ் குழு என நாயாக அலைகிறார்கள்.
தேவையுள்ளவன்தான் நாயயும் பேயயும் நாடுவான். நேர்மையானவனுக்கு புறக்கிறாசி தேவையில்ல. :lol:

எனது பெற்றோரும் , உறவினர்களும் கொஞ்ச நாள் சமைத்து கொடுத்தார்கள். இராணுவ மிரட்டலால் தொடர்ந்தும் செயற்பட முடியாமல் போய் விட்டது. ஏனெனில் சாப்பாடு சமைத்து விற்கும் நிறுவனங்கள் தெற்கில் இருந்து கொண்டு வரப்பட்டவை.அவர்களின் வியாபாரத்திற்கு நாங்கள் உலை வைக்க கூடாது என்பது தான் முக்கிய காரணம்.
ஓ நானும் கேள்விப்பட்டனான். கொஞ்சக்காலம் சாப்பாடு சரியில்லையெண்டு கொம்பிளென் வந்ததெண்டு. அது உங்கட உறவினர்களிண்டயாயிருக்குமோ? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.