Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசராசன் ரசித்த பாடல்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

காற்றினிலே வரும் கீதம் (1978) என்ற படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் S. ஜானகி மற்றும் P. ஜெயச்சந்திரன் ஆகியோர் பாடிய ஒரு பாடல் அடுத்து வருகிறது. பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்குச் சொந்தமானவை. பாடலைக் கேட்கின்றபோது, முதன் முதலாக என் அன்புக்குரியவள் அந்த கோயில் வாசலில் என்னை (முறைத்துப்) பார்த்த பார்வை ஒரு மின்னலாக மீண்டும் வெட்டிப் போகிறது. அந்த நாள் நினைவுகள் இன்னும் என்னுள் பசுமையாக........ இருதயம் படுவேகமாக துடித்து இரத்தத்தை உடலெங்கும் பாய்ச்சிவிட, இருதயம் இருந்தும் இல்லாதது போல ஒரு பிரமை........ உடல் முழுவதும் ஒரு வகை வெப்பத்தை உணர்கிறேன்........சில நிமிடங்கள் தடுமாறித்தான் போய்விடுகிறேன்........ :lol:

வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

http://www.youtube.com/watch?v=NKJVvefSH-M

  • Replies 58
  • Views 22.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மீண்டும் காற்றினிலே வரும் கீதம் படத்திலிருந்து என் அபிமான பாடகர் P. ஜெயச்சந்திரன் பாடிய பாடல் ஒன்று. பாடகரின் குரல், பாடல் வரிகள், இசை எல்லாமே என் மனதைச் சுண்டி இழுக்கும். இந்தப் பாடல் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டுத் தான் போவேன். :lol:

சித்திரைச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்

http://www.youtube.com/watch?v=tpRcoLJ4kIA

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. இந்த காற்றினிலே வரும் கீதம் படத்தில்தான் எத்தனை நல்ல பாடல்கள்..! இணைப்புகளுக்கு நன்றி ராசராசன்..! இப்படியான பாடல்கள் இந்தக்காலத்திலும் வருமாக இருந்தால்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காற்றினிலே வரும் கீதம் (1978) என்ற படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் S. ஜானகி மற்றும் P. ஜெயச்சந்திரன் ஆகியோர் பாடிய ஒரு பாடல் அடுத்து வருகிறது. பாடல் வரிகள் கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்குச் சொந்தமானவை. பாடலைக் கேட்கின்றபோது, முதன் முதலாக என் அன்புக்குரியவள் அந்த கோயில் வாசலில் என்னை (முறைத்துப்) பார்த்த பார்வை ஒரு மின்னலாக மீண்டும் வெட்டிப் போகிறது. அந்த நாள் நினைவுகள் இன்னும் என்னுள் பசுமையாக........ இருதயம் படுவேகமாக துடித்து இரத்தத்தை உடலெங்கும் பாய்ச்சிவிட, இருதயம் இருந்தும் இல்லாதது போல ஒரு பிரமை........ உடல் முழுவதும் ஒரு வகை வெப்பத்தை உணர்கிறேன்........சில நிமிடங்கள் தடுமாறித்தான் போய்விடுகிறேன்........ :lol:

வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

http://www.youtube.com/watch?v=NKJVvefSH-M

அருமையான பாடல் ஒன்று.இணைப்புக்கு நன்றி ரா.ரா.

  • தொடங்கியவர்

நன்றி இசைக்கலைஞன் அண்ணா மற்றும் நுணா உங்கள் கருத்து பகிர்வுக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

.

எனக்குப் பிடித்தபாடல்களில் ஒன்று , ராசராசன்.

  • தொடங்கியவர்

அடிமைப் பெண் (1969) என்ற படத்திலிருந்து K. V. மகாதேவன் அவர்களின் இசையில் P. சுசீலா மற்றும் S. P. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடிய பாடல் அடுத்து வருகிறது. பாடலை எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள். தமிழ் திரையிசைக்கு S. P. பாலசுப்பிரமணியம் அவர்களை அறிமுகம் செய்துவைத்த பாடல் இது. இந்தப் பாடலைப் பாட வாய்ப்பு கிடைத்து, பாடல் ஒலிப்பதிவு செய்யவிருந்த நாளில் பாலுவுக்கு காய்ச்சல் வந்துவிட ஒலிப்பதிவு தள்ளிவைக்கப்படுகிறது. தனக்காக ஒலிப்பதிவை தள்ளிவைப்பதா என பாலு, MGR அவர்களிடம் சொன்னபோது, "நீ எனக்காகப் பாடுவதாக உனது நண்பர்கள் அனைவரிடமும் கூறியிருப்பாய். இந்நிலையில் உனக்கென அளிக்கப்பட்ட வாய்ப்பைப் பறித்தால் நீ மிகவும் ஏமாற்றம் அடைவாய், அதனை நான் தவிர்க்க விரும்புகிறேன்" என MGR அவர்கள் பெருந்தன்மையோடு கூறி அந்த வாய்ப்பை மீண்டும் தனக்கு வழங்கியதாக நன்றியுணர்வுடன் பாலு குறிப்பிடுகின்றார். :lol:

பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

ஆஆஆ...பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்

ஆஆ..தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்

என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ

என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ

அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக் காட்டாயோ

பாடலின் கடைசிச் சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும். பொய்கையை பெண்ணாகவும் தென்றலை அவள் காதலனாகவும் உவமித்து காதலர்களுக்கிடையில் இருக்கும் அந்தச் சின்னச் சின்ன உரசல்களை விரசமின்றி வெளிப்படுத்தும் விதம் அழகு. :D

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா

http://www.youtube.com/watch?v=hHNV-sum3Yo

  • தொடங்கியவர்

எனக்குப் பிடித்தபாடல்களில் ஒன்று , ராசராசன்.

நன்றி தமிழ் சிறி. :D எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். நான் எனது மாமா வீட்டில் தான் என்னுடைய தாத்தா, பாட்டி மேற்பார்வையில் வளர்ந்தவன். என்னுடைய மாமா TMS - சுசீலா பாடல்களை தான் விரும்பி கேட்பார். அப்பொழுது கேட்ட பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.

இந்தப் பாடலை வெள்ளிக்கிழமை விரதம் (1974) என்ற படத்திலிருந்து சங்கர் - கணேஷ் இசையில் T. M. சௌந்தரராஜன் மற்றும் P. சுசீலா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

  • தொடங்கியவர்

அடுத்ததாக முந்தானை முடிச்சு (1983) என்ற திரைப் படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்து S. ஜானகி அவர்களுடன் இணைந்து பாடிய ஒரு கிராமியப் பாடலை இணைக்கிறேன். இளையராஜா பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் ஆயிரம் கதைகளைச் சொல்லி நிற்கும் ... :)

விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.