Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பல தடவை தோல்விகண்ட ஜெனரல் பொன்சேகா "இராணுவ மேதாவி"யென உரிமை கோர முடியாது -கோதாபய

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா "தப்பான யுத்த கதாநாயகன்" எனவும் அவர் "இராணுவ மேதாவி" என்று உரிமை கோர முடியாதென்றும் ஏனென்றால் கடந்த காலத்தில் அவர் பல தடவைகள் தோல்வி கண்டவர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அவரின் தலைமையின் கீழ் அதிகளவு தோல்விகள் ஏற்பட்டன. உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டவர்களில் இவர் ஒருவர் என்று ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு கோதாபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள்-3 தாக்குதலை நடத்திய போது யாழ்ப்பாணத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் அகப்பட்டிருந்தனர். படைகளை வாபஸ் பெறும்படி பொன்சேகா உத்தரவிட்டிருந்த போதும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் கொழும்பிலிருந்த ஏனைய உயர்மட்டத்தினரும் படைகளை தொடர்ந்து இருந்து சண்டையிடுமாறு பணித்திருந்தனர். பல்குழல் ரொக்கட் , லோஞ்சர்கள், ஆயுதங்களை பாகிஸ்தான் வழங்கியது.

முற்றுகையிடப்பட்டிருந்த படையினருக்கு அவை தேவைப்பட்டன. பின்னர் புலிகள் வன்னிக்காடுகளுக்கு பின் வாங்கிச் சென்றனர். தனது வாழ்க்கையில் தான் ஒருபோதும் தோல்வி கண்டதில்லை என்றும் எப்போதுமே தேசத்துக்கு அளித்த உறுதிமொழியை பேணிக் காப்பாற்றி வந்ததாகவும் அண்மையில் செய்தியாளர்களிடம் பொன்சேகா கூறியிருந்தார்.

அத்துடன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தன்னை "உலகிலேயே சிறந்த ஜெனரல்" என்று குறிப்பிட்டிருந்ததாக பொன்சேகா சமீபத்திய செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

ஆனால், கோதாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருப்பதன் பிரகாரம் இராணுவத்தில் பொன்சேகாவிலும் பார்க்க சிறந்த தலைவர்கள் இருந்துள்ளனர்.இலங்கையில் தற்போதுள்ள சர்ச்சைக்குரிய அரசியல் கேள்வியாக உள்ளது யுத்தத்தில் வெற்றி பெற்றவர் எவர் என்பதாகும்.

சகலரும் வழங்கிய பங்களிப்பை மறந்துவிட வேண்டாம் என்று கோதாபய மக்களை கேட்டுள்ளார். களத்தில் தியாகம் செய்தவர்கள்,படைத் தளபதிகள் அல்லது களத்தில் போராடிய தளபதிகள் அல்லது பூநகரியை கைப்பற்றிவிட்டு புதுக்குடியிருப்புக்கு சகல வழிகளாலும் சென்ற படையணியின் பிரிகேடியர் சாவீந்திர சில்வா உட்பட ஒவ்வொருவரையும் மறந்து விடக்கூடாது என்று கோதாபய கூறியுள்ளார்.

நான் மட்டுமே பங்களிப்பைச் செலுத்தியதாக இராணுவத்தளபதி உரிமை கோரினால் இந்த ஆட்கள் எல்லாம் என்ன மாதிரி? பிறகு ஒவ்வொருவரும் உரிமை கோரத் தொடங்கிவிட முடியும். இது முழுமையாக ஒன்று சேர்ந்து மேற்கொள்ளப்படும் பணியாகும்.

மேலும் கடற்படையினருக்கு நன்றி கூறவேண்டும். கடற்புலிகள் கடலுக்குச் செல்ல முடியாமல் செய்ததற்காக அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். பொன்சேகா தரக்குறைவான அரசியல்வாதி போன்று செயற்படுகிறார் என்று கோதாபய கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை வெளியேற்றுவதற்கு சர்வதேச சதி இருந்ததாக அவர் கூறியுள்ளார். ஏனெனில் யுத்தத்தை நிறுத்தி புலிகளை பாதுகாக்க குறிப்பிட்ட சில பலம் வாய்ந்த நாடுகளின் அழுத்தத்தை அவர் எதிர்த்திருந்ததாகவும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

எமது வெற்றியை பல நாடுகள் பாராட்டினாலும் சில நாடுகள் ஏமாற்றம் அடைந்திருந்தன. எந்தவொரு அரசாங்கத்தையும் குறிப்பிட்டுக் கூற நான் விரும்பவில்லை. ஆயினும் புலிகளை பாதுகாப்பாற்கான அழுத்தங்கள் வந்தன.

இந்த சக்திகள் ஜனாதிபதி வெளியேறுவதை பார்க்க விரும்புகின்றன. புலிகளுக்கு ஈழத்தை கொடுப்பதற்கு வேறுபட்ட வழிமுறையுடன் வரமுடியுமென சில சமயம் அவர்கள் பார்க்கக்கூடும். இந்த நிலைமை குறித்து நாம் அறிந்திருக்க வேண்டியுள்ளது என்றும் கோதாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

http://www.murasam.ch/srilanka/18346------q-q----.html

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் தலைமையின் கீழ் அதிகளவு தோல்விகள் ஏற்பட்டன. உண்மையிலேயே 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து படையினரை வாபஸ் பெறும்படி உத்தரவிட்டவர்களில் இவர் ஒருவர் என்று ....

முதலாவது உண்மை

இதிலை முக்கியமான ஒரு விசயம் என்னவென்றால் சரத் பொன்சேகா பலமுறை தோற்றும் அவரை தேற்றி மீண்டும் அனுப்பி எம்மை

வெற்றிகொள்ள சிங்களதேசியம் செய்துள்ளது.

ஆனால் ஒருமுறை தோற்றவுடன் தலைவரை தூற்றி எழுதும் வக்கிரத்தனம் எமது மத்தியில்தான் நிறைந்து ஆடுது.

இவ்வளவுமுறை தோற்றபோதும் சரத் பொன்சேகாவுடன் நின்ற சிங்களதேசியம் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

"தோல்விகள்தான் வெற்றியின் படிக்கட்டுகள்" என்பதை சிங்களவர்கள் சரியாக நம்பியுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் நம்பினார்கள்.ஆனையிறவு முகாம் கனவு சிங்களம் என்ன அமெரிக்காவே அசைக்க முடியாது என்ற முகாம் தான் புலிகளால் தகர்த்து எறியப்பட்டது. சிங்கள இராணுவத்தின் ஓட்டத்தை கண்ணால் கண்டவன்.ஆகவே கிருபனின் கூற்று பொய்யாகிறது.

உலகின் எல்லா சக்திகலுடனும் சேர்ந்து ஒரு சிறிய மனித கூட்டமாம் தமிழ் இனத்தை அழிப்பது எவ்வளவு சிறிய விடயம். ஏன் இந்த உலகத்தால் சிறிய தலபானை அழிக்க முடியவில்லை. அவர்கள் மக்கள் இயக்கமாக இருந்தும்.பல நாடுகள் மறைமுகமாக அவர்களுக்கு உதவுகின்றன என்பது தான் யதார்த்தம். அத்தோடு எமக்கு தப்பியோடி மீண்டும் பலமுடன் வர (எரித்திரியா போல )வசதி இருக்கவில்லை. நாலு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருந்ததால் தப்புவதற்கான வழி இருக்கவில்லை.

அமெரிக்கா தமது கட்டுப்பாட்டில் பல நாடுகளை இராணுவ ரீதியாக கட்டுப்படுத்தினாலும் சில நாடுகளை தமக்கு ஆதரவான சக்திகளை ஜனாதிபதி/ பிரதமர் ஆக்குவதும் இவர்களுக்கு கைவந்த கலை. அந்த வகையில் சரத் அமெரிகாவின் தெரிவு. இந்தியா தலையால் நடப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

சிங்களவருக்கு சரத் எப்படி ஒரு கதாநாயகனோ தமிழருக்கு ஒரு பால்ராஜ்.

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் எல்லா சக்திகளுடனும் சேர்ந்து ஒரு சிறிய மனித கூட்டமாம் தமிழ் இனத்தை அழிப்பது எவ்வளவு சிறிய விடயம்.

உண்மையில் தெரியக்கூடியதாக 20 நாடுகளும்

தெரியாமல் கியூபா உட்பட அனைத்து நாடுகளும் எம்மை அழிக்க உதவின என்ற செய்தி கடுமையானதுதான்

ஆனால் இப்படி சில நாடுகளை சமாளிக்கவேண்டிவரும் என முன்பே தீர்மானித்து

எந்த தியாகத்துக்கும் தயாரான படை அமைப்புக்களை தலைவர் தயாராக்கியிருந்தார்

ஆனால் மனித நேசமென்றும்

மனிதாபிமானமென்றும் பேசும் நாடுகளை கைகளை விரித்தபோது....

கொண்ட கொள்கையை விட்டுக்கொடாது

அவர்களது உண்மைத்தோற்றங்களை வெளியில் கொண்டுவரும்வரை நின்று போராடினார் தலைவர்

தான் வளர்த்த பிள்ளைகளுடன் சங்கமமானார் அவர்

அதற்குமேல்.................???????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.