Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகமுக்கியமாக கருத்திலெடுக்க வேண்டியவை

Featured Replies

தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகமுக்கியமாக கருத்திலெடுக்க வேண்டியவை

1. தமிழினப் படு கொலையை செய்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்

2. ஒரு அரசு தூக்கி எறியப்படும் போது உலகம் தமிழர்களது நிலையினைப் புரிந்து கொள்ள உதவும்.

இல்லாவிடில் நடந்து முடிந்த யுத்தத்தம் சரியானது என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர் என்பதாகிவிடும்

3. வடகிழக்கு பிரிந்திருப்பதை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றாகிவிடும்

4. எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ஆகவே துரோகிகளின் கூடாராமாக இருக்கும் மகிந்த அரசு தூக்கியெறியப்படவேண்டும்.

5. சரத்பொன்சேகா இராணுவத்தின் தளபதியாக இருந்தாலும் அவரையும் வழிநடத்திய மகிந்த குடும்ப அதிகாரத்தைப் பறிக்க வேண்டும்

6. எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருந்தும் ஒன்றும் செய்துவிடமுடியாத நிலைக்கு காரணமாக இருக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிக்கபடல் வேண்டும்.

இன்னும் பல கூறலாம் இதற்கு சரத்பொன்சேகா இன அழித்தலை செய்தவன் என்றாலும் அதனை செய்யச் சொல்லி கட்டளை பிறப்பித்தது ராஜபக்சவும் அவனது குடும்பமும் ஆகவே எமக்கு வேண்டியது ராஜபக்சவும் அவனது குடும்பத்தினது அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். எனவே சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய வேண்டும். சம்பந்தன் ஜயா இத் தேர்தலில் நிற்பதன் மூலம் மறைமுகமாக ராஜபக்சவுக்கே அது நன்மையாக அமைந்து விடும் காரணம் தமிழ்மக்களுடைய வாக்குகள் மிக முக்கியமானது தயவு செய்து சம்பந்தன் அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும். இலலையேல் துரோகிகள் காப்பாற்றப்பட்டு அவர்களது பிடியில் தமிழர்களது வாழ்வு சிக்கி சீரளிந்துவிடும்.

நமக்கு ஒரு கண்போனால் என்ன எதிரிக.கு இரண்டு கண்ணும்போக வேண்டும் என்று சொல்வதைப்போல் தமிழர்களது முடிவு அமையவேண்டும்.

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மிகமுக்கியமாக கருத்திலெடுக்க வேண்டியவை

1. தமிழினப் படு கொலையை செய்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும்

2. ஒரு அரசு தூக்கி எறியப்படும் போது உலகம் தமிழர்களது நிலையினைப் புரிந்து கொள்ள உதவும்.

இல்லாவிடில் நடந்து முடிந்த யுத்தத்தம் சரியானது என்பதை தமிழர்கள் ஏற்றுக்கொண்டள்ளனர் என்பதாகிவிடும்

3. வடகிழக்கு பிரிந்திருப்பதை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்றாகிவிடும்

4. எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் ஆகவே துரோகிகளின் கூடாராமாக இருக்கும் மகிந்த அரசு தூக்கியெறியப்படவேண்டும்.

5. சரத்பொன்சேகா இராணுவத்தின் தளபதியாக இருந்தாலும் அவரையும் வழிநடத்திய மகிந்த குடும்ப அதிகாரத்தைப் பறிக்க வேண்டும்

6. எங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாக இருந்தும் ஒன்றும் செய்துவிடமுடியாத நிலைக்கு காரணமாக இருக்கும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிக்கபடல் வேண்டும்.

இன்னும் பல கூறலாம் இதற்கு சரத்பொன்சேகா இன அழித்தலை செய்தவன் என்றாலும் அதனை செய்யச் சொல்லி கட்டளை பிறப்பித்தது ராஜபக்சவும் அவனது குடும்பமும் ஆகவே எமக்கு வேண்டியது ராஜபக்சவும் அவனது குடும்பத்தினது அதிகாரம் பறிக்கப்பட வேண்டும். எனவே சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய வேண்டும். சம்பந்தன் ஜயா இத் தேர்தலில் நிற்பதன் மூலம் மறைமுகமாக ராஜபக்சவுக்கே அது நன்மையாக அமைந்து விடும் காரணம் தமிழ்மக்களுடைய வாக்குகள் மிக முக்கியமானது தயவு செய்து சம்பந்தன் அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும். இலலையேல் துரோகிகள் காப்பாற்றப்பட்டு அவர்களது பிடியில் தமிழர்களது வாழ்வு சிக்கி சீரளிந்துவிடும்.

நமக்கு ஒரு கண்போனால் என்ன எதிரிக.கு இரண்டு கண்ணும்போக வேண்டும் என்று சொல்வதைப்போல் தமிழர்களது முடிவு அமையவேண்டும்.

அன்புள்ள சூரியா,

எங்கேயிருந்து வருகிறீர்கள் என அறியேன். ஆனால் நீங்கள் மகிந்தவுக்கும் பொன்சேகாவுக்கும் உள்ள "ஆறு" வித்தியாசங்கள் கொண்டு சக தமிழர்களுக்கு இப்படிக் கொட்டை எழுத்தில் ஆலோசனை சொல்லும் அவசரம் எங்கேயோ இடிக்குது. முதலில் உணர்ச்சி வசப் படாமல் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், உணர்ச்சி வசப்பட்டல்ல, வரலாற்று அறிவைப் பாவித்து பதில் தாருங்கள்:

1. மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வர முன்னரே யாழ் தளபதியாக இருந்து நூற்றுக் கணக்கானோரை கொன்று புதைத்த பொன்சேகா தமிழின அழிப்பில் வெறும் கருவி மட்டும் தானா?

2. கட்டளையிட்ட மகிந்தவைத் தூக்கி எறிந்தால் உலகம் திரும்பிப் பார்க்குமா? அதே கையோட நேராகப் போய்க் கொன்றவனை நாமே தேர்ந்தெடுத்தால் உலகம் இன்னும் உற்றுப் பார்க்கலாம். என்ன செய்தி அந்த உலகத்திற்குக் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

3. பொன்சேகாவோ எந்தச் சிங்களவரோ வடக்கு கிழக்கை மீள இணைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களா? அப்படி அளித்தாலும் செய்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தமிழர்கள் சிறுபான்மையாகிப் போன வடக்குக் கிழக்கு இணைந்தால் என்ன நன்மை தமிழர்களுக்குக் கிடைக்கும்?

4. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை மட்டும் தான் தமிழ் பா.உக் கள் தங்கள் சக்தியைக் காட்ட முடியாமைக்கான பிரதான காரணியா? அது போனால் நாம் பாராளுமன்ற வழியிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமா?

(கடைசியாக ஒரு பைம்பல் கேள்வி: ரூம் போட்டு யோசிப்பீங்களா அல்லது கக்கூசில இருந்து யோசிப்பீங்களா?)

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

எனவே சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய வேண்டும்

நமது தலைவர் சரத் பொன்சேகா வாழ்க!

அன்னத்திற்கு மேல் உங்கள் புள்ளடியைப் போடுங்கள்!

அன்னம் போல் பாலையும் நீரையும் பகுக்கும் சரத் பொன்சேகா மேல் நம்பிக்கை வையுங்கள்!

தமிழர்கள் இன்னல்களைக் களைய அவதரித்த புதிய தேவன் அவன்!

நமது தலைவர் சரத் பொன்சேகா வெல்க!

நேற்று நண்பர் ஒருவர் கூறினார்.... சிறிலங்காவில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை கூற பயமாக இருக்கிறதாம், சம்பந்தன் போட்டியிட வேண்டும், இல்லை விக்கிரமபாகு கருணாரட்னவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கதைக்க, இக்கத்தையான் புலி பூசாரிகள், நீங்களெல்லாம் "துரோகிகள்" என்று சொல்லிப்போடுவாங்கள். என்னத்துக்கும் அவங்கள் சொல்லவதை பார்த்து செய்வோம் .... என்றார்.

ஆருக்கு தெரியும்? மீண்டும் ... சிந்தனையின் அடிப்படையில் .... மகிந்தவிற்கே போடுங்கள் ... என்று சொன்னாலும் சொல்வார்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் போட்டியிடுமிடத்து முதல் தெரிவு அவராகவும் இரண்டாம் தெரிவு விக்கிரமபாகுவுக்கும் போடவேண்டும் என்பதே எனது அவா.

மகிந்தவோ, சரத்தோ வருவதல்ல பிரச்சனை.எமது மக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்றவர்களுக்கு ஒரு செய்தி எமது மக்களால் கொடுக்கப்பட வேண்டும்.உலக மக்களுக்கும் இச்செய்தி கிட்டும்.

மகிந்தவுக்கோ , சரத்துக்கோ வாக்களித்து எம்மை கொன்றவர்களுக்கே வாக்களித்து

கேடு கெட்ட இனமாக இருக்க விரும்புகிறோமா?

புலத்தில் இருந்து இவருக்கு தேவையில்லாத வேலை என மனம் பொருமும் வள்ளல்களுக்கு, எனது பெற்றோர் உறவினர்கள், நண்பர்கள் என பலர் இன்னும் அங்கு வாழ்கிறார்கள் என்ற வகையில் என் கருத்தை தெரிவிக்கிறேன்.

தமக்கு எதிராக வாக்களித்தவர்களை பழி வாங்கலாம் என்பது வெறும் பம்மாத்து. ஏனெனில் தமிழரை சிங்கள அரசுகள் தமது உச்ச கட்டம் வரை பழிவாங்கி கொன்று குவித்து விட்டார்கள்.

துரோகிகள் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களோடு ஒட்டுவது தான் வழமை. உ+ம்: தாடி அது தான் பசைவாளி. :)

  • தொடங்கியவர்

அன்புள்ள சூரியா,

எங்கேயிருந்து வருகிறீர்கள் என அறியேன். ஆனால் நீங்கள் மகிந்தவுக்கும் பொன்சேகாவுக்கும் உள்ள "ஆறு" வித்தியாசங்கள் கொண்டு சக தமிழர்களுக்கு இப்படிக் கொட்டை எழுத்தில் ஆலோசனை சொல்லும் அவசரம் எங்கேயோ இடிக்குது. முதலில் உணர்ச்சி வசப் படாமல் நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள், உணர்ச்சி வசப்பட்டல்ல, வரலாற்று அறிவைப் பாவித்து பதில் தாருங்கள்:

1. மகிந்த கூட்டம் ஆட்சிக்கு வர முன்னரே யாழ் தளபதியாக இருந்து நூற்றுக் கணக்கானோரை கொன்று புதைத்த பொன்சேகா தமிழின அழிப்பில் வெறும் கருவி மட்டும் தானா?

2. கட்டளையிட்ட மகிந்தவைத் தூக்கி எறிந்தால் உலகம் திரும்பிப் பார்க்குமா? அதே கையோட நேராகப் போய்க் கொன்றவனை நாமே தேர்ந்தெடுத்தால் உலகம் இன்னும் உற்றுப் பார்க்கலாம். என்ன செய்தி அந்த உலகத்திற்குக் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

3. பொன்சேகாவோ எந்தச் சிங்களவரோ வடக்கு கிழக்கை மீள இணைப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்களா? அப்படி அளித்தாலும் செய்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? தமிழர்கள் சிறுபான்மையாகிப் போன வடக்குக் கிழக்கு இணைந்தால் என்ன நன்மை தமிழர்களுக்குக் கிடைக்கும்?

4. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை மட்டும் தான் தமிழ் பா.உக் கள் தங்கள் சக்தியைக் காட்ட முடியாமைக்கான பிரதான காரணியா? அது போனால் நாம் பாராளுமன்ற வழியிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கலாமா?

(கடைசியாக ஒரு பைம்பல் கேள்வி: ரூம் போட்டு யோசிப்பீங்களா அல்லது கக்கூசில இருந்து யோசிப்பீங்களா?)

உங்கள் கேள்விக்கு பதிலில்லை......

என்னிடம்

நான் சரத்பொன்சேகாவை நல்லவன் என்றா சொல்கிறேன் .....?

கடைசியாக பம்மல் பதில்

நீங்கள் எங்கிருந்து யோசித்து இந்த கேள்வி கேட்டீங்களோ அங்கிருந்தூதான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கேள்விக்கு பதிலில்லை......

என்னிடம்

நான் சரத்பொன்சேகாவை நல்லவன் என்றா சொல்கிறேன் .....?

கடைசியாக பம்மல் பதில்

நீங்கள் எங்கிருந்து யோசித்து இந்த கேள்வி கேட்டீங்களோ அங்கிருந்தூதான்

நன்றி சூர்யா,

இந்தப் பதிலைத் தான் உங்களிடம் எதிர் பார்த்தேன். இக்கேள்விகளுக்கு என்னிடமுள்ள பதில்கள் இவை தான்:

1. நீங்கள் பொன்சை நல்லவர் என்று சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக நானும் சொல்லவில்லை. அண்மை வரலாறு சொல்லும் பாடம், பொன்சேகா தன் கொல்லும் தொழிலை மிக நிறைவாகச் செய்த ஒருவன். யாரும் அவனைக் கருவியாகப் பாவிக்கவில்லை.(செம்மணி, தலைநகரக் கடத்தல்கள் இன்ன பிற..)

2.இந்த இரண்டில் ஒன்றை தமிழர்கள் ஆதரித்தால் உலகம் நாம் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து சமாதானமாகப் போய் விட்டதாக அறிந்து கொள்ளும். சம்பந்தனையோ, விக்கிரமபாகுவையோ பெரும் பான்மைத் தமிழர்கள் தேர்வு செய்தால் பொன்சும் மகிந்தவும் தமிழர்களின் நம்பிக்கை பெறாதவர்கள் என்று உலகம் அறிந்து கொள்ளும்..ஒன்றும் புடுங்கப் போவதில்லை, ஆனால் அறிந்து கொள்ளும்.

3. வடக்கு கிழக்கு இணைப்பு யாரும் தரப் போவதில்லை. சிங்களவர்கள் இரண்டு பிரதேசங்களிலும் சரி சமனாக குடியேறிய பிறகு அது தரப் படலாம். அதன் பிறகு ஐ.நா வந்து வாக்கெடுப்பு நடத்தினாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை.

4.நிறைவேற்று ஜனாதிபதி முறை வந்தது 1977 இன் பிறகு. தமிழர் அடக்கப் பட ஆரம்பித்தது (வன் முறை மூலம்) 1956 இல். ஜனாதிபதியிடம் அதிகாரம் இல்லா விட்டால் சிங்களப் பிரதமரிடம் இருக்கும். பாராளுமன்றப் பெரும்பான்மை 2/3 எப்போதும் சிங்களமாகவே இருக்கும் (நாம் வெறும் 12% தான் ஐயா!) பிரதமரான பண்டா தான் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்து தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்தவன். எங்கள் பிரச்சினை சிஸ்டத்தில இருக்கும் தவறு அல்ல. சிங்களவன் எதுவும் தர மாட்டாததால வந்த பிரச்சினை.

இதெல்லாம் யோசிக்காமல் சக தமிழர்களுக்கு இப்பிடி ஒரு முட்டாள் தனமான ஆலோசனையை ஏன் வழங்குகிறீர்கள்? அதுக்கும் பதில் தெரியாதா?

  • தொடங்கியவர்

கிழம்பிட்டாங்கையா.........கிழம்பிட்டாங்கையா.......

Edited by suryaa

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் யோசிக்காமல் சக தமிழர்களுக்கு இப்பிடி ஒரு முட்டாள் தனமான ஆலோசனையை ஏன் வழங்குகிறீர்கள்? அதுக்கும் பதில் தெரியாதா?

சிக்கலான கேள்விகளைக் கேட்டால் பதில் வராது. :D

சரியான தலைமையும், ஆலோசகர்களும் தமிழர்களுக்கு இல்லாத நிலையில் ஒவ்வொருவரும் "மதியுரைஞர்" என்று கிளம்பிவிட்டார்கள். ஆனால் மந்தைத் தமிழர்களுக்கும் அறிவு உண்டு என்பதை இந்த மதியுரைஞர்கள் புரிந்துகொள்ள காலம் எடுக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.