Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுப்பு முகாமில் இருந்து யாழ் சென்ற நால்வர் யாழில் கொலை

Featured Replies

வவுனியா தடுப்பு முகாமில் இருந்து யாழ் வந்த 17 வயது மாணவன் உட்பட நான்கு ஆண்கள் மர்மமாக கொலையுண்ட நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் காணாமல் போனபின்னரே கொலையுண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மல்லாகம், கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த சந்திரகாந்தன் சதீஸ் (வயது 17) என்பவர் காணாமற்போனதாக கடந்த 4 நாள்களாகத் தேடப்பட்டு வந்தார். அவர் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவந்தார்.

இவர் கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் பின்னர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர், உறவினர்களால் தேடப்பட்டுள்ளார். நேற்று அளவெட்டி பிணாக்கை எனும் இடத்தில் பாழடைந்த கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக தெரிவித்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற உறவினர்கள் சடலத்தை இனம் கண்டு தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை கிணற்றில் இருந்து மீட்ட துடன் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் மரண விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சட லம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏழாலையைச் சேர்ந்த நா. நித்தியானந்தன் என்பவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியில் சென்ற பின்னர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிய போது வீட்டுக்கு அரு கில் இருந்த கிணற்றுக்குள் டோச் லைற் மிதப்பதை அவதானித்த வேளை மேற்படி முதியவர் கிணற்றுக்குள் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார். அவரது சடலத்தை சுன்னாகம் பொலி ஸார் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை, ஊரெழுவைச் சேர்ந்த அ.தங்கவேல் (வயது 55) என்பவர் நேற்று முன்தினம் பிற்பகல் விறகு வெட்ட சென்று வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றவேளை, வயல் வெளியில் அவரது சைக்கிள் விடப்பட்ட இடத்தைச் சுற்றி தேடிய போது அப் பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் மிதக்கக் காணப்பட்டது. அவரது சடலம் கோப்பாய் பொலிஸாரினால் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக் கப்பட்டுள்ளது.

பொலிஸார் இச்சம்பவங்கள் தொடர் பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பு முகாமில் இருந்து யாழ் சென்ற நால்வர் யாழில் கொலை - ஈழநாதம்

இவ்வளவு நாட்களும் தமிழனின் இரத்தம் குடித்தும்...... இவர்களுக்கு தாகம் தீரவில்லையா ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாட்களும் தமிழனின் இரத்தம் குடித்தும்...... இவர்களுக்கு தாகம் தீரவில்லையா ? :unsure:

தமிழரின் தாகத்தை அடையக் கூடிய சக்திகளைக் கருவறுத்தலே சிங்கள இனவாதிகளின் முடிவாக இருக்கிறது. இதற்கு எமது கோடரிக்கம்புகளும் துணைபோவதும் தொடர்கதையாகவே இருக்கும். இதனை மாற்ற வேண்டிய கடப்பாடு குரலற்றவர்களின் குரலாக இருக்கும் புலம் பெயர் உறவுகள் இது தொடர்பாக காத்திரமான காரியமாற்றுவதூடாக மட்டுமே எதிர்கொள்ள முடியும். இல்லையேல் மீதியிருக்கும் இளையோரை நாம் இழந்துவிடுவோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருவேப்பிலையா பலியாடா எண்டு வேற செய்தியள் வர தெரியவரும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன முகாமில் இருந்து வந்தவர்களை மட்டும் தேடித் தேடி கொல்கிறார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.